Sanatan Sanstha Tamil
91 subscribers
194 photos
8 videos
282 links
Official Telegram Channel of Sanatan Sanstha, an NGO engaged in the spread of spirituality in scientific way
Download Telegram
*நம் வாழ்வு முறையும் 3 சூட்சுமமான அடிப்படை கூறுகளும்*
நம்முடைய *ஸத்வ, ரஜ, தம* குணத்தை வைத்து நம் வாழ்க்கை முறை நிர்ணயிக்கப்படுகிறது. நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதை பொருத்து நம் வாழ்க்கை முறை ஏற்பட்டு, அதன் அடிப்படையில் நம்மிடையே உள்ள *சூட்சும கூறுகள்* அதிகரிக்கும்.
*மூன்று சூட்சுமமான அடிப்படை உறுப்புகளும் நம் வாழ்க்கை முறையும்*

*உணவு*

*ஸத்வ* – அரிசி, கோதுமை, வெள்ளரி, பால், தயிர், வெண்ணெய், பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள்.

*ரஜ*– அதிக உப்பு, கசப்பு, துவர்ப்பு, காரமான உணவு வகைகள், வெங்காயம், பூண்டு.

*தம* – சமைக்காத உணவுகள், செறிமானத்திற்கு கஷ்டமான உணவுகள், அசைவ உணவுகள், மது பானங்கள்.

*நிறங்கள்*
*ஸத்வ* – வெள்ளை, மஞ்சள், நீலம்.

*ரஜ* – சிவப்பு, பச்சை, ஊதாநிறம்.

*தம* – கருப்பு அல்லது கருப்பு அதிகம் கலந்த நிறம்.
*மேலும் அறிய* 👇 https://www.sanatan.org/tamil/165.html
*பக்தி மார்க்க ஸாதகனின் பயணம் மற்றும் ஆன்மீக உணர்வு, உலக உணர்வுக்கு இடையே உள்ள வித்தியாசம்*

‘ஆன்மீக உணர்வு’ என்பதன் அர்த்தம் : நமது அன்றாட அலுவல்களில் நாம் ஈடுபடும்போது ‘நான்’ என்னும் உணர்வு நமது மனங்களில் ஆழப்பதிந்துள்ளதால் அந்த உணர்வே மிகுந்துள்ளது. எனவே எல்லா நிகழ்வுகளிலும் நமது அனுபவங்களும் இந்த ‘நான்’ என்னும் உணர்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது.

ஆன்மீக உணர்வை விழிப்படைய செய்வதில் *மூன்று முக்கிய தடங்கல்கள்* உள்ளன. அவை *1. அறியாமை, 2. நானே ‘கர்த்தா’ என்ற எண்ணம் மற்றும் 3. அஹம்பாவம்*

*மேலும் தகவல்*:
https://www.sanatan.org/tamil/1848.html
*சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்*

*ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும்*.தெய்வங்களின் *தத்துவம்* எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது *ஸகுண ரூபத்தில்* வெளிப்படுகிறது. மனிதன் காலப் போக்கில் தெய்வங்களின் பலவித ரூபங்களை பூஜை செய்ய ஆரம்பித்தான்.
சிவனின் மனித ரூபத்தில், *நான்கு விதமான ஆபரணங்கள்* உள்ளன.
*1. டமரு*
*2. திரிசூலம்*
*3. பாசம் (அல்லது) மான்*
*4. பரசு*
*ஜ்யோதிர்லிங்கம்*
பாரதத்தின் முக்கிய சிவஸ்தலங்களில் மொத்தம் *12 ஜ்யோதிர்லிங்கங்கள்* உள்ளன. அவை *ஒளிமயமாக* வெளிப்பட்டன. *பதின்மூன்றாவது லிங்கத்தின் பெயர் காலபிண்டம்*.

