BBC News Tamil
5.29K subscribers
43.8K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

@BBCSciencetech @BBCEarthExplorer @BBCSport_news @BBCworldoffl

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
இந்திய கொடியேற்றிய 2 கப்பல்கள் மீது தாக்குதல் - ஹோர்மூஸை திறப்பதாக அறிவித்த மறுநாளே இரான் மூடியது ஏன்?

ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏற்றப்பட்ட 2 கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. நீரிணை தற்காலிகமாக திறக்கப்படுகிறது என இரான் அறிவித்த மறுநாளே அதனை மூடுவதாக அறிவித்துள்ளது. என்ன நடந்தது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
👍1
மு.க.ஸ்டாலின் 4-வது முறையாக போட்டியிடும் கொளத்தூர் தொகுதி கள நிலவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பிரசாரம் செய்து வரும் நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கள நிலவரம் என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
1
'தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள்' என்ற அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்? நீலகண்டன் பதில்

இந்தியாவி்ல தொகுதி மறுவரையறை செய்யும் விவகாரம் நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து எழும் கேள்விகள், தீர்வுகள் குறித்து 'தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு' (South Vs North : India's Great Divide) நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கலந்துரையாடினார். அதன் விவரம் கேள்வி - பதில் வடிவில்..

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை': தமிழக தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்ததுமே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அது பேசுபடுபொருளாகிவிட்டது. மறுநாளே தமிழக தேர்தல் பிரசார கூட்டங்களில் மோதி, ராகுல்காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அதுதொடர்பாக எதிரணியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். என்ன நடக்கிறது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
எடப்பாடி தொகுதியில் 8 வது முறையாக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி - கள நிலவரம் என்ன?

சேலத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக களம் காண்கிறார் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. அந்த தொகுதியின் கள நிலவரம் என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாக் நீரிணையில் முட்டிமோதும் இலங்கை - இந்திய மீனவர்கள்: வாழ்வாதாரப் போராட்டமும் தீர்வற்ற நிலையும்

பாக் நீரிணை என்பது என்ன? இப்பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே தொடர் பிரச்னை எழுவது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி - கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த ரிங்கு சிங், அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறவிட்டது. அதுவே அவர்களின் வெற்றி வாய்ப்பையும் பறித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - அடையாளம் காணப்படாத 23 உடல்கள்

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
😭1
லக்னோ பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ் - 254 ரன்கள் குவித்தது

பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, கானலி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த கானலி, பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டைக் கைப்பற்றினார் எம்.சித்தார்த். 37 பந்துகளை சந்தித்த பிரியான்ஷ் 93 ரன்கள் விளாசினார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை? - ஹோர்மூஸ் பதற்றத்துக்கிடையே டிரம்ப் வெளியிட்ட பதிவு

இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
காணொளி: இந்தியாவில் எவ்வளவு தங்கம் உள்ளது?

இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருக்கிறது? அதிகாரப்பூர்வ தரவுகள் சொல்வது என்ன? வீடுகளில் இருக்கும் தங்கம் எவ்வளவு? பார்க்கலாம் இந்தச் காணொளியில்

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தோல்வியே காணாத பஞ்சாப்: ஷ்ரேயாஸ் கேப்டன்சி உள்பட வலு சேர்க்கும் 5 விஷயங்கள்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தான் மாற்றம் என்பதற்கான அர்த்தமாக விளங்கியது. சீசனுக்கு சீசன் புதிய பயிற்சியாளர்கள், கேப்டன்கள், வீரர்கள் என மாறிக்கொண்டே இருக்கும். வீரர்கள், அணுகுமுறைகள் போட்டிக்குப் போட்டி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு நிலைத்தன்மை நிலவுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
காணொளி: தலா ரூ.21,000 மதிப்புள்ள 2,200 எறும்புகளை கடத்த முயன்ற நபருக்கு சிறை

சீனாவை சேர்ந்த பயணி தனது உடைமைக்குள் பதுக்கி 2,200 உயிருள்ள ராணி எறும்புகளை கடத்த முயன்றதால் கைது செய்யப்பட்டார். இது குயின் கார்டன் எறும்பு எனவும் அழைக்கப்படுகிது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இரான் கொடி தாங்கிய கப்பலை சுட்டு, கைப்பற்றிய அமெரிக்கா - என்ன நடந்தது?

கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் இரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது. இரான் என்ன சொல்கிறது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'ஒரு கனவால் புற்றுநோயை கண்டறிந்தேன்' - எதிர்காலம் பற்றி கனவு மூலம் மூளை சேதி தருகிறதா?

கனவு நமக்கு சொல்வது என்ன? அக்கனவை நாம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்? இதுகுறித்து விஞ்ஞானிகளும் மனநல நிபுணர்களும் கூறுவது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அமெரிக்காவில் 8 குழந்தைகள் கொலை: சந்தேக நபர் சுட்டுக்கொலை

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'உடலடக்கம்' முடிந்த பிறகு உயிருடன் வந்த நபர் - பாகிஸ்தானில் என்ன நடந்தது?

ஒரு கோர விபத்துக்குப் பிறகு, அப்துல் வஹாப் இறந்துவிட்டதாக எண்ணி அவர்கள் வேறொரு சடலத்தை அடக்கம் செய்துவிட்டிருந்தனர். ஆனால், 16 நாட்களுக்குப் பிறகு, அப்துல் வஹாப் உயிருடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையா? பிபிசி தமிழ் கள ஆய்வு

'போதையில்லா தமிழ்நாடு' என்ற பெயரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 'பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா?' என்பது குறித்து சில பள்ளிகளை சுற்றியுள்ள இடங்களில் பிபிசி தமிழ் நேரில் சென்று பார்த்தது. என்ன தெரியவந்தது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'ஆதாரம் தேடி 3 மாதம் தினசரி வீதியில் அலைந்தேன்' - ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்கும் ஒரு தாயின் கதை

டேராடூனில் தனது ஒரே மகனைப் பறிகொடுத்த தாய் லலிதா சௌத்ரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல் நிலையங்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil