This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கௌமாலாவில் உள்ள பியூகோ எரிமலையை மின்னல் தாக்கிய காட்சி
இந்தக் கணிதத்தின்படி இப்போது கூட்டணி அமைத்து வெற்றி பெறுகிறார்கள் என்றால் முன்பு உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி வைக்காமல் வெற்றியை விட்டுக் கொடுத்தவர்களா⁉️
வாக்குச் சீட்டிலும் பல குளறுபடி இருந்ததாலே EVM கொண்டுவரப்பட்டது என்பதை மறந்து கண்மூடித்தனமாக EVMஐ எதிர்க்கலாமா அல்லது தேர்தல்முறை சீர்திருத்தம் கோருவோமா⁉️
தொகுதிவாரியாக எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் இப்போது பகுதிவாரியாக வாக்குகள் பெற்றதை EVM காட்டிக் கொடுத்தாலும் EVM எதிர்பாளர்கள் அது பற்றி பேசுவதில்லை ஏனெனில் அவர்களின் குறிக்கோள் மக்களைத் திசைத் திருப்புவதுதானா⁉️
குறைவான வாக்குகள் பெற்ற பகுதிகள் நலத்திட்டம் பெற காத்திருப்பது உன்மைதானே⁉️
இனியாவது இருவழி மக்களாட்சி வேண்டாமா அல்லது இந்தத் தேர்தல் முறையே போதுமா⁉️
வாக்குச் சீட்டிலும் பல குளறுபடி இருந்ததாலே EVM கொண்டுவரப்பட்டது என்பதை மறந்து கண்மூடித்தனமாக EVMஐ எதிர்க்கலாமா அல்லது தேர்தல்முறை சீர்திருத்தம் கோருவோமா⁉️
தொகுதிவாரியாக எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் இப்போது பகுதிவாரியாக வாக்குகள் பெற்றதை EVM காட்டிக் கொடுத்தாலும் EVM எதிர்பாளர்கள் அது பற்றி பேசுவதில்லை ஏனெனில் அவர்களின் குறிக்கோள் மக்களைத் திசைத் திருப்புவதுதானா⁉️
குறைவான வாக்குகள் பெற்ற பகுதிகள் நலத்திட்டம் பெற காத்திருப்பது உன்மைதானே⁉️
இனியாவது இருவழி மக்களாட்சி வேண்டாமா அல்லது இந்தத் தேர்தல் முறையே போதுமா⁉️
உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளின் உண்மையான பதிலை ஒரு படத்தில் சுருக்கமாகக் கூறலாம்
பல்வேறு நாணயங்களில் அனைத்துலகக் கொடுப்பனவுகளின் வரைபடங்களைப் பார்க்கிறீர்கள். அமெரிக்க டாலர் 48% உலகப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு 10 ஆண்டு சாதனையை எட்டியுள்ளது. ஆனால் ஒரு சூட்சமம் உள்ளது - யூரோவின் பங்கு 37% இலிருந்து 23% ஆக குறைந்துள்ளது, அதாவது டாலரின் பங்கில் 1% அதிகரிப்புக்கு யூரோ 2% குறைகிறது. மீதமுள்ளவை மற்ற நாணயங்களால் எடுக்கப்படுகிறது. இது 2022 இல் சில முக்கிய நிகழ்வுகளுக்குப் பிறகு தொடங்கியது.
உலக அரங்கில் அமெரிக்கா ஒரு வீரராக ஐரோப்பிய கண்டத்தை நொறுக்கி அதன் கொல்லைப்புற நாயாக மாற்றுவதை நாம் காண்கிறோம்.
இருப்பினும், இந்த திட்டத்தில் கவனிக்கப்படாத ஒன்று உள்ளது... உலகளாவிய மத்திய வங்கிகளின் டாலர் கையிருப்பு உண்மையில் குறைந்து வருகிறது அதாவது புதய பரிவர்த்தனையை நோக்கியா⁉️
பல்வேறு நாணயங்களில் அனைத்துலகக் கொடுப்பனவுகளின் வரைபடங்களைப் பார்க்கிறீர்கள். அமெரிக்க டாலர் 48% உலகப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு 10 ஆண்டு சாதனையை எட்டியுள்ளது. ஆனால் ஒரு சூட்சமம் உள்ளது - யூரோவின் பங்கு 37% இலிருந்து 23% ஆக குறைந்துள்ளது, அதாவது டாலரின் பங்கில் 1% அதிகரிப்புக்கு யூரோ 2% குறைகிறது. மீதமுள்ளவை மற்ற நாணயங்களால் எடுக்கப்படுகிறது. இது 2022 இல் சில முக்கிய நிகழ்வுகளுக்குப் பிறகு தொடங்கியது.
உலக அரங்கில் அமெரிக்கா ஒரு வீரராக ஐரோப்பிய கண்டத்தை நொறுக்கி அதன் கொல்லைப்புற நாயாக மாற்றுவதை நாம் காண்கிறோம்.
இருப்பினும், இந்த திட்டத்தில் கவனிக்கப்படாத ஒன்று உள்ளது... உலகளாவிய மத்திய வங்கிகளின் டாலர் கையிருப்பு உண்மையில் குறைந்து வருகிறது அதாவது புதய பரிவர்த்தனையை நோக்கியா⁉️
2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சீனாவின் ஊதா மலை ஆய்வகத்தில் வானியலாளர்களால் முதன்முதலில் கவனிக்கப்பட்டு ஹவாயின் அட்லஸ் கண்காணிப்பு முறையால் உறுதிப்படுத்தப்பட்ட சி/2023-ஏ3 வாலுடு அதன் விதிவிலக்கான ஒளியுமிழும் ஆற்றலாலும் சராசரியை விட பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாலும் அதாவது கருவின் அளவு 6 முதல் 15 கிலோமீட்டர் வரை விட்டம் கொண்டு பலரின் கவனத்தை விரைவாய் ஈர்த்தது மேலும் அது சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள பனிக்கட்டி படலங்களின் பரந்த பகுதியான ஓர்ட் மேகத்திலிருந்து தோன்றி ஏறக்குறைய 80,000 ஆண்டுகால சுற்றுப்பாதையுடையது என நம்பப்படுவதால் அது பூமிக்கு அருகில் கடைசியாக வருகை தந்தது கற்காலத்தின் போது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சி/2023-ஏ3 வாலுடு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24, 2024 வரை காட்சி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அதன் முக்கிய தேதிகள் பின்வருமாறு:
* செப்டம்பர் 27-28: ஞாயிற்றண்மை நிலை
* அக்டோபர் 12-13: பூவியண்மை நிலையில் உச்ச ஒளியுமிழுலாம்
* செப்டம்பர் பிற்பகுதியில்: காலை அந்தி வானத்தில் தெரியும்
* அக்டோபர் நடுப்பகுதி: மாலை அந்தி வானத்தில் மறையும்
இந்த வால் கொண்ட விண்மீன் வடக்கு அரைக்கோளத்தில் மாலை மற்றும் காலை அந்தி நேரத்தில், அடிவானத்திற்கு அருகில் சிறப்பாகக் கவனிக்க முடியும்.
1986 ஆம் ஆண்டின் ஹாலே போன்ற குறிப்பிடத்தக்க ஒளியையோ அல்லது 2020 ஆம் ஆண்டின் நியோவிஸ் போன்றவற்றின் ஒளியையோ இந்த சி/2023-ஏ3 மிஞ்சக்கூடும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர் (Telegram Seithi). சில வல்லுநர்கள் பகல் நேரங்களில் இது தெரிய -5 அல்லது ஒளிமிகு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த வாலுடுவின் நடத்தை கணிக்க முடியாதளவு மோசமாக உள்ளதால் அதன் ஒளியுமிழ்வு பகலவனை நெருங்கும்போது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து 1973 ஆம் ஆண்டின் கோஹவுட்டெக் போல சிதைந்து போகவோ அல்லது குறைவாகவோ செயல்பட வாய்ப்புள்ளதாம்.
இந்த சி/2023-ஏ3 வாலுடு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24, 2024 வரை காட்சி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அதன் முக்கிய தேதிகள் பின்வருமாறு:
* செப்டம்பர் 27-28: ஞாயிற்றண்மை நிலை
* அக்டோபர் 12-13: பூவியண்மை நிலையில் உச்ச ஒளியுமிழுலாம்
* செப்டம்பர் பிற்பகுதியில்: காலை அந்தி வானத்தில் தெரியும்
* அக்டோபர் நடுப்பகுதி: மாலை அந்தி வானத்தில் மறையும்
இந்த வால் கொண்ட விண்மீன் வடக்கு அரைக்கோளத்தில் மாலை மற்றும் காலை அந்தி நேரத்தில், அடிவானத்திற்கு அருகில் சிறப்பாகக் கவனிக்க முடியும்.
