BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
பட்டியல் சமூகத்தினர் கோவிலுக்கு வந்ததால் பரிகாரமா? விழுப்புரம் மேல்பாதி சர்ச்சை

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர்.என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஆணாக வேடமிட்டு போப் ஆண்டவர் ஆன பெண் குறித்த வரலாறு உண்மையா?

ஐரோப்பாவின் இடைக்கால வரலாற்றில் ஜோனா என்ற பெண் ஆண் வேடமிட்டு போப் ஜோன் என்ற பெயரில் போப் ஆண்டவர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிக்கலில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி? வழக்குகளை எதிர்கொள்ளும் மேலும் 7 அமைச்சர்கள் யார்?

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அவரது பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
துப்பாக்கிமுனையிலிருந்து நண்பர்களை காப்பாற்றியவர் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரமௌலியும் அதில் ஒருவர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஒரே மேடையில் இந்து,முஸ்லிம் திருமண வரவேற்பு - ஒற்றுமைக்கு முன்னுதாரணம்

ராஜஸ்தானின் கோட்டாவில் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்கள் தங்களின் மகன்களுக்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியது ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் விளக்குவதாக உள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஐஎன்எஸ் விக்ராந்த்: "அரபிக்கடலின் காவலன்"-பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல்

ஐ.என்.எஸ். விக்ராந்த்: இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிப் போர்க்கப்பலின் பலம் என்ன? பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவின் போர்க்கால தயார் நடவடிக்கைகள் என்னென்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சங்கரன் நாயர்: ஜாலியன் வாலாபாக் வழக்கில் பிரிட்டிஷாரை எதிர்த்த சென்னை வழக்கறிஞர்

ஒரே ஒரு இந்தியர் மட்டும் பிரிட்டனுக்கு சென்று, ஜாலியன் வாலாபாத் படுகொலை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கை பிரிட்டன் நீதிமன்றத்தில் தனியாக வாதிட்டார். இந்த வழக்கு ஐந்தரை வாரங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எப்படி இருக்கும்? இந்தியாவின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ராணுவ ரீதியாக பதிலடி கொடுத்தால், இதற்கான எதிர்வினையை பாகிஸ்தானிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இது தீர்க்க முடியாத ராணுவ நடவடிக்கைகளுக்கும் வழி வகுக்கலாம் என்கிறார் சௌதிக் பிஸ்வாஸ். மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் ஆராய்கிறார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?

கனடா தேர்தல் 2025: ஏப்ரல் 28 அன்று நடைபெறும் கனடாவின் பொதுத்தேர்தலில், இந்திய வம்சாவளியினர் எதிர்பார்ப்பது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
RCB Vs DC: பெங்களூருவின் தொடர் வெற்றி ரகசியம் என்ன? எதிர்பாராத திருப்பம் தந்த வீரர் யார்?

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 46-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?

காலை உணவு நமக்கு மிகவும் முக்கியமானது என்று பலரும் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காலையில் எந்த உணவை உட்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று தெரியுமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு குஜராத்தில் 500க்கும் மேற்பட்டோர் பிடித்து வைக்கப்பட்டது ஏன்? - என்ன நடக்கிறது?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை, குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் சூரத்தில், வங்கதேசத்தினர் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர் காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவமா அல்லது வேறு நடவடிக்கையா? இந்தியா அடுத்து என்ன செய்யும்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில், இவற்றின் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சொல்லும் செய்தி என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை என்ற சொல்லாடல் வரக் காரணமான கண்ணகி - முருகேசனின் கொடூரக் கொலை நடந்தது எப்படி? அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
வான்கூவர் சோகம்: திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி - சந்தேக நபர் பற்றி போலீஸ் கூறுவது என்ன?

கடந்த சனிக்கிழமை அன்று கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழா கொண்டாட்டம் ஒன்றில் கார் ஒன்று வேகமாகச் சென்று மோதியது. இதில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை 30 வயதான நபரை கைது செய்து விசாரித்து வருகிறது. கைதான நபர் மன நலச் சிக்கல்கள் கொண்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'என் முன்னோர்களின் ஜென்ம பூமி இந்தியா' - பாகிஸ்தான் திரும்பும் நபர் உருக்கம்

பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் ஒருவரான 75 வயதான துபெல்லா மஸ்கான் தன்னுடைய வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
விவாகரத்து கோரும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைப்பதில் என்ன சிக்கல்? சட்டம் என்ன சொல்கிறது?

ஜீவனாம்சம் குறித்து இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன? எதன் அடிப்படையில் ஜீவனாம்சம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து இங்கே சட்ட நிபுணர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"என் சகோதரனை பிடித்து கொல்லுங்கள், எங்களை விட்டு விடுங்கள்" - பஹல்காமில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்தினரின் நிலை என்ன?

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டோராக அடையாளம் காணப்பட்டுள்ள சிலரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் உறவினர்கள் ஒரே இரவில் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
50 கிலோ மீட்டர் தாண்டியும் உணரப்பட்ட வெடி விபத்து - இரான் துறைமுக சம்பவத்தின் கோர காட்சிகள்

இரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஷஹீத் ராஜீயில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil