𝙎𝙩𝙪𝙙𝙮 𝙏𝙚𝙘𝙝 𝙏𝙖𝙢𝙞𝙡
284 subscribers
280 photos
54 files
708 links
🎀Study Tech Tamil 🎀
Our Channel: https://youtube.com/c/StudyTechTamil
Website Link :https://studytechtamil.blogspot.com
Download Telegram
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசி வருவதால் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசி வருவதால் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Download PDF : https://drive.google.com/file/d/1E6wtxxMXp6FyUrWvSYeeuqyMvhOIQ4oZ/view
பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசர் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மதிய உணவு சாப்பிடும் போது மாணவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,
வகுப்பறை ஜன்னல், கதவுகள் கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
𝙎𝙩𝙪𝙙𝙮 𝙏𝙚𝙘𝙝 𝙏𝙖𝙢𝙞𝙡
Photo from ❤️
தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை!
👆👆👆AllDistrict Question Paper Available Our Sharechat
BREAKING | JUST IN

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.


*ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிப்பு.


#LockdownExtended | #CoronaVirus | #TamilNadu
🔘🔘தேனியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

🔘🔘இன்றைய செய்திகள் - 31-03-2021
தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் *Dr.அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் *அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த மாதம் ஊதிய பிறப்பிப்பு ஆணை பிறப்பிக்காததால்* ஊதியம் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து மாநில செய்திதொடர்புச் செயலாளர் செயலாளர் திண்டுக்கல் மு.முருகேசன் தினகரன் நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட செய்தி