நட்பு
109 subscribers
11 photos
1 video
1 link
நட்பு
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
துளியும் துயரில்லை
துணைக்குத் துடுப்பாக
துடிப்பு துணிவானால்,
துளைத்துத் துகளாக்கி
துலைத்திடும் துன்பத்தை.
👍2
சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தால் பேசுகிறான் புத்திசாலி.
ஏதாவது சொல்ல வேண்டுமென இருந்து பேசுகிறான் முட்டாள்.
- பிளேட்டோ
👍2🔥1
நீ உன்னை அறிவதுதான் வாழ்க்கையில் மிகவும் கடினமானது. - தேலேசு
👍21
மக்கள் இருவகை,
1. அறிய விரும்புவோர் &
2. நம்ப விரும்புவோர்.
- ஃப்ரெட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே

நாம் நம்பி அறிகிறோமா
அல்லது
அறிந்து நம்புகிறோமா
மெய்யை பொய்யென
அல்லது
பொய்யை மெய்யென
அல்லது
மெய்யை மெய்யென
அல்லது
பொய்யை பொய்யென
அல்லது
அறியாமல் அறிந்ததா
அல்லது
நம்பாமல் நம்பியதா
அல்லது
அறியாமல் நம்பியதா
அல்லது
நம்பாமல் அறிந்ததா?


உண்மையில்
பொய்யிற்கும் மெய்யிற்கும்
இடையே
அறிவதற்கும் நம்புவதற்கும்
மத்தியில்
காலத்தைக் கடத்துகிறோம்.
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அறிந்த அன்பைவிட அப்பாவித்தன அன்பு ஆவலை அதிகரித்தாலும் அதில் ஆதாய அலசல் அமனிதம் அல்லவா?

Inspite of interesting in innocent love than informed love, involvement of income in love is inhuman, isn't?
👍6
"The best way to predict the future is to create it." - Abraham Lincoln.

"எதிர்காலத்தைக் கணித்து வருவதுரைத்திட மிகச் சிறந்த வழி அதை உருவாக்குவதே." -ஆபிரகாம் லிங்கன்.
👍2
சிக்கல் மக்கள் கற்காததால் அல்ல மாறாக அவர்கள் கற்பிப்பை நம்பும் அளவுக்குக் கற்றதும் கற்பித்ததைக் கேள்வி கேட்கும் அளவுக்குக் கற்காததும் ஆகும்.
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம்.
எவ்வளவு? என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ?

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

ஆட்டோ பறந்தது...

அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?

ரோட்டுக்கடைதான் சார்

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா...
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது

வாங்க

இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும்
பண்ணாது என்றார்,
ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை, புரோட்டா
என கட்டினோம்...

எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதான்
சில்லரை கஷ்டமுன்னாங்க...

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்...
அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?.

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்...
இல்லையா ?.

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ணா

நலச்சங்கம் அமைப்பது,வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தளங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும்''

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கனம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து விடுங்கள்....

