The Seithikathir®
14.3K subscribers
35 photos
4 videos
155 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை.
சூப்பர் ஜெட் வேகத்தில் தங்கம் விலை!

இன்று ஒரே நாளில் சவரன் ரூ.2200/- அதிகரித்தது!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தகவல்

எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்

"போப் மறைவு பேரவையை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது"

முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் போப் பிரான்சிஸ்

போப் மறைவு - துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி
"அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கரையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம்.

பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்"

- பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தபடுமாக என்ற சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
"மறைமலை நகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது.

ரூ.37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்"

- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்
“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாட்டம்.

நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும்.

செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும் - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்.

இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை அடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி.

மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் பிரான்சிஸ் என சபாநாயகர் அப்பாவு பேச்சு.
"நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்"

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும்.

செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு.

உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என எச்சரிக்கை.
"சாதிப் பெயர்கள் வேறு வேறாக இருக்கக் கூடாது"

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை.

இளை வேளாளர் என்ற பெயருக்கு பதில் இசை வேளாளர் என சாதிப் பெயரை குறிப்பிட்டு சான்று தந்ததாக வழக்கு.

தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப் பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு.

டாஸ்மாக் நிர்வாகம் மீதான முறைகேடு புகார் குறித்து பேச முற்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

மானியக் கோரிக்கை மீது பங்கேற்க உள்ள அதிமுக உறுப்பினர்கள் முதலில் பேசட்டும்; நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது.

விதிகளிலும், மரபுகளிலும் இல்லாதவற்றை பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர் அப்பாவு.
விஷ சாராய வழக்கு - இருவருக்கு ஜாமீன்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சாராய வியாபாரி கன்னுக்குட்டி உட்பட இருவருக்கு ஜாமீன்.

மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ஏப்.25இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்.

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஏப்.29ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும் - தெற்கு ரயில்வே.
உதகை ராஜ்பவனில் ஏப். 25,26ல் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

உதகையில் நடக்கும் மாநாட்டில் பல்கலை., துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்

பல்துறை வல்லுநர்களும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்- ஆளுனர் மாளிகை.
"நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது"-குடியரசு துணை தலைவர்.

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள்-டெல்லியில் நடந்த பல்கலை. நிகழ்ச்சியில்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு; இம்மாதம் ஓன்றாம் தேதியில் இருந்து கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் -சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
"கடலூர், நாகையில் புதைவட மின் பாதைகள்"

“இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ. 490 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகள், புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்-சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு.
💥 குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது: அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.

எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
UPSC தேர்வு முடிவுகள் வெளியானது.

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது; 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர்;109 பேர் EWS பிரிவினர்.

அகில இந்திய அளவில் உ.பி.யை சேர்ந்த சக்தி துபே முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு.

விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.