𝙎𝙩𝙪𝙙𝙮 𝙏𝙚𝙘𝙝 𝙏𝙖𝙢𝙞𝙡
284 subscribers
280 photos
54 files
708 links
🎀Study Tech Tamil 🎀
Our Channel: https://youtube.com/c/StudyTechTamil
Website Link :https://studytechtamil.blogspot.com
Download Telegram
இது குறித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கூட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நடத்தி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகே இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இறுதி வடிவம் பெற்ற கொள்கைத் திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கூறியுள்ள யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இவ்வளவு நடைமுறைகள் மேற்கொண்டுள்ள போது கூட்டாட்சித் தத்துவம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது ஏன்?

இவை மட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கை (NEP) பரந்துபட்ட அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட ஒரு கொள்கை ஆவணம் ஆகும்.

அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாநிலங்கள் தங்களது பிரேதசங்களின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிச் செயல்படுத்தலாம்.

கட்டுக் கதை 6:

இந்தக் கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை

இது முற்றிலும் தவறான நம்பிக்கை ஆகும். இக்கல்விக் கொள்கை அனைத்துத் தனிப்பட்டோரும் தங்களது கல்வி இலக்கைத் தொடர்வதற்கு சமமான வாய்ப்புகள் பெற வகை செய்கிறது.

பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் அனைவரும் எளிதாக அணுகி (accessibility), சமமாக (equity) சேருவதற்கு (inclusion) பல்வேறு முன்முயற்சிகளை இக்கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

பாலின சேர்க்கை நிதி (Gender Inclusion Funds), தேசிய உதவித் தொகைக்கான இணையவாசல் (Portal for National Scholarship), பட்டியிலனத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகைத் திட்டம் (Incentive Schemes for SC, ST and OBC students), சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புக் கல்வி மண்ட லங்களை (Special Education Zones for disadvantaged groups) அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் மிகவும் பாராட்டத் தக்கவை.

‘தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் மேட்டுக்குடியினரும் வசதியானவர்களும் மட்டுமே பயனடைவர்’ என்று ஒரு தலைவர் கூறுகிறார்.

கற்றறிந்த ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து வருவது துரதிர்ஷ்ட வசமானது. மேலும் அது தவறான திசை திருப்பும் தகவல் ஆகும்.

கட்டுக் கதை 7

இக்கொள்கை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும்

இக்கொள்கையில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான குறிப்பு ஏதும் இல்லை என்பது உண்மைதான்.

அது, தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீடிக்கும் என்பதையே உணர்த்துகிறது.

இது தொடர்பாக, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்தக் காரணத்திற்காகவும் நீர்த்துப் போகாது என்று மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.

இவை மட்டுமின்றி, கல்வியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியோர் ஆகியோரின் சேர்க்கையை மேம்படுத்துவதற்கு இந்தக் கல்விக் கொள்கையில் பல சிறப்பான நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுக் கதை 8: கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

இது அடிப்படை எதுவும் இல்லாத வாதமாகும். இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன.

தன்னாட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே வணிகமயமாக்கலுக்கு வழி வகுத்துவிடாது, கல்வி நிறுவனத்தில் முறையான கணக்குகள் பாமயான கணக்குகள் பராமரிக்கப்படாததும் சரியான கட்டுப்பாடுகள் இல்லாததும் வணிகமயமாக்கலுக்கும் நிதி ஆதாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கிறது,

கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் (necessary guidelines), பொறுப்பு நடவடிக்கைகள் (accountability measures) ஆகியவை தேசிய கல்விக் கொள்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நமது கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பு பெறுவதற்கும் மிகவும் இன்றியமையா தேவைகளில் தன்னாட்சி ஒன்றாகும்.

புதிய பாடத் திட்டங்களை வடிவமைப்பது, சிறந்த படிப்புகளை அறிமுகம் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, மதிப்பீட்டு முறைகளை வகுத்துக் கொள்வது, கல்விக் கூட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றோவற்றுக்கு தன்னாட்சி வகை செய்கிறது.

