Seithikathir - Tamil News
14.1K subscribers
167 photos
49 videos
769 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
இன்று அதிகாலை எட்டப்பட்ட இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த பாகிஸ்தான் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா: அம்பாலா பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
ஜம்மு அருகே நக்ரோட்டாவில் உள்ள ராணுவப் பிரிவு மீது பயங்கரவாதத் தாக்குதல்
🔴 BREAKING NEWS

அதிகாரப்பூர்வமாக உறுதி — இன்று மீண்டும் இடைநிறுத்த உடன்படிக்கையை மீறியது பாகிஸ்தான்!

இந்திய வெளியுறவுத்துறை (MEA) சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி, இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் ஒரு முறையாக இடைநிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

"இந்த எல்லை மீறலை கையாள ராணுவம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது"

இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது இதற்கு பாகிஸ்தானே பொறுப்பு.

பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒப்பந்த மீறல்களை சரி செய்யவும், நிலைமையை பொறுப்புடன் கையாளவும் பாகிஸ்தானை கேட்டுக் கொள்கிறோம்.

மீண்டும் ஒப்பந்த மீறல் நிகழும் பட்சத்தில் சூழலை கடுமையாகக் கையாள ஆயுதப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - விக்ரம் மிஸ்ரி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கொக்கரிப்பு

எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம். மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம்.

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வெற்றிபெற்றுவிட்டது, இந்தியாவுக்கு எதிராக நாம் வெற்றி பெற்று விட்டோம்.

பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

எங்கள் நம்பகமான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது சீனா உதவி செய்கிறது.

அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றி கூறிக்கொள்கிறேன் - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களிடம் உரை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௩௬(236)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்

குறள் :
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உரை :
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

English :
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௨௮)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
11/05/25
📚📚📚🌹📚📚📚

குழந்தை வளர்ப்பு என்பது
குழந்தைகளின் உலகினைப்
புரிந்து கொண்டு
அவர்களின் உலகில்
நுழைவது அல்ல.
அவர்களின் உலகினைப்
புரிந்து கொண்டு
விலகி நிற்பதே.

- விழியன் -

📚📚📚🌹📚📚📚
🔴 கடந்த சில நாட்களாக நாம் இந்தியா - பாக்கிஸ்தான் பதற்றத்தில் கவனம் முழுவதையும் செலுத்தியிருந்ததால் உச்சநீதிமன்றத்தின் முக்கியமான இரண்டு வழக்குகளி்ன் தீர்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறி விட்டோம்.

1. நாட்டையே உலுக்கிய முன்னாள் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பற்றியது. சென்ற மார்ச் மாதம் 14 ஆம் தேதி தில்லியிலுள்ள இவர் பங்களாவில் தீப்பிடித்த போது ₹ 100 கோடி பணம் எரிந்த நிலையில் காணப்பட்டது சம்பந்தமானது. இந்த விஷயம் சில நாட்கள் கிணற்றில் போடப்பட்ட கல்லைப் போலிருந்தது. பின்னர் பொது ஜனங்கள் இது சம்பந்தமாக ஜாடைமாடையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தவுடன் இது விஸ்வரூபம் எடுத்தது. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி திரு சஞ்சய் கண்ணா அவர்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பெஞ்சை நியமித்து விசாரணை செய்து அதன் அறிக்கையை தான் ஓய்வு பெறும் முன்பு ( மே 13) சமர்ப்பிக்கும்படி உத்திரவிட்டிருந்தார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அதன்படி அந்த அறிக்கையை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்றைய முன்தினம் சமர்ப்பித்தது. அதில் யஷ்வந்த் வர்மா குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதி அவரை impeachment செய்யும்படி கூறியுள்ளார். இது போன்ற வழக்குகளில் 150 மக்களவை உறுப்பினர்களும் , 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டியது அவசியமாம். அநேகமாக மத்திய அரசு இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் தணிந்தபின் நடவடிக்கை எடுக்கலாம்.

2. இந்தியவில் வசிக்கும் ரோகின்யாக்கள் இங்கு வசிக்கும் உரிமை உண்டு என்றும் நாடு கடத்தப்படக் கூடாதென மனுதாரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்னம் ‘You have no right to claim Indian 🇮🇳 citizenship‘ என கூறிவிட்டது. இது மிக முக்கியமான விஷயமாக வரும் நாட்களில் மாறக்கூடும்.
அணுகுண்டு சோதனையும் தேசிய தொழில்நுட்ப தினமும்...

நமது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்திய இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1998 மே 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இந்தியா இணைந்தது. இந்த சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இது அணு ஆயுதத்தில் இந்தியாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஆபரேசன் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற அணு ஆயுத சோதனைக்கு பிறகு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இந்தியாவை அணு ஆயுத நாடாக அறிவித்தார்.

இந்தியா தற்போது உலக அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இதே நாளில் திருசூல் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த வெற்றிகளை கொண்டாடும் வகையில் மே 11-ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
1999-ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்கும் வகையில் இந்த நாளை கொண்டாடி வருகிறது.
முதலில் ட்ரம்ப் அறிவித்தது ஏன்? - ராகுல் காந்தி.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை முதலில் ட்ரம்ப் அறிவித்த விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்.

இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே காங். தேசிய தலைவர் கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பாகிஸ்தான் பரப்பிய பொய் செய்திகள்

நமது S400 மற்றும் ப்ரம்மோஸ் ஏவுகணை தளத்தை தகர்த்ததாக பாக். கூறியது. அது முற்றிலும் தவறு.

சிர்சா, ஜம்மு, பதான்கோட் , நலியா புஜ் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டதாக கூறியது, அதுவும் தவறு.
 
நமது ஆயுத கிடங்கு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பொய் செய்தி பரப்பியது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை .

பாகிஸ்தானில் மசூதிகளை இந்தியா குறி வைத்தது என்று பாகிஸ்தான் பொய் பரப்பியது.  இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சட்டத்தை மதிக்கும் ராணுவம் நம்முடையது. பாகிஸ்தானில் எந்த ஒரு வழிபாடு தலத்தையும் இந்தியா குறி வைக்கவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Tech News

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

➡️Govt to introduce a 'Repairability Index' for smartphones and tablets.

➡️TCS leases over 1 million sq ft in Hyderabad in major office deal.

➡️Microsoft imposes 2-year rehire ban for employees terminated due to performance issues.

➡️SBI to hire 18,000 people in FY26, the largest number in a decade.

➡️Figma launches new AI-Powered tools for website building and prototype creation.

➡️Elon Musk's Starlink gets govt nod in India for satcom service.

➡️Windows 11 gets AI boost with new Start Menu and Copilot+ features.

➡️Google cuts about 200 staff in global business unit.
🔴 BREAKING "பயங்கரவாத கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே ஆபரேஷன் சிந்தூர்"

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

டெல்லி | 11 மே 2025 | செய்திக்கதிர்: "ஆபரேஷன் சிந்தூர்" தெளிவான இராணுவக் குறிக்கோளை கொண்டே திட்டமிடப்பட்டது. பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது தக்க பழிவாங்கும் நோக்கத்துடன், அவர்களின் பயங்கரவாத அடைக்கலம் மற்றும் கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் மீண்டும் கூறப்படும் ஒன்று – இந்தியாவின் தீர்மானமும், பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக சகிக்காத நியாயமான மனநிலையும் தான்.

- இந்திய ராணுவம் விளக்கம்
🔴 "இந்திய ராணுவம் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்"

- முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 இந்திய முப்படைகள் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு.

"ஆபரேஷன் சிந்தூர்" - ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா செய்தியாளர் சந்திப்பு:

பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம்.

பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

பயங்கரவாதிகளை மட்டுமே தாக்குவதை உறுதியாகக் கொண்டோம்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம் - லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்.

ஏப்.22இல் பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும்.

பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் நடத்தப்பட்டது ஆபரேஷன் சிந்தூர்.

பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த 100 தீவிரவாதிகள் வரை கொன்றிருக்கிறோம் - லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்.

தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்கவும் பாகிஸ்தான் அனுமதித்தது.

பின்னடைவு இருந்தாலும், கவனத்தோடு தாக்குதலை இந்திய தரப்பில் முன்னெடுத்தோம்.

எந்த ஒரு பயணிகள் விமானமும் இந்திய தரப்பிலிருந்து தாக்கப்படவில்லை.

நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பாக். மக்களுக்கு பாதிப்பின்றி பதிலடி கொடுத்தோம் - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

சரியாக குறிவைத்து, முருத்கே தீவிரவாத பயிற்சி மையத்தில் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை.

பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், ட்ரோன் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி.

இந்திய நிலைகள் மீதான அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தோம் - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின.

ந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன.

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை"

- முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம்.

மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்.

பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது.

நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான், ராணுவத்தின் மீது அல்ல - ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.

கடற்படை விழிப்போடு இருந்தது - பிரமோத்

அரபிக் கடலில் இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருந்தது.

ராணுவம், விமானப்படையோடு இணைந்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பை நடத்தினோம்.

தாக்குதல் நிறுத்தம் இருந்தாலும், இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது - கடற்படை அதிகாரி ஏ.என். பிரமோத்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்"

"நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது"

- முப்படை அதிகாரிகள் விளக்கம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சித்திரை முழுநிலவு மாநாடு

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் எழுச்சி பெருவிழா மாநாடு தொடங்கியுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு உற்சாக வரவேற்பு.

பாமக கொடிகளுடன் கார்கள், வேன்கள், பேருந்துகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29