Seithikathir - Tamil News
14.1K subscribers
163 photos
49 videos
753 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
யுபிஎஸ்சி தலைவராக அஜய்குமார் நியமனம்.

யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம்.

6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் நீடிப்பார்.

1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்.
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் மாவூத் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விருது பெற்ற பொம்மன் - பெள்ளி இணையரை வாழ்த்தியபோது, அவர்கள் அங்குள்ள யானைப் பாகன்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்.
💥 தென் ஆப்ரிக்கா அணியில் தமிழக வீரர் முத்துசாமி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுழற்பந்து வீச்சாளர் சேனுரன் முத்துசாமிக்கு வாய்ப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான வேட்டை தொடரும்!

நம்மவர்கள் நிறைய பேர் நினைத்துக் கொண்டு வராங்க, இந்தியா Operation Sindoor ஐ நிறுத்தி விட்டது என்று.

Operation Sindoor தொடங்கப்பட்டது பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பலி வாங்க... மேலும் அந்த தாக்குதலை திட்டமிட்ட மற்றும் பின் நின்று நடத்தியவர்களை வேட்டையாட...

இந்தியா திட்டமிட்டபடி அந்த தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த கிட்டத்தட்ட 31 தீவிரவாத முகாம்களில் 9 இல் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 100 க்கும் மேற்ப்பட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

மீதமுள்ள முகாம்களில் இருந்த பயங்கரவாதிகள் இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் முகாமை காலி செய்து விட்டு மக்களோடு மக்களாக சென்றனர். அதனால் தான் மற்ற இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்திய தாக்குதலால் கோபமடைந்த பாகிஸ்தான், பயங்கரவாதிகளை சமாதானப்படுத்த இந்தியா மீது ராணுவ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியது. அதை இந்திய ராணுவம் வானிலேயே இடை மறித்து அழித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக சண்டையிட்டு பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் உட்பட பல்வேறு இடங்களை தாக்கியது.

பின்பு இந்தியாவின் மரண அடியை தாங்க முடியாமல் அமெரிக்கா காலை பிடித்து, தாக்குதலை நிறுத்துங்கள் என்று கெஞ்சியது பாகிஸ்தான். அமெரிக்கா இந்தியாவிடம் வந்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் கேட்பதாக கூறியது. அதை பாகிஸ்தானை சொல்ல சொல்லுங்கள் என்று இந்தியா கூறியதால், பாகிஸ்தானின் DGMO இந்தியாவின் DGMO - ஐ அழைத்து தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது. அதனால் தான் இந்தியா தாக்குதலை நிறுத்தியது.

இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்காக தான்... தற்பொழுது அது மட்டும் தான் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை இன்னும் வேட்டையாட உள்ள காரணத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.

பகல்ஹாம் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதற்கு மூளையாக இருந்தவர்களை பாகிஸ்தானில் இந்திய ராணுவம் வேட்டையாடி உள்ளது. தற்பொழுது அந்த தாக்குதலை நடத்தியவர்களை இந்தியா விரைவில் வேட்டையாடும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நமது படைகளை நம்புங்கள். சிலர் 1971 இல் பாகிஸ்தான் உடன் நடந்த போரை தற்பொழுது நடந்த இந்த மோதலுடன் ஒப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. 1971ல் இந்தியா முழு அளவிலான போரில் ஈடுபட்டது. ஆனால் தற்போது அப்படி அல்ல.

இந்திய விமானப்படையை மட்டுமே இந்தியா சிறிய அளவில் பயன்படுத்தியது. இந்திய ராணுவம், இந்திய கடற்படையும் முழு அளவில் இந்த சண்டையில் ஈடுபடவில்லை. அவை ஈடுபடும் முன்னரே தாக்குதல் நின்றதால் பாகிஸ்தானில் ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு காலம்தாழ்த்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. அதற்கு காரணமான பயங்கரவாதிகள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள் என்று நம்பலாம்.
🔥 துருக்கி மார்பிள் இறக்குமதி நிறுத்தம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர்.

"நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர்கள் கூறினர்.

"இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிள் இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. துருக்கிக்கு பெரும் இழப்பு"- வர்த்தகர்கள்.
🔴 அமெரிக்காவுடன் வர்த்தகப் பிரச்சினை எழவில்லை... பாகிஸ்தானுக்கு உதவிய சீனா, துருக்கி மீது கவனம்... - வெளியுறவு அமைச்சகம் அதிரடி அறிக்கை!

#OperationSindoor-இன் தொடக்கத்திலிருந்தே, இந்த நடவடிக்கையின் பின்னணியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் விவாதிக்கப்படவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் ஆதரவளிப்பதை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா கூறுகிறது.

“அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதைத் தூண்டிவிடவோ அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுடனான உரையாடல்களில், இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் குழுசேர்வது அவர்களின் சொந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம்.”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மே 07 அன்று #OperationSindoor தொடங்கியதிலிருந்து மே 10 அன்று துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்த புரிதல் வரை, இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே வளர்ந்து வரும் இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. இந்த விவாதங்களில் எதிலும் வர்த்தகப் பிரச்சினை எழவில்லை.

வங்கதேசத்தில் அவாமி லீக் மீதான தடை குறித்து இந்தியா கூறுகையில், "முறையான நடைமுறைகள் இல்லாமல் அவாமி லீக் மீதான தடை ஒரு கவலைக்குரிய முன்னேற்றம். ஒரு ஜனநாயக நாடாக, ஜனநாயக சுதந்திரங்கள் குறைக்கப்படுவது மற்றும் அரசியல் இடம் சுருங்கி வருவது குறித்து இந்தியா இயல்பாகவே கவலை கொண்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதை நாங்கள் கடுமையாக ஆதரிக்கிறோம்."

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தும் சீன ஏவுகணைகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய துருக்கிய ட்ரோன்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்ததை இந்தியா வரவேற்கிறது. பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் தங்கள் கவலைகளை உரையாடல் மற்றும் ராஜதந்திரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. ஆரம்ப மற்றும் நிலையான அமைதியை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேர்மையான மற்றும் நடைமுறை ஈடுபாட்டின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
😂 உலகமே பாகிஸ்தானை பார்த்து சிரிக்குது.

பாகிஸ்தான் பயங்கரவாதியை, பாகிஸ்தானின் பொது மக்களில் ஒருவன் என்று கூறி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் இராணுவம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்பு.

உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது.

ஒரு சவரன் ரூ.70,440-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.8,805-க்கு விற்பனையாகிறது.
💥 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 16) வெளியிடப்படும்.

மே 16 காலை 10ஆம் வகுப்பு முடிவும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஒப்படைப்பு.

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பிரதமர் தலைமையில் கூடியது மத்திய அமைச்சரவை.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க திட்டம்.

பொருளாதார தடைகள், எதிர்கால ராணுவ நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட வாய்ப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நெஞ்சம் நிறைந்த ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி!

நன்றி: 'தினசரி' தலையங்கம்

தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி! என்பார்கள். ஒரு ராணுவத் தளபதி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நம் ராமாயண மகாபாரத இதிகாசங்களை மேற்கோளிட்டுப் பேச முடிந்திருக்கிறதா என்ற ஆச்சரியக் கேள்விகள் இப்போது எழுந்திருக்கிறது. இப்போதுதான் அவர்களின் உள்ளுணர்வு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உந்துதலாக இருந்திருக்கிறது என்ற கருத்தும் வெளிப்படையாக முவைக்கப்படுகிறது.

சொல்லப்போனால், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் போது, இவ்வாறு நம் இதிகாச புராணங்களில் இருந்து நன்னெறிக் கதைகள், சம்பவங்கள், உத்திகள், சிக்கலான தருணங்களில் எப்படி மீண்டார்கள் என்பது குறித்த பாடங்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்தான்! இது மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சதந்திரக் கதைகளைப் போன்றதுதான்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பஞ்ச தந்திரக் கதைகள் வெறும் கதைகளாயினும் இக்கட்டான தருணங்களில் அறிவுபூர்வமாக யோசித்து முடிவு எடுக்கக் கூடிய சமயோஜித புத்தியை நெருக்கடியான நேரங்களில் நமக்குத் தரும். இதிகாசங்கள் நடந்த வரலாறுகள் என்பதால் அவற்றில் இருந்து பெறப்படும் உத்திகள் முன்னோர்களின் மேலாண்மை உத்திகள். ஆனால் ஊடகவியலாளர்கள் நிறைந்த ஒரு பிரஸ்மீட்டில் ஒரு தளபதி வெளிப்படையாகச் சொல்வது புதிது. அது ஆட்சியாளர்கள் கொடுத்த சுதந்திரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

இதயங்களை வென்ற ஏர் மார்ஷல் பாரதி - என்றுதான் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். துப்பாக்கியும் தோட்டாவும் கைகளில் இருந்தாலும், வீரம் இருக்கும் இடத்தில் ஈரமும் இருக்கும் போல் தன் கவிதை உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏர் மார்ஷல் பாரதி.

நேற்று நண்பகல் 2.30க்கு, இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். நிகழ்வின் முதல் பகுதில், முப்படைகளின் மூன்று பிரதிநிதிகளும் அந்தந்த கிளைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினர், பின்னர் முதல் செய்தியாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கங்களை அளித்தனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் மதுரேந்திரா கேட்டார்: “பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன், ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் வரிகளைப் பின்னணியில் பயன்படுத்திய ஒரு வீடியோவை இராணுவம் இயக்கியது. நேற்றைய வீடியோவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இருந்தது. இதன் மூலம், எதிரிக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முயற்சித்தீர்கள்?” - என்பது அந்தக் கேள்வி.

