Seithikathir - Tamil News
14.1K subscribers
170 photos
49 videos
775 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.
 
இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தேவையின்றி அமெரிக்கா வார்த்தையை விடுவதால், அந்த நாட்டிற்கு இந்தியா ஒரு கொட்டு வைத்துள்ளது போல தெரிகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு.

கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து அழைக்க முடியவில்லை என இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் பதிவு.
🚨 நிலவுக்கு இந்தியர் பயணம் 2040ல் திட்டம் நிறைவேறும்!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். அடுத்தாண்டு டிசம்பருக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 வெளியேற்றம்!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டு அதிகாரி 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் உத்தரவு

உளவு பார்த்த விவகாரத்தில் நடவடிக்கை என தகவல்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பாகிஸ்தானில் மே 10ஆம் தேதி அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதற்கு மறுநாளே 4.0 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது. இந்த இரு நில அதிர்வுகளிலும் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதனிடையே, மூன்றாவது நாளாக நேற்று பிற்பகல் பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள், அணு ஆயுத சோதனையாக இருக்கலாம் என எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், துறை சார்ந்த அதிகாரிகளோ அல்லது நிபுணர்களோ இது குறித்து எந்தவிதக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
குறள் எண் : ௨௩௯(239)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்

குறள் :
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


உரை :
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

English :
The ground which supports a body without fame will diminish in its rich produce.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௩௧)
தமிழ் வாழ்க
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மே 14) மாலை 5 மணியளவில் திறக்கப்படுகிறது.

மே 19ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமும் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.
யுபிஎஸ்சி தலைவராக அஜய்குமார் நியமனம்.

யுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம்.

6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் நீடிப்பார்.

1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றினார்.
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் மாவூத் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விருது பெற்ற பொம்மன் - பெள்ளி இணையரை வாழ்த்தியபோது, அவர்கள் அங்குள்ள யானைப் பாகன்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்.
💥 தென் ஆப்ரிக்கா அணியில் தமிழக வீரர் முத்துசாமி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுழற்பந்து வீச்சாளர் சேனுரன் முத்துசாமிக்கு வாய்ப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான வேட்டை தொடரும்!

நம்மவர்கள் நிறைய பேர் நினைத்துக் கொண்டு வராங்க, இந்தியா Operation Sindoor ஐ நிறுத்தி விட்டது என்று.

Operation Sindoor தொடங்கப்பட்டது பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பலி வாங்க... மேலும் அந்த தாக்குதலை திட்டமிட்ட மற்றும் பின் நின்று நடத்தியவர்களை வேட்டையாட...

இந்தியா திட்டமிட்டபடி அந்த தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த கிட்டத்தட்ட 31 தீவிரவாத முகாம்களில் 9 இல் தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 100 க்கும் மேற்ப்பட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

மீதமுள்ள முகாம்களில் இருந்த பயங்கரவாதிகள் இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் முகாமை காலி செய்து விட்டு மக்களோடு மக்களாக சென்றனர். அதனால் தான் மற்ற இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்திய தாக்குதலால் கோபமடைந்த பாகிஸ்தான், பயங்கரவாதிகளை சமாதானப்படுத்த இந்தியா மீது ராணுவ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியது. அதை இந்திய ராணுவம் வானிலேயே இடை மறித்து அழித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக சண்டையிட்டு பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் உட்பட பல்வேறு இடங்களை தாக்கியது.

பின்பு இந்தியாவின் மரண அடியை தாங்க முடியாமல் அமெரிக்கா காலை பிடித்து, தாக்குதலை நிறுத்துங்கள் என்று கெஞ்சியது பாகிஸ்தான். அமெரிக்கா இந்தியாவிடம் வந்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் கேட்பதாக கூறியது. அதை பாகிஸ்தானை சொல்ல சொல்லுங்கள் என்று இந்தியா கூறியதால், பாகிஸ்தானின் DGMO இந்தியாவின் DGMO - ஐ அழைத்து தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது. அதனால் தான் இந்தியா தாக்குதலை நிறுத்தியது.

இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்காக தான்... தற்பொழுது அது மட்டும் தான் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை இன்னும் வேட்டையாட உள்ள காரணத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.

பகல்ஹாம் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் அதற்கு மூளையாக இருந்தவர்களை பாகிஸ்தானில் இந்திய ராணுவம் வேட்டையாடி உள்ளது. தற்பொழுது அந்த தாக்குதலை நடத்தியவர்களை இந்தியா விரைவில் வேட்டையாடும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நமது படைகளை நம்புங்கள். சிலர் 1971 இல் பாகிஸ்தான் உடன் நடந்த போரை தற்பொழுது நடந்த இந்த மோதலுடன் ஒப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. 1971ல் இந்தியா முழு அளவிலான போரில் ஈடுபட்டது. ஆனால் தற்போது அப்படி அல்ல.

இந்திய விமானப்படையை மட்டுமே இந்தியா சிறிய அளவில் பயன்படுத்தியது. இந்திய ராணுவம், இந்திய கடற்படையும் முழு அளவில் இந்த சண்டையில் ஈடுபடவில்லை. அவை ஈடுபடும் முன்னரே தாக்குதல் நின்றதால் பாகிஸ்தானில் ஏற்பட இருந்த பெரும் பாதிப்பு காலம்தாழ்த்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. அதற்கு காரணமான பயங்கரவாதிகள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள் என்று நம்பலாம்.
🔥 துருக்கி மார்பிள் இறக்குமதி நிறுத்தம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர்.

"நாங்கள் துருக்கிய மார்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் துருக்கியுடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர்கள் கூறினர்.

"இந்தியா சுமார் 14 முதல் 16 லட்சம் டன் மார்பிள் இறக்குமதி செய்கிறது, இதில் 70 சதவீதம் துருக்கியிலிருந்து வருகிறது. துருக்கிக்கு பெரும் இழப்பு"- வர்த்தகர்கள்.
🔴 அமெரிக்காவுடன் வர்த்தகப் பிரச்சினை எழவில்லை... பாகிஸ்தானுக்கு உதவிய சீனா, துருக்கி மீது கவனம்... - வெளியுறவு அமைச்சகம் அதிரடி அறிக்கை!

#OperationSindoor-இன் தொடக்கத்திலிருந்தே, இந்த நடவடிக்கையின் பின்னணியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் விவாதிக்கப்படவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மாற்ற முடியாத வகையிலும் ஆதரவளிப்பதை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா கூறுகிறது.

“அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதைத் தூண்டிவிடவோ அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளுடனான உரையாடல்களில், இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் குழுசேர்வது அவர்களின் சொந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம்.”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மே 07 அன்று #OperationSindoor தொடங்கியதிலிருந்து மே 10 அன்று துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்த புரிதல் வரை, இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே வளர்ந்து வரும் இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. இந்த விவாதங்களில் எதிலும் வர்த்தகப் பிரச்சினை எழவில்லை.

வங்கதேசத்தில் அவாமி லீக் மீதான தடை குறித்து இந்தியா கூறுகையில், "முறையான நடைமுறைகள் இல்லாமல் அவாமி லீக் மீதான தடை ஒரு கவலைக்குரிய முன்னேற்றம். ஒரு ஜனநாயக நாடாக, ஜனநாயக சுதந்திரங்கள் குறைக்கப்படுவது மற்றும் அரசியல் இடம் சுருங்கி வருவது குறித்து இந்தியா இயல்பாகவே கவலை கொண்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதை நாங்கள் கடுமையாக ஆதரிக்கிறோம்."

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தும் சீன ஏவுகணைகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய துருக்கிய ட்ரோன்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்ததை இந்தியா வரவேற்கிறது. பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் தங்கள் கவலைகளை உரையாடல் மற்றும் ராஜதந்திரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. ஆரம்ப மற்றும் நிலையான அமைதியை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேர்மையான மற்றும் நடைமுறை ஈடுபாட்டின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
😂 உலகமே பாகிஸ்தானை பார்த்து சிரிக்குது.

பாகிஸ்தான் பயங்கரவாதியை, பாகிஸ்தானின் பொது மக்களில் ஒருவன் என்று கூறி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் இராணுவம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்பு.

உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது.

ஒரு சவரன் ரூ.70,440-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.8,805-க்கு விற்பனையாகிறது.
💥 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 16) வெளியிடப்படும்.

மே 16 காலை 10ஆம் வகுப்பு முடிவும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஒப்படைப்பு.

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பிரதமர் தலைமையில் கூடியது மத்திய அமைச்சரவை.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க திட்டம்.

பொருளாதார தடைகள், எதிர்கால ராணுவ நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட வாய்ப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நெஞ்சம் நிறைந்த ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி!

நன்றி: 'தினசரி' தலையங்கம்

தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி! என்பார்கள். ஒரு ராணுவத் தளபதி, இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நம் ராமாயண மகாபாரத இதிகாசங்களை மேற்கோளிட்டுப் பேச முடிந்திருக்கிறதா என்ற ஆச்சரியக் கேள்விகள் இப்போது எழுந்திருக்கிறது. இப்போதுதான் அவர்களின் உள்ளுணர்வு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உந்துதலாக இருந்திருக்கிறது என்ற கருத்தும் வெளிப்படையாக முவைக்கப்படுகிறது.

சொல்லப்போனால், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகளின் போது, இவ்வாறு நம் இதிகாச புராணங்களில் இருந்து நன்னெறிக் கதைகள், சம்பவங்கள், உத்திகள், சிக்கலான தருணங்களில் எப்படி மீண்டார்கள் என்பது குறித்த பாடங்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்தான்! இது மேலாண்மை உத்திகளைக் கையாண்டு வெற்றிகளைப் பெற்ற பஞ்சதந்திரக் கதைகளைப் போன்றதுதான்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பஞ்ச தந்திரக் கதைகள் வெறும் கதைகளாயினும் இக்கட்டான தருணங்களில் அறிவுபூர்வமாக யோசித்து முடிவு எடுக்கக் கூடிய சமயோஜித புத்தியை நெருக்கடியான நேரங்களில் நமக்குத் தரும். இதிகாசங்கள் நடந்த வரலாறுகள் என்பதால் அவற்றில் இருந்து பெறப்படும் உத்திகள் முன்னோர்களின் மேலாண்மை உத்திகள். ஆனால் ஊடகவியலாளர்கள் நிறைந்த ஒரு பிரஸ்மீட்டில் ஒரு தளபதி வெளிப்படையாகச் சொல்வது புதிது. அது ஆட்சியாளர்கள் கொடுத்த சுதந்திரம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

இதயங்களை வென்ற ஏர் மார்ஷல் பாரதி - என்றுதான் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள். துப்பாக்கியும் தோட்டாவும் கைகளில் இருந்தாலும், வீரம் இருக்கும் இடத்தில் ஈரமும் இருக்கும் போல் தன் கவிதை உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏர் மார்ஷல் பாரதி.

நேற்று நண்பகல் 2.30க்கு, இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். நிகழ்வின் முதல் பகுதில், முப்படைகளின் மூன்று பிரதிநிதிகளும் அந்தந்த கிளைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினர், பின்னர் முதல் செய்தியாளர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கங்களை அளித்தனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நியூஸ் நேஷனின் பத்திரிகையாளர் மதுரேந்திரா கேட்டார்: “பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன், ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் வரிகளைப் பின்னணியில் பயன்படுத்திய ஒரு வீடியோவை இராணுவம் இயக்கியது. நேற்றைய வீடியோவில் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இருந்தது. இதன் மூலம், எதிரிக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முயற்சித்தீர்கள்?” - என்பது அந்தக் கேள்வி.

சொல்லப் போனால், நேற்று முன் தினம் முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, ராணுவத்தின் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விளக்கப் படத்தில் தொடக்கத்தில் பின்னணி இசையாக வந்தது சிவ தாண்டவ தோத்திரத்தின் இசைதான்! ஏற்கெனவே சிந்தூர் என்பதில் குங்குமம் சிதறியிருக்கும் காட்சியைப் புலப்படுத்தியதற்கு இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகள் சில இது மதத்தை பின்புலப் படுத்துவதாகக் குரல் கொடுத்திருந்தன. இந்நிலையில் ராணுவத்தின் விளக்கப் பட வீடியோவில் சிவதாண்டவ ஸ்தோத்திர இசை இருந்தால், இவர்கள் இம்சிக்க மாட்டார்களா என்ன?!

எனினும் அந்தப் பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி வெளிப்படையாக மகிழ்ச்சியடைந்தார். பத்திரிகையாளரின் பெயர் மற்றும் நிறுவனம் அதைக் குறித்துக் கொள்ளுமாறு அவர் மீண்டும் கேட்டார்.

பத்திரிகையாளர் குறிப்பிட்ட வரிகள் ராஷ்டிரகவி ராம்தாரி சிங் தின்கரின் பிரபலமான காவியமான “ராஷ்மிரதி”யிலிருந்து வந்தவை, குறிப்பாக ‘கிருஷ்ணா கி சேதவானி’ (கிருஷ்ணாவின் எச்சரிக்கை) பகுதியிலிருந்து.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

வரிகள் பின்வருமாறு:

துர்யோதன வஹ பீ தே நா சகா,
ஆஷிஷ் சமாஜ் கி லே ந சகா,
உலடே, ஹரி கோ பாந்தனே சலா,
ஜோ தா அசாத்ய, சாதனே சலா.

(துரியோதனனால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை.
சமுதாயத்தின் ஆசீர்வாதங்களை அவரால் பெற முடியவில்லை.
மாறாக, அவர் ஹரியை (கிருஷ்ணனை) பிணைக்க முயன்றார்.
சாத்தியமற்ற முயற்சி.)

ஜப் நாஷ் மனு
விவேக் மர் ஜாதா உள்ளது.
ஹரி நே பீஷண் ஹுங்கார் கியா, அபனா
ஸ்வரூப விஸ்தார் கியா.
டகமக்-டகமக் திக்கஜ் டோலே, பகவான்
குபித் ஹோ கர் போல்.
ஜஞ்சீர் பத்தா அபி சாத் முஜே, ஹான்-ஹான் துர்யோதனன்! பாந்த முழே.

(ஒரு மனிதனை அழிவு சூழ்ந்தால், முதலில் இறப்பது ஞானம்.
ஹரி கடுமையாக கர்ஜித்து தனது தெய்வீக வடிவத்தை விரிவுபடுத்தினார்.
பெரிய வீரர்கள் நடுங்கி தடுமாறினர். கடவுள், கோபமடைந்து, கூறினார்:
உன் சங்கிலியை இப்போது நீட்டு, என்னைக் கட்டு! ஆம், துரியோதனா! என்னைக் கட்ட முயற்சி செய்!)