கட்டுக் கதை 9:

இக்கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது

கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதியதல்ல. 70 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளும் 30 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே,

இந்தக் கல்விக் கொள்கை 2030ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் சேருவதை 100 சதவீதமாக உயர்த்துவதற்கும், உயர்கல்வியில் 2035ம் ஆண்டுக்குள் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தற்போதைய மாணவர் சேர்க்கையை விட தனியார் நிறுவனங்களின் தீவிர பங்களிப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது நடைமுறை சாத்தியமில்லாதது,

எனவே, கல்வியில் முதலீடு செய்வதற்குத் தனியார் பெரு நிறுவனங்களைத் தூண்டும் விதத்தில் தேவையான கொள்கை வழிகாட்டுதல்களும் சலுகைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

கட்டுக் கதை 10:

கல்விக் கொள்கையின் பல லட்சிய திட்டங்களை நிறைவேற்ற இயலாதது

இந்த கல்விக் கொள்கையில், அப்படி செயல்படுத்த இயலாத திட்டங்கள் எதுவுமே கூறப்படவில்லை . “இலக்கு இருந்தால் வழி நிச்சயம்” (Where there is a will there is a way) என்பது பழைய ஆங்கிலப் பழமொழி ஆகும்.

இது கடின உழைப்பு, குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை வலியுறுத்துகிறது, இந்தக் கல்விக் கொள்கை மாற்றம், தேர்வு மற்றும் நம்பிக்கை (Change, Choice and Confidence) என்ற இலக்குகளை அடைய வழி வகுக்கிறது.

அதை எப்படி நாம் செயல்படுத்துவது? கூட்டாட்சி அமைப்பில், இத்தகைய லட்சியங்களை அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கட்டு முயற்சியால்தான் எட்ட முடியும்.

குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தேவை. எல்லாவற்றையும் விட, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 6 சதவீதத்தைக் கல்விக்காகவும், 2 சதவீதத்தை ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்குவது என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும்.

விரும்பிய லட்சியங்களை அடைவதற்கும், கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு உறுதுணையாகவும் இது இருக்கும். தேசியக் கல்விக் கொள்கையில் நாம் இடம்பெறாவிட்டால்

ஏற்படும் விளைவுகள்
கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது.

எனவே, மத்திய அரசின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும்.

இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்த விரும்பாத மாநிலங்கள் தங்களது உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.

1. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த சில சாதனைகளை அடைவதற்கும்

கிடைப்பதற்கான நல்ல வாய்ப்பை மாநிலம் இழக்கக் கூடும்.

2. உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் சில சிரமங்களைச் சந்திக்கக்
கூடும். பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India) போன்ற தேசிய அளவிலான கல்வித் தரக் குழுமங்களுடன் இணங்கிச் செயல்படுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்.

3. மாநிலங்கள் தங்களது ஆய்வுத் திட்டங்களுக்கும் பல்வேறு கல்வி மேம்பாட்டுக்கும்
மத்திய ஒழுங்காற்று அமைப்புகளிடமிருந்தும் (central regulatory agencies) மத்திய அரசின்
துறைகளிடமிருந்தும், நிதியுதவி பெறுவதில் இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். ஐயா, எதிர்கால இந்தியக் கல்வி குறித்து இதுவரை வரையப்படாத, விரிவான, தீவிர மாற்றத்துக்கான, நுட்ப அறிவுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கையை, ஆற்றல் மிக்க பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தங்களது தலைமையில் செயல்படும் தமிழக அரசு, நிச்சயமாக நமது மாநிலத்தின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற மாற்றங்களுடன் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நன்றி #பாலகுருசாமி அவர்களுக்கு.
*📕📰 பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கொடுப்பது என்பது தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது..!*

*- அமைச்சர் அன்பில் மகேஷ்*
🅻🅸🆅🅴  🆄🅿🅳🅰🆃🅴🆂



*🌏♨️பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாகவும், +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது தொடர்பாக முடிவு செய்ய முதல்வருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆலோசனை.*



*Anbil_Mahesh*



*•┈┈• ❀ _ஊடகதளம்_ ❀ •┈┈•*
 
🅻🅸🆅🅴  🆄🅿🅳🅰🆃🅴🆂



*🌏♨️புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து*


*புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி*



*•┈┈• ❀ _ஊடகதளம்_ ❀ •┈┈•*
 
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?: கல்வி அமைச்சர் பதில்

*SPIDER🕷️ MAN*
*🔴🔴தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்*
==
*ஆன்லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்*
==
*தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது*
*🌎🌎மே.வங்கத்தில் பொதுத்தேர்வுகள் ரத்து*

*மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி அறிவிப்பு*


*🌎🌎இன்றைய செய்திகள்*
Forwarded from Anish J
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி Corona தொற்றுக்கு பலி