BK ASTROLOGY
322 subscribers
6 photos
1 video
3 links
ஜோதிடம், ஆன்மீகம், சித்தர்கள் பற்றிய பதிவுகள். ஜாதகம் கணித்து பலன்கள் அறிய அணுகவும் முன்பதிவு அவசியம் தேவை.
Download Telegram
Dear all,

Starting tomorrow, regular posts will be shared in our Telegram group. Your support and participation are highly appreciated.

Thank you!
👍9
லக்னாதிபதி
லக்னாதிபதி என்பது ஜாதக கட்டத்தில் முதலாம் வீடு அதிபதியை குறிக்கும் .ஒருவர் சமுகம் மற்றும் உறவினர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால், லக்னாதிபதி நல்ல இடங்களில் இருக்க வேண்டும். நல்ல இடங்கள் என்பது லக்னத்தில் இருப்பது , ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருபதாகவும். இரண்டு மற்றும் பத்தாம் வீடுகளில் கூட இருக்கலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நீச்ச வீடுகளில் அல்லது மறைவு ஸ்தனங்கள் ஆகிய மூன்றாம் வீடு, ஆறாம் வீடு , எட்டாம் வீடு, மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருக்க கூடாது. இவர்கள் சமுகத்தில் நல்ல மதிப்பை பெறுவது மிகவும் கடினம்.

லக்னாதிபதி ஒருவருடைய ஜாதகத்தில் பனிரெண்டாம் வீட்டில் அமைய பெற்றால் அவர் வாழ்கையில் அலைச்சல்கள் நிறைய இருக்கும் .வீண் விரயங்கள் அடிக்கடி அவர் வாழ்கையில் ஏற்படும். பனிரெண்டாம் வீட்டில் அமையபெற்ற லஞதிபதியுடன் சுக்கிரன் அல்லது ராகு இணைந்தால் பெண் வழி தொடர்புகள் ஏற்பட்டு பல இன்னல்களை அனுபவிப்பர். தீய கிரகங்களின் பார்வை ஏற்பட்டால் சிலருக்கு சிறை தண்டனை ஏற்பட வாய்புகள் உண்டு.

லக்னாதிபதி நான்காம் வீட்டில் அமையபெற்றால் நல்ல கல்வி, அன்பு செலுத்தும் தாயார், நல்ல வாகனங்கள் மற்றும் குடியிருக்க நல்ல வீடு அமையும். சுக ஸ்தானமாகிய நான்காம் வீடு லஞதிபதியால் வலுவடைவதால் சுகமான வாழ்கை அமைய தடை இருக்காது. லக்னாதிபதி சுக்கிரனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி அனுபவிபவராக இருப்பார். லக்னாதிபதி குருவாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல கல்விமானாகவும் ஒழுக்க சீலராகவும் இருப்பார். லக்னாதிபதி செவ்வாய் அக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல விளையாட்டு வீரராக திகழ்வார். லக்னாதிபதி புதனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் புத்திசாலிதனத்தால் எதையும் சாதிபவராக திகழ்வார்.
1
பாபகர்த்தாரி யோகம் என்பது ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் அல்லது வீடு (பாவம்), இருபுறமும் பாப கிரகங்களால் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) சூழப்பட்டிருக்கும் நிலையாகும். இது 12-ஆம் மற்றும் 2-ஆம் வீடுகளில் பாப கிரகங்கள் அமரும்போது உருவாகிறது, இதனால் அந்த பாவம் அல்லது கிரகம் பலவீனமடைந்து, தொடர்புடைய விஷயங்களில் தடைகள், போராட்டங்கள் மற்றும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தக்கூடும்.

பாபகர்த்தாரி யோகத்தின் முக்கிய அம்சங்கள்:

அமைப்பு: ஒரு ராசிக்கு முன் ராசியிலும் (12-ல்) பின் ராசியிலும் (2-ல்) தீய கிரகங்கள் இருப்பது.
பாதிப்பு: அந்த வீட்டில் உள்ள கிரகம் நன்மைகளை வழங்க முடியாமல், அதன் காரகத்துவங்கள் (உதாரணமாக, 4-ம் வீடு பாதிக்கப்பட்டால் சுகம், வீடு, வாகனம்) பாதிக்கப்படும்.

