The Seithikathir®
14.3K subscribers
33 photos
4 videos
151 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
💥 போறதுண்ணா போங்க... விஜய் உங்களைச் சேர்க்கமாட்டார்...!

நா.த.க.,வினர் வேறு கட்சிக்குப் போவதற்கு பதில் என் தம்பி [விஜய்] கட்சிக்குப் போகட்டும்; அவர் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில் சொல்கிறேன்.

அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டார்கள் என்று நினைத்து அவரும் உங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்.

பா.ம.க., மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: சீமான் பேட்டி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்- மத்திய அரசு

துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.

நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது- மத்திய அரசு.
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை.

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம்.

கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
குறள் எண் : ௨௧௮(218)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஒப்புரவறிதல்

குறள் :
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


உரை :
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க பொருள் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு முடிந்தளவு உதவத் தயங்க மாட்டார்கள்.

English :
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௯)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
22/04/25
📚📚📚🌹📚📚📚

ஆயிரம் பேரில் ஒருவன் தான் நன்றாகப் பேச முடியும்.

நன்றாக பேச முடிந்த ஆயிரம்பேரில் ஒருவர்தான் நன்றாக சிந்திக்க முடியும்.

அப்படி சிந்திக்கின்றவர்களில் ஒருவர் தான் இலட்சியத்தை நோக்கி செல்லமுடியும்.

அவர்களிலும் முதல் அடி வைக்கும் துணிவு யாருக்கு இருக்கிறதோ அவரையே மகானென்று உலகம் அழைக்கிறது.

- வெ. சாமிநாதசர்மா -

📚📚📚🌹📚📚📚
ஓசூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தது விமான போக்குவரத்து ஆணையம்.

ஓசூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்தது.

அரசு தேர்வு செய்த 2 இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என வரைவு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை.
சூப்பர் ஜெட் வேகத்தில் தங்கம் விலை!

இன்று ஒரே நாளில் சவரன் ரூ.2200/- அதிகரித்தது!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தகவல்

எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்

"போப் மறைவு பேரவையை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது"

முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் போப் பிரான்சிஸ்

போப் மறைவு - துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி
"அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கரையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம்.

பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்"

- பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தபடுமாக என்ற சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
"மறைமலை நகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது.

ரூ.37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்"

- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்
“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாட்டம்.

நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும்.

செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும் - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்.

இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை அடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி.

மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் பிரான்சிஸ் என சபாநாயகர் அப்பாவு பேச்சு.
"நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்"

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும்.

செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு.

உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என எச்சரிக்கை.
"சாதிப் பெயர்கள் வேறு வேறாக இருக்கக் கூடாது"

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை.

இளை வேளாளர் என்ற பெயருக்கு பதில் இசை வேளாளர் என சாதிப் பெயரை குறிப்பிட்டு சான்று தந்ததாக வழக்கு.

தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப் பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு.

டாஸ்மாக் நிர்வாகம் மீதான முறைகேடு புகார் குறித்து பேச முற்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

மானியக் கோரிக்கை மீது பங்கேற்க உள்ள அதிமுக உறுப்பினர்கள் முதலில் பேசட்டும்; நினைத்த நேரத்தில் பேச அனுமதிக்க முடியாது.

விதிகளிலும், மரபுகளிலும் இல்லாதவற்றை பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர் அப்பாவு.
விஷ சாராய வழக்கு - இருவருக்கு ஜாமீன்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சாராய வியாபாரி கன்னுக்குட்டி உட்பட இருவருக்கு ஜாமீன்.

மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ஏப்.25இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்.

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஏப்.29ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும் - தெற்கு ரயில்வே.