இன்றைய வகுப்பு இத்துடன் நிறைவடைந்துவிட்டது, மீண்டும் வகுப்பு நாளை காலை 4 மணிக்கு தொடங்கும் ...
4.1 உரிச்சொல்
உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.
உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.
4.1.1 உரிச்சொல்லின் பொது இலக்கணம்
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்,
பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்
என்று தமது நன்னூலில் (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.
1.
உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
2.
ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
3.
உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.
4.1.2 உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்
உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.
அவை :
1. குணப் பண்பு
2. தொழிற் பண்பு
உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க் கண்டோம். அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது குணப்பண்பு ஆகும்.
எடுத்துக்காட்டு:
மாதர் வாள் முகம்
இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை உணர்த்துகிறது.
(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)
இமிழ் கடல்
இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது
4.2 உயிர்ப்பொருள், உயிர் அல்லாத பொருள்
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் விளக்கங்களைக் காண்போம்.
4.2.1 உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின்
பகுப்பு
ஓரறிவு உயிர் முதலாக ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள அனைத்தும் உயிர் உடைய பொருள்கள் ஆகும். இலக்கண நூலார் உயிர்களை ‘அறிதல் உணர்வு’ அடிப்படையில் பகுத்துள்ளனர். மெய்யால் அதாவது உடம்பால் உற்று உணரும் உணர்ச்சி மட்டுமே கொண்ட உயிரினங்கள் ஓரறிவு உடையவாகும். மெய்யோடு நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளாலும் அறியும் ஆற்றலுடைய மனித உயிர்களை ஐந்து அறிவு உடையவாகும் என்கிறார் நன்னூலார். தொல்காப்பியர் மனம் என்பதையும் ஓர் அறிவாகக் கொண்டு அதனை ஆறாவது அறிவு என்று கூறுகின்றார்.
உயிர் இல்லாத உடம்பு முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அற்ற பொருள்களாகும்.
இதுவரை உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு முறையை அறிந்து கொண்டீர்கள். இனி அவ்விரு பொருள்களின் வகைகளை விரிவாகக் காண்போம்.
4.3 உயிர் உடைய பொருள் வகைகள்
உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.
• ஓர் அறிவு உயிர்
மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.
எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்
• ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)
மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.
எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு
• மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)
மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.
எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு
• நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.
எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு
• ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.
எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்
இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
4.4 உயிர் உடைய பொருள்களின் பண்புகள்
இப்பகுதியில் உயிர் உடைய பொருள்களின் பண்புகள் விளக்கப்படுகின்றன. அதாவது, உயிர் உடைய பொருள்களின் பொதுவான குணங்களும் அவற்றிற்கு உரிய தொழில் பண்புகளும் (செய்கைகள்) விளக்கப்படுகின்றன.
4.4.1 உயிர் உடைய பொருள்களின் குணப்பண்புகள்
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் (நூற்பா 452). அவையாவன: அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு, வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்), துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு), துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி), பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின்
உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.
உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.
4.1.1 உரிச்சொல்லின் பொது இலக்கணம்
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்,
பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்
என்று தமது நன்னூலில் (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.
1.
உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
2.
ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
3.
உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.
4.1.2 உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்
உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.
அவை :
1. குணப் பண்பு
2. தொழிற் பண்பு
உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க் கண்டோம். அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது குணப்பண்பு ஆகும்.
எடுத்துக்காட்டு:
மாதர் வாள் முகம்
இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை உணர்த்துகிறது.
(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)
இமிழ் கடல்
இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது
4.2 உயிர்ப்பொருள், உயிர் அல்லாத பொருள்
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் விளக்கங்களைக் காண்போம்.
4.2.1 உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின்
பகுப்பு
ஓரறிவு உயிர் முதலாக ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள அனைத்தும் உயிர் உடைய பொருள்கள் ஆகும். இலக்கண நூலார் உயிர்களை ‘அறிதல் உணர்வு’ அடிப்படையில் பகுத்துள்ளனர். மெய்யால் அதாவது உடம்பால் உற்று உணரும் உணர்ச்சி மட்டுமே கொண்ட உயிரினங்கள் ஓரறிவு உடையவாகும். மெய்யோடு நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளாலும் அறியும் ஆற்றலுடைய மனித உயிர்களை ஐந்து அறிவு உடையவாகும் என்கிறார் நன்னூலார். தொல்காப்பியர் மனம் என்பதையும் ஓர் அறிவாகக் கொண்டு அதனை ஆறாவது அறிவு என்று கூறுகின்றார்.
உயிர் இல்லாத உடம்பு முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அற்ற பொருள்களாகும்.
இதுவரை உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு முறையை அறிந்து கொண்டீர்கள். இனி அவ்விரு பொருள்களின் வகைகளை விரிவாகக் காண்போம்.
