Seithikathir - Tamil News
14.1K subscribers
170 photos
49 videos
775 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
🔴 BREAKING NEWS அணுஆயுத போரை நிறுத்தினேன்: ட்ரம்ப்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகமாக வணிகம் செய்ய உள்ளது. அணுஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது – டொனால்டு டிரம்ப்.
🔴 BREAKING | பிரதமர் மோடி உரை...

நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் - பிரதமர் மோடி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING NEWS

பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தியில் உள்ளது: பிரதமர் மோடி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

மகள்களின், தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் அறிந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான்.

நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது.

- பிரதமர் மோடி
🔴 BREAKING | பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்... பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!

உலக நாடுகளிடம் கெஞ்சியது பாகிஸ்தான்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சேட்டை செய்ய மாட்டோம் என்றது பாகிஸ்தான்: பிரதமர் மோடி பேச்சு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும்.

பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது

- பிரதமர் மோடி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING அமெரிக்கா தலையீடு இல்லை: பிரதமர் மோடி சூசகமாக திட்டவட்டம்!

மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பேச்சு.

தண்ணீரும் ரத்தமும் ஒருசேர ஓட முடியாது. அதுபோல, தீவிரவாதமும் அமைதிப் பேச்சு வார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது. அமைதியே மிகப்பெரும் சக்தி.

உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதில் பாகிஸ்தான் முகாம்களுக்கு பங்குண்டு; உலக பயங்கரவாதத்தின் தலைமை மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

- பிரதமர் மோடி பேச்சு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக் கொள்ளப்படாது பிரதமர் மோடி அதிரடி பேச்சு

இது பயங்கரவாதத்திற்கான சகாப்தம் அல்ல: பிரதமர் மோடி எச்சரிக்கை

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்கினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன்.

'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார்.

நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, ​​பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள்.

9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார்.

'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார்.

பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார்.

'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர்.

பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம்.

இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.

பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார்.

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது.

சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, ​​நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
🔴 BREAKING NEWS ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடக் கூடாது: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு நடந்தது

இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது

எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

- இந்திய ராணுவம்.

பாகிஸ்தான் உடன் இனி பேச்சுவார்த்தை இருந்தால் அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுவதாகவே இருக்கும். இதுதான் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடும் கூட - பிரதமர் மோடி பேச்சு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 ஒத்த விரலை காட்டி... இதைவிட யாரும் இனி மிரட்ட முடியாது!

செய்திக்கதிர் நண்பர்களுக்கு இன்று இரண்டு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்:

ஒன்று:

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் திடீரென முடிவுக்கு வந்தது ஏன்? இதற்கான பின்னணி பற்றி கடந்த இரண்டு நாட்களாகவே செய்திக்கதிர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது: பாகிஸ்தானின் அணுஆயுத தளத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்பதே அந்த தகவலின் மையம்.

இதைத்தான் சிலர் சந்தேகத்துடன், வேடிக்கையாக... 'சார்பு பதிவு' என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் இன்று வந்த இரண்டு பெரிய அறிவிப்புகள் —

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் "நான் அணுஆயுத போரை நிறுத்தினேன்" என்பதும்,
பிரதமர் மோடியின் "பாகிஸ்தானுக்கு எதிர்பார்க்காத சேதம் ஏற்பட்டது" என்பதும் —
இந்த தகவலை உறுதி செய்கின்றன. (அதி முக்கிய விஷயங்களை இப்படிதான் தலைவர்கள் மேலோட்டமாக சொல்வார்கள்.)

இரண்டாவது:
இன்று காலை செய்திக்கதிர் வெளியிட்ட பிரத்யேக செய்தியில், தாக்குதல் நிறுத்தப்பட்டதில் "மூன்றாவது நாட்டு தலையீடு இல்லை" என்று தெளிவாக குறிப்பிட்டோம்.
இதற்கும் சிலர் எதிர்வினை தெரிவித்தனர்.

ஆனால் தற்போது பிரதமர் மோடியே, “பாகிஸ்தான் தான் கெஞ்சியது, அதனால் நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம்” என்கிறார். அதுவே நமது செய்திக்கதிர் செய்திக்கு வலுவூட்டுகிறது.

இன்றைய உரையில் பெரும்பாலும் ஒற்றை விரலை காட்டி மோடி எச்சரித்து பேசினார்... அது பாகிஸ்தானுக்கான எச்சரிக்கையாக மட்டுமல்ல... “மோடி பேசுகிறார்” என தெரிந்து கொண்டு 15 நிமிடத்திற்கு முன்னதாக, “நான் போரை நிறுத்தினேன்” என டிரம்பும் சொன்னார் அல்லவா? அவருக்கும் அந்த ஒற்றை விரலை நீட்டியே எச்சரிக்கை பதிலை தந்து விட்டார். (பாகிஸ்தான் தான் கெஞ்சியது என்று)

சாதாரண செய்தியாக இருந்தாலும், உலக அளவில் பேசப்படும் விஷயமாக இருந்தாலும், செய்திக்கதிர் எப்போதும் பல கோணங்களில் ஆராய்ந்து, நியாயமான தரவுகளோடு மட்டுமே வெளியிடுகிறது.

அப்போது சிரித்தவர்களுக்கும், குறை கூறியவர்களுக்கும் பதில் சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்... வாழ்க.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்

ஐபிஎல் தொடர் - மே 17ம் தேதி முதல் தொடங்குகிறது - பிசிசிஐ

மே 17ம் தேதி முதல் நடைபெறும், லீக் போட்டிகள் 6 மைதானங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிப்பு - பிசிசிஐ
குறள் எண் : 238
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்

குறள் :
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.


உரை :
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

English :
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௩௦)
தமிழ் வாழ்க
💥 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

2019இல் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியான வழக்கில் தீர்ப்பு.

பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🚨 கரூர் வழியாக செல்லும் 7 ரயில்கள் இன்று ரத்து.

மேம்பால பணிகள் காரணமாக, கரூர் வழியாக செல்லும் 7 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சேலம் - மயிலாடுதுறை, சேலம் - கரூர், கரூர் - திருச்சி, திருச்சி - ஈரோடு ரயில்கள் இன்று ரத்து - தெற்கு ரயில்வே.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இன்றைய புத்தக மொழி
13/05/25
📚📚📚🌹📚📚📚

உன்னால் முடியாததை,
கடைப்பிடிக்க முடியாததை
மற்றவரிடம் எதிர்ப்பார்க்காதே.

- சே குவேரா -

📚📚📚🌹📚📚📚
🔴 சிறப்பு செய்தி: காலையில் ஒரு பேச்சு... மாலையில் ஒரு பேச்சு... பெரியண்ணன் ட்ரம்ப்பின் "ஸ்டிக்கர்'' அட்ராசிட்டி!

- ஜி.எஸ்.பாலமுருகன்.

நான் ஆட்சிக்கு வந்தால், உலகில் இனி போர்கள் இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உறுதியளித்தார் ட்ரம்ப். சொன்னது போலவே வெற்றி பெற்று முதல் உரையில் பேசியபோது, ஒரு வாரத்தில் போர்களுக்கு முடிவு கட்டப்படும்; இது போருக்கான காலம் அல்ல என்று சூளுரைத்தார்.

அட, ட்ரம்ப் முன்னப் போல இல்லப்பா... அதிரடியா பேசுறேனு எதையாவது உளறி வைக்காம, நல்லா முதிர்ச்சியா பேசுறாரு... வெல்டன்னு உலக முழுவதும் பாராட்டு...

ஆனால் என்ன நடக்கிறது? 6 மாதங்கள் ஆகப் போகிறது... ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்கிறது, இஸ்ரேல் - காஸா பற்றி எரிகிறது, அமெரிக்கா - சீனா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளது... இதுதான் ட்ரம்ப்... நம்மூர் 'நீட் ரத்து ரகசியம்' போல... நீட்டும் தொடருது... போரும் நடந்துகிட்டுதான் இருக்கு!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இப்போ திடீர்னு இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து கொள்கிறார் பெரியண்ணன் ட்ரம்ப். ஆபரேஷன் சிந்தூர்ல மத்திய பாஜக அரசு மீது குறை சொல்ல முடியாம இருந்த எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிட்டு ட்ரம்பின் அறிவிப்பு... அது எப்படி அமெரிக்கா தலையிடலாம்னு நம்ம தலைவர்கள் கொதித்து போய்விட்டார்கள்...

அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு இது...

> "அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதைக் அறிவிக்க நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளும் அறிவும் மிகுந்த புத்திசாலித்தனமும் பயன்படுத்தியதற்காக வாழ்த்துகள்."

ஆனால், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்று, ட்ரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது...

> "மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்."

இப்படி காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கணக்காக, நேற்றிரவு மீண்டும் ட்ரம்ப் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அது...

> "பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால் தான், இரு நாடுகளும் உடனே இசைவாக சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன. அணு ஆயுத போருக்கு வாய்ப்பு இருந்த நிலையை தடுக்க அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது."

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆனால், இந்தியாவின் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்ற வெளியுறவு கொள்கையின் உறுதிபாட்டை நேற்றிரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உறுதி செய்தார்.

> "இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது. கடந்த 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்."

ஆனால் பாருங்க... ட்ரம்ப் என்னவெல்லாம் கதை விடுகிறார். (நல்லா புரியனும்னா, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க மொமண்ட்...😀) ட்ரம்பும் அவரது வெளியுறவுத் துறையும் தான் மாற்றி மாற்றி பேசுகிறது. அட இன்னும் நான்தான்பா பெரியண்ணன் என்ற மனநிலையிலேயே, ஏதாவது சொல்லி 'ஸ்டிக்கர்' ஒட்டிக்க பார்க்கிறார். நண்பன் மோடி ஒத்துக்கணும்னு நினைச்சி பேசுகிறார். ஆனால் ''வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று பேசுவதையெல்லாம் பிரதமர் மோடியும் கேட்கிற ஆளா என்ன? சரி, இப்படிலாம் விமர்சித்து நாம எழுதினாலும், பாகிஸ்தான ஏதோ ஒரு வகையில இந்தியாவும் அமெரிக்காவும் வச்சு செய்கிறது என்ற கருத்தோட்டமும் இதில் அடங்கியிருக்கு! புரிஞ்சவங்க பிஸ்தா!!

பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன்.
💥 தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 70,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,765 ரூபாய்க்கும் விற்பனை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பொள்ளாச்சி பாலியல் கொடூரம் - 9 பேரும் குற்றவாளிகள்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

9 பேரும் குற்றவாளிகள் என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு.

பொள்ளாச்சி வழக்கு: மதியம் 12 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது - அரசு தரப்பு வழக்கறிஞர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🚨 JUST IN: சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

முடிவுகளை அறிய:- cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic.in

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
காஷ்மீரில் பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் மோதல்.

காஷ்மீர்: சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல்.

ரோந்து பணியின்போது பாதுகாப்பு படையை தாக்க முயன்ற 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு.

பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதில் தாக்குதல்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் 79.53% மாணாக்கர்கள் தேர்ச்சி.

சென்னை மண்டலத்தில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.

91.64% மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 85.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.