1986 ஆம் ஆண்டின் ஹாலே போன்ற குறிப்பிடத்தக்க ஒளியையோ அல்லது 2020 ஆம் ஆண்டின் நியோவிஸ் போன்றவற்றின் ஒளியையோ இந்த சி/2023-ஏ3 மிஞ்சக்கூடும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர் (Telegram Seithi). சில வல்லுநர்கள் பகல் நேரங்களில் இது தெரிய -5 அல்லது ஒளிமிகு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த வாலுடுவின் நடத்தை கணிக்க முடியாதளவு மோசமாக உள்ளதால் அதன் ஒளியுமிழ்வு பகலவனை நெருங்கும்போது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து 1973 ஆம் ஆண்டின் கோஹவுட்டெக் போல சிதைந்து போகவோ அல்லது குறைவாகவோ செயல்பட வாய்ப்புள்ளதாம்.
புவியினங்கள் திட்டத்தின் (ESP) தலைமை நிருவாகி, கேட்டி ஜாகாரியன், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆதரவு மூலம் "மனித மொழிக்கான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் நாம் காணும் முன்னேற்றங்களைக் கொண்டு விலங்குகளின் தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தவுள்ளதாகக் கூறுகிறார்." மேலும் "இம்முன்னேற்றத்துடன், மற்றொரினத்துடன் இரு வழித் தொடர்பு கொள்ளக்கூடிய ஒர் உலகத்தை நோக்கி நாம் வேகமாக நகர எதிர்பார்க்கிறோம் என்கிறார்."
ஐஸ்லாந்து நாட்டில் 2030 ஆம் ஆண்டுவாக்கில் விண்வெளியிலிருந்து நாள்முழுவதும் தடையின்றி 30 மெகாவாட் சூரிய ஆற்றலை நுண்ணலையின் (மைரோவேவ்) செரிவாற்றல் தூண் என்கிற ₹6725 கோடி செலவு பிடிக்கும் ஆய்வுத்திட்டம் மூலம் சுமார் 3,000 வீடுகளுக்கு வழங்க 64 டன் எடையும், சுமார் 1,312 அடி (400 மீட்டர்) அகலமும் கொண்ட செயற்கைக்கோள் 2,000 முதல் 36,000 கிலோமீட்டர்கள் வரையிலான சுற்றுவட்ட உயரப்பாதையில் வலம்வரவுள்ளதாம்.
ஒளியியல் ஒருங்கிணைந்த சுற்று அல்லது ஒளியியல் சில்லு என்பது மின்னணுக்களுக்குப் பதிலாக ஒளியைத் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் ஒரு நுண்சில்லு ஆகும். இச்சில்லுக்கள் ஒளியைக் கண்டறிய, உருவாக்க, கடத்த மற்றும் செயலாக்க பல ஒளியியல் கூறுகளைக் கொண்டு ஒன்றாக இயங்கும்; இது, பொதுவாக காணக்கூடிய அல்லது அருகிலுள்ள அகச்சிவப்பு நிறமாலையில் செயல்படுகின்றன.
ஒளியியல் சில்லுக்களின் முக்கிய கூறுகள்:
1. அங்கலன்கள்: ஒளியியல் ஒருங்கிணைந்த சுற்று அலைவழிகள், ஒருங்கொளி, முனைவாக்கிகள் மற்றும் நிலைமாற்றிகள் போன்ற ஒளியியல் கூறுகளைப் பயன்படுத்துகின்றன.
2. பொருள்: பொதுவாக இண்டியம் பாஸ்பைடு பயன்படுத்தி உருவாக்கப்படும், இது பல்வேறு ஒளியியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது.
3. உற்பத்தி: ஒளி அச்சுப்பதிவு உள்ளிட்ட மின்னணு ஒருங்கிணைந்த சுற்றுகளுக்கு ஒத்த நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
4. பயன்பாடுகள்: முதன்மையாக ஒளியிழை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது மேலும் மருத்துவ உயிரியல் துறைகள், ஒளியியல் கணினி மற்றும் குவைய தொழில்நுட்பங்களில் பயன்பாடுத்த சாத்தியமுள்ளது.
நன்மைகள்:
- சிறுமயமாக்கம்
- அதிக வேகம்
- குறைந்த வெப்ப விளைவுகள்
- பெரிய ஒருங்கிணைப்புத் திறன்
- தற்போதைய உற்பத்தி முறைகளுடன் இணக்கம்
அன்மை முன்னேற்றங்கள்:
1. முழுமையாக ஒருங்கிணைந்த ஒளியியல் செயலி: ஆராய்ச்சியாளர்கள் ஆழ்ந்த நரம்பியல் வலையமைப்பின் அனைத்து முக்கிய கணக்கீடுகளையும் ஒளியியல் அடிப்படையில் செய்யக்கூடிய ஒரு சில்லை உருவாக்கியுள்ளனர், அதில் அரை நானோ வினாடிக்கும் குறைவான நேரத்தில் 92% துல்லியத்தை அடைந்துள்ளனர்.
2. குவைய ஒளியியல் சில்லுகள்: ஒருங்கிணைந்த ஒளியியல் மூலங்கள், குவைய நிலை கையாளுதலுக்கான மறுவடிவமைக்கக்கூடிய கூறுகள் மற்றும் ஒருங்கிணைந்த உணர்விகள் உள்ளிட்ட ஒளியியல் சில்லுகளில் குவையத் தகவல் தொடர்பு அமைப்புகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
3. புதிய வடிவமைப்புகள்: அன்மை ஆய்வுகள் மின்-பிரதிபலிப்பு மாற்றிகளுக்கான புதிய இருபரிமாண ஒளியியல் படிக வடிவமைப்புகளை வழங்கியுள்ளன, குறைந்த அளவு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குகின்றன.
ஒளியியல் சில்லுகள் மிக வேகமான செயற்கை நுண்ணறிவுக் கணக்கீடுகள், குவையத் தகவல் தொடர்பு மற்றும் அதிவேக, ஆற்றல் திறன் மிக்க தரவு செயலாக்கம் தேவைப்படும் பிற பயன்பாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
ஒளியியல் சில்லுக்களின் முக்கிய கூறுகள்:
1. அங்கலன்கள்: ஒளியியல் ஒருங்கிணைந்த சுற்று அலைவழிகள், ஒருங்கொளி, முனைவாக்கிகள் மற்றும் நிலைமாற்றிகள் போன்ற ஒளியியல் கூறுகளைப் பயன்படுத்துகின்றன.
2. பொருள்: பொதுவாக இண்டியம் பாஸ்பைடு பயன்படுத்தி உருவாக்கப்படும், இது பல்வேறு ஒளியியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது.
3. உற்பத்தி: ஒளி அச்சுப்பதிவு உள்ளிட்ட மின்னணு ஒருங்கிணைந்த சுற்றுகளுக்கு ஒத்த நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
4. பயன்பாடுகள்: முதன்மையாக ஒளியிழை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது மேலும் மருத்துவ உயிரியல் துறைகள், ஒளியியல் கணினி மற்றும் குவைய தொழில்நுட்பங்களில் பயன்பாடுத்த சாத்தியமுள்ளது.
நன்மைகள்:
- சிறுமயமாக்கம்
- அதிக வேகம்
- குறைந்த வெப்ப விளைவுகள்
- பெரிய ஒருங்கிணைப்புத் திறன்
- தற்போதைய உற்பத்தி முறைகளுடன் இணக்கம்
அன்மை முன்னேற்றங்கள்:
1. முழுமையாக ஒருங்கிணைந்த ஒளியியல் செயலி: ஆராய்ச்சியாளர்கள் ஆழ்ந்த நரம்பியல் வலையமைப்பின் அனைத்து முக்கிய கணக்கீடுகளையும் ஒளியியல் அடிப்படையில் செய்யக்கூடிய ஒரு சில்லை உருவாக்கியுள்ளனர், அதில் அரை நானோ வினாடிக்கும் குறைவான நேரத்தில் 92% துல்லியத்தை அடைந்துள்ளனர்.