*காலபிண்டம்*
விவரமறிய..
*மேலும் தகவல்*:
https://www.sanatan.org/tamil/143.html
*ஸாதனை செய்து ஜீவனை சிவனுடன் இணைக்கவும்*

நமது *ஆன்மா கடவுளின் ஒரு நுண்ணிய துகள்*. நமது *ஜீவனை ஆன்மாவுடன்* இணைக்க *மனம்* செயல்படுகிறது. மனம் ஒரு முக்கியமான காரணியாதலால், அது *ஜீவனை சிவனுடன் இணைக்க* உதவுகிறது. ஸ்ரீமத் பகவத்கீதையின்படி, *மனம் ஒரு தனிமனிதனை மாயையில் (உலக விவகாரங்களில்) சிக்க* வைக்கிறது அதுவே *கடவுளை உணர்தலுக்கும்* அழைத்துச்செல்கிறது. *நாம் கடவுளை உணர்தலுக்கான முயற்சிகள்*
*1. ஸாதனை மூலம் ஆழ் மனதில் ‘ஸத்’ ஸன்ஸ்காரங்களைப் பதித்தல்*
மனதை *ஸாத்வீகமாக (தூய்மையாக) மாற்று வது* அவசியம். *புத்தி மனதை* இயக்குகிறது. *ஞானம் புத்தியை ஸாத்வீகமாக்குகிறது*, மேலும் *ஞானம் ஸன்ஸ்காரங்களால்* பெறப்படுகிறது. எனவே, ஸன்ஸ்காரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸாதனை மூலம், நாம் *விரும்பத்தகாத ஸன்ஸ்காரங்களை அகற்றலாம்* மற்றும் *ஸத் ஸம்ஸ்காரங்களை பதிய வைக்கலாம்*.
மேலும் அறிய 👇🏻 https://www.sanatan.org/tamil/3381.html
*கோவிலில் பிரதக்ஷிணம் செய்யும்போது இவ்வாறு செய்யுங்கள்!*

1.    பிரதக்ஷிணத்தை ஆரம்பிக்கும்போது கர்ப்பக்ருஹத்திற்கு *வெளியே இடப்புறம் நின்று ஆரம்பிக்கவும்*. பிரதக்ஷிணத்தை முடித்த பின் வலப்புறம் நின்று தெய்வ தரிசனம் செய்து கொள்ளவும்.
2.     *பிரதக்ஷிணத்திற்கு முன்பு தெய்வத்திடம் பிரார்த்தனை* செய்ய மறவாதீர்; ஒரு சிறு பிரார்த்தனையாக இருந்தாலும் போதும். *‘ஹே……(தெய்வத்தின் நாமத்தை உச்சரிக்கவும்), உந்தன் அருளால் பிரதக்ஷிணம் செய்யும்போது நான் வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் என் முற்பிறவி பாவங்கள் எரிந்து போகட்டும் மற்றும் உன்னிடமிருந்து வெளிப்படும் சைதன்யத்தை அதிகபட்ச அளவு நான் கிரஹிக்கும்படி செய்வாயாக’.*

3.     கைகளைக் கூப்பி நாமஜபத்தை செய்து கொண்டே *மத்யம வேகத்தில் பிரதக்ஷிணம்* செய்யவும்.

To read more, download the app: https://www.sanatanpanchang.com/download-apps/
*கண் திருஷ்டியை அகற்றும் முறையை மனதளவில்  எவ்வாறு செய்வது*
*1. நம் மீது உள்ள கண் திருஷ்டியை விலக்க ஸ்ரீ ஹனுமானிடம் செய்ய வேண்டிய பிரார்த்தனை*
ஸ்ரீ ஹனுமானே நம் மீது உள்ள கண் திருஷ்டியை விலக்குவார் என்ற *ஆன்மிக உணர்வுடன் ‘ஹே ஹனுமந்தா, ஹே மாருதிராயா*, என் மீதுள்ள கண் திருஷ்டியை தயைகூர்ந்து நீக்கி விடுங்கள்’ என்று அவரைப் *பூரண சரணாகதியுடன்* வேண்டிக் கொள்ளுங்கள்.

