𝙎𝙩𝙪𝙙𝙮 𝙏𝙚𝙘𝙝 𝙏𝙖𝙢𝙞𝙡
284 subscribers
280 photos
54 files
708 links
🎀Study Tech Tamil 🎀
Our Channel: https://youtube.com/c/StudyTechTamil
Website Link :https://studytechtamil.blogspot.com
Download Telegram
மனித மரபியல் துறை
அறிமுகம்
வம்சாவளி குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், ஜெனடிக் ஆலோசனை சேவைகளுக்கான அத்தியாவசிய தேவை நாட்டில் பெருகி வருகிறது. வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.

சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம் (Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.

பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.

வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.

பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.

வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்

மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.

பரிசோதனை ஆய்வகம்

மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.

கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.

ஆராய்ச்சி

ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.

சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.

கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab

The Oxford college of science - Bangalore

National institute of mental health and Neuro sciences - Bangalore

Jawaharlal Nehru university - Delhi

Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow

போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,

AIIMS

Sir Gangaram Hospital - Delhi

போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.

நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.
வணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்
குறுகியகால படிப்புகள்
பொருளாதார தாராளமய போட்டி உலகில், ஒரு வணிகவியல் பட்டதாரிக்கு இருக்கும் ஒவ்வொரு கூடுதல் திறமையும் மதிப்பு வாய்ந்தது. உங்களின் தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள, குறுகியகால படிப்புகளை மேற்கொள்வது மிகவும் உகந்தது.

பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், பலவிதமான குறுகியகால மற்றும் பகுதிநேர படிப்புகளை, வழங்கி வருகின்றன. அத்தகையப் படிப்புகள், ஒரு வணிகவியல் பட்டதாரியின் கிரீடத்தில், மேலும் மேலும் அணிகலன்களை சேர்க்கும்.

இத்தகையப் படிப்புகளை, வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே சேர்ந்து படிக்கலாம். ஏனெனில், நமக்கு ஏதுவான நேரம் மற்றும் இன்னபிற வசதிகளால், வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே நம்மால் இத்தகைய படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது.

கணினி அடிப்படையிலான அக்கவுன்டிங், பைனான்ஸ், சில்லறை வர்த்தகம், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்க்கெடிங், ஏற்றுமதி - இறக்குமதி, தொழில்முனைதல் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற சான்றிதழ் படிப்புகள், இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் உள்ள கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

CV, ICWA, CS போன்ற படிப்புகளை மேற்கொள்ள நினைப்போருக்கு, மேற்கண்ட சான்றிதழ் படிப்புகள் ஏதுவானவை. இத்தகைய படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச தகுதியாக பள்ளி மேல்படிப்பை நிறைவு செய்திருந்தால் போதுமானது.

இக்கட்டுரையில், மாணவர்கள் மேற்கொள்ளத்தக்க சில குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ்
வணிகவியல் மாணவர்களுக்கு, அக்கவுன்டிங் என்பது ஒரு பிடித்தமான துறை. திறன் மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் துறையில் பல சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மேலும், ISBM கல்வி நிறுவனம், அட்வான்ஸ் பைனான்சியல் அக்கவுன்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்கில் அட்வான்ஸ் சான்றிதழ் படிப்புகள், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், பைனான்சியல் பிளானிங், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு, மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவிதமான படிப்புகளை, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, சென்னை, புனே, பெங்களூர், ஜெய்ப்பூர், நாக்பூர், சண்டிகர், அகமதாபாத், கொச்சின், லூதியானா, குவாலியர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலுள்ள தனது சென்டர்கள் மூலமாக வழங்குகிறது.

புனேவிலுள்ள பைனான்ஸ் மற்றும் காஸ்ட் அக்கவுன்டிங் கல்வி நிறுவனம், கம்ப்யூட்டர் அக்கவுன்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இது, அட்வான்ஸ்டு சாப்ட்வேர் தொடர்புடைய பாடங்களை உள்ளடக்கியது.

மும்பையின், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் லிமிடெட், JBIMS கல்வி நிறுவனத்துடன் இணைந்து, கேபிடல் மார்க்கெட் தொடர்பான 10 வாரகால நீண்ட பகுதிநேர படிப்பை வழங்குகிறது. நார்சி மோன்ஜே மேலாண்மை கல்வி நிறுவனம், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் மேலாண்மையில், ஒரு ஆண்டு தொலைநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

கொல்கத்தாவின் NIELIT கல்வி நிறுவனம், 96 மணிநேரங்கள் காலஅளவைக் கொண்ட, பைனான்சியல் அக்கவுன்டிங் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், FACT, Tally, accord போன்ற அம்சங்கள் அடக்கம். வங்கியியல் மற்றும் பைனான்ஸ் பிரிவில், சர்வதேச வணிகத்திற்கான கல்வி நிறுவனம், சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.

சென்னையிலுள்ள செக்யூரிட்டீஸ் அன்ட் மார்க்கெட்ஸ் தேசிய கல்வி நிறுவனம், செக்யூரிட்டி சட்டம் தொடர்பான 6 மாத கால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.

சர்வதேச வணிகம்
வெளிநாட்டு வணிக மேலாண்மை அல்லது ஏற்றுமதி மேலாண்மை என்பது, உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என்ற அளவில், பொருட்களின் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் சேவைகளோடு தொடர்புடையது. எனவே, இந்தப் படிப்பு ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

அகமதாபாத்தின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சர்வதேச கல்வி நிறுவனம், ஏற்றுமதி - இறக்குமதி மேலாண்மையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், இந்திய பொருளாதார கொள்கைகள் முதற்கொண்டு, சர்வதேச வணிகம் உள்ளிட்ட அம்சங்கள் வரை அடக்கம். மும்பையின், மேலாண்மை படிப்புகளுக்கான KC கல்லூரியும், ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் என்பது ஒரு திறமை சார்ந்த பணி. இத்துறையில், ஒருவர் மேற்கொள்வதற்கென்றே பலவிதமான ஸ்பெஷலைசேஷன்கள் உள்ளன. பெங்களூரின் NIRM கல்வி நிறுவனம், சில்லறை வர்த்தக மேலாண்மை(Retail Management) துறையில், ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 12ம் வகுப்பை முடித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
மார்க்கெட்டிங் துறையைப் பொறுத்தமட்டில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு வளர்ந்துவரும் துறையாக உள்ளது. தனது பல்வேறான பயிற்சி மையங்கள் மூலமாக, NIIT கல்வி நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெடிங் தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பின் மூலமாக, மாணவர்கள், மொபைல் மார்க்கெட்டிங் மற்றும் சர்க் இன்ஜின் மார்க்கெட்டிங் போன்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

தொழில் முனைதல்(Entrepreneurship)
தொழில்முனைவு படிப்புகள் என்பவை, ஒரு மாணவர் தனது புத்தாக்க வணிக எண்ணங்களை, நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய வகையிலான பயிற்சிகளை வழங்குகின்றன. எந்தப் பிரிவில் படித்த மாணவர்களாக இருந்தாலும், இப்படிப்பை மேற்கொள்ள முடியும்.

Welingkar கல்வி நிறுவனம், Entrepreneurship மேலாண்மை துறையில், 6 மாதகால டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. National Entrepreneurship Management, பல்வேறு நகரங்களில், மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதுடன், பல்வேறு கல்லூரிகளில், வணிக திட்டமிடல் புரோகிராம்களையும் நடத்துகிறது.

ஈவென்ட் மேனேஜ்மென்ட்
மாநாடுகள், மீட்டிங், திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் செமினார்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது ஈவென்ட் மேனேஜ்மென்ட்.

NIEM கல்வி நிறுவனம், 11 மாதகால பகுதிநேர டிப்ளமோ படிப்பை இத்துறையில் வழங்குகிறது. அதேபோன்று NMIMS கல்வி நிறுவனமும், இத்துறையில், பல்வேறு காலஅளவுகளைக் கொண்ட படிப்பை வழங்குகிறது. அகமதாபாத்தின் NAEMD கல்வி நிறுவனம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் துறையில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

மற்றவை
மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, பல்வேறான பணி வாய்ப்புகளை, சுற்றுலா மற்றும் போக்குவரத்து தொழில்துறை வழங்குகிறது. சென்னையிலுள்ள, லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் வொகேஷனல் எஜுகேஷன், ஓராண்டு காலஅளவு கொண்ட பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை வழங்குகிறது. காண்டலாவின் கோஹினூர் கல்லூரி, இத்துறையில், திறன் அடிப்படையிலான படிப்பை வழங்குகிறது.

ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ந்துவரும் நிலையில், ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படித்த நபர்களின் தேவை அதிகரித்துள்ளது. தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில், அத்துறையில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
பாரன்சிக் சயின்ஸ் துறை
பாரன்சிக் சயின்ஸ்
ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

சூழல்
குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், தேவைக்கு ஏற்றாற்போல் போதுமானதாக இல்லை. இத்துறை நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது ஒரு ஸ்பெஷலைஸ்டு படிப்பா?
சில நிபுணர்கள் சொல்வது என்னவெனில், ஒரு மாணவர், தனது முதுநிலைப் படிப்பில் பாரன்சிக் அறிவியலைப் படிப்பதற்கு முன்பாக, தனது இளநிலையிலும் அதனை மேற்கொள்வது சிறந்தது என்று அறிவுரைப் பகிர்கிறார்கள்.

ஏனெனில், அப்போதுதான், ஒரு வெற்றிகரமான பாரன்சிக் அறிவியல் நிபுணராக திகழ்வதற்குரிய, போதுமான அறிவு விசாலமும், அனுபவமும், புரிந்துணர்வு திறனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாடத்திட்டம்
இளநிலைப் படிப்பு அளவில், பாரன்சிக் அறிவியல் துறையில், DNA profiling, gel electrophoresis, fingerprints and document examinations, image processing, voice analysis, knowledge of toxicology, serology, ballistics, physis, chemistry, and cyber crime போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும், ஒருவர், ஸ்பெஷலைசேஷனும் செய்ய முடியும். உதாரணமாக, மருத்துவம் சார்ந்த forensic serology துறையில், ரத்தத்தின் இயல்புத் தன்மை குறித்தும், அதன் படிவங்கள் மற்றும் கறை குறித்தும் அறிந்துகொள்வதோடு, பரம்பரை பண்புகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

பாரன்சிக் முன்முயற்சி
இன்றைய நாட்களில், ஒரு குற்றத்தை தடமறிய, காவல் துறையினர், பாரன்சிக் அறிவியல் நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். இதன்மூலம், அதுபோன்ற குற்றங்கள், தொடர்ந்து நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Proactive forensic என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், சமூகத்திற்கு பெரும் நன்மை ஏற்படுகிறது.

கூட்டுமுயற்சிக்கான நடைமுறை பயிற்சி
குண்டு வெடிப்பு, டி.என்.ஏ., வகைப்படுத்தல், பேசுபவரின் குரல் அடையாளங் காணல், ஆவணம் மற்றும் கையெழுத்தை அடையாளம் காணல் போன்ற விஷயங்களை கையாள வேண்டியுள்ளது.

விஷ ஆராய்ச்சி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், ஆவண சரிபார்ப்பு ஆய்வகம், கைரேகை பதிவு ஆய்வகம் உள்ளிட்ட பலவித ஆய்வகங்களை நாம் பார்க்கிறோம் மற்றும் மருந்துகள், எலும்புகள், டி.என்.ஏ., கைரேகை போன்ற விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில், மேற்கூறிய வசதிகள் சிறப்பாக கிடைக்கின்றன. இதன்மூலம், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் சிறப்பாக பெற முடிகிறது. மேலும், நிஜ உலகிற்குள் நாம் பிரவேசிக்கும் போதுதான், உண்மையான அனுபவங்கள் கிடைக்கின்றன.

முதுநிலைப் படிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை, பாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒருவர், சிறந்த பாரன்சிக் நிபுணராக வேண்டுமெனில், அவர், முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.

முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளாத ஒருவர், இத்துறையில் நிபுணராக முடியாது. பல மாணவர்கள், இத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பணி வாய்ப்புகள்
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பாரன்சிக் அறிவியல் துறையிலும், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. National investigation agency, CBI, Intelligence Bureau, Central / State police departments, Centre forensic science laboratory and State forensic science laboratory போன்ற அரசுத் துறைகளில், சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.

மேலும், hospitals, banks, universities, defence/army units, quality control bureau, Narcotics department, Judicial services, Forest and wild life departments போன்ற இடங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவைதவிர, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பல தனியார் துறைகளிலும், பாதுகாப்பு ஏஜென்சிகளிலும், வங்கிகளிலும், பன்னாட்டு கம்பெனிகளிலும், துப்பறியும் நிறுவனங்களிலும், மீடியாக்களிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும், இத்துறை நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன.

அனலிஸ்ட், கன்சல்டன்ட், துறை நிபுணர், விஞ்ஞானி உள்பட, பல்வேறு நிலைகளில், பணி வாய்ப்புகள் உள்ளன. பணியின் தன்மை மற்றும் பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர் பெறும் மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.
தொடக்கம் எப்படி?
சொந்த கன்சல்டன்சி தொடங்கலாம் அல்லது இத்துறையின் பிற ஏஜென்சிகளிடம் சேர்ந்து செயல்படலாம். அதேசமயம், இப்படிப்பை முடித்தவர், சட்டப் படிப்பு அல்லது பாராமெடிக்கல் படிப்புகளை மேற்கொண்டால், அதன்மூலம் அவரின் பிரகாசமான பணி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும்.

பொதுவாக, இத்துறையில் சாதிக்க வேண்டுமெனில், சொந்தமாக தொழில் தொடங்குவதே சிறப்பு என்பது பலரின் கருத்து. இத்துறையில் தொழில் துவங்க, ஏதேனும் ஒரு பிரிவிலாவது நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வேறு பல துப்பறியும் ஏஜென்சிகளுடன், tie-up வைத்துக்கொண்டும் நம் சொந்த தொழிலை தொடங்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
பிற நாடுகளில், இந்தியாவில் பாரன்சிக் சயின்சஸ் படித்த பட்டதாரிகளுக்கு நல்ல மதிப்பும், வேலை வாய்ப்புகளும் உள்ளன. துப்பறிதல் துறையில், சில அம்சங்களில், மேலை நாடுகளுக்கு இணையாகவும், சில அம்சங்களில், மேலை நாடுகளைவிட மேம்பட்டும் இருக்கிறோம்.

மேலும், வெளிநாட்டில் கிடைக்கும் சம்பளம் அபரிமிதமானது. பல வளர்ந்த நாடுகளில், Medical examiner, Crime laboratory analyst, Fraud examiner, Environment analyst, Crime scene examiners, Forensic psychologist, Genetic experts and Forensic engineers போன்ற பல்வேறான நிலைகளில், பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்?

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அளித்த சிறப்பு பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது;-

“பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழக அரசை பொறுத்தவரை எந்த நேரத்திலும் தேர்வை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது.

கடந்த 1ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சி.பி.எஸ்.சி.க்கான பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் உடல்நலமும் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தையே அனைவரும் பிரதானமாக முன்வைத்தனர்.

அதே நேரம் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதன் மூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்தால் அதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தெரிவித்தனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.”

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
*➥ 🅱ⓇⒺⒶⓀⒾⓃⒼ ➥*


*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|* *~
_*Raj dk.*_
~*

*💥 JUSTIN || “இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர,*

https://t.co/G9b71rxuZw

*என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” - பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!*

*⌥⌥⌥⌥⌥*
*செய்தி®களஞ்சியம்*
*⌥⌥⌥⌥⌥*
🙏

*அடேங்கப்பா ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா...*

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு பயன் பெறுங்கள்

*Science Courses (3 Years)*

Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation

*Commerce Courses :*

CA Charted Account
CMA Cost Management Account
CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation &Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA /. BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF

*Humanities Courses:*

Advertising
BS General
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism

*Management Courses:*

Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources​ Managemet
Logistics Management

*Law Courses (3/5 Years) :*

LLB,
BA+LLB
B.Com + LLB
BBM+LLB,
BBA. +LLB

*MEDICAL COURSES :*

MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy​
BDS Dental
BVSc Veterinary.

*PARAMEDICAL COURSES :*

Nursing
Pharm D
B.Pharm
D.Pharm
M. Pharm
Anesthesia technical
Cardiac Care technical
Perfusion technology
Cathllab technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical imaging & Tech...
Medical Lab technician
Medical Records tech
Medical X Ray Technician
Nuclear Medicine Tech
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
PHYSIOTHERAPY
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech..
Bsc Renal Dialysis

*B.E/B.Tech Engineering (4year):*

Petro chemical Engineering
Petroleum Engineering
Civil Engineering
Mechanical Engineering
Aeronautical Engineering
Aerospace Engineering
Agricultural Engineering
Architecture Engineering
Automobile Engineering
Automation & Robotics Eng.
Avionics Engineering
Biomedical Engineering
Bio technological Eng..
Chemical Engineering
Ceramics Engineering
Computer Science Engi..
Electronics &Comm.Engi.
Electrical & Electronics Engi.
Environmental Science Engi.
Information Science Engi
Industrial Engineering
Industrial Production Engi..
Instrumental Technology
Marine Engineering
Medical Electronics Engi..
Mining Engineering
Manufacturing Science Engi.
Naval Architecture Engi....
Nanotechnology Engi..
Polymer Technology Engi..
Silk Polymar Engi...
Carpet Technology Engi...
Textile engineering
Robotics
Genetic

*POLYTECHNIC (10 /12 th class) :*

Civil engineering
Mechanical engineering
Automobile engineering
Computer science engi.....
Electronics and communication Engineering
Electrical engineering
Petro chemical engineering

*Management*

BBA /BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics

BCA SAP
BCA Cloud Computing

MBA Logistics
Aviation
HR
Management

Architecture (5 years +2)
B.Arch (NATAis Compulsory)
M.Arch .
*🏛️💪🏻நீட் நடத்தினால் போராட்டம் வெடிக்கும் - அன்பில் மகேஷ் உறுதி!*
*🏛️💪🏻நீட் தேர்வு: 'சமூக நீதி'யாளர் மாஜி சட்டத்துறை செயலாளர் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்*
*🏛️💪🏻பிளஸ் 2 தேர்வு ரத்து.. ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு.. வியந்து போன அதிமுக.. மிரண்டு பார்க்கும் பாஜக*
*•┈┈• ❀ _DAILYNEWS 24/7_ ❀ •┈┈•*

  🅻🅸🆅🅴  🆄🅿🅳🅰🆃🅴🆂

*நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம்!*


*#NEET | #OPS | #PMModi*


┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈
*+2 க்குப் பின்..*

*உயர்கல்வி குறித்து..*

*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*

Course name : *B.E., / B.Tech., Artificial intelligence & Data science*

(தற்போது மாணவர்கள் விரும்பி சேரும் ஒரு பாடப்பிரிவு)

Course Duration: *4 years*

Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths* group students படிக்கலாம்.

*No.of Colleges in Tamilnadu:*
5 -அண்ணா பல்கலைகழக Campus
53 (தனியார் கல்லூரிகள் மட்டுமே)

*Job opportunities after studying BE Artificial intelligence & Data science :*
Microsoft, Google,Nokia போன்ற Software Company களில் Design, Coding, R&D துறைகளில் Software/Design Engineer பணி

*Salary for BE Artificial intelligence & Data science:*
Minimum Rs.25000 in india
1 to 3 Lakhs in Abroad

மேலும் இந்தப் பாடப்பிரிவு குறித்த சந்தேகங்கள், கல்லூரி விபரங்கள், கல்லூரிக் கட்டணம் மற்றும் சேர்க்கைக்குத் தொடர்பு கொள்ளவும்:

*JK Edu-Care Academy*
*9025735937*

மேலும் தகவல்களை பெற :

https://t.me/JK_Academy
*🌏நடப்பு செய்திகள்🌏*.

*09:45 Pm. 06-06-21*


*பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணை.. முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை*

பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணையில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான செயல்திறன் தர அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சி பகுதிகளின் பள்ளிக்கல்வி செயல்திறன் 10 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது,.

அதன்படி 91 சதவிகிதம் அளவுக்கு பள்ளிக்கல்வியில் திறனை வெளிப்படுத்திய மாநிலங்களுக்கு அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2019-20 கல்வியாண்டில் 901 முதல் 950 புள்ளிகள் வரை பெற்று தமிழ் நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், சண்டிகர் மற்றும் அந்தமான்&நிகோபார் ஒன்றிய பிரதேசங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன.

இதற்காக 1++ என்ற தரவரிசை வழங்கப்பட்டுள்ளது, முதன்முறையாக 5 மாநிலங்கள் பள்ளிக்கல்வி செயல்திறனில் 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளன.

*◦•●◉✿தின📡தரணி✿◉●•◦*
*கல்வித்துறை சார்ந்த அனைவரும் தவறாது அறிந்து கொள்க*

தேசிய கல்விக் கொள்கை – தவறான கருத்துக்களும் புரிதல்களும்

பாலகுருசாமி ஸ்டாலினுக்கு கடிதம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் நாடு போற்றும் சிறந்த கல்வியாளருமான பாலகுருசாமி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, ‘ மிகுந்த மரியாதையுடன் ‘ புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏன் அமலாக்கம் செய்ய வேண்டும், எங்கெங்கு தவறான புரிதல் உள்ளது, அமலாக்கம் செய்ய வில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சிந்தனையை தூண்டும் வகையில் கடிதம் ஒன்றை கடந்த ஜூன் 3 அன்று அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

மத்திய அரசு அண்மையில் ஒப்பதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தேவையில்லாத வகையில் எதிரான கருத்துகளைக் கூறி வருவதை, தமிழக மக்களாகிய நாம் நன்கு அறிவோம்.