தீர்வு: சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இந்த யோகத்தின் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்
3
விபரீத ராஜ யோகம்

எந்த ஒரு லக்னத்திற்கும் 6, 8 மற்றும் 12 ஆம் வீட்டு அதிபதிகள் என்னும் மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றாலோ அதாவது

6 ஆம் அதிபதி 8 அல்லது 12 இல் இருந்தாலோ

8 ஆம் அதிபதி 6 அல்லது 12 இல் இருந்தாலோ

12 ஆம் வீட்டு அதிபதி 6 அல்லது 8 இல் இருந்தாலோ

இந்த மூன்று வீட்டு கிரகங்களும் 6 அல்லது 8 அல்லது 12 இல் இணைந்து இருப்பது

விபரீத ராஜ யோகம் எனப்படும்.

இந்த யோகம் உள்ளவர்களுக்கு இந்த தசை நடக்கும் பொழுது எதிர்பாராமல் ஒரு சில நன்மைகள் உண்டாகும், அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார மேம்பாடு கிடைக்க பெறுவார்கள்.
DM me for appointments....
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு வாசி யோகம், வேசி யோகம் மற்றும் உபயாச்சாரி யோகம் என்ற மூன்று யோகங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் சந்திரனை வைத்து மட்டுமே 3000 - த்துக்கும் மேற்பட்ட யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மிகவும் முக்கியமாக குரு சந்திர யோகமும், கஜ கேசரி யோகமும் கருத்தப்படுகிறது.

குரு சந்திர யோகம் :

சந்திரனுக்கு குரு 1,5,9 இல் (திரிகோணத்தில்) இருந்தால் இது குருச்சந்திர யோகம் என்று அழைக்கப்படும்.

கஜ கேசரி யோகம் :

சந்திரனுக்கு குரு 4,7,10 இல் (கேந்திரத்தில்) இருந்தால் இது கஜ கேசரி யோகம் என்று அழைக்கப்படும்.

லக்கினத்திற்கு திரிகோண ஸ்தானத்தில் குரு இருப்பின் லக்கினத்தை குரு 5 அல்லது 9 ஆம் பார்வையால் நிச்சயம் பார்வை செய்வார். மேலும் சந்திரனுக்கு திரிகோணத்தில் குரு இருப்பின் மனோகாரகன் ஆன சந்திரனை 5 அல்லது 9 ஆம் பார்வையால் பார்த்து சந்திரனை சுப வலு படுத்துவார்.இதனால் ஜாதகர் வீடு, மனை, வண்டி வாகனம், நிலம், வயல், பெயர் மற்றும் புகழோடு சுக போக வாழ்வை அனுபவிப்பார்.

# இதனால் ஜாதகர் மிகவும் நல்ல மன நிலையில் எப்போதும் இருப்பார்.

# ஜாதகர் குறைந்த பட்சம் ஊரில் உள்ள பெரும்பாலான மக்களால் அறியப்பட்டவராக இருப்பார்.

# ஜாதகர் தனித்தன்மை வாய்ந்த நபராக இருப்பார்.

# எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் ஜாதகருக்கு அதிகம் இருக்கும்.

# உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து முன்னேற்றம் காணும் எண்ணம் ஜாதகருக்கு அதிகம் இருக்கும்.

# இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சந்திரனோ அல்லது குருவோ ஆட்சி உச்சம் பெற்று லக்கினத்திற்கு மறைவு ஸ்தானம் பெறாமல் இருப்பது அவசியம்.

# சந்திரனுடன் குரு ஒரே வீட்டில் இருக்கும் பட்சத்தில் சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.

# சந்திரனும் குருவும் லக்கினத்திற்கு 7 ஆம் வீட்டில் சேர்க்கை பெறாமல் இருந்தால் இன்னமும் நல்லது.

# குரு சந்திர யோகம் முழுமையாக செயல்படும் காலம் என்பது சந்திர திசை குரு புத்தியில் மற்றும் குரு திசை சந்திர புத்தியில் நிச்சயம் உண்டாகும்.
சிவராஜ யோகம் என்பது சூரியன் (ஆத்ம காரகன்/அரசு) மற்றும் குரு (ஞானம்/செல்வம்) ஆகிய இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகத்தில் உருவாகும் ஒரு அபூர்வ மற்றும் சக்திவாய்ந்த ராஜயோகமாகும். இது ஒருவரை அதிகாரமிக்க பதவி, செல்வம் மற்றும் புகழ் பெறச் செய்யும்.
சிவராஜ யோகம் உருவாகும் முக்கிய விதிகள்:

கிரக சேர்க்கை: சூரியனும் குருவும் ஒரே ராசியில் இணைந்திருப்பது.

பார்வை: சூரியனை குரு பகவான் பார்வையிடுவது (5, 7, 9-ம் பார்வைகள்).
சம சப்தமம்: சூரியனும் குருவும் ஒன்றைக்கொன்று நேர் எதிரே (7-ம் வீடு) பார்த்துக் கொள்வது.

ராசி அமைப்புகள்: 9-ம் அதிபதி 10-லும், 10-ம் அதிபதி 5-லும் இருப்பது.
சிறப்பு நிலை: இந்த இரு கிரகங்களும் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு வீடுகளில் இருப்பது அதிக நன்மைகளைத் தரும்.

பயன்கள்:
அரசு வேலை, உயர் பதவிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை வழங்கும்.
அதிக செல்வம் மற்றும் கௌரவமான சமூக நிலை.
சிவ வழிபாடு இந்த யோகத்தின் பலனை அதிகரிக்கும்.

இந்த யோகம் ஜாதகத்தில் அசுப கிரகங்களின் (ராகு-கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருப்பது சிறப்பு.
அனைவருக்கும் வணக்கம். முன்பதிவு தேவை படுவோர் inbox இல் தொடர்பு கொள்ளவும் அல்லது கமெண்ட் செய்யவும்

@Bka280509
நவாம்சம்
1
நவாம்சத்தில் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். வயிற்றில் உபாதைகள் ஏற்படும்.
2.
நவாம்சத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகன் தன் இனத்தைவிட்டு, வேறு இனப்பெண்ணை மணந்து கொள்வான். சொந்த உறவுகளோடு அவனுக்குப் பிரச்சினைகள் உண்டாகும்
3.
நவாம்சத்தில் சனியுடன், சந்திரன் சேர்ந்திருந்தால், ஜாதகன் பணத்தின்மேல் மிகுந்த பற்று வைத்திருப்பான்.யாருக்காகவும் ஒரு பைசா செலவழிக்க மாட்டான்.
4.
நவாம்சத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தால், பெண்களுக்கு மாதவிடாய்,, மற்றும் கர்ப்பப்பைப் பிரச்சினைகள் உண்டாகும். ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான பபிரச்சினைகள், கோளாறுகள் வரும். கடகத்தில் அல்லது விருச்சிகத்தில் இந்த அமைப்பு இருந்தால், இந்தப் பிரச்சினை நிச்சயம் உண்டாகும்.
5.
நவாம்சத்தில் சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்கும் குரு, ஜாதகனுக்கு நல்ல, ஸ்திரமான செல்வத்தைக் கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கொடுக்கும். வயதாக வயதாகப் பண இருப்பு அதிகமாகிக் கொண்டே போகும்.
6.
நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.
1
அனைவருக்கும் வணக்கம். முன்பதிவு தேவை படுவோர் inbox இல் தொடர்பு கொள்ளவும் அல்லது கமெண்ட் செய்யவும்
Saturday and Sunday appointment available.

@Bka280509
குரு பகவான்
முதல்நிலை சுபக்கிரகமான குரு ஜாதகத்தில் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும்!

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம்.

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில் நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்?

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்.

அது முக்கியம்.

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர் லக்கினத்தைத் தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான். 5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர் தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம் பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான்.

கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அதுபோல 4, 7, 10ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நல்லதே! நன்மையான பலன்கள் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக 2,11 ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நன்மையே!

குரு உச்சம் பெற்று இருந்தால் அதிக நன்மைகளைச் செய்வார். அவருடைய தசா, புத்திகளில் அந்த நன்மை களைக் கொடுப்பார்.

சரி, குரு எங்கே இருக்கக் கூடாது?

3,6,8,12 ஆம் வீடுகளில் குரு இருக்ககூடாது. அதோடு அவர் ஜாதகத்தில் நீசமாகி அடிபட்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால், ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.
Hi Today appointment available if any body wants to consulting means msg me to below id

@Bka280509
Hi All. Thanks for your continuous support . If anyone need astrology appointment means msg me to below link

@Bka280509
Dear All, Tomorrow and sunday appointment available. for telegram users special Charges . limited appointments only
@Bka280509
உங்கள் ஜோதிடம் பற்றிய சந்தேகங்களை கேளுங்கள். ஒருவருக்கு ஒரு கேள்வி மட்டும். இன்று மாலைக்குள் பதில் தரப்படும் 🙏.
சப்தாம்சம் என்றால் என்ன?