*2.கண் திருஷ்டியை அகற்றுவதற்கான செயல்பாட்டு வழிமுறை*
அ. மாருதிராயர் *தேங்காயின் குடுமி என்னை நோக்கி* இருக்குமாறு என் முன்னே நிற்கிறார்.
ஆ. மாருதிராயரின் *புனித பாதங்களில் தலையை வைத்து முழு சரணாகதியுடன்* ‘ஹே ஹனுமந்தா, ஹே மாருதிராயா, என் ஸ்தூல தேஹம் மற்றும் சூட்சும தேஹத்தில் கஷ்டப்படுத்தும் தீய சக்திகளினால் உருவாக்கப்பட்டவைகள்‌ இந்த தேங்காயில் முழுமையாக உறிஞ்சப்படட்டும்; https://www.sanatan.org/tamil/3546.html
*வசந்தகாலத்திற்கு உகந்த ஆரோக்கிய குறிப்புகள்*

உலகை படைக்கும்போதே *இறைவன் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேதத்தையும்* படைத்து விட்டார். எனவே *உலகம் தோன்றிய நாளிலிருந்தே ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகளும் மனித இனத்தால்* பின்பற்றப்பட்டு வந்துள்ளது. *ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியான பருவ காலங்கள் நியதி* மாறாமல் வருகின்றன; அந்தந்த *பருவ காலங்களுக்கேற்ப கடைபிடிக்க வேண்டிய ஆயுர்வேத விதிமுறைகளும் மாறாமல்* இருக்கின்றன. *எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நவீன மருத்துவமான ஆலோபதியை விட ஆயுர்வேத வைத்திய முறை எவ்வளவு உயர்ந்தது* என்பது இதிலிருந்து தெரிகிறது. *1. வசந்த காலம் – ஆயுர்வேத வைத்திய முறையின் தந்தை*
*குளிர்காலமான தக்ஷிணாயனத்தில் பாரத தேசத்திலிருந்து தன் பாதையை விட்டு விலகிச் சென்ற சூரியன் உத்தராயண புண்ய காலத்தில்* தன் பாதைக்கு திரும்பும் காரணத்தால் இமய மலை சிகரத்தில் *பனி உருக ஆரம்பிப்பது போலே, குளிர்காலத்தில் உடலில் அதிகப்படியாக சேர்ந்த கபமும் சூரிய வெப்பத்தினால் இளக ஆரம்பிக்கிறது*. இவ்வாறாக குளிர்காலம் துவங்கி, கோடைக்காலம் வரை வசந்த காலம் நீடிக்கிறது. https://www.sanatan.org/tamil/1774.html
*🌸ஸ்ரீராமநவமி (27.03.2026)🌸*

*ராமநவமி உற்சவம் கொண்டாடும் வழிமுறை*

ராமநவமி உற்சவம் *சித்திரை மாத சுத்த நவமி* திதியன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமி அன்று அதிகபட்ச பயனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்!

1. *ராமநவமி உற்சவத்தை கொண்டாடும் இதிகாசம், மகத்துவம், உற்சவத்தைக் கொண்டாடும் வழிமுறை*

2. *ஸ்ரீராமனின் வாழ்வின் சிறப்புகள்*

3. *ஸ்ரீராமனின் நாமஜபம்*

4. *பிரபு ஸ்ரீராமனுடன் சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா மற்றும் பாரதத்தில் உள்ள சில இடங்களை பக்திபூர்வமாக தரிசனம் செய்யுங்கள்!*

5. *தலை சிறந்த ராம பக்தன் பரதனின் ஆன்மீக குணச் சிறப்புகள்*

Read in detail : https://www.sanatan.org/tamil/shri-ram
*சமூக விழாக்களில் குத்துவிளக்கேற்றுதல்*