அத்தகைய கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடும். அல்லது அந்தக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படிக்காமலோ அதன் உள்ளடக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமலோ கூறப்பட்டிருக்கலாம்.

அவ்வாறு கருத்துகள் கூறப்படுவது தரமான கல்வி குறித்த நுட்பமான பார்வை இல்லாமல் இருக்கக் கூடும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தக் கல்விக் கொள்கை நடப்புக் கல்விச் சூழலுக்குக் கட்டாயம் தேவைப்படுவதாகும். இந்தியக் கல்வி முறையை உலகக் கல்வி முறையோடு இணைக்கும் நோக்கில் இக்கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

மனப்பாடக் கல்வி முறை போன்ற நடைமுறையை மாற்றி, மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை, தேசிய பெருமிதம் ஆகியவற்றை ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியக் கல்வியின் எதிர்காலம் குறித்து இதுவரை எழுதப்படாத அளவுக்கு ஒருங்கிணைந்த நுட்பமான அறிவுபூர்வமான ஆவணங்களில் ஒன்றாகும்.

1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொள்கை ஆவணத்தை அடுத்து 34 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த கொள்கை ஆவணம் இது.

இந்தியாவில் 21ம் நூற்றாண்டுக்கான கல்வித் தேவைகளை எட்டும் வகையில் விரிவான வழிவகைகளையும் சிறந்த வழிகாட்டுதல்களையும் இக்கொள்கை கொண்டிருக்கிறது.

இக்கல்விக் கொள்கையில் ஏராளமான நெறிகள் உள்ளன, இந்நிலையில் இதற்கு எதிராகக் கருத்துக் கூறுவது நாகரிகமானது அல்ல. கல்வியின் தரம் குறித்தும் அதன் நேர்மறையான தாக்கம் குறித்தும் கவலைப்படும் அனைவரது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் தகுதியுடையது.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக இருப்பது கல்விதான். பல மொழிகள், பல கலாசாரங்கள் கொண்ட, மாநிலங்கள் அளவில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தியாவைப் போன்ற ஒரு பரந்துபட்ட தேசத்திற்குத் தேவையான, வலுவான இலக்குகளை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த கல்வி குறித்த ஒரு தேசிய கொள்கை இன்றியமையாதது,

இந்தியா உலக அளவில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) 130-வது இடத்தில் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இது மிகவும் மோசமான நிலையாகும். எனவே, இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) சரியான தருணத்தில் கொண்டு வரப்படுவது அவசியமாகும்.

அனைவருக்கும் அணுக்கமான (Access), சமமான (Equity), தரமான (Quality), விலைமலிவான (Alfordability), பொறுப்புமிக்க (Accountability) கல்வியை வழங்க வேண்டும் என்ற அடிப்படை சவால்களை எதிர்கொள்ளும் தேசிய கல்விக் கொள்கை (NEP) இரண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

அவை:

1. தேசத்தின் பொருளாதார மேம்பாட்டில் நமது இளைஞர்கள் பங்களிப்பு செலுத்தும் வகையில் அவர்களது படைப்பாற்றல் (creative), விமர்சனச் சிந்தனைப் போக்கு (critical thinking) ஆகிய திறன்களை மேம்படுத்துவது;

அவர்களின் புதுமை தேடல் மற்றும் ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பது, 2. நமது நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்று, சமூக மேம்பாட்டை அடைவதற்காக வழிகாட்டும் வகையில் இளைஞர்களை நெறிசார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறிவார்ந்தவர்களாகவும் தாராள சிந்தனைகள் கொண்டவர்களாகவும் உருவாக்குவது.

இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அனைத்து நிலைகளிலும் தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் கொண்டிருக்கிறது.

மாநிலங்களே தங்களது தேவைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப சில பரிந்துரைகளை வடிவமைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு முழுச் சுதந்திரமும் நெகிழ்வுத் தன்மையும் உள்ளது என்பது இந்தக் கொள்கையின் சிறப்பம்சம் ஆகும்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து நிலவும் சில கட்டுக் கதைகள்

கட்டுக் கதை 1.