2. குவைய ஒளியியல் சில்லுகள்: ஒருங்கிணைந்த ஒளியியல் மூலங்கள், குவைய நிலை கையாளுதலுக்கான மறுவடிவமைக்கக்கூடிய கூறுகள் மற்றும் ஒருங்கிணைந்த உணர்விகள் உள்ளிட்ட ஒளியியல் சில்லுகளில் குவையத் தகவல் தொடர்பு அமைப்புகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
3. புதிய வடிவமைப்புகள்: அன்மை ஆய்வுகள் மின்-பிரதிபலிப்பு மாற்றிகளுக்கான புதிய இருபரிமாண ஒளியியல் படிக வடிவமைப்புகளை வழங்கியுள்ளன, குறைந்த அளவு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குகின்றன.
ஒளியியல் சில்லுகள் மிக வேகமான செயற்கை நுண்ணறிவுக் கணக்கீடுகள், குவையத் தகவல் தொடர்பு மற்றும் அதிவேக, ஆற்றல் திறன் மிக்க தரவு செயலாக்கம் தேவைப்படும் பிற பயன்பாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
MIT News
Photonic processor could enable ultrafast AI computations with extreme energy efficiency
Researchers developed a fully integrated photonic processor that can perform all the key computations of a deep neural network on a photonic chip, using light. This advance could improve the speed and energy-efficiency of running intensive deep learning models…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
காற்று விசையாழிகளை அளவிடுவது பெரிய அளவிலான பயன்பாடுகளுக்குப் பயனுள்ளதாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால், நகர்ப்புற சூழல்களுக்கு அவற்றை அளவிடுவது மிகவும் சிக்கலாக ஒன்றாகும். நகரங்களில் காற்றின் வேகம், பெரும்பாலும் வினாடிக்கு மூன்று முதல் நான்கு மீட்டர் வரை குறைவானது. நகர்ப்புறங்களில் காற்றலை ஆற்றலின் திறனைப் பயன்படுத்த, புதிய வடிவமைப்புகள் தேவை. குறிப்பாக இக்குறைந்த வேகம் மற்றும் கொந்தளிப்பான நிலைமைகளை அவை பூர்த்தி செய்ய வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உந்துதல் அணுகுமுறை இதிலும் நிரூபித்தது. இது சில வாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உருவாக்க, சோதிக்க & செம்மைப்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
பர்மிங்காம் நகரத்தின் காற்றின் வேகம் மற்றும் நகர்ப்புற சூழலில் இருக்கும் மற்ற வடிவமைப்புகளை விட ஏழு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு உந்துதல் அணுகுமுறை இதிலும் நிரூபித்தது. இது சில வாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உருவாக்க, சோதிக்க & செம்மைப்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
பர்மிங்காம் நகரத்தின் காற்றின் வேகம் மற்றும் நகர்ப்புற சூழலில் இருக்கும் மற்ற வடிவமைப்புகளை விட ஏழு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
👍1
ஒளியால் தூண்டப்பட்ட காந்தமயமாக்கலால் யூரோபியம் அணுவின் சுழல்வுச் சீரமைப்பு.
நன்றி: ஆண்ட்ரே போஹோமோலெட்ஸ் ஹென்ரிக்ஸ்.
எம்ஐடி இயற்பியலாளர்கள் 50-வாட்திறன் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி 50 பைக்கோ (0.000,000,000,050) நொடிகளில் ஒரு பொருளில் நீண்டகாலமாக நீடிக்கும் காந்த நிலையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம் ஒரு அதிவேகக் காந்தத்தைக் கையாள அனுமதிக்கிறது, இம்முன்னேற்றத் தாக்கங்கள் பாரம்பரிய காந்தப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவை. தங்கம் வெள்ளி போன்ற காந்தமாகா உலோகங்கள் கூட சீரொளியைப் பயன்படுத்தி காந்தங்களாக மாற்றப்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இலட்சங்கோடியலை சீரொளி காந்தமாக்கல் அதிவேக அளவீடுகளில் காந்த பண்புகளைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நுண்ம நொடிகளில் ஒரு பொருளின் காந்தமயமாக்கலைக் கையாளும் திறன் கொண்ட இவை, பொருட்களில் காந்த தருணங்களைத் திசைதிருப்ப மிகக் குறுகிய ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துகிறது.
நன்மைகள்:
* காந்தப்பொருள் வெப்பமாவதைத் தவிர்த்து நுண்ம காந்தமயமாக்கலைக் கட்டுப்படுத்தும்.
* இலட்சங்கோடி அதிர்வலை எஃகுலோகத் தாள்களில் பைக்கோ நொடிகளில் வலுவான மின்காந்த புலங்களைத் தூண்டக்கூடும்.
* மின்புலச் சுழலுந்து இடைவினைகள் மூலம் காந்தமயமாக்கல் அலைதொர்டர்பு, நிறப்பிரிகை, நுண்மவுணர்க் கருவி போன்றவைகளில் முக்கிய பங்கு வகிக்கும்.
* மிகக்குறைந்த ஆற்றலில் திறமையான மீயடர் நினைவகக் கருவிகளை வழங்கும்.
இதைப் புரிந்துகொள்வதன் மூலம் பொருட்களில் காந்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் திறமையான மற்றும் துல்லியமான முறைகளை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
நன்றி: ஆண்ட்ரே போஹோமோலெட்ஸ் ஹென்ரிக்ஸ்.
எம்ஐடி இயற்பியலாளர்கள் 50-வாட்திறன் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி 50 பைக்கோ (0.000,000,000,050) நொடிகளில் ஒரு பொருளில் நீண்டகாலமாக நீடிக்கும் காந்த நிலையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம் ஒரு அதிவேகக் காந்தத்தைக் கையாள அனுமதிக்கிறது, இம்முன்னேற்றத் தாக்கங்கள் பாரம்பரிய காந்தப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவை. தங்கம் வெள்ளி போன்ற காந்தமாகா உலோகங்கள் கூட சீரொளியைப் பயன்படுத்தி காந்தங்களாக மாற்றப்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இலட்சங்கோடியலை சீரொளி காந்தமாக்கல் அதிவேக அளவீடுகளில் காந்த பண்புகளைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நுண்ம நொடிகளில் ஒரு பொருளின் காந்தமயமாக்கலைக் கையாளும் திறன் கொண்ட இவை, பொருட்களில் காந்த தருணங்களைத் திசைதிருப்ப மிகக் குறுகிய ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்துகிறது.
நன்மைகள்:
* காந்தப்பொருள் வெப்பமாவதைத் தவிர்த்து நுண்ம காந்தமயமாக்கலைக் கட்டுப்படுத்தும்.
* இலட்சங்கோடி அதிர்வலை எஃகுலோகத் தாள்களில் பைக்கோ நொடிகளில் வலுவான மின்காந்த புலங்களைத் தூண்டக்கூடும்.
* மின்புலச் சுழலுந்து இடைவினைகள் மூலம் காந்தமயமாக்கல் அலைதொர்டர்பு, நிறப்பிரிகை, நுண்மவுணர்க் கருவி போன்றவைகளில் முக்கிய பங்கு வகிக்கும்.
* மிகக்குறைந்த ஆற்றலில் திறமையான மீயடர் நினைவகக் கருவிகளை வழங்கும்.
இதைப் புரிந்துகொள்வதன் மூலம் பொருட்களில் காந்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் திறமையான மற்றும் துல்லியமான முறைகளை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
👍2
பி.வி.100 அணு மின்கலமானது மின்சாரத்தை உருவாக்க வைர குறைக்கடத்தித் தொழில்நுட்பம் மற்றும் 2-மைக்ரான்-தடிமன் கொண்ட கதிரியக்க நிக்கல்-63 தனிமத்தின் மெல்லிய ஏடடுக்குக் கட்டமைப்பு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகிறது. வைர குறைக்கடத்தி மாற்றிகளுடன் நிக்கல்-63 சிதைவுக்கு உட்படுகையில் உமிழப்படும் எதிர்மின்மங்களை வைர மாற்றிகள் பயன்படுத்தக்கூடிய மின் ஆற்றலாகத் திறம்பட கைப்பற்றி மாற்றுகின்றன.
இதன் தற்போதைய வெளியீடு வெறும் 15 x15x5மிமீ அளவு கொண்டது மற்றும் பின்வரும் பல வியப்பூட்டும் கூறுகளைக் கொண்டுள்ளது:
* சக்தி வெளியீடு: 100 மைக்ரோவாட்ஸ் (0.0001 வாட்ஸ்)
* மின்னழுத்தம்: 3 வோல்ட்
* ஆயுட்காலம்: 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான செயல்பாடு
* இயக்க வெப்பநிலை வரம்பு: -60 முதல் 120 செல்சியஸ் வரை
* பராமரிப்பு: பராமரிப்பு இல்லாத மின் உற்பத்தி
மேலும், இதை ஒன்றோடு ஒன்றாய் இணைப்பதன் மூலம் திறன் பெருக்கத்தை அனுமதிப்பதால் எதிர்காலச் செயல்பாடுகளில் அதிக வெளியீட்டு உள்ளமைவுகளுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தும்.