படித்ததில் பகிர்ந்தது
👍4🥰3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை...
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை...
Reasoners never get ready for doing...
Doers never get toady for reasons...
👍1
ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.
ஆபிஸ் போகவர பார்ப்பேன்.
ஆயாவும் பார்க்கும்.
சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.
"மாம்பழம் எப்படி ஆயா?"
"எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்"
மல்கோவ மாம்பழம் நன்றாக இருந்தது.
"எடு கண்ணு. கல்கண்டு மாதிரி இருக்கும்".
"எவ்வளவு?"
கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்."
60 அதிகமோ? மனசு பேரம் பேசியது. "அம்பது போட்டு 2 கிலோ கொடு ஆயா"
"கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது."
சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.
நகர முற்படும்போது "சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்"
3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம். மனசு குதூகலித்தது.
சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.
அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம்.
அதோ மல்கோவ. என்ன விலை?
கிலோ 80 என்று எழுதியிருந்தது.
இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.
அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.
மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.
என்னை அறியாமல் கால்கள் நின்றது. ஆயாவுடன் இன்னும் 2 வயதான ஆயாக்கள்.
டீ குடித்து கொண்டு இருந்தார்கள். சரி. ஆயாவிடம் வேறு ஏதாவது வாங்கலாம். கவனித்தேன்.
ஆயா பக்கத்து புரோட்டா கடையிலிருந்து இரண்டு பார்சல் வாங்கி அவர்களிடம் கொடுக்க அவர்களும் வாங்கி கொண்டு தடுமாறி எங்கோ நடந்து போனார்கள்.
யார் இவர்கள்?
ஆயாவிடம் விசாரித்தேன் அவர்களைப் பற்றி.
"அவுங்களா? நம்ம ஊருதான்.
என்ன மாதிரி போக்கத்தவிங்க. நல்லா வாழ்ந்து கெட்டவிங்க. புருஷன் போனதும் புள்ளமார்கள் கண்டுக்கல.
பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு முடுக்கி விட்டுட்டாங்க.
ஒருத்தி என்னோட நாத்தனாரு. வயல் வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இப்ப முடியல. அவ்வளவா வேலை இல்லைப்பா.
பகல்ல கோவில் அன்னதானம் சாப்பிடுவாங்க.
ராத்திரி இங்க வருவாங்க. ஏதோ நான் முடிஞ்சத வாங்கி தருவேன்.
என் குடிசைல தான் அண்டி இருக்குதுங்க. வரவர என் கையிலயும் ஓட்டம் இல்ல. அதுக்காக அதுங்கள பட்டினி போட முடியுமா? அதான் முடிஞ்சத வாங்கி தாரேன். இதுகளுக்கு நான் தொணை. எனக்கு இவங்க தொணை.
ஏதோ உசிரு இருக்கிற வரைக்கும் ஒதவியா, ஒன்னுமண்ணா இருப்போம்."
உனக்கு புள்ளைங்க இருக்கா?
எனக்கு அந்த வரம் கெடக்கல கண்ணு. எனக்கு புள்ள இல்லேனு எம்புருஷன் அப்பவே என்னை வுட்டுபுட்டு போயிட்டான்.
அப்பனும் ஆத்தாளும் போனபொறவு ஒண்டிகட்டையா காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.
அதுக்காக செத்தா போகமுடியும் கண்ணு?
பொறவு, இதுங்க எங்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க. ஏதோ பழவியாபாரம் பண்ணி, கெடைக்கிறத வச்சு வயித்த கழுவிட்டு இருக்கோம்"
மனது வலித்தது. ஆயா சொன்னது ஆயிரம் பாடங்களை கற்று கொடுத்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த ஆயா மாதிரி பலருக்கும் இங்கே?
வறுமையிலும் நேர்மை. ஏழ்மையிலும் தர்ம சிந்தனை. என் படிப்பு என்னை பாத்து சிரித்தது!
இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வாழ்க்கை பாடம் ஒன்றை எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.
"ஆயா ஏதாவது உதவி வேணுமா" பணம் ஏதாவது தரட்டுமா"
வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார் ..
அவங்களுக்கு தான் மாத்து துணி இல்ல. அவங்களுக்கு வேணா ஏதாவது பண்ணு"
சரி. செய்வோம். "ஆயா! இதுல 2000 இருக்கு. இதுல வாங்கி கொடுத்துரு"
"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு? 500 போதும்".
மீதியை திருப்பிக்கொடுத்தது ஆயா என்னிடமே!
"இல்ல ஆயா. இருக்கட்டும். எங்க அம்மா இருந்தா வாங்கி தர மாட்டேனா?"
கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டது ஆயா.
மனசு கொஞ்சம் லேசானது.
என் அம்மா சொல்வாள். "மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்"
கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்,"ஆயா ஆப்பிள் எப்படி?
கிலோ 120. நீ 110 கொடு சாமி."
100 ரூபா போட்டு 3 கிலோ போடு"
தமாசுக்குதான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது.
"சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே"
3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்.
"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு?"
இல்ல ஆயா. இதையே தோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா ரூ450 கொடுத்திருப்பேன்."
பரவாயில்லை,புடி ஆயா என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன் இல்லை திணித்து விட்டேன்.
என் பிடிவாதம் பார்த்து, ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.
இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது.
பாவம் அவர்கள்.
வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு?
படித்ததில் பிடித்ததால் பகிர்ந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசத் தோன்றவில்லை.
1👍1
Continuous improvement
is better than
delayed perfection.
- Mark Twain