இக்கொள்கை தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிக்கிறது.
இது ஆதாரமற்ற கருத்து. எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று இக்கொள்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில், பள்ளிக்கூடங்களில் தாய்மொழி அல்லது மாநில மொழி வழிக் கல்வியைப் பரிந்துரைக்கிறது.

கட்டுக் கதை 2:

மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது.

இது மிகவும் தவறான கருத்தாகும். மும்மொழித் திட்டம் என்று கூறப்படுவது பள்ளிகளில் இரு இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்க வாய்ப்பு அளிப்பதாகும்.

இதில், எந்த மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் எந்த மொழியும் எந்த மாணவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது என்பதும் மும்மொழிக் கொள்கையின் பாராட்டத் தக்க அம்சங்கள் ஆகும்.

மேலும், இந்தக் கொள்கை நாட்டில் தற்போது உள்ள பன்முகத் தன்மையைப் பராமரிக்க வகை செய்யும். நம் நாட்டின் பலமொழி, பல கலசாராத் தன்மையை நமக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருத வேண்டும்.

ஒருவர் அரசியல் பார்வையோடு குறுகிவிடாமல், இன்னொரு மொழியைக் கற்று, எழுச்சி பெறுவதற்கான அரிய வாய்ப்பாகக் கருத வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மொழியைத்தான் கற்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தாவிட்டாலும், பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியைக் கற்பது நம் இளைய தலைமுறைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

உண்மையில், நமது மாநிலத்திலேயே கூட தனியார் பள்ளிகளிலும், மத்திய செகண்டரி கல்வித் திட்டத்தில் (CBSE) நடத்தப்படும் பள்ளிகளிலும் படிக்கும் ஏராளமான மாணவர்கள் மும்மொழித் திட்டத்தில்தான் கல்வி பயில்கிறார்கள்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த சிறந்த வாய்ப்புகளை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

கூடுதலாக ஒரு மொழியைக் கற்பதால் நம் மாணவர்கள் எதை இழக்கிறார்கள்? “ஒரு மொழியைக் கற்றுக் கொள். அதனால் நீ போர் மூளாமல் தவிர்ப்பாய்” (Learn a language and you can avoid a war) என ஓர் அரபு நாட்டுப் பழமொழி இருக்கிறது,

இது எவ்வளவு சரியான கருத்து! பல மொழிகளைக் கற்பதற்கு நமது மாணவர்களுக்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

கட்டுக் கதை 3:

மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்
தேர்வுகள் (Board Exams) நடத்தி மாணவர்கள் வடிகட்டப்படுவர்.

இது உண்மையே அல்ல. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்தத் தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்காக அல்ல என்று தேசிய கல்விக் கொள்கை தெளிவாகப் பரிந்துரைக்கிறது.

தேர்வு முறை குறித்து மாநிலங்களே தங்களது சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளவும் வகை செய்கிறது.

தற்போது உள்ளதைப் போல் 10-வது மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் (Board Exams) நடத்தப்படும்.

இவை மட்டுமின்றி, மாணவர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக பாடத்திட்ட வடிவமைப்பில் தனித்துவமான சீர்திருத்தங்கள், கற்றல் – கற்பித்தல் முறை பள்ளிக் கல்வி முறையில், மதிப்பீட்டு முறைகள் ஆகியவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன,

கட்டுக் கதை 4:

இக்கல்விக் கொள்கை “குலக் கல்வி” முறையை பள்ளியில் கொண்டுவரும்.

தொழிற்கல்வி முறைக்கும் (Vocational education) எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் விமர்சித்த குலக் கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கற்றறிந்த, இளம் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது,

“நவீன இந்தியாவின் கல்விக் கொள்கை” என நாட்டின் சிறந்த கல்வியாளர்களும் போற்றும் இக்கல்விக் கொள்கையை “குலக் கல்வி” என்பதுடன் பொருத்திப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது!

தொழிற்கல்வி (Vocational education) மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், அவர்களிடம் சமூகத் திறன், சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

நம் நாட்டில் இளைஞர்களின் ஆற்றலும் படைப்புத் திறனும் முழுமையாகப் பயன்படுவதற்காக தொழிற்கல்வி தேவைப்படும் தருணம் இது.

இந்தியாவில் தொழிற்கல்வி பெறும் இளைஞர்கள் 10 சதவீதம் மட்டுமே. ஆனால், கொரியாவில் 96 சதவீதம் பேரும், ஜப்பானில் 80 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 75 சதவீதம் பேரும், பிரிட்டனில் 68 சதவீதம் பேரும் தொழிற்கல்வி பெறுகிறார்கள்.