இதன் தற்போதைய வெளியீடு வெறும் 15 x15x5மிமீ அளவு கொண்டது மற்றும் பின்வரும் பல வியப்பூட்டும் கூறுகளைக் கொண்டுள்ளது:
* சக்தி வெளியீடு: 100 மைக்ரோவாட்ஸ் (0.0001 வாட்ஸ்)
* மின்னழுத்தம்: 3 வோல்ட்
* ஆயுட்காலம்: 50 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான செயல்பாடு
* இயக்க வெப்பநிலை வரம்பு: -60 முதல் 120 செல்சியஸ் வரை
* பராமரிப்பு: பராமரிப்பு இல்லாத மின் உற்பத்தி
மேலும், இதை ஒன்றோடு ஒன்றாய் இணைப்பதன் மூலம் திறன் பெருக்கத்தை அனுமதிப்பதால் எதிர்காலச் செயல்பாடுகளில் அதிக வெளியீட்டு உள்ளமைவுகளுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தும்.
livescience.com
This tiny radioactive battery can last 50 years without recharging — and it's coming in 2025
BetaVolt's BV100 is smaller than a coin and contains a radioactive isotope of nickel that decays into copper and supplies power to a device for up to 50 years. But it probably won't power your smartphone anytime soon, an expert suggests.
👍1
ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலின் புளூபேர்ட் செயற்கைக்கோள்களுடன் இணைந்து தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசிகளைப் பயன்படுத்தி உலகின் முதல் செயற்கைக்கோள் காணொளி அழைப்பை வோடபோன் அடைந்தது.
இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான படிப்படியான விளக்கம்:
1. பயனரின் திறன்பேசி இணைப்பு:
பயனரின் தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசி, குறைந்த பூமி சுற்றுப்பாதையில் உள்ள புளூபேர்ட் செயற்கைக்கோளுடன் இணைகிறது. செயற்கைக்கோளுக்குத் தேவையான தொடர்புக்குடை அல்லது முனையங்கள் போன்ற சிறப்புக் கருவிகள் ஏதுமின்றி இந்த இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.
2. செயற்கைக்கோளுடன் சமிக்ஞை பரிமாற்றம்:
பயனரின் திறன்பேசியின் சமிக்ஞை புளூபேர்ட் செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படுகிறது. இச்செயற்கைக்கோள்கள் குறிப்பாக அலைப்பேசி அகலக்கற்றை இணைப்பைத் தற்போதுள்ள திறன்பேசிகளுக்கு நேரடியாக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
3. தரை நிலையத்திற்கும் செயற்கைக்கோளுக்கும் தொடர்பு:
புளூபேர்ட் செயற்கைக்கோள் சமிக்ஞையை மீண்டும் பூமிக்கு ஒரு தரை அடிப்படையிலான தொடர்நிலையத்திற்கு அனுப்புகிறது. இத்தொடர்நிலையம் செயற்கைக்கோள் மற்றும் வோடபோனின் நிலப்பரப்பு வலையமைப்பிற்கு இடையில் ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறது.
4. நிலப்பரப்பு வலையமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு:
தரை நிலையம் சமிக்ஞையைப் பெற்று அதை வோடபோனின் தற்போதைய நில அடிப்படையிலான கண்ணாடிநார் மற்றும் அலைப்பேசி வலையமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. தொடர்பு எல்லைப் பகுதிக்குள் செய்யப்பட்ட வேறு எந்த அழைப்பையும் போலவே, வோடபோனின் உள்கட்டமைப்பு மூலம் அழைப்பை அனுப்ப இது அனுமதிக்கிறது.
5. பெறுநரின் இணைப்பு:
இந்த அழைப்பு, பின்னர் பெறுநரின் திறன்பேசியுடன் இணைக்கப்பட்டு வோடபோனின் நிலப்பரப்பு வலையமைப்பின் எல்லைப் பகுதிக்குள் செயல்படுகிறது. பெறுநரின் எந்தச் சிறப்புக் கருவிகளுமின்றி அவை தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசிகளில் அழைப்பைப் பெறலாம்.
6. இரு வழித் தொடர்பு:
திரும்பும் சமிக்ஞையின் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு, தொலைதூரப் பகுதியிலும் பெறுநருக்கும் இடையே இரு வழி தொடர்புகளை உறுதி செய்கிறது. செயற்கைக்கோள் மற்றும் நிலப்பரப்பு வலையமைப்புகளுக்கு இடையில் இந்தத் தடையற்ற மாறுதல் தொடர்ச்சியான இணைப்பை அனுமதிக்கிறது.
7. தரம் மற்றும் வேகம்:
புளூபேர்ட் செயற்கைக்கோள்களால் 120 எம்.பி.பி.எஸ் வரை உச்சத்தரவு பரிமாற்ற வேகத்தை வழங்க முடியும். இதனால் காணொளி அழைப்புகள், இணைய அணுகல் மற்றும் நேரலைச் செய்தியிடல் உள்ளிட்ட முழு அலைக்கற்றை மற்றும் அகலக்கற்றை பரிமாற்றத்தைச் செயல்படுத்துகிறது.
8. எதிர்கால திட்டங்கள்:
2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் திட்டமிடப்பட்ட மேலதிகச் சோதனைகளைத் தொடர்ந்து, இந்த நேரடி-திறன்பேசி அகலக்கற்றை செயற்கைக்கோள் பணிகளை ஐரோப்பியச் சந்தைகளில் 2025 மற்றும் 2026 வரை படிப்படியாக அறிமுகப்படுத்த வோடபோன் திட்டமிட்டுள்ளது. இது தொலைநிலை மற்றும் கிராமப்புறங்களில் அலைப்பேசிப் பாதுகாப்பு இடைவெளிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மேலும் வோடபோன் மற்றும் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலின் இந்த புதுமையான அணுகுமுறை உலகளாவிய இணைப்பை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையைக் குறிப்பதோடு, அலைப்பேசி தொடர்பு எல்லையின் இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் முன்னர் அணுக முடியாத பகுதிகளில் நம்பகமான தகவல்தொடர்புகளை உறுதிசெய்கிறது.
9. எலன் மாஸ்கின் ஸ்டார்லிங்க்:
ஆப்பில் நிறுவனக் கைப்பேசிகள் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் மூலம் தொடர்புகொள்ள அதன் இயக்குதளத்தை 18.3 பதிப்பிற்கு மேம்படுத்தியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான படிப்படியான விளக்கம்:
1. பயனரின் திறன்பேசி இணைப்பு:
பயனரின் தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசி, குறைந்த பூமி சுற்றுப்பாதையில் உள்ள புளூபேர்ட் செயற்கைக்கோளுடன் இணைகிறது. செயற்கைக்கோளுக்குத் தேவையான தொடர்புக்குடை அல்லது முனையங்கள் போன்ற சிறப்புக் கருவிகள் ஏதுமின்றி இந்த இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.
2. செயற்கைக்கோளுடன் சமிக்ஞை பரிமாற்றம்:
பயனரின் திறன்பேசியின் சமிக்ஞை புளூபேர்ட் செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படுகிறது. இச்செயற்கைக்கோள்கள் குறிப்பாக அலைப்பேசி அகலக்கற்றை இணைப்பைத் தற்போதுள்ள திறன்பேசிகளுக்கு நேரடியாக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
3. தரை நிலையத்திற்கும் செயற்கைக்கோளுக்கும் தொடர்பு:
புளூபேர்ட் செயற்கைக்கோள் சமிக்ஞையை மீண்டும் பூமிக்கு ஒரு தரை அடிப்படையிலான தொடர்நிலையத்திற்கு அனுப்புகிறது. இத்தொடர்நிலையம் செயற்கைக்கோள் மற்றும் வோடபோனின் நிலப்பரப்பு வலையமைப்பிற்கு இடையில் ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறது.
4. நிலப்பரப்பு வலையமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு:
தரை நிலையம் சமிக்ஞையைப் பெற்று அதை வோடபோனின் தற்போதைய நில அடிப்படையிலான கண்ணாடிநார் மற்றும் அலைப்பேசி வலையமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. தொடர்பு எல்லைப் பகுதிக்குள் செய்யப்பட்ட வேறு எந்த அழைப்பையும் போலவே, வோடபோனின் உள்கட்டமைப்பு மூலம் அழைப்பை அனுப்ப இது அனுமதிக்கிறது.