சொல்லப் போனால், நேற்று முன் தினம் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, ராணுவத்தின் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கப் படத்தில் தொடக்கத்தில் பின்னணி இசையாக வந்தது சிவ தாண்டவ தோத்திரத்தின் இசைதான்! ஏற்கெனவே சிந்தூர் என்பதில் குங்குமம் சிதறியிருக்கும் காட்சியைப் புலப்படுத்தியதற்கு இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகள் சில இது மதத்தை பின்புலப் படுத்துவதாகக் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் ராணுவத்தின் விளக்கப் பட வீடியோவில் சிவதாண்டவ ஸ்தோத்திர இசை இருந்தால், இவர்கள் இம்சிக்க மாட்டார்களா என்ன?!

எனினும் அந்தப் பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையாளரின் பெயர் மற்றும் நிறுவனம் அதைக் குறித்துக் கொள்ளுமாறு அவர் மீண்டும் கேட்டார்.

பத்திரிகையாளர் குறிப்பிட்ட வரிகள் ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் பிரபலமான காவியமான “ராஷ்மிரதி”யிலிருந்து வந்தவை, குறிப்பாக ‘கிருஷ்ணா கி சேதவானி’ (கிருஷ்ணாவின் எச்சரிக்கை) பகுதியிலிருந்து.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

வரிகள் பின்வருமாறு:

துர்யோதன வஹ பீ தே நா சகா,
ஆஷிஷ் சமாஜ் கி லே ந சகா,
உலடே, ஹரி கோ பாந்தனே சலா,
ஜோ தா அசாத்ய, சாதனே சலா.

(துரியோதனனால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை.
சமுதாயத்தின் ஆசீர்வாதங்களை அவரால் பெற முடியவில்லை.
மாறாக, அவர் ஹரியை (கிருஷ்ணனை) பிணைக்க முயன்றார்.
சாத்தியமற்ற முயற்சி.)

ஜப் நாஷ் மனு
விவேக் மர் ஜாதா உள்ளது.
ஹரி நே பீஷண் ஹுங்கார் கியா, அபனா
ஸ்வரூப விஸ்தார் கியா.
டகமக்-டகமக் திக்கஜ் டோலே, பகவான்
குபித் ஹோ கர் போல்.
ஜஞ்சீர் பத்தா அபி சாத் முஜே, ஹான்-ஹான் துர்யோதனன்! பாந்த முழே.

(ஒரு மனிதனை அழிவு சூழ்ந்தால், முதலில் இறப்பது ஞானம்.
ஹரி கடுமையாக கர்ஜித்து தனது தெய்வீக வடிவத்தை விரிவுபடுத்தினார்.
பெரிய வீரர்கள் நடுங்கி தடுமாறினர். கடவுள், கோபமடைந்து, கூறினார்:
உன் சங்கிலியை இப்போது நீட்டு, என்னைக் கட்டு! ஆம், துரியோதனா! என்னைக் கட்ட முயற்சி செய்!)
இந்தக் காட்சி, துரியோதனன் அவையில் சமாதானம் பேசச் சென்ற, அதாவது பாண்டவர்களின் சார்பில் தூது சென்ற ஸ்ரீ கிருஷ்ணனை துரியோதனன் அவமரியாதை செய்தபோது எழுந்த கவிதை வரிகள். அவன் ஸ்ரீ கிருஷ்ணனின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மரியாதை கொடுத்து செவிகொடுத்துக் கேளாமல், தன் துர்புத்தியால் அவரைப் பிணைத்துக் கட்டிவைக்க முயன்றான். அதன் பின் துரியோதனன் அழிந்தது வரலாறு. இதே போன்ற சூழல் தான் இப்போது ஆபரேஷன் சிந்தூர் விஷயத்திலும் ஒப்புமையாகப் போனது.

ஆனால், செய்தியாளரின் இந்தக் கேள்விக்கு, சூழலைப் புரிந்து கொண்டு பதிலளித்த ஏ.கே. பாரதி *ராமசரித மானஸ்* வசனங்கள் மூலம் பதிலளித்தார். எதையும் நோக்காமல், சுற்றூமுற்றூம் பார்க்காமல், தன் மனத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் கருத்தை அவர் சரளமாகத் தெரிவித்தார்.

பினய ந மானத் ஜலதி ஜட
கயே தீனி தின் பீதி.
போலே ராம சகோப் தப
பய பினு ஹோயி ந ப்ரீதி |

(தாழ்மையான வேண்டுகோள்களுக்கு கடல் அசையாமல் இருந்தது; மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பின்னர், கோபம் பொங்கி எழுந்த ராமர், "பயம் இல்லாமல், அன்பு இருக்க முடியாது" என்று அறிவித்தார்.)

