Hello Doctor
324 subscribers
1.56K photos
1.3K videos
2 files
18 links
தினசரி உடல்,மன ஆரோக்கியம் உடற்பயிற்சி.மருத்துவ குறிப்புகள் இயற்கை உணவுகள்,அழகு குறிப்புகள்,குழந்தைகள் நலம், மகளிர் பக்கம்,மற்றும் மேலும் பல பல்சுவை தகவல்களோடு இணைந்திருங்கள்
Health Care & Tips Fitness Traditional Medicare Beauty Tips
Admin I'd @muthur11
Download Telegram
1
கழுத்து - முதுகு - இடுப்பு - மார்பக வலியை குறைக்கும்.ருத்ர முத்திரை...!


மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம்.

செய்முறை:

கட்டை விரல், ஆள்காட்டி விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.

நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்:

சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.

பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். இரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.

உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும்.

சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற  சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.

இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

காலில் உள்ள இரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆண்களுக்கு விதைப்பையிலும், விரையிலும்  உள்ள வெரிகோஸிட்டி பிரச்னை சரியாகும்.

வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.
சளி மற்றும் இருமலைப் போக்கும் அற்புத இலை.!
கற்பூர வல்லி.

சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டால் எந்த வேலையையும் கவனமாகச் செய்ய இயலாது. பெரும்பாலானோருக்கும் அடிக்கடி இந்தத் தொல்லை ஏற்படும். சீரற்ற உணவு முறை, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சளித் தொல்லையைப் போக்க ஒரே இலை மட்டும் போதும். அது என்ன இலை, அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்குப் பார்ப்போமா.?



கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி மிகச் சிறந்த மருத்துவக் குணம் கொண்ட செடி. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் நிறைந்த இதன் இலை பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வைப் பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றைச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். இதன் இலைகளை எடுத்துக் கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவக் குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாகத் தடவ குணம் தரும்.

மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
பிபி மாத்திரை சாப்பிடாமலேயே பிபியை நார்மலாக வைக்கும் வழிகள்.



மனிதனுக்கு இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், ரத்த நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் கூடுகிறது .



இது பரம்பரையாக மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் பிபி வரும் வாய்ப்புள்ளது . தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே காரணமென்று மருத்துவ ஆய்வு கூறுகிறது



உடல் எடை கூடிக்கொண்டே போனாலும் ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது
உணவில் எப்போதும் அதிகம் உப்பு சேர்த்துக் கொண்டு சாப்பிடுவோருக்கு இந்த பிபி வாய்ப்பு அதிகம்
அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள்
மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளோருக்கு பிபி வரலாம்
சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்போருக்கும் இந்த பிபி வரலாம்
நீரிழிவு நோய் உள்ளோருக்கு பிபி வரலாம்

இந்த பிபி யை மாத்திரையில்லாமல் தவிர்க்கும் வழிகள்
எப்போதும் வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும். முந்தைய வேலை உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது. விரதம் என்ற பெயரில் நீண்ட பட்டினி கிடந்தாலும் இரத்த அழுத்தத்திற்கு அதிகமாக காரணமாக அமையும்.

அடிக்கடி ஆயிலில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் பிபி அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்

எப்போதும் மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கமும் பிபி அதிகரிக்கும் ,அதனால் இதை தவிர்க்கலாம்

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவு அருந்திய உடன் தூங்கச் செல்லக்கூடாது. இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.
இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை.


இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்த அழுத்தம் நோய் வராமல் ஏற்படாமல் தடுக்கலாம்
மேற்கூறிய வழிகளை அதிக சிரத்தையுடன் கடை பிடித்தால் மாத்திரை இல்லாமல் பிபியை கண்ட்ரோலில் வைத்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாமே.
1
கால் ஆணிக்கு இயற்கை மருத்துவம்.

காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.


கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

டிப்ஸ் 1:

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே, பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

டிப்ஸ் 2:

மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

டிப்ஸ் 3:

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

டிப்ஸ் 4:

அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.