5. பெறுநரின் இணைப்பு:
இந்த அழைப்பு, பின்னர் பெறுநரின் திறன்பேசியுடன் இணைக்கப்பட்டு வோடபோனின் நிலப்பரப்பு வலையமைப்பின் எல்லைப் பகுதிக்குள் செயல்படுகிறது. பெறுநரின் எந்தச் சிறப்புக் கருவிகளுமின்றி அவை தற்போதுள்ள 4 ஜி/5 ஜி திறன்பேசிகளில் அழைப்பைப் பெறலாம்.
6. இரு வழித் தொடர்பு:
திரும்பும் சமிக்ஞையின் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு, தொலைதூரப் பகுதியிலும் பெறுநருக்கும் இடையே இரு வழி தொடர்புகளை உறுதி செய்கிறது. செயற்கைக்கோள் மற்றும் நிலப்பரப்பு வலையமைப்புகளுக்கு இடையில் இந்தத் தடையற்ற மாறுதல் தொடர்ச்சியான இணைப்பை அனுமதிக்கிறது.
7. தரம் மற்றும் வேகம்:
புளூபேர்ட் செயற்கைக்கோள்களால் 120 எம்.பி.பி.எஸ் வரை உச்சத்தரவு பரிமாற்ற வேகத்தை வழங்க முடியும். இதனால் காணொளி அழைப்புகள், இணைய அணுகல் மற்றும் நேரலைச் செய்தியிடல் உள்ளிட்ட முழு அலைக்கற்றை மற்றும் அகலக்கற்றை பரிமாற்றத்தைச் செயல்படுத்துகிறது.
8. எதிர்கால திட்டங்கள்:
2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் திட்டமிடப்பட்ட மேலதிகச் சோதனைகளைத் தொடர்ந்து, இந்த நேரடி-திறன்பேசி அகலக்கற்றை செயற்கைக்கோள் பணிகளை ஐரோப்பியச் சந்தைகளில் 2025 மற்றும் 2026 வரை படிப்படியாக அறிமுகப்படுத்த வோடபோன் திட்டமிட்டுள்ளது. இது தொலைநிலை மற்றும் கிராமப்புறங்களில் அலைப்பேசிப் பாதுகாப்பு இடைவெளிகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மேலும் வோடபோன் மற்றும் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலின் இந்த புதுமையான அணுகுமுறை உலகளாவிய இணைப்பை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையைக் குறிப்பதோடு, அலைப்பேசி தொடர்பு எல்லையின் இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் முன்னர் அணுக முடியாத பகுதிகளில் நம்பகமான தகவல்தொடர்புகளை உறுதிசெய்கிறது.
9. எலன் மாஸ்கின் ஸ்டார்லிங்க்:
ஆப்பில் நிறுவனக் கைப்பேசிகள் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் மூலம் தொடர்புகொள்ள அதன் இயக்குதளத்தை 18.3 பதிப்பிற்கு மேம்படுத்தியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Vodafone.com
Vodafone makes world’s first space video call from an area of no coverage using a standard mobile phone and commercial satellites…
Vodafone has made a historic first space mobile video call from a remote area of Wales. Find out more.
❤1👍1
தங்கந்தயாரிப்புப்புரட்சி (தங்கம் தயாரிப்பில் புரட்சி)
சிலிகான்வேலியிலுள்ள நிறுவனமான மராதான் பியுழ்சன் (Marathon Fusion) இதள்ளியைத் (பாதரசம் எனப்படும் mercury) தங்கமாக மாற்றும் அணுச்சேர்கை (nuclear fusion) முறையைக் கண்டுபிடித்ததாக அறிவிப்பு.
அறிவியல் விளக்கம்
அந்நிறுவனம் வெளியிட்ட அறிவியல் கட்டுரையின்படி, டியூட்டீரியம்-ட்ரிட்டியம் (deuterium-tritium) செயற்கை அணுச்சேர்கை வினைகளால் உருவாகும் உயராற்றல் நியூட்ரான்கள், இதள்-198 கதிரியக்க அணுக்களைத் தாக்கும்போது, அவை இதள்-197 ஆக மாற்றப்படுகின்றன. இது, சுமார் 64 மணிநேரத்தில் நிலையான கதிரியக்கமற்ற தங்கமாக ஆகிறது.
இந்த முறையைக் கொண்டு வருடத்திற்கு ஒவ்வொரு 1 கிகாவாட் மின் உற்பத்தி மூலம் 5,000 கிலோ தங்கம் தயாரிக்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உலகச் சந்தை மதிப்பீட்டின்படி, இது சுமார் 5,000 கோடி உருபாய்க்கு மேல் இருக்கும்.
இன்னும் இது விளக்குநூல் பரிசீலனையடைய (peer-reviewed) கட்டுரை என்பதால், அவ்வளவாக உறுதி செய்ய முடியாது.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அமெரிக்க ஆற்றல் துறையின் மின்ம இயற்பியலாளர் அக்மட்டயல்லோ, “இக்கட்டுரை மாயத்திரைக்கதையாகவும் வியப்பூட்டுவதாகவும் உள்ளது; பலர் அதைக் கவனமுடன் பார்த்து வருகின்றனர்,” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், நுட்பச் சிக்கல்கள் உள்ளன. செயற்கை அணுச்சேர்கை விளைவாக உருவாகும் சில தங்க மூலக்கூறு கதிர்வீச்சுடன் (radioactive) இருக்கும், இது 14 முதல் 18 ஆண்டுகள் வரை காத்திருந்தால் மட்டுமே உலகச் சந்தையில் விற்பனைக்கு வைக்கக்கூடியதாக இருக்கும்.
இதுகுறித்து அந்நிறுவனர் அடம்ரட்கோஸ்கி சொல்வதாவது: “இக்கதிர்வீச்சுள்ள தங்கம் பெட்டகத்தில் (vault) வைக்க மட்டுமே இருக்கும் என்பதால், நிதி ஆதார வசதிகளுக்காக (financial backing instruments) பயன்படுத்தலாம், காரணம், தங்கத்தின் முக்கிய பங்கு, அது காப்பகத்தில் இருப்பதுதான்”.
பொருளாதார தாக்கங்கள்
அந்நிறுவனம் வழங்கிய பொருளாதார மாதிரிகளின்படி, இந்த நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் மின்சாரமும் தங்கமும் தயாரிக்கப்படுவதால் கூடுதல் வருமானத்தை வழங்கும், எனவே பல செயற்கை அணுச்சேர்கை நிலையங்கள் இரட்டிப்பு வருமான வாய்ப்பைக் காணும்.
இதை ஆதரிக்கும் வகையில், ஸ்ட்ராங் அட்டாமிக் (Strong Atomics) நிறுவனத்தின் முதலீட்டாளர் மால்கம் ஆன்ட்லி கூறுவது: “இந்த இரட்டை வருமான முறை, அணுச்சேர்கைத் தொழில்நுட்ப வளர்ச்சியை மிக வேகமாகத் தூண்டக்கூடியது”.
இந்த மாதிரியில் இன்னொரு முக்கிய அம்சம் எனக் குறிப்பிடுவது: இதில் பயன்படும் இதள்-198 என்ற கதிரியக்க அணு, இயற்கையாகக் கிடைக்கும் இதள்ளில் 10% ஆக மட்டுமே இருக்கிறது. எனவே, கதிரியக்க செறிவூட்டம் (isotope enrichment) எனப்படும் முரண்பாட்டான செயற்பாடுகள் மிக அதிக அளவில் தேவைப்படும்.
நிறுவனத்தின் பின்னணி
மராதான் பியுஷன் எனப்படும் இந்நிறுவனம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்பஸ்எக்ஸ் (SpaceX) முன்னாள் அறிஞர் அடம்ரட்கோஸ்கி மற்றும் அறிவியல் கொள்கை நிபுணர் கைல் மற்றும் சிலரால் நிறுவப்பட்டது. நிறுவனம் ஆரம்பத்தில் எரிபொருட்சுழற்சி (fuel cycle) மேலாண்மைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியது, பின்னர் உலோக மாற்ற (transmutation) ஆராய்ச்சிக்கும் விரிந்தது.
மொத்தம் 86 கோடி உருபாய் மதிப்புள்ள தனியார் முதலீட்டையும், 34 கோடி மதிப்புள்ள அமெரிக்க ஆற்றல் துறை மானியத்தையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பானது ஐரோப்பாவில் உள்ள செர்ன் (CERN) ஆய்வகத்தில் முன்னர் பார்வையிடப்பட்டவைகளை ஒத்ததாக இருந்தாலும், இந்நிறுவனம் தொடங்கிய அதீதத் தங்க உற்பத்திக்கான முதலாவது படி என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அந்நிறுவன அறிக்கையில் கூறியது:
“முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விட, எங்களது முயற்சி அதீதமுறை அளவில் விரிவதற்கும் நடைமுறைச் செயல்பாட்டிற்கும், பொருளாதாரத் தோய்வற்ற அம்சமுடையது ஆகும். இது ஒரு புதிய தங்க யுகத்துக்கான தொடக்கமுமாகும்”.
சிலிகான்வேலியிலுள்ள நிறுவனமான மராதான் பியுழ்சன் (Marathon Fusion) இதள்ளியைத் (பாதரசம் எனப்படும் mercury) தங்கமாக மாற்றும் அணுச்சேர்கை (nuclear fusion) முறையைக் கண்டுபிடித்ததாக அறிவிப்பு.
அறிவியல் விளக்கம்
அந்நிறுவனம் வெளியிட்ட அறிவியல் கட்டுரையின்படி, டியூட்டீரியம்-ட்ரிட்டியம் (deuterium-tritium) செயற்கை அணுச்சேர்கை வினைகளால் உருவாகும் உயராற்றல் நியூட்ரான்கள், இதள்-198 கதிரியக்க அணுக்களைத் தாக்கும்போது, அவை இதள்-197 ஆக மாற்றப்படுகின்றன. இது, சுமார் 64 மணிநேரத்தில் நிலையான கதிரியக்கமற்ற தங்கமாக ஆகிறது.
இந்த முறையைக் கொண்டு வருடத்திற்கு ஒவ்வொரு 1 கிகாவாட் மின் உற்பத்தி மூலம் 5,000 கிலோ தங்கம் தயாரிக்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உலகச் சந்தை மதிப்பீட்டின்படி, இது சுமார் 5,000 கோடி உருபாய்க்கு மேல் இருக்கும்.
இன்னும் இது விளக்குநூல் பரிசீலனையடைய (peer-reviewed) கட்டுரை என்பதால், அவ்வளவாக உறுதி செய்ய முடியாது.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அமெரிக்க ஆற்றல் துறையின் மின்ம இயற்பியலாளர் அக்மட்டயல்லோ, “இக்கட்டுரை மாயத்திரைக்கதையாகவும் வியப்பூட்டுவதாகவும் உள்ளது; பலர் அதைக் கவனமுடன் பார்த்து வருகின்றனர்,” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், நுட்பச் சிக்கல்கள் உள்ளன. செயற்கை அணுச்சேர்கை விளைவாக உருவாகும் சில தங்க மூலக்கூறு கதிர்வீச்சுடன் (radioactive) இருக்கும், இது 14 முதல் 18 ஆண்டுகள் வரை காத்திருந்தால் மட்டுமே உலகச் சந்தையில் விற்பனைக்கு வைக்கக்கூடியதாக இருக்கும்.
இதுகுறித்து அந்நிறுவனர் அடம்ரட்கோஸ்கி சொல்வதாவது: “இக்கதிர்வீச்சுள்ள தங்கம் பெட்டகத்தில் (vault) வைக்க மட்டுமே இருக்கும் என்பதால், நிதி ஆதார வசதிகளுக்காக (financial backing instruments) பயன்படுத்தலாம், காரணம், தங்கத்தின் முக்கிய பங்கு, அது காப்பகத்தில் இருப்பதுதான்”.
பொருளாதார தாக்கங்கள்
அந்நிறுவனம் வழங்கிய பொருளாதார மாதிரிகளின்படி, இந்த நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் மின்சாரமும் தங்கமும் தயாரிக்கப்படுவதால் கூடுதல் வருமானத்தை வழங்கும், எனவே பல செயற்கை அணுச்சேர்கை நிலையங்கள் இரட்டிப்பு வருமான வாய்ப்பைக் காணும்.
இதை ஆதரிக்கும் வகையில், ஸ்ட்ராங் அட்டாமிக் (Strong Atomics) நிறுவனத்தின் முதலீட்டாளர் மால்கம் ஆன்ட்லி கூறுவது: “இந்த இரட்டை வருமான முறை, அணுச்சேர்கைத் தொழில்நுட்ப வளர்ச்சியை மிக வேகமாகத் தூண்டக்கூடியது”.
இந்த மாதிரியில் இன்னொரு முக்கிய அம்சம் எனக் குறிப்பிடுவது: இதில் பயன்படும் இதள்-198 என்ற கதிரியக்க அணு, இயற்கையாகக் கிடைக்கும் இதள்ளில் 10% ஆக மட்டுமே இருக்கிறது. எனவே, கதிரியக்க செறிவூட்டம் (isotope enrichment) எனப்படும் முரண்பாட்டான செயற்பாடுகள் மிக அதிக அளவில் தேவைப்படும்.
நிறுவனத்தின் பின்னணி
மராதான் பியுஷன் எனப்படும் இந்நிறுவனம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்பஸ்எக்ஸ் (SpaceX) முன்னாள் அறிஞர் அடம்ரட்கோஸ்கி மற்றும் அறிவியல் கொள்கை நிபுணர் கைல் மற்றும் சிலரால் நிறுவப்பட்டது. நிறுவனம் ஆரம்பத்தில் எரிபொருட்சுழற்சி (fuel cycle) மேலாண்மைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியது, பின்னர் உலோக மாற்ற (transmutation) ஆராய்ச்சிக்கும் விரிந்தது.
மொத்தம் 86 கோடி உருபாய் மதிப்புள்ள தனியார் முதலீட்டையும், 34 கோடி மதிப்புள்ள அமெரிக்க ஆற்றல் துறை மானியத்தையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பானது ஐரோப்பாவில் உள்ள செர்ன் (CERN) ஆய்வகத்தில் முன்னர் பார்வையிடப்பட்டவைகளை ஒத்ததாக இருந்தாலும், இந்நிறுவனம் தொடங்கிய அதீதத் தங்க உற்பத்திக்கான முதலாவது படி என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அந்நிறுவன அறிக்கையில் கூறியது:
“முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விட, எங்களது முயற்சி அதீதமுறை அளவில் விரிவதற்கும் நடைமுறைச் செயல்பாட்டிற்கும், பொருளாதாரத் தோய்வற்ற அம்சமுடையது ஆகும். இது ஒரு புதிய தங்க யுகத்துக்கான தொடக்கமுமாகும்”.
Marathonfusion
Marathon Fusion
Solving the grand challenge of alchemy
❤2
ஜப்பானியர்களில் 100 அகவைக்கு மேல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அவ்வரசின் தரவுகளின்படி 95,119 ஆக உயர்ந்துள்ளது. இதில் 88% விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நூற்றாண்டு கடந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 2,980 ஆக அதிகரித்து ஜப்பான் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நூற்றாண்டு கடந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை 2,980 ஆக அதிகரித்து ஜப்பான் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
இரவு நேர சூரிய மின்சக்திக்காக 4,000 சுற்றுப்பாதை கண்ணாடிகளை அமைக்க புதிதாய் உருவாகும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
கலிபோர்னியா உள்ள ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் எனும் அந்நிறுவனம் அடுத்த ஆண்டு ஒரு செயல்விளக்க செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமெரிக்க ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது; இது 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 விண்வெளி கண்ணாடிகளை நிலைநிறுத்தும் திட்டத்தின் முதல் படியாகும்; இது உலகளவில் வானியலாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்படி, ஏப்ரல் 2026-இல் EARENDIL-1 செயற்கைக்கோளை ஏவ அனுமதி கோருகிறது; இது இரவின் இருட்டில் பூமியின் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சூரிய ஒளியைத் திருப்பிவிட சுற்றுப்பாதையில் 18-க்கு 18 மீட்டர் கண்ணாடியை விண்வெளியில் விரிக்கும். ஆற்றல் தேவை உச்சத்தில் இருக்கும் அந்தி நேரங்களில் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் சூரிய ஆற்றல் இயக்க நேரத்தை நீட்டிப்பதே இப்பணியின் நோக்கம்.
அறிவியல் சமூகம் எச்சரிக்கை ஒலிக்கிறது
வானியலாளர்கள் இத்திட்டத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர், இரவு வானத் தெரிவுநிலை மற்றும் வானியல் ஆராய்ச்சியில் "பேரழிவு" தாக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். "இத்திட்டத்தின் மைய இலக்கு வானத்தை ஒளிரச் செய்து பகல் நேரத்தை நீட்டிப்பதாகும், மேலும் வெளிப்படையாக, ஒரு வானியல் பார்வையில், அது மிகவும் பேரழிவு தரும்," என்று இங்கிலாந்தின் ராயல் வானியல் சங்கத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராபர்ட் மாஸி கூறினார்.
அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆகஸ்ட் கணக்கெடுப்பில், 1,400 க்கும் மேற்பட்ட வானியலாளர்கள் தங்கள் விண்மீன் ஆய்வுப்பணி பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். கண்ணாடிகள் முழு நிலவை விட நான்கு மடங்கு பிரகாசமாகத் தோன்றும் மற்றும் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வரும்போது வானம் முழுவதும் நகரும் பிரகாசமான புள்ளிகளை உருவாக்கும்.
பிரதிபலித்த ஒளி உணர்திறன் வாய்ந்த வானியல் படக்கருவிகளுக்கு "அவியும் பிரகாசமாக" இருக்கும் என்றும் "அதிநவீன, தரை அடிப்படையிலான ஒளியியல் வானியலுக்கு அழிவுகரமானதாகவும்" இருக்கும் என்று ரூபின் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி அந்தோணி டைசன் எச்சரித்தார்.
தொழில்நுட்பச் சிக்கலும் சுற்றுச்சூழல் கவலைகளும்
ஒவ்வொரு செயற்கைக்கோளும் பூமியின் மேற்பரப்பில் தோராயமாக 5 கிலோமீட்டர் ஒளிரும் இடத்தை உருவாக்கும் என்றாலும் நிபுணர்கள் திட்டத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் நம்ப மறுக்கின்றனர். நண்பகல் சூரிய ஒளி தீவிரத்தில் 20% மட்டுமே அடைய, ஒரே நேரத்தில் இயங்கும் சுமார் 3,000 செயற்கைக்கோள்கள் தேவைப்படும். அந்நிறுவனத்தின் இறுதி இலக்கு 2,50,000 செயற்கைக்கோள்கள் என்ற தொலைநோக்குப் பார்வை, தற்போது செயலில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகளையும் விட அதிகமாக இருக்கும்.
செயற்கை விண்விளக்குகள் நட்சத்திரங்களால் பயணிக்கும் பறவைகள், இயற்கை இருள் சுழற்சிகளைச் சார்ந்திருக்கும் அந்துப்பூச்சிகள், தவளைகள் மற்றும் வௌவால்கள் உள்ளிட்ட இரவு நேர வனவிலங்குகளைச் சீர்குலைக்கும் என்று சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். "ஒளி மாசுபாடு இயற்கை சுழற்சி, உடலியல் மற்றும் எண்ணற்ற உயிரினங்களின் நடத்தை முறைகளில் இது தலையிடுகிறது," என்று முதுகெலும்பற்ற விலங்குகளின் தொண்டு நிறுவன டேவிட் ஸ்மித் கூறினார்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் அந்நிறுவனம் அத்திட்டத்தை அடைய முற்படுகிறது
சீக்வோயா கேபிடல் மற்றும் தொழில்நுட்ப பில்லியனர் பைஜு பட் ஆகியோரால் ஆதரிக்கப்படும் அந்நிறுவனம், பரவலான ஒளி மாசுபாட்டை விட சுருக்கமான வெளிச்சத்தை இது வழங்கும் என்று கூறிவருகின்றனர். அந்நிறுவனம் உலகளவில் 260,000-க்கும் மேற்பட்ட சேவை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது மற்றும் செயல்விளக்கப் பணிக்காக அமெரிக்க விமானப்படை நிதியில் ரூ10 கோடி பெற்றுள்ளது.
"எங்கள் சேவை மிகவும் உள்ளூர்மயமாக்கப்பட்டது," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார், குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைக்காதபோது கண்ணாடிகள் பூமியிலிருந்து சாய்ந்துவிடும் என்றும் விளக்கினார். அந்நிறுவனம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதாகவும், ஆய்வகங்களுக்கு அருகில் ஒளி பிரதிபலிப்பைத் தவிர்ப்பதாகவும் உறுதியளிக்கிறது, இருப்பினும் அத்தகைய நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து வானியலாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
கலிபோர்னியா உள்ள ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல் எனும் அந்நிறுவனம் அடுத்த ஆண்டு ஒரு செயல்விளக்க செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமெரிக்க ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது; இது 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 விண்வெளி கண்ணாடிகளை நிலைநிறுத்தும் திட்டத்தின் முதல் படியாகும்; இது உலகளவில் வானியலாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்படி, ஏப்ரல் 2026-இல் EARENDIL-1 செயற்கைக்கோளை ஏவ அனுமதி கோருகிறது; இது இரவின் இருட்டில் பூமியின் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சூரிய ஒளியைத் திருப்பிவிட சுற்றுப்பாதையில் 18-க்கு 18 மீட்டர் கண்ணாடியை விண்வெளியில் விரிக்கும். ஆற்றல் தேவை உச்சத்தில் இருக்கும் அந்தி நேரங்களில் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் சூரிய ஆற்றல் இயக்க நேரத்தை நீட்டிப்பதே இப்பணியின் நோக்கம்.
அறிவியல் சமூகம் எச்சரிக்கை ஒலிக்கிறது
வானியலாளர்கள் இத்திட்டத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர், இரவு வானத் தெரிவுநிலை மற்றும் வானியல் ஆராய்ச்சியில் "பேரழிவு" தாக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். "இத்திட்டத்தின் மைய இலக்கு வானத்தை ஒளிரச் செய்து பகல் நேரத்தை நீட்டிப்பதாகும், மேலும் வெளிப்படையாக, ஒரு வானியல் பார்வையில், அது மிகவும் பேரழிவு தரும்," என்று இங்கிலாந்தின் ராயல் வானியல் சங்கத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராபர்ட் மாஸி கூறினார்.
அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆகஸ்ட் கணக்கெடுப்பில், 1,400 க்கும் மேற்பட்ட வானியலாளர்கள் தங்கள் விண்மீன் ஆய்வுப்பணி பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். கண்ணாடிகள் முழு நிலவை விட நான்கு மடங்கு பிரகாசமாகத் தோன்றும் மற்றும் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வரும்போது வானம் முழுவதும் நகரும் பிரகாசமான புள்ளிகளை உருவாக்கும்.
பிரதிபலித்த ஒளி உணர்திறன் வாய்ந்த வானியல் படக்கருவிகளுக்கு "அவியும் பிரகாசமாக" இருக்கும் என்றும் "அதிநவீன, தரை அடிப்படையிலான ஒளியியல் வானியலுக்கு அழிவுகரமானதாகவும்" இருக்கும் என்று ரூபின் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி அந்தோணி டைசன் எச்சரித்தார்.
தொழில்நுட்பச் சிக்கலும் சுற்றுச்சூழல் கவலைகளும்
ஒவ்வொரு செயற்கைக்கோளும் பூமியின் மேற்பரப்பில் தோராயமாக 5 கிலோமீட்டர் ஒளிரும் இடத்தை உருவாக்கும் என்றாலும் நிபுணர்கள் திட்டத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் நம்ப மறுக்கின்றனர். நண்பகல் சூரிய ஒளி தீவிரத்தில் 20% மட்டுமே அடைய, ஒரே நேரத்தில் இயங்கும் சுமார் 3,000 செயற்கைக்கோள்கள் தேவைப்படும். அந்நிறுவனத்தின் இறுதி இலக்கு 2,50,000 செயற்கைக்கோள்கள் என்ற தொலைநோக்குப் பார்வை, தற்போது செயலில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகளையும் விட அதிகமாக இருக்கும்.