கடலரசனான வருண தேவன் இலங்கைக்குச் செல்ல வழி கொடுக்கும் வரை காத்திருந்த ராமர், மூன்று நாட்களுக்குப் பிறகு பொறுமை இழந்து கோபமடைந்தார். பயம் இல்லாமல் அன்பு இல்லை என்று அவர் அறிவித்தார், மேலும் தனது வில்லை உயர்த்தினார். அப்போதுதான் கடற்கடவுள் அவர் முன் தோன்றி உதவிக்கரம் நீட்டினார்.

பொதுவாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் விருந்தினர்கள் வரும்போது ஆரவாரம் செய்யவோ, கைத்தட்டவோ, எழுந்து நிற்கவோ மாட்டார்கள் - தேசிய கீதம் அல்லது மாநிலத்தின் பண் பாடப்படும் போது தவிர மற்ற நேரங்களில் அமர்ந்தே இருப்பார்கள். குறிப்பாக ஒரு தீவிரமான ராணுவ பத்திரிகையாளர் சந்திப்பில், இதுபோன்ற பதில்கள் அரிதானவை.

ஆனால் ஏ.கே. பாரதியின் தன்னிச்சையான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. கரகோஷம் முழங்க, ஏ.கே. பாரதியின் கவிதை வரிகளுடனான பதிலுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஏர் மார்ஷல் பாரதியின் அருகில் அமர்ந்திருந்த கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூட மென்மையான புன்னகையை வெளிப்படுத்தினார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை முடிப்பதற்கு முன், பிரமோத் குறிப்பிட்டார்: "ஷாம் நோ வருணா" - "வருணா (கடல்களின் கடவுள்) நமக்கு மங்களகரமானவராக இருக்கட்டும்" என்று பொருள்படும் வேதப் பிரார்த்தனையை முன்மொழிந்தார்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொன்றையும் நாம் இந்தப் பத்த்ரிகையாளர் சந்திப்பின் போது தவறவிடாமல் கவனித்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்திய பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே ஆயுதங்களால் பேசிக் கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், அது பற்றி டிவி.க்களில் தோன்றி பேசி வந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவ அதிகாரிகள் நெருக்கடி நிலைக்கு ஆட்பட்டதைப் போன்ற பரபரப்புடன் தாங்கள் வெற்றி அடைந்ததாகவும், எதிரிகளை வீழ்த்தி விட்டதாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்க, நம் பாரத ராணுவ தளபதிகளோ, எந்த வித நெருக்கடியும், பரபரப்பும் இன்றி, வெகு இயல்பாக, அமைதியாக, சிரித்துப் பேசியபடி, முகத்தில் புன்னகை தவழ, செய்தியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று காலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வு முடிவுகளை அறிவித்த நேரத்தில், அது பற்றிக் குறிப்பிட்ட டிஜிஎம்ஓ., இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பற்றியும் குறிப்பிட்டு, அதனுடன் ஒப்புமைப் படுத்தியிருந்தார்.

ஆக, இது புதிய இந்தியா! எழுச்சியுற்ற பாரதத்தின் அடையாளங்கள்! அது ஒரு தலைவனால் சாத்தியமாகியிருக்கிறது. தலைவன் சரியாக இருந்தால், தளபதிகளும் தொண்டர்களும் மிகச் சரியானவர்களாகவே இருப்பார்கள்!

நன்றி: செங்கோட்டை ஸ்ரீராம், தினசரி.
💥 குறுக்க இந்த கௌசிக் வந்தா!

அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 17 ஆம் தேதி முதல் விடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்

அமேசான் விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் சந்தா தொகையுடன் மாதம் ரூ. 129 அல்லது ஆண்டுக்கு ரூ. 699 செலுத்த வேண்டும் என அறிவிப்பு

இதனால் அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் கண்ணீர் விடாதக் குறையாக 3 சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு குண்டு துளைக்காத கார்; இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு அதிகரிப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மகாராஷ்டிரா காவல்துறை இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்த பாலிவுட் திரை பிரபலங்களை கண்டிக்கும் விதமாக கிண்டல் அடித்த போது...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 சீன பிரச்சார ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் இந்தியாவில் (X பக்கம்) முடக்கப்பட்டது.

குளோபல் டைம்ஸ் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்கள், போலி செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்புவதில் ஈடுபட்டு வந்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண ஆணை.

ஆகம கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை 3 மாதத்துக்குள் அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு.
💥 கோயில் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட பட்டியலின மக்களின் பகுதி - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகள்.

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர்.

அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

அப்போது நீதிபதிகள், “பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்? பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.

கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29