4.3 உயிர் உடைய பொருள் வகைகள்
உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.
• ஓர் அறிவு உயிர்
மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.
எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்
• ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)
மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.
எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு
• மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)
மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.
எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு
• நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.
எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு
• ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.
எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்
இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
4.4 உயிர் உடைய பொருள்களின் பண்புகள்
இப்பகுதியில் உயிர் உடைய பொருள்களின் பண்புகள் விளக்கப்படுகின்றன. அதாவது, உயிர் உடைய பொருள்களின் பொதுவான குணங்களும் அவற்றிற்கு உரிய தொழில் பண்புகளும் (செய்கைகள்) விளக்கப்படுகின்றன.
4.4.1 உயிர் உடைய பொருள்களின் குணப்பண்புகள்
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார் (நூற்பா 452). அவையாவன: அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறைவு, பொறை, (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு), கடைப்பிடி, மையல் (மயக்கம்), நினைவு, வெறுப்பு, உவப்பு (மகிழ்வு), இரக்கம், நாண், வெகுளி (கோபம்), துணிவு, அழுக்காறு (பொறாமை), அன்பு, எளிமை, எய்த்தல் (சோர்வு), துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல் (பகை), வென்றி (வெற்றி), பொச்சாப்பு (பொல்லாங்கு), ஊக்கம், மறம், மதம் (வெறி), மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின்
பண்புகளாகும்.
4.4.2 உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள்
உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் (குணங்கள்) ஐந்து. அவையாவன:
துய்த்தல் (அனுபவித்தல்), துஞ்சல் (தூங்குதல்), தொழுதல், அணிதல், உய்த்தல் (பிழைத்தல்) ஆகிய இக்குணங்கள் ஐந்தும் எல்லா உயிர் உடைய பொருள்களுக்கும் பொதுவானவையாகும். (நன்னூல், 453)
இனி உயிர் அற்ற பொருள்களின் பண்புகளையும் உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களுக்கு உரிய பொதுவான தொழில் பண்புகளையும் பார்ப்போம்.
4.5 உயிர் அல்லாத பொருள்களின் குணப் பண்புகள்
உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்களும், நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும், வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும், கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு (காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும், வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை, நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு), சருச்சரை (சொரசொரப்பு) என்னும் எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454)
4.5.1
உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பொதுவான தொழில் பண்புகள்
உயிர் உடைய பொருள்களுக்கும் உயிர் அற்ற பொருள்களுக்கும் உரிய பொதுவான தொழில் பண்புகளை இங்கே காண்போம். உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல், 455)
‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும்.
இசைத்தல் = ஒலித்தல்
எடுத்துக்காட்டு:
‘பிள்ளை பிறந்தான்’ - தோன்றல் எனும் தொழில் பண்பு
பிள்ளை எனும் உயிர்ப்பொருளுக்கு வளர்தல் போன்ற ஏனைய தொழில் பண்புகளும் பொருந்தி வருவதைக் காணுங்கள்.
அடுத்து, உயிர் அற்ற பொருள்களுக்கும் மேற்கூறியுள்ள பண்புகள் உள்ளன என்பதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்.
எடுத்துக்காட்டு:
பிறை தோன்றிற்று - தோன்றல் எனும் தொழிற்பண்பு
மழை கொடுத்தது - ஈதல் எனும் தொழிற்பண்பு
உயிர் அல்லாத பல்வேறு பொருள்களுக்கும் மேற்கூறிய பண்புகள் பொருந்தி வருவதை நீங்களே சொல்லிப் பாருங்கள்.
4.4.2 உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள்
உயிர் உடைய பொருள்களின் தொழில் பண்புகள் (குணங்கள்) ஐந்து. அவையாவன:
துய்த்தல் (அனுபவித்தல்), துஞ்சல் (தூங்குதல்), தொழுதல், அணிதல், உய்த்தல் (பிழைத்தல்) ஆகிய இக்குணங்கள் ஐந்தும் எல்லா உயிர் உடைய பொருள்களுக்கும் பொதுவானவையாகும். (நன்னூல், 453)
இனி உயிர் அற்ற பொருள்களின் பண்புகளையும் உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களுக்கு உரிய பொதுவான தொழில் பண்புகளையும் பார்ப்போம்.
