💐 கவிதை தடாகம் 💐
1.5K subscribers
1.07K photos
3 videos
1 file
88 links
பலதரப்பட்ட சமூக
வலைத்தளக்கவிதைகள்
சங்கமிக்குமிடம்
💐 கவிதை தடாகம் 💐
( கவிதைகளின் சங்கமம் )

[ Twitter | FaceBook | Whatsapp | Instagram | Telegram | Other All Social Media Poems Here ]
Download Telegram
பிடிச்சவங்க தூரமானதாக எண்ணம் தோன்றும் போது, அவங்க கூட சண்டையிட்டு அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்புவது அன்பின் தந்திரங்களில் ஒன்று 💖
கயல் விழியாளே
துயில் கொள்ளும் வேளையில்
அடிக்கடி வந்து போகிறாயே தினமும்
கனவில் ஓர் வானவில்லாய் நீ..!!

#கவிமழை
இரவெனும்
தனிமை காற்றில்
நினைவெனும் மெளன மொழியை
திருடிச் செல்லும் அழகிய ராட்சஷி நீ..!!

#கவிமழை
மனித வாழ்க்கையும் கோலம் போலத்தான் எவ்வளவு அழகா இருந்தாலும் அழியத்தான் போகுது..!!

அழிந்த பின் அள்ளினால் ஒரு " பிடி " தான்........!!

#இனிய காலை...🙏
ரசனை இல்லாதோரை
ரசிக்க அழைப்பதில்லை!

கற்பனை சந்தேகங்களை
கருத்தினில் நுழைப்பதில்லை!

விலகிச் செல்வோரை
விருந்துக்கும்;

யாரோ நால்வரை
மருந்துக்கும்;

கண்டுகொள்வதில்லை!

அகம்பாவம் கொள்வதில்லை!
அறிவுரைகள் சொல்வதில்லை!

தீயோ/மலரோ விரல் தொடும்
தொலைவிலே விலகியே
இருக்கட்டும்

#இறக
எல்லாம் நன்மைக்கே
என கடந்து செல்வோம்
வெறுப்பவரும்
ஒருநாள் ரசிக்கக் கூடும்.,

தனிமையை பழகவும்
வெறுக்கவும் கற்றுக்கொள்

எல்லா தனிமையும் பொய்யல்ல
எந்த தனிமையும் தொடர்கதை அல்ல.

#பவி
#என் காதல் வங்கியில் கனவுகளாக
சேமிக்கப்பட்டவைகள்
#உன் புன்னகையும்
#வெட்கங்களும்..

#காதலிசம் 💞💞💞

#இனியமதியம்
காதலை
நீ சொல்வாயா.....

இல்லை
நான் சொல்வேனா......

என்ற இருவருக்கும் இடையான
முரண் பாட்டில்முந்திக் கொண்டு
கை கோர்த்துக் கொண்டது

நாம் எழுதும் கவிதைகள்...
காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்

மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்

யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள

உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,

ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?

#பவி
இல்லாத பொய் கோபத்தினை எல்லாம் தூக்கி கொண்டு சமாதானம் செய்து விட மாட்டாளா என அவள் வாசலில் முறுக்கி கொண்டு நிற்பதெல்லாம் காதலுக்கான ஆயுள் வரம்.....
உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது
ஒன்றே ஒன்று தான்
வாழ்வில் எதுவும்
நிரந்தரமில்லையென்று..

#GoodNight Friends
பட்டாம்பூச்சியின் இறகாய்
பாரமின்றி இலகுவாய் இருக்கையில் மட்டுமே
சிறகடிக்க இயலும்
வெற்றி வானில்
குதூகலமாய்...
பறக்கட்டும் ப்ரியமனங்கள்
உயர உயர...

#இனியநாள்
தற்செயலாய் கடந்த காட்சி ஒன்றை,

தானாகத் தேடும் விழிகள் போல...

தற்செயலாய் கடக்காமல்,

தானாக தேடுதடி என் விழிகள்,

உன் விழியை....
காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்

மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்

யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள

உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,

ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?

#பவி
புத்தகங்களல்ல
எனக்குப்
பொக்கிஷங்கள்
நீ...
பொட்டிடும்
நெற்றியில்
ச்சே எனச்
செல்லமாயடிக்கையில்
பொங்கிடும்
நாணத்தை விட
ஏனெனில்
நான் காதலைக்
கற்றதும் பெற்றதும்
உன்னிடத்தில் தானே..... ¡✍️
ஒரு ஆணுக்கு குழந்தையாக இருக்கும் போது தாய் அழகாக தெரிகிறாள்..
ஓடி விளையாடும் போது சகோதரியும்
காதலிக்கும் போது காதலியும்
திருமணத்திற்கு பிறகு மனைவியும் அழகாக தெரிகிறார்கள்..
முதுமையின் போது பெண்மை மட்டும் தான் அழகு என உணர்ந்து விடுகிறான் ஆண்..
"உறவுகள்" கூட நிலவை போன்றுதான்,

"தூரத்தில்" இருக்கும் வரை மட்டுமே ரசித்து கொண்டாடப்படும்.

#யதார்த்தம்
உன்னைக்
காணாது
கண்ணீராய்
கரையும்
என் கண்களைக்
காண கூட
வர வேண்டாம்...

உன்னிடம்
பேசாது
பேசுவதைப் போல்
பாவித்து
பரிதவிக்கும்
என் கிறுக்கு தனத்தை
நிறுத்தவாவது
வந்து விட்டு செல்..... ¡✍️

#என் இதயமே
நிறைய சந்தோசம்
நிறைய ஆசைகள்
நிறைய கனவுகள்
நிறைய எண்ணங்கள் என
நிழலுக்கு விடைகொடுத்து
நிஜமென ஆரம்பித்தது
புத்தாண்டு இரவு
டிக் டிக்
மணி பனிரெண்டு
தக் தக் என
மனசு குதித்தது
ஹே ஹாப்பி
நியூ இயர்
நாலா பக்கமும்
ஒலித்து கொண்டிருக்குது
இப்போது
உங்களுக்கும்
ஹாப்பி நியூயர்