*ஹிந்து தர்மத்தில்* குத்துவிளக்கேற்றுதல் அதிக மஹத்துவம் வாய்ந்ததாகும்.
*1.குத்துவிளக்கேற்றுவதன் உள்ளர்த்தம்*
விளக்கேற்றுவது என்பது நமக்குள் இருக்கும் *ஆத்ம சக்தியை வெளிப்படையச்* செய்வதாகும்.
தீபத்தைச் சுற்றியுள்ள *சாந்தமான ஒளிமண்டலம்* நம்முடைய *ஆத்மப்ரகாசத்தையும்* தீபத்தின் *ரஜோகுண ப்ரகாசம்* நம் *ஆத்ம தேஜஸையும்* குறிக்கிறது.
*ஆத்ம தேஜஸ்*
என்பது *ஈச்வரனின், நேரடியாக செயல்படும் ஸகுண சக்தியின்* சின்னமாகும் மற்றும் *ஆத்மப்ரகாசம்* என்பது தேஜஸின் பின்னே செயல்படும் *ஈச்வரனின் ஸங்கல்ப சக்தியாகும்*.

மேலும் அறிய 👇 https://www.sanatan.org/tamil/3816.html
*சாந்தி விதி*

*1. நோக்கம்*

வயதாகும் போது, *இந்த்ரியங்கள் சிறிது சிறிதாக வலுவிழக்க த்* துவங்குகின்றன. உதாரணமாக, *காது கேளாமல் போவது, பலவித வியாதிகள் வருவது* போன்றவை.

தெய்வங்களின் க்ருபையால் அந்த நபருக்கு பரிகாரம் கிடைக்கவும் எஞ்சிய வருடங்களை அமைதியாக கழிக்கவும் *சாஸ்திரப்படி 50 வருடத்திலிருந்து 100 வலது வரை* ஒவ்வொரு *ஐந்தாவது வருடமும்* சாந்தி விதி செய்யப்பட வேண்டும்.

*2. சாந்தி செய்யும் நாள்*
ஒவ்வொரு சாந்தி விதியையும் அந்த *நபரின் பிறந்த நாளன்று* செய்ய வேண்டும். அன்று சுபதினமாக இல்லாது போனால் அவரின் *ஜென்ம – நக்ஷத்திரம்* வரக்கூடிய மற்றொரு தினம் அல்லது வேறு சுபதினத்தில் செய்யலாம்.

மேலும் அறிய👇
https://www.sanatan.org/tamil/3829.html
*அக்ஷய த்ரிதீயை*
*ஸத்ய யுகம் முடிந்து த்ரேதா யுகம்* ஆரம்பமாகும் தினமே *அக்ஷய த்ரிதீயை* ஆகும்.
பண்டிகையின் திதி
*வைகாசி மாத சுக்ல த்ரிதீயை* அக்ஷய த்ரிதீயை ஆகும். இந்த நாள் பண்டிகையாகவும் விரதமாகவும் கொண்டாடப்படுகிறது.
*நிரந்தர பயன்களை வழங்கும் நாள்*
புராதன சம்ஸ்க்ருத க்ரந்தமான *மதனரத்னாவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்* இந்நாளின் முக்கியத்துவத்தை *யுதிஷ்டிரனுக்கு* எடுத்துரைப்பதாக வருகிறது. அவர் கூறுகிறார், ஹே யுதிஷ்டிரா, இந்நாளில் செய்யப்படும் *தானமும் யக்ஞத்தில் செய்யப்படும் ஆஹுதிகளும்* எப்போதும் வீணாகாது. அதனால் *ரிஷிகள் இதற்கு அக்ஷய த்ரிதீயை* என பெயர் சூட்டியுள்ளனர். *தெய்வங்களுக்காகவும் மூதாதையர்களுக்காகவும்* இந்நாளில் செய்யப்படும் எல்லாமே *அக்ஷயமாக* இருக்கும் அதாவது *அழிவில்லாமல்* இருக்கும்.
https://www.sanatan.org/tamil/2396.html