செயற்கை விண்விளக்குகள் நட்சத்திரங்களால் பயணிக்கும் பறவைகள், இயற்கை இருள் சுழற்சிகளைச் சார்ந்திருக்கும் அந்துப்பூச்சிகள், தவளைகள் மற்றும் வௌவால்கள் உள்ளிட்ட இரவு நேர வனவிலங்குகளைச் சீர்குலைக்கும் என்று சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். "ஒளி மாசுபாடு இயற்கை சுழற்சி, உடலியல் மற்றும் எண்ணற்ற உயிரினங்களின் நடத்தை முறைகளில் இது தலையிடுகிறது," என்று முதுகெலும்பற்ற விலங்குகளின் தொண்டு நிறுவன டேவிட் ஸ்மித் கூறினார்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் அந்நிறுவனம் அத்திட்டத்தை அடைய முற்படுகிறது
சீக்வோயா கேபிடல் மற்றும் தொழில்நுட்ப பில்லியனர் பைஜு பட் ஆகியோரால் ஆதரிக்கப்படும் அந்நிறுவனம், பரவலான ஒளி மாசுபாட்டை விட சுருக்கமான வெளிச்சத்தை இது வழங்கும் என்று கூறிவருகின்றனர். அந்நிறுவனம் உலகளவில் 260,000-க்கும் மேற்பட்ட சேவை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது மற்றும் செயல்விளக்கப் பணிக்காக அமெரிக்க விமானப்படை நிதியில் ரூ10 கோடி பெற்றுள்ளது.
"எங்கள் சேவை மிகவும் உள்ளூர்மயமாக்கப்பட்டது," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார், குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைக்காதபோது கண்ணாடிகள் பூமியிலிருந்து சாய்ந்துவிடும் என்றும் விளக்கினார். அந்நிறுவனம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதாகவும், ஆய்வகங்களுக்கு அருகில் ஒளி பிரதிபலிப்பைத் தவிர்ப்பதாகவும் உறுதியளிக்கிறது, இருப்பினும் அத்தகைய நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து வானியலாளர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
CBC
Giant mirrors in space to reflect sunlight at night? No thank you, astronomers say | CBC News
A U.S. company is proposing to 'sell sunlight after dark,' saying it could help power solar farms and provide access to light in emergency situations. Astronomers are not only concerned about what this will do to the night sky, but also to wildlife.
👍1
மின் வண்டியா❓ E20 இடர்பாடா⁉️
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலவையை அதிகரிக்கும் கொள்கை வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் நுகர்வோருக்கு, E20 எரிபொருள் ஒரு பெரிய மாற்றத்தையும் அதே நேரத்தில் பெரும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட பல நான்கு & இருசக்கர வாகனங்கள் E20 எரிபொருளுக்கு முழுமையாக ஏற்றவையாக இல்லாததால், பயணதூரக் குறைவு, இயந்திர முரைப்பு, கடின துவக்கம், எரிபொருள் வடிப்பான் அடைப்பு, செலுத்தி படிமானம் மற்றும் பல நெடுங்கால நெருடல்கள் அதிகரித்துள்ளது.
எத்தனாலின் எரிவலிமை பெட்ரோலை விட குறைந்தது எனவே பயணதூரம் குறைவதாகப் பயனர்கள் உணர்கிறார்கள். அரசும் பயணதூரக்குறைவு ஏற்படலாம் என்று ஏற்றுக்கொண்டுள்ளது; மேலும் பழைய வண்டிகளில் இந்த இழப்பு மேலும் அதிகமாக இருக்கலாம்.
இங்கே உண்மையான சிக்கல் வண்டிகளின் பொருந்தமைவு அதாவது E20 எரிபொருளுக்கு உரிய மாற்றங்கள் இல்லாத இயந்திரங்களில் எத்தனால் மூலம் பாதிப்பு ஏற்படுவது ஆகும். குறிப்பாக எத்தனாலின் ஈரப்பதத்தால் ஏற்படும் துருயேரத் தூண்டலும், மேலும் இயந்திரத்தில் உள்ள குழாய்களில் படிமம் சேர்ந்து அடைப்பு ஏற்படுவதும் பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் குறுங்கால குடைச்சல் மட்டுமின்றி நெடுங்கால நிதியிழப்பும் நீடிக்கும்.
இன்றைய புதிய வாகனங்கள் E20 வரை ஏற்கும் வகையில் அதிகமாக தயாராகி வருகின்றன ஆனால் E85 வெள்ளோட்டம் தொடங்கப்பட்டு அரசின் திட்டப்படி 2026 முடிவுக்குள் சுமார் 500 நிலையங்களும், 2027 முடிவுக்குள் சுமார் 5000 நிலையங்களும் வர விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதாவது எத்தனால் 20 விழுக்காட்டிற்கு (E20) அப்பால் E60, E85, E100 & மெத்தனால் M15, M85, M100 போன்ற உயர்க்கலவைகளால் இன்னும் பெரிய ஆபத்து வரவுள்ளன. E60 முதல் E100 வரை (60%-100%) எத்தனாலின் விழுக்காட்டின் அதிகரிப்பு வண்டிகளின் இயந்திர உள்ளடக்கங்களும் உயவும் உதவாமால் அதன் உழைப்பையும் உத்திரவாதத்தையும் குறைப்பதோடு பல கடுமையான சிக்கலை உயர்த்தும். எனவே புதிய வகை வண்டிகள் வடிவமைக்க வேண்டும் இல்லையேல் மின் வண்டியையும் மிதிவண்டியையும் நாமாக ஏற்கவேண்டும்.
மூலிகைப் பெட்ரோல் என முழங்கியபோது மூடிக்கொண்டிருந்த அரசு இன்று அண்டை நாட்டுச் சண்டையில் அரண்டு அவசரகோலம் அள்ளித்தெளிக்கிறதா⁉️
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலவையை அதிகரிக்கும் கொள்கை வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் நுகர்வோருக்கு, E20 எரிபொருள் ஒரு பெரிய மாற்றத்தையும் அதே நேரத்தில் பெரும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட பல நான்கு & இருசக்கர வாகனங்கள் E20 எரிபொருளுக்கு முழுமையாக ஏற்றவையாக இல்லாததால், பயணதூரக் குறைவு, இயந்திர முரைப்பு, கடின துவக்கம், எரிபொருள் வடிப்பான் அடைப்பு, செலுத்தி படிமானம் மற்றும் பல நெடுங்கால நெருடல்கள் அதிகரித்துள்ளது.
எத்தனாலின் எரிவலிமை பெட்ரோலை விட குறைந்தது எனவே பயணதூரம் குறைவதாகப் பயனர்கள் உணர்கிறார்கள். அரசும் பயணதூரக்குறைவு ஏற்படலாம் என்று ஏற்றுக்கொண்டுள்ளது; மேலும் பழைய வண்டிகளில் இந்த இழப்பு மேலும் அதிகமாக இருக்கலாம்.
இங்கே உண்மையான சிக்கல் வண்டிகளின் பொருந்தமைவு அதாவது E20 எரிபொருளுக்கு உரிய மாற்றங்கள் இல்லாத இயந்திரங்களில் எத்தனால் மூலம் பாதிப்பு ஏற்படுவது ஆகும். குறிப்பாக எத்தனாலின் ஈரப்பதத்தால் ஏற்படும் துருயேரத் தூண்டலும், மேலும் இயந்திரத்தில் உள்ள குழாய்களில் படிமம் சேர்ந்து அடைப்பு ஏற்படுவதும் பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் குறுங்கால குடைச்சல் மட்டுமின்றி நெடுங்கால நிதியிழப்பும் நீடிக்கும்.
இன்றைய புதிய வாகனங்கள் E20 வரை ஏற்கும் வகையில் அதிகமாக தயாராகி வருகின்றன ஆனால் E85 வெள்ளோட்டம் தொடங்கப்பட்டு அரசின் திட்டப்படி 2026 முடிவுக்குள் சுமார் 500 நிலையங்களும், 2027 முடிவுக்குள் சுமார் 5000 நிலையங்களும் வர விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதாவது எத்தனால் 20 விழுக்காட்டிற்கு (E20) அப்பால் E60, E85, E100 & மெத்தனால் M15, M85, M100 போன்ற உயர்க்கலவைகளால் இன்னும் பெரிய ஆபத்து வரவுள்ளன. E60 முதல் E100 வரை (60%-100%) எத்தனாலின் விழுக்காட்டின் அதிகரிப்பு வண்டிகளின் இயந்திர உள்ளடக்கங்களும் உயவும் உதவாமால் அதன் உழைப்பையும் உத்திரவாதத்தையும் குறைப்பதோடு பல கடுமையான சிக்கலை உயர்த்தும். எனவே புதிய வகை வண்டிகள் வடிவமைக்க வேண்டும் இல்லையேல் மின் வண்டியையும் மிதிவண்டியையும் நாமாக ஏற்கவேண்டும்.
மூலிகைப் பெட்ரோல் என முழங்கியபோது மூடிக்கொண்டிருந்த அரசு இன்று அண்டை நாட்டுச் சண்டையில் அரண்டு அவசரகோலம் அள்ளித்தெளிக்கிறதா⁉️
👍1