சப்தாம்சம் (D7) என்பது ஜோதிடத்தில் குழந்தை பாக்கியம், சந்ததி, குழந்தைகளின் நலன் மற்றும் பெற்றோர்–குழந்தை உறவை ஆராய பயன்படுத்தப்படும் முக்கிய வர்க்கச் சக்கரமாகும்.

ஒரு ராசி 30° ஆக இருக்கும்.
அந்த 30° ஐ 7 சம பாகங்களாக பிரித்தால் ஒவ்வொரு பகுதியும் சுமார் 4°17'08" ஆக இருக்கும்.
இவ்வாறு உருவாகும் துணை ஜாதகமே சப்தாம்சம் (D7 Chart).
சப்தாம்சத்தில் கவனிக்க வேண்டியவை
D7 லக்னம் மற்றும் அதன் அதிபதி
பலமாக இருந்தால் குழந்தை பாக்கியம் சிறப்பாக இருக்கும்.
D7-இல் ஐந்தாம் வீடு மற்றும் அதன் அதிபதி
நல்ல நிலையில் இருந்தால் சந்ததி யோகம் வலுப்பெறும்.
குரு பகவான் (புத்திர காரகன்)
உச்சம், சொந்த ராசி அல்லது சுப கிரக பார்வை பெற்றிருந்தால் நல்ல பலன்.
பாப கிரகங்களின் பாதிப்பு
சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை ஐந்தாம் வீடு அல்லது குருவை கடுமையாக பாதித்தால் தாமதம் அல்லது சிரமங்கள் ஏற்படலாம்.
D1 மற்றும் D7 தொடர்பு
ராசி ஜாதகத்தில் (D1) உள்ள ஐந்தாம் வீட்டு பலம் D7-இலும் பிரதிபலித்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகும்.
முக்கிய விதி

ராசி ஜாதகம் (D1) + சப்தாம்சம் (D7) + நடப்பு தசை/புத்தி ஆகிய மூன்றையும் சேர்த்து பார்த்தால்தான் குழந்தை பாக்கியத்தைப் பற்றி சரியான மதிப்பீடு செய்ய முடியும்.

உங்கள் ஜாதகத்தின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் அல்லது D7 சக்கரம் இருந்தால், சப்தாம்சத்தை வைத்து விரிவாக விளக்க முடியும்.
👍1
Hi all
Ask your astrology questions here.. Will answer tomorrow. 🙏
Hi all due to medical emergency todays appointment postponed to tomorrow. 🙏🙏
தர்ம கர்மாதிபதி யோகம் – விரிவான விளக்கம்

தர்ம கர்மாதிபதி யோகம் என்பது வேத ஜோதிடத்தில் மிகவும் உயர்ந்த ராஜயோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த யோகம், ஒருவரின் பாக்கியம் (தர்மம்) மற்றும் செயல் (கர்மம்) ஒன்றிணைந்து வாழ்க்கையில் உயர்வை அளிக்கும் அமைப்பாக விளக்கப்படுகிறது.

1. தர்மம் மற்றும் கர்மம் என்றால் என்ன?
9-ஆம் பாவம் (தர்ம ஸ்தானம்)

இது குறிக்கும் விஷயங்கள்:

பாக்கியம்
தந்தை
குரு அருள்
உயர்கல்வி
ஆன்மீகம்
வெளிநாட்டு பயணம்
அறச்செயல்கள்
நல்ல கர்ம பலன்கள்
10-ஆம் பாவம் (கர்ம ஸ்தானம்)

இது குறிக்கும் விஷயங்கள்:

தொழில்
வேலை
பதவி
அதிகாரம்
சமூக அந்தஸ்து
புகழ்
பொறுப்பு
வாழ்க்கையின் முக்கிய சாதனைகள்

2. இந்த யோகம் எப்போது உருவாகும்?

பொதுவாக பின்வரும் அமைப்புகளில் இந்த யோகம் உருவாகும்:

9-ஆம் அதிபதியும் 10-ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் சேர்வது.
இருவரும் பரஸ்பரம் பார்ப்பது.
பரிவர்த்தனை செய்வது.
இருவரும் கேந்திரம் (1, 4, 7, 10) அல்லது திரிகோணம் (1, 5, 9) போன்ற வலுவான இடங்களில் இருப்பது.

3. யோகத்தின் வலிமை
மிக வலிமையான யோகம்
உச்ச ராசியில் இருப்பது.
சொந்த வீட்டில் இருப்பது.
வர்கோத்தமம்.
குருவின் பார்வை.
சுப கிரகங்களின் இணைவு.
நவாம்சத்திலும் வலிமை.
பலம் குறைவதற்கான காரணங்கள்
நீசம்.
அஸ்தமனம்.
ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்களின் கடுமையான பாதிப்பு.
6, 8, 12-ஆம் பாவங்களில் பலமின்றி இருப்பது.

4. கிடைக்கும் பலன்கள்
தொழில்
பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவி.
அரசு வேலை வாய்ப்பு.
நிர்வாக அதிகாரம்.
தொழில் வளர்ச்சி.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு.
சொந்த தொழிலில் வெற்றி.
பணவரவு
நல்ல சம்பளம்.
நிலையான வருமானம்.
பல வழிகளில் வருமானம்.
சொத்து சேர்க்கை.
வாகன வசதி.
ஆடம்பர வாழ்க்கை.
சமூக அந்தஸ்து
மக்கள் மதிப்பு.
புகழ்.
தலைமைப் பொறுப்புகள்.
விருதுகள்.
அரசியல் அல்லது சமூக செல்வாக்கு.
ஆன்மீகம்
தர்ம சிந்தனை.
தான தர்மம்.
குரு பக்தி.
கோவில் சேவை.
நல்ல குடும்ப பாரம்பரியம்.

5. எந்த தசையில் பலன் கிடைக்கும்?

பொதுவாக:

9-ஆம் அதிபதி தசை.
10-ஆம் அதிபதி தசை.
இருவரின் புத்தி.
குரு கோச்சாரம் சாதகமாக இருக்கும் காலம்.

இந்த காலங்களில் தொழில், வருமானம், பதவி உயர்வு போன்ற பலன்கள் அதிகமாக வெளிப்படும்.

6. எல்லா லக்னத்திற்கும் ஒரே மாதிரி பலனா?

இல்லை. ஒவ்வொரு லக்னத்திற்கும் 9 மற்றும் 10-ஆம் பாவ அதிபதிகள் மாறுபடுவதால், யோகத்தின் பலன்களும் மாறலாம். கிரகத்தின் பலம், பார்வை, நவாம்சம், தசை ஆகியவை முடிவை பாதிக்கும்.

7. உதாரணம்

ஒரு ஜாதகத்தில்:

9-ஆம் அதிபதி குரு.
10-ஆம் அதிபதி சனி.

இருவரும் 10-ஆம் வீட்டில் வலிமையாக இணைந்திருந்தால்:

பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவி.
நல்ல வருமானம்.
வெளிநாட்டு வாய்ப்புகள்.
அரசு தொடர்பான வேலை.
நீண்டகால புகழ்.
8. யோகம் இருந்தும் பலன் ஏன் தாமதமாகிறது?

காரணங்கள்:

சனி தாக்கம்.
8-ஆம் பாவ சம்பந்தம்.
நீச கிரகம்.
ராகு–கேது பாதிப்பு.
தசை இன்னும் வராதது.
நவாம்சத்தில் பலம் குறைவு.
9. பரிகாரங்கள் (பாரம்பரிய நம்பிக்கைகளின்படி)

யோகம் பலம் குறைந்திருந்தால் சிலர் பின்பற்றும் வழக்கமான பரிகாரங்கள்:

வியாழக்கிழமை குரு வழிபாடு.
சனிக்கிழமை சனி பகவான் வழிபாடு (தேவைக்கேற்ப).
நவகிரக பூஜை.
அன்னதானம்.
குருமார்களுக்கு மரியாதை.
பெற்றோருக்கு சேவை.
10. முக்கிய குறிப்பு

தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பது மட்டும் போதாது. அதன் முழுப் பலனை நிர்ணயிப்பவை:

கிரக பலம்
நவாம்ச நிலை
தசா–புத்தி
கோச்சாரம்
மற்ற ராஜயோகங்களின் ஆதரவு
பாப கிரகங்களின் பாதிப்பு

எனவே, இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்ற வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், அது எப்போது, எவ்வளவு அளவில் வெளிப்படும் என்பது முழு ஜாதகத்தை ஆய்வு செய்த பிறகே துல்லியமாகக் கூற முடியும். DM for Appointments .Tomorrow and Sunday available.
1