டிப்ஸ் 5:

சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா… மூணு நாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா… ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.
1
ஆவாரம் பூவின் மகத்துவம்.


ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழியின் மூலம் ஆவாரையின் மகத்துவத்தை அறியலாம்.

ஆவாரம் பூவைச் சமைத்துச் சாப்பிட கற்றாழை நாற்றம், நீரிழிவு, உடலில் உப்புப் பூத்தல், உடல் வறட்சி போன்றவை தீரும்.

பூவைக் குடிநீரிட்டு பாலுடன் உண்ண உடல் சூடு தணியும்.

பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் வெள்ளை, மூத்திரரோகம், ஆண்குறி எரிச்சல் இவை தீரும்.


ஆவாரை விதையை உரைத்துக் கண்களில் இட சீழ் பிடித்த கண் நோய்கள் தீரும்.


இப்பூவை 15 கிராம் அளவு எடுத்து டீ போட்டு அருந்தி வர உடல் வறட்சி, உடல் உஷ்ணம், உடல் நாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை தீரும். சர்க்கரை நோய் குறையும்.


ஆவாரம் பூவை சிகைக்காய், பாசிப்பயறு, கடலை மாவு போன்றவற்றுடன் சேர்த்து அரைத்து குளித்து வர தோல் நோய்கள் சரியாகும்.
1
பெண்களுக்கு
மாதம் மாதம் வரக்கூடிய
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு என்ன?


கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ!

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது 'வாழைப்பூ' . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.

இன்றைக்கு மனிதகுலத்தை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய் வந்தவர்கள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

சிலருக்கு மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை, மருத்துவ உலகம் 'ரத்த மூலம்' என்ற பெயர் வைத்து அழைக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும்.

அதேபோல், இப்போது உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்னை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பெண்களுக்கு வாழைப்பூ பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பிரச்னை உள்ளவர்கள், இதை நல்ல பக்குவத்தோடு ரசம் செய்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் வெளியேறிவிடும். வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும்.

அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!
1
தேற்றாத உடம்பை
தேற்றி விடும்
தேற்றான் கொட்டை லேகியம்.
சாப்பிட்டால் மூட்டு வலி வருமா?

தேற்றான் கொட்டை (Thyrotoxicosis) அல்லது கொட்டையைத் தொட்டல் (Thyroid gland disease) பற்றி பேசும் போது, இது மொத்தமாகவே மூட்டு வலியுடன் நேரடியாக தொடர்புடையதா என சொல்ல இயலாது. ஆனால், மூட்டு வலியுடன் தொடர்புடைய சில காரணிகளை எடுத்துக் கொள்ளலாம்:

மூட்டு வலியின் காரணிகள்:

1. உணவு மற்றும் பசை:

தேற்றான் கொட்டை உண்டால், சில உணவுகளின் மேல் உடல் மறுப்பு அல்லது பாதிப்புகள் ஏற்படலாம், ஆனால் இது குறிப்பாக மூட்டு வலியுடன் தொடர்புடையது அல்ல.

2. அதிக ஆராய்ச்சி:

சில நேரங்களில், தசை மற்றும் மூட்டு வலியுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகள் தொடர்புடைய பல நோய்களும் பங்கேற்க முடியும், ஆனால் இது இப்போது தேற்றான் கொட்டையின் பாதிப்புகளோடு தொடர்புடையது எனக் கூற முடியாது.

3. விரைவு நோய்:

மூட்டு வலியுடன் தொடர்புடைய மற்ற நோய்கள், உடல் மாற்றங்கள் அல்லது உடல்நலனில் ஏற்படும் பங்களிப்பு என்பவற்றில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பரிந்துரை:

மருத்துவர் ஆலோசனை: உங்களுக்கு மூட்டு வலி மற்றும் மற்ற ஆரோக்கியக் குறைபாடுகள் இருந்தால், உங்களுக்கான சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை பெறுவது முக்கியம்.

21 வயது ஆணுக்கான மூட்டு வலியின் காரணங்களை அறிந்து கொள்ள, மற்றும் சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள, உடல் நல மருத்துவரை அணுகுவது முக்கியமாக இருக்கிறது.

கலங்கிய நீர்: அந்த காலத்தில், குடிநீர் ஆதாரங்களாக விளங்கக்கூடிய குளம், குட்டை, ஊருணிகள் போன்றவற்றில், கலங்கின தண்ணீரை தெளியவைக்கவே, இந்த தேற்றாங்கொட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். சேறும் சகதியுமான நீரில், இந்த கொட்டையை இடித்து போட்டுவிட்டால், அந்த நீர் தெளிந்து சுத்தமாகிவிடுமாம்.

பானைகளில்கூட, இந்த தேற்றான்கொட்டையை தேய்த்து, தண்ணீரை ஊற்றி வைப்பார்கள். சிறிது நேரத்தில், அழுக்குகள், கிருமிகள் எல்லாம் நீங்கி, சுத்தமான தண்ணீர் கிடைக்கும். இந்த மரத்தின் காய்கள்தான், தேற்றான்கொட்டை என்பார்கள். இந்த கொட்டை கடினமாக இருக்கும் என்பதால், நேரடியாக பயன்படுத்த முடியாது.. இந்த காய்களை ஊறவைத்து, அந்த ஈரத்திலேயே அதை நசுக்கி, இடித்துதான், பயன்படுத்த முடியும்..

தேற்றான்கொட்டை: இப்போதும்கூட, நாட்டு மருந்து கடைகளில் தேற்றான் கொட்டைகள் கிடைக்கின்றன.. கலங்கல் நீரை தெளிய வைக்க வேண்டுமானால், பானையின் உட்புறமாக, இந்த கொட்டைகளால் தேய்த்து நீர் நிரப்பினால் போதும், தூய்மையான குடிநீர் கிடைத்துவிடும். தண்ணீரை மட்டுமல்ல, உடலையும் தேற்றக்கூடியது இந்த கொட்டை.

உடலிலுள்ள சூட்டை அகற்றக்கூடியது இந்த கொட்டை.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது...

நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த தேற்றான்கொட்டை சிறந்த தேர்வாக உள்ளது.. நீரிழிவால் பாதிக்கப்பட்டு கண் பார்வை, கண் நரம்பு பிரச்சனை இருப்பவர்கள், உடல் மெலிந்திருப்பவர்கள், இந்த பொடியை பயன்படுத்தலாம். இந்த கொட்டையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், கஷாயம் போல வைத்து குடிக்கலாம். இதனால், நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும்.

பால்வினை நோயால் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது இந்த தேற்றான்கொட்டை.. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்க இந்த தேற்றான்கொட்டையில் ஸ்பெஷல் லேகியம் தயாரிக்கப்படுகிறது.

கொழுப்பை கரைக்கும் தன்மை இந்த கொட்டைகளுக்கு உள்ளது.. இதனால், இதயநோய், பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.. இதை லேகியமாக செய்து சாப்பிட்டால், உடல் எடை கூடி, பலம் அதிகரிக்கும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது.

தேற்றான் கொட்டை பவுடர், தேற்றான் கொட்டை லேகியம், தேற்றான்கொட்டை சூரணம் என்றும் தனியாக கடைகளில் கிடைக்கிறது. இவைகள் ஒவ்வொன்றும் பல்வேறு பலன்களை தரக்கூடியது.. எனவே, முறையான சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் உட்கொள்ளக்கூடாது.
1
நமக்கு எல்லாம்
கருணை காட்டும்
கருணைக் கிழங்கு சாப்பிட்டா என்ன பயன் ?

இந்த பிரச்சினைலாம் கூட

தீருமா? நாக்கு அரிக்காம எப்படி சமைக்கலாம்...

கருணைக் கிழங்கு இந்திய பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தக் கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று. இதில் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

உடல் எடை குறைய

பொதுவாக உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் இருக்கும்

அதிக அளவிலாக ஸ்டார்ச் மற்றும் கார்போ ஹைட்ரேட்டினால்

உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இருக்கிறது. ஆனால் கருணைக் கிழங்கைப் பொருத்தவரையில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். அதோடு உடலில் கொழுப்புக்களைச் சேர விடாமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்கவும் வழி வகை செய்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க..

கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும். ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது. பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு

உறுதுணையாக இருக்கும் வல்லமை கருணைக் கிழங்கிற்கு உண்டு.

உடல் சூட்டை தணிக்க

கருணைக் கிழங்கிற்கு உடல் சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சியாக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கருணைக் கிழங்குக்கு உண்டு. குறிப்பாக, நாள்பட்ட உடல் சூடு, மூலத்தினால் ஏற்படும் சூடு, எரிச்சல், அதிக அளவிலான காய்ச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். பசியின்மையைப் போக்கவும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது.
1
பிசுபிசு இருக்கும்
முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்


முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும்; நஞ்சை நீக்கும்; சளியகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். இலை கோழையகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாகும்.

முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது. வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள நான்கு மூலிகைகளுள் முசுமுசுக்கையும் ஒன்றாகும்.

முசுமுசுக்கை நிலம் படிந்த அல்லது ஏறி வளரும் சிறுகொடி. தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள், சுணைகள், கொண்டவை. சிவப்பு நிறமானவை.

ஆண், பெண் மலர்கள் தனித் தனியானவை. பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. இரு குரங்கின் கை, மொசுமொசுக்கை, மாமூலி, ஆயிலேயம் என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் மிக்கவை.

இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவேளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் ½ தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். 100 நாள்கள் வரை இவ்வாறு செய்யலாம்.

கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.

வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, ½ தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு ½ டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

முசுமுசுக்கை தோசை: 3 பிடி இலைகளை ¼ கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும்.

முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமாகும்.
செரிமானத்திற்கு உதவும் உணவே மருந்து...

மஞ்சள்.

இதில் குர்குமின் உள்ளது, இது வீக்கத்தைக் குறைத்து IBS, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வீக்கம் ஆகியவற்றை நீக்குகிறது.

சீரகம், மிளகு, கொத்தமல்லி.

செரிமான நொதிகளைத் தூண்டி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலைத் தடுக்கிறது.


பெருங்காயம்.

அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையைப் போக்கும். ஒரு சிட்டிகை தண்ணீரில் கலந்து குடிப்பது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு ஒரு வீட்டு வைத்தியமாகும்.

கடுகு விதைகள்.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வயிற்று உப்புசத்தைத் தடுக்கிறது.

இஞ்சி

குமட்டல், வீக்கம் ஆகியவற்றைக் குறைத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது.
1
Forwarded from Telegram Chennal Links தமிழ் டெலிகிராம் சேனல் லிங்க்ஸ்
தனி ஒருவன் Thani Oruvan
Election Update
தேர்தல் களம் 2026
அரசியல் பதிவுகள்
இப்போதே இணைந்து கொள்ளுங்கள்
https://t.me/+WIeh9VBzotA0ODg1
https://t.me/+WIeh9VBzotA0ODg1
Forwarded from Telegram Chennal Links தமிழ் டெலிகிராம் சேனல் லிங்க்ஸ்
Cooku With Comali Tamil
Season 7 Double Trouble

Join : https://t.me/+HpwTgqJzuo84YTBl
Join : https://t.me/+HpwTgqJzuo84YTBl

💢 Join Fost Must Guys 👆
Forwarded from Telegram Chennal Links தமிழ் டெலிகிராம் சேனல் லிங்க்ஸ்
Cooku With Comali Tamil
Season 7 Double Trouble
Today Episode Upload
1 Time Pay Just 10Rs
ஒருமுறை 10 ரூபாய் செலுத்தினால் போதும்
இப்போது இனைந்து கொள்ளுங்கள் 👇👇
Premium Channel #No_ads
Msg 𝗝𝗼𝗶𝗻 𝗙𝗮𝘀𝘁 Now
இந்த IDக்கு மெசேஜ் செய்யவும்👇👇
@muthur11  @muthur11 @muthur11  @muthur11
@muthur11  @muthur11