BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
36 ஆண்டுகளாக தொடரும் உத்தபுரம் தலித் மக்கள் போராட்டம் - நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் பூட்டப்பட்டது ஏன்?

தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட உத்தபுரத்தில் தலித்களுக்கு சம வழிபாட்டு உரிமை உண்டு என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், முத்தாலம்மன் கோவில் பூட்டப்பட்டு, திருவிழாவில் தலித் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. உத்தபுரம் தலித் மக்கள் 36 ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் சூழல் நிலவுவது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் இதில் கையெழுத்திட்டன?

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகள் என்ன? இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக முடியுமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் மயோனைஸ்க்கு தடை ஏன்? - பச்சை முட்டைகளை சாப்பிடக் கூடாதா?

பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு தடை மயோனைஸ்க்கு விதித்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல்: 'மினி சுவிட்சர்லாந்து' பைசரன் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிக்கும் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தி இல்லாத பஹல்காம்மின் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளை நம்பி மட்டுமே உள்ளது. இங்கு பல பிரபலமான திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'3 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்' – கோவை ஈஷா பள்ளி மாணவருக்கு என்ன நேர்ந்தது?

ஈஷா இருப்பிடப் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் ஒருவரால் தன் மகன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம் - பாகிஸ்தானில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பாக்., நிபுணர்கள் கூறுவது என்ன?

பாகிஸ்தானுடனான 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சீனாவில் அழகுக்காக 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட இளம்பெண்

"கடந்த 20 வருடங்களில், 100க்கும் மேற்பட்ட அழகுசார் சிகிச்சைகளை எடுத்துள்ளேன். இன்னும் அழகாக மாறுவதற்கான முயற்சியை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். சிறந்த பெண்களின் எடை 50 கிலோவுக்கு மேல் இருக்காது" என்கிறார் சீனாவைச் சேர்ந்த அப்பி வு.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு நிபுணர்கள் அதுகுறித்துச் சொல்வது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை

காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்

RCB vs RR: இந்த தொடரில் முதன்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காமில் குதிரைக்காரர் ஆலோசனையால் தப்பிய 6 தமிழர்கள் - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (25/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருக்க வாய்ப்புள்ளதா? அல்லது அதற்கு நிறவெறி தடையாக இருக்கிறதா? வாடிகனில் என்ன நிலவரம்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரே காஷ்மீரி - ஆதிலின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் பைசரன் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சையது ஆதில் ஹுசைன் ஷா மட்டுமே ஒரே காஷ்மீரி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'என் தந்தை தலை ரத்தத்தில் நனைந்திருந்தது' - பஹல்காம் தாக்குதலில் பலியான சஞ்சய் லேலேவின் மகன்

"பஹல்காமில் தீவிரவாதிகள் என் தந்தையைச் சுடும்போது நான் அவரது தலையில் கை வைத்திருந்தேன். அவரது தலை முழுக்க ரத்தத்தில் நனைந்திருந்தது."

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல்: 'மினி சுவிட்சர்லாந்து' பைசரன் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிக்கும் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தி இல்லாத பஹல்காம்மின் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளை நம்பி மட்டுமே உள்ளது. இங்கு பல பிரபலமான திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து அழுத டிரைவர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து கண்ணீர் விட்டு அழுத டிரைவர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?

சூரத்தை சேர்ந்த ஒருவர் பஹல்காமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். அவரது மனைவி பாஜக அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் கொந்தளித்துப் பேசியது ஏன்? என்ன பேசினார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'கனடாவுக்கு வந்த பிறகு வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன.இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவரும் கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகள் காரணமாக அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் ரத்து செய்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?

1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உருவானது.போருக்குப் பின், இந்தியாவும் பாகிஸ்தானும் வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது பரஸ்பர ஒப்புதலின் மூலமாகவோ தீர்க்க ஒப்புக்கொண்டன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய குதிரை சவாரிக்காரர்களில் சஜ்ஜாத்தும் ஒருவர்.காயமடைந்த சிறுவனை சஜ்ஜாத் முதுகில் சுமந்து செல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil