📚 நூல் அரங்கம்
12.8K subscribers
3K photos
5 videos
1 file
809 links
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கொற்றவை - ஜெயமோகன்.pdf


உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டுசெல்லும் ஓயாப் பெருநடனமே காப்பியம் என்க. மண்ணில் அதற்கு உணவாகாதது எதுவும் இல்லை. தீண்டும் அனைத்திலும் தாவி ஏறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடி கோடி இதழ் விரித்து எங்கும் நிறையும் முடிவற்ற நாக்கு அது. துடிதுடித்தும் தவிதவித்தும் உரையாடிக் கொண்டிருக்கிறது ஊழியூழிக் காலங்களாய். அது கூறுவது அழியாத ஒற்றைச் சொல்லையே என்றறிந்தனர் மண்ணை மீறி விண்ணில் உளம் எழுந்த அறவோர். திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர். தீ தொட்டபின் எதுவும் அழுக்கு இல்லை. எதுவும் இழுக்கும் அல்ல. ஊன் வாய் திறந்து மண்ணில் விழும் உடல் உண்டு உயிர்த்து கண்டு கற்று அடையும் அழுக்குகளையெல்லாம் தீயுண்ணக் கொடுத்த பின்னரே அதனுள் சிறையுண்ட சீவம் தன்னிலை இழந்து சிவமாகும் என்றனர். தீயுண்ணும் அனைத்தும் தீய்மை எனப்பட்டது. தீயுண்ணலே தூய்மை என்றாயிற்று. தீ எனும் ஒலியே தீங்குக்கும் தீஞ்சுவைக்கும் சொல்லாயிற்று. தீ உறையாத பரு ஏதும் இல்லையென்றனர் அறிவர். பச்சைப்பசுங் குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச் சுனை நீரிலும் தாய்முலைப் பாலிலும் தீ உறைகிறது என்றனர். ஒவ்வொன்றிலும் உறையும் தீயை அப்பொருளின் ஆணவம் அணை கட்டி அணைத்து நிறுத்துகிறது. அணை மீறுகையில் அது எரியும் எரியாகிறது என்றறிந்தனர். சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர். காப்பியங்களுக்கு அவியாகி அவிதற்பொருட்டே மண்ணில் மாந்தர் பிறந்திறப்பதாகச் சொன்னது மண் மறைந்த பேரிலக்கண நூல் ஒன்று.

கனன்றெரிந்து கரியாகி உப்பாகி மண்ணில் மறைவர் மாந்தக் கோடிகள். மாசற்று ஒளி பெற்று மீள்பவர் சிலரே. அவர்களை எரிமலரிதழ் நடுவே இலங்கும் இறைவடிவென்பர் கற்றோர். ஆம், அவ்வாறே ஆகுக!

https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_398.html?m=1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தெய்வங்கள்_பேய்கள்_தேவர்கள்_ஜெயமோகன்.pdf

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.

நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_27.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அருகர்களின்_பாதை_ஜெயமோகன்.pdf

ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர். அப்பயணத்தில் ஜெயமோகன் தினமும் பயணக்குறிப்புகளை தன் இணையத்தளத்தில் எழுதினார். பல்லாயிரம் வாசகர்களால் அவை வாசிக்கப்பட்டன. இந்நூல் அக்குறிப்புகளின் தொகுப்பு.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_36.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து
ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப்
போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு
பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில்
10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை)
கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன்
விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு
இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக
ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக
இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும்
சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை
விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய
சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_47.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ரப்பர் | ஜெயமோகன்

‘ரப்பர்’ நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறுவகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல்.

‘ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை’ என்னும் பைபிள் வரியில் அவன் தன்னை உணர்கிறான்... அவ்வரியை அரற்றும் பிரான்ஸிஸின் மனம் ‘...ஆகாயத்துப் பறவைகள். ஆகாயத்தில் ஒரு பறவை!’ என்று ஓர் உச்சத்தை வந்தடைந்து திடுக்கிட்டு நிற்கிறது. அதுதான் நாவலின் உச்சம்.

https://tamilbookspdff.blogspot.com/2020/01/blog-post_846.html?m=1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்.pdf

வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில்
குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க
நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும்
சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும்
அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு
ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக
இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு
வந்து சேர்கிறது. என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை
எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது.
அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான்
மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும்
எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. "இந்நூலைத் தொடுபவன் என்னைத்
தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_88.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இந்திய ஞானம் - ஜெயமோகன்


இந்திய சிந்தனை மμபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த
விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ்
பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை
இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல்
ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய
சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு
விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_20.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கன்னிநிலம் - ஜெயமோகன்

நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல்.

நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான்.

இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான்.

இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல.

எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது.

காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.

- ஜெயமோகன்

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_22.html
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM