Seithikathir - Tamil News
14.1K subscribers
167 photos
49 videos
769 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், நாட்டின் வான்வெளி அனைத்து விமானங்களுக்கும் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நிலம், வான், கடல் என அனைத்து விதமான தாக்குதல்களையும் இந்தியா நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.
💥 JUST IN

நாதக-வுக்கு விவசாயி சின்னம்

மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு.

நிலம், வான், கடல் என அனைத்து விதமான தாக்குதல்களையும் இந்தியா நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் டார் அறிவிப்பு.

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம், நாட்டின் வான்வெளி அனைத்து விமானங்களுக்கும் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன: அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி.

சென்னை காவல் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை நடக்கும் பேரணி தொடங்கியது.

முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் பேச்சுவார்த்தை" - விக்ரம் மிஸ்ரி.

“இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மறுநாள் (மே.12) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது” - இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 போர் நிறுத்தம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

இந்தியா எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை.

ஜெ17 ஜெட் மூலம் இந்தியாவின் எஸ்400 அழிக்கப்பட்டதாக பாக். கூறியது பொய்.

வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, மதப் பிரச்னையை ஏற்படுத்த பாக். முயற்சி.

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது

சண்டையை உடனடியாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 வரவேற்கத்தக்கது

“இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. அமைதி நிலைத்திருக்கட்டும்.

நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "சிந்து நதி நீரை நிறுத்தியதில் மாற்றமில்லை"

போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்தது.

போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உட்படவில்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய வெளியுறவு அமைச்சகம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING NEWS

காஷ்மீரில் தொடர்ந்து போர் நிறுத்த மீறல்கள் நடந்து வருகின்றன

ஸ்ரீநகர் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் மின்சாரம் நிறுத்தம்

தாக்குதல் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இன்று அதிகாலை எட்டப்பட்ட இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்த பாகிஸ்தான் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா: அம்பாலா பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
ஜம்மு அருகே நக்ரோட்டாவில் உள்ள ராணுவப் பிரிவு மீது பயங்கரவாதத் தாக்குதல்
🔴 BREAKING NEWS

அதிகாரப்பூர்வமாக உறுதி — இன்று மீண்டும் இடைநிறுத்த உடன்படிக்கையை மீறியது பாகிஸ்தான்!

இந்திய வெளியுறவுத்துறை (MEA) சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி, இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் ஒரு முறையாக இடைநிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்த முயற்சிக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

"இந்த எல்லை மீறலை கையாள ராணுவம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது"

இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது இதற்கு பாகிஸ்தானே பொறுப்பு.

பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒப்பந்த மீறல்களை சரி செய்யவும், நிலைமையை பொறுப்புடன் கையாளவும் பாகிஸ்தானை கேட்டுக் கொள்கிறோம்.

மீண்டும் ஒப்பந்த மீறல் நிகழும் பட்சத்தில் சூழலை கடுமையாகக் கையாள ஆயுதப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - விக்ரம் மிஸ்ரி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கொக்கரிப்பு

எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் எதையும் செய்வோம். மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நமது ராணுவ ரீதியிலான கொள்கைகளில் நாம் வெற்றியடைந்தோம்.

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வெற்றிபெற்றுவிட்டது, இந்தியாவுக்கு எதிராக நாம் வெற்றி பெற்று விட்டோம்.

பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது. சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

எங்கள் நம்பகமான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும்போது சீனா உதவி செய்கிறது.

அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றி கூறிக்கொள்கிறேன் - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களிடம் உரை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௩௬(236)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்

குறள் :
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

உரை :
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

English :
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௨௮)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
11/05/25
📚📚📚🌹📚📚📚

குழந்தை வளர்ப்பு என்பது
குழந்தைகளின் உலகினைப்
புரிந்து கொண்டு
அவர்களின் உலகில்
நுழைவது அல்ல.
அவர்களின் உலகினைப்
புரிந்து கொண்டு
விலகி நிற்பதே.

- விழியன் -

📚📚📚🌹📚📚📚