4.5 உயிர் அல்லாத பொருள்களின் குணப் பண்புகள்
உயிர் அல்லாத பொருள்களின் பண்புகள் வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்களும், நறுநாற்றம், துர்நாற்றம் என்னும் இரு நாற்றங்களும், வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, பொன்மை (மஞ்சள்), பசுமை என்னும் ஐந்து வண்ணங்களும், கைப்பு (கசப்பு), புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு (காரம்), இனிப்பு என்னும் ஆறு சுவைகளும், வெம்மை (வெப்பம்), தண்மை (குளிர்ச்சி), மென்மை, வன்மை, நொய்மை (நைதல்), திண்மை, இழுமெனல் (வழவழப்பு), சருச்சரை (சொரசொரப்பு) என்னும் எட்டு ஊறுகளும் (தொடு உணர்வுகளும்) உயிர் அற்ற பொருள்களின் பண்புகளாகும். (நன்னூல், 454)
4.5.1
உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பொதுவான தொழில் பண்புகள்
உயிர் உடைய பொருள்களுக்கும் உயிர் அற்ற பொருள்களுக்கும் உரிய பொதுவான தொழில் பண்புகளை இங்கே காண்போம். உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல், 455)
‘தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் என்பன எல்லாவற்றிற்கும் பொதுவானவையாகும்.
இசைத்தல் = ஒலித்தல்
எடுத்துக்காட்டு:
‘பிள்ளை பிறந்தான்’ - தோன்றல் எனும் தொழில் பண்பு
பிள்ளை எனும் உயிர்ப்பொருளுக்கு வளர்தல் போன்ற ஏனைய தொழில் பண்புகளும் பொருந்தி வருவதைக் காணுங்கள்.
அடுத்து, உயிர் அற்ற பொருள்களுக்கும் மேற்கூறியுள்ள பண்புகள் உள்ளன என்பதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்.
எடுத்துக்காட்டு:
பிறை தோன்றிற்று - தோன்றல் எனும் தொழிற்பண்பு
மழை கொடுத்தது - ஈதல் எனும் தொழிற்பண்பு
உயிர் அல்லாத பல்வேறு பொருள்களுக்கும் மேற்கூறிய பண்புகள் பொருந்தி வருவதை நீங்களே சொல்லிப் பாருங்கள்.
💯💯💯💯💯💯💯‼️
*இரவு நேர சிறப்பு ஆன்லைன் வகுப்பு*
*Night online special class*
Date : 24.02.2025
*Time : 9.00 pm to 10.00 pm*
*Subject : Tamil*
*Topic : மிக மிக முக்கியமான பகுதி*
*New Link :*
*Click https://us04web.zoom.us/j/73622497889?pwd=TvGrrbaDjbxQqbe6HdihcQSdcNOUkN.1 to start or join a scheduled Zoom meeting.*
*இரவு நேர சிறப்பு ஆன்லைன் வகுப்பு*
*Night online special class*
Date : 24.02.2025
*Time : 9.00 pm to 10.00 pm*
*Subject : Tamil*
*Topic : மிக மிக முக்கியமான பகுதி*
*New Link :*
*Click https://us04web.zoom.us/j/73622497889?pwd=TvGrrbaDjbxQqbe6HdihcQSdcNOUkN.1 to start or join a scheduled Zoom meeting.*
Zoom Video
Join our Cloud HD Video Meeting
Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution…
💯💯💯💯💯💯💯‼️
*அதிகாலை நேர சிறப்பு ஆன்லைன் வகுப்பு*
*Morning online special class*
Date : 25.02.2025
*Time : 4.15 am to 06.00 am*
*Subject : Tamil*
*Topic : மிக மிக முக்கியமான பகுதி*
*New Link :*
*Click https://us04web.zoom.us/j/73622497889?pwd=TvGrrbaDjbxQqbe6HdihcQSdcNOUkN.1 to start or join a scheduled Zoom meeting.*
*அதிகாலை நேர சிறப்பு ஆன்லைன் வகுப்பு*
*Morning online special class*
Date : 25.02.2025
*Time : 4.15 am to 06.00 am*
*Subject : Tamil*
*Topic : மிக மிக முக்கியமான பகுதி*
*New Link :*
*Click https://us04web.zoom.us/j/73622497889?pwd=TvGrrbaDjbxQqbe6HdihcQSdcNOUkN.1 to start or join a scheduled Zoom meeting.*
Zoom Video
Join our Cloud HD Video Meeting
Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution…
*Today Night Class Link*
*Class Time : 9.00 pm to 10.00 pm*
*Date : 25.02.2025*
*https://meet.google.com/ofp-ndae-hqo*
*குறிப்பு :*
Zoom App க்கு மாற்றாக Google Meet பயன்படுத்தப்படுகிறது....
நன்றி...!!!
*Class Time : 9.00 pm to 10.00 pm*
*Date : 25.02.2025*
*https://meet.google.com/ofp-ndae-hqo*
*குறிப்பு :*
Zoom App க்கு மாற்றாக Google Meet பயன்படுத்தப்படுகிறது....
நன்றி...!!!
The owner of this channel has been inactive for the last 11 months. If they remain inactive for the next 29 days, they may lose their account and admin rights in this channel. The contents of the channel will remain accessible for all users.
The owner of this channel has been inactive for the last 11 months. If they remain inactive for the next 18 days, they may lose their account and admin rights in this channel. The contents of the channel will remain accessible for all users.
The owner of this channel has been inactive for the last 11 months. If they remain inactive for the next 8 days, they may lose their account and admin rights in this channel. The contents of the channel will remain accessible for all users.