Seithikathir - Tamil News
14.1K subscribers
166 photos
49 videos
757 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 ஐஐடி மெட்ராஸ் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு டிப்ளோமா படிப்பை அறிமுகம் செய்தது

சென்னை | செய்திக்கதிர்: தொழிலிட விபத்துகளை குறைக்கும் நோக்கில், சென்னை ஐஐடி இன்ஸ்டிடியூட் ஆன்லைன் மூலமாக ஒரு புதிய டிப்ளோமா படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பயிற்சி Centre for Outreach and Digital Education என்ற பிரிவால் நடத்தப்படுகிறது.

இந்த பாடத்திட்டம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மேலாண்மை திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிற்துறை, சுரங்கம், எரிசக்தி போன்ற துறைகளில் இடம் பெறும் விபத்துகளை குறைக்கவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

கெமிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், பெட்ரோலியம் போன்ற பிரிவுகளில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றவர்களும், MSc கெமிஸ்ட்ரி முடித்து 2 ஆண்டுகள் பணியனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பாடநெறி விவரம்:

ஒவ்வொரு வருடமும் 3 பருவங்களில் நடைபெறும் (செப்டம்பர்-டிசம்பர், ஜனவரி-ஏப்ரல், மே-ஆகஸ்ட்).

ஒரு பருவத்தில் அதிகபட்சம் 3 பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்.

1 முதல் 2 ஆண்டுகளுக்குள் முடிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31

தேர்வுத் தேதி: ஜூலை 13

இணையதள முகவரி: https://code.iitm.ac.in/processsafety
🔥 பயங்கரவாத ஏவுதளம் அழிப்பு!

அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் லூனியில் உள்ள பயங்கரவாத ஏவுதளம், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இதையடுத்து, இந்தியாவின் பதிலடி தாக்குதல் பாகிஸ்தானை அச்சமடைய செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுதார். உரைக்கு நடுவே, 'பாகிஸ்தானை இனி அல்லாவே காப்பாற்ற வேண்டும்' எனவும் அவர் கூறினார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🙏 வணக்கம்

Our Government and Army using the word 'India Pakistan Tension' only. So let us use the term 'India - Pakistan Tension' only and not write 'India Pakistan war' anywhere...

மத்திய அரசு தற்போது வரை  'இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்' என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

நாம் சமூக ஊடகங்களில் எழுதும் போதும், ஹேஷ்டாக் போட்டாலும் இதையே பயன்படுத்தவும். 'இந்தியா - பாகிஸ்தான் போர்' என்று தற்போதைக்கு எழுத வேண்டாம்.

நன்றி.

உண்மையான, உள்ளது உள்ளபடி செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் செய்திக்கதிர் உடன்...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: இந்திய அரசு விளக்கம்!

பஞ்சாபில் உள்ள விமான தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்றும் இந்திய ராணுவத்தால் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவில் இருந்து பாகிஸ்தான் தனது தாக்குதலை மேலும் அதிகரித்திருக்கிறது என இந்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உத்தம்பூர் உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கூடங்கள் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி

இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ராணுவ இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இந்திய அரசு அறிவிப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 "பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது."

"எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.

மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன"

“பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவிடு பொடியாக்கியுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது”

- ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் - உறுதிப்படுத்திய இந்திய அரசு

இன்று அதிகாலை போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் விமானப்படை தளமான நூர் கான், ரஹாமி யார் கான், ரஃபிகி, முரித், சியால்கோட் மற்றும் இரண்டு ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை நாசமாக்கியது!

வீடியோ வெளியிட்ட ராணுவம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

டெல்லி | செய்திக்கதிர்: மே 8 மற்றும் 9, 2025 ஆகிய இரவு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தானால் திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் இன்று திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த தாக்குதல் நடவடிக்கையில், எல்லையிலுள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டன. கடந்த காலங்களில் இம்முகாம்கள் இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் திட்டமிடலுக்கும், பயிற்சிக்கும் முக்கிய தளமாக இருந்தன.

இந்திய ராணுவத்தின் சரியான மற்றும் விரைவான பதிலடி, பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பையும் செயல்திறனையும் கடுமையாக பாதித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆலோசனை

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்
💥 சர்வதேச நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போரை நிறுத்தும் என்று உலக நாடுகள் நம்புகின்றன?

- ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி
பாகிஸ்தான் மீது 8 இடங்களில் இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் மீது இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல் வெளியீடு

ரஃபிக், முரித், சக்காலா, ரஹிம் யார் கான், சுக்சூர், சுனியன் ஆகிய ராணுவ தளங்களில் தாக்குதல்

பஸ்ரூர், சியால்கோட் ஆகிய விமான தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்
💥 நாட்டுக்காக திரண்ட இளைஞர்கள்

சண்டிகர்: ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையில் திரண்டுள்ளனர்.

இன்று இரவு 10.30 மணிக்கு இதற்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🌧️ வானிலை தகவல்

நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் மே 13ம் தேதியும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் மே 14ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING NEWS

இசைஞானி இளையராஜாவின் அறிவிப்பு!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

"என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை (Valiant) நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” (National Defence Fund) நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.

இந்த நன்கொடை என் "Valiant" இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை!"

ஜய பேரிகை கொட்டடா, கொட்டடா,
ஜய பேரிகை கொட்டடா! - பாரதி.

- இசைஞானி இளையராஜா அறிவிப்பு