தொடர் முயற்சி
தாமத முழுமையைவிட
தரமுயர்ந்தது.
- மார்க் ட்வைன்
2👍1🥰1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அடுத்த மனிதர் அறியாதவரை அது ரகசியம் அதாதவது இரண்டாவது மனிதர் அறிந்துவிட்டால் அது ரகசியம் இல்லை ஆனால் இப்படி கைப்பேசியும் மற்றவையும் நம்மைப் பற்றி அறியலாம் அல்லவா⁉️
வாடிய ஏரிக்குத் தெரியாது ஓடிய நீர்வரத்து நிலைக்குமென்று
பாடிய நாரைக்குத் தெரியாது பாராமல் மீன்வரத்து மிகைக்குமென்று
ஊரிய கேணிக்குத் தெரியாது ஊடாமல் ஊற்றெடுப்பு ஊட்டுமென்று - மூடினாலும்
நாடிய நகருக்குத் தெரியாதா
நின்கொடையளிப்பு நீடிக்கு மென்று.

ஆம்,

நீங்கள் பழுது நீக்கியது நீர் நிரம்பிய குளம் - எங்கும்
தாங்கள் விழுது ஊன்றியது ஊர் விரும்பிய நலம்.
👍1
அன்னையர்நாள்
அன்றோடுயின்றி
ஆண்டுமுழுவதும்
அமுதன்பைவூன்றி
அற்புதமளித்திடும்
அன்னையரிலக்கணம்!
வென்றவர் வரைவதே வரலாறு -அதில்
விளக்கம் வேண்டினால் தகராறு -இதில்
ஆதரவு அளிப்பது அவதூறு - விடில்
விளையுமே வீண் கைமாறு -எனில்
உண்மை ஒளிர பரிமாறு வேரியல்
ஆய்வதை ஓம்பிப் பகையாறு!

உண்மை பெரும்பாண்மையை நம்பி வாழ்வதில்லை - எனினும்
திண்மைச் சான்றாண்மையோ ஒதுங்கி ஓய்வதில்லை - எனவே
தொன்மை அறியாமையை விலக்க வேரியல் தவிர மருந்துமில்லை.

தமிழ் தனக்குத் தாயல்ல தமக்கையெனும் தம்பட்டம் தப்பாட்டமென வடமொழியின்றி வாழமுடியா வாய்மொழிகளுக்கு விளங்காதோ!
1
இதில் உள்ள நம் தலைவர்களின் எண்ணிக்கை:
2
அரவம் ஒரு மரவாடிக்குள் நுழைந்து மற்றவர்களின் கண்ணில் படாமல் மறையும்போது ஒரு அரம் மீது ஏறி எதிர்பாராமல் விழுந்தது. இந்த நேர்ச்சியில் சற்றே காயம் ஏற்பட்டதால் கோபத்துடன் அரத்தைக் கடித்தது. ஆனால் மேலும் அதனால் காயம் அடைந்தது.

மிகவும் எரிச்சலடைந்த அரவம் எப்படியாவது அந்த அரத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. எனவே அது அரத்தைத் சுற்றி வளைத்து அதன் முழு பலத்தையும் பயன்படுத்தி நசுக்க முயற்சித்தது. இறுதியில் அரவம் அரத்தால் அழிந்து.

சில நேரங்களில் நாம் சினம் கொண்டு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறோம். ஆனால் நாம்தான் காயமடைகிறோம். வாழ்க்கையில் சினம் தனிய நேரம் தராவிடில் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.

அறம் செய்ய விரும்புவோம் ஆறுவது சினம் என உணர்ந்து.