கட்டுக் கதை 5

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது.

இது முழுக்க முழுக்க தவறான வாதம் ஆகும். கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக கல்வியில் தேவையான மாற்றங்களையும் கொள்கைகளையும் கொண்டுவருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 676 மாவட்டங்களில், 6600 வட்டாரங்களில், இரண்டரை லட்சம் கிராம ஊராட்சிகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கூட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நடத்தி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகே இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இறுதி வடிவம் பெற்ற கொள்கைத் திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கூறியுள்ள யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இவ்வளவு நடைமுறைகள் மேற்கொண்டுள்ள போது கூட்டாட்சித் தத்துவம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது ஏன்?

இவை மட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கை (NEP) பரந்துபட்ட அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட ஒரு கொள்கை ஆவணம் ஆகும்.

அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாநிலங்கள் தங்களது பிரேதசங்களின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிச் செயல்படுத்தலாம்.

கட்டுக் கதை 6:

இந்தக் கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை

இது முற்றிலும் தவறான நம்பிக்கை ஆகும். இக்கல்விக் கொள்கை அனைத்துத் தனிப்பட்டோரும் தங்களது கல்வி இலக்கைத் தொடர்வதற்கு சமமான வாய்ப்புகள் பெற வகை செய்கிறது.

பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் அனைவரும் எளிதாக அணுகி (accessibility), சமமாக (equity) சேருவதற்கு (inclusion) பல்வேறு முன்முயற்சிகளை இக்கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

பாலின சேர்க்கை நிதி (Gender Inclusion Funds), தேசிய உதவித் தொகைக்கான இணையவாசல் (Portal for National Scholarship), பட்டியிலனத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகைத் திட்டம் (Incentive Schemes for SC, ST and OBC students), சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புக் கல்வி மண்ட லங்களை (Special Education Zones for disadvantaged groups) அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் மிகவும் பாராட்டத் தக்கவை.

‘தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் மேட்டுக்குடியினரும் வசதியானவர்களும் மட்டுமே பயனடைவர்’ என்று ஒரு தலைவர் கூறுகிறார்.

கற்றறிந்த ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து வருவது துரதிர்ஷ்ட வசமானது. மேலும் அது தவறான திசை திருப்பும் தகவல் ஆகும்.

கட்டுக் கதை 7

இக்கொள்கை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும்

இக்கொள்கையில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான குறிப்பு ஏதும் இல்லை என்பது உண்மைதான்.

அது, தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீடிக்கும் என்பதையே உணர்த்துகிறது.

இது தொடர்பாக, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்தக் காரணத்திற்காகவும் நீர்த்துப் போகாது என்று மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.

இவை மட்டுமின்றி, கல்வியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியோர் ஆகியோரின் சேர்க்கையை மேம்படுத்துவதற்கு இந்தக் கல்விக் கொள்கையில் பல சிறப்பான நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுக் கதை 8: கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

இது அடிப்படை எதுவும் இல்லாத வாதமாகும். இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன.

தன்னாட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே வணிகமயமாக்கலுக்கு வழி வகுத்துவிடாது, கல்வி நிறுவனத்தில் முறையான கணக்குகள் பாமயான கணக்குகள் பராமரிக்கப்படாததும் சரியான கட்டுப்பாடுகள் இல்லாததும் வணிகமயமாக்கலுக்கும் நிதி ஆதாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கிறது,

கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் (necessary guidelines), பொறுப்பு நடவடிக்கைகள் (accountability measures) ஆகியவை தேசிய கல்விக் கொள்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நமது கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பு பெறுவதற்கும் மிகவும் இன்றியமையா தேவைகளில் தன்னாட்சி ஒன்றாகும்.

புதிய பாடத் திட்டங்களை வடிவமைப்பது, சிறந்த படிப்புகளை அறிமுகம் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, மதிப்பீட்டு முறைகளை வகுத்துக் கொள்வது, கல்விக் கூட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றோவற்றுக்கு தன்னாட்சி வகை செய்கிறது.

கட்டுக் கதை 9:

இக்கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது

கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதியதல்ல. 70 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளும் 30 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே,

இந்தக் கல்விக் கொள்கை 2030ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் சேருவதை 100 சதவீதமாக உயர்த்துவதற்கும், உயர்கல்வியில் 2035ம் ஆண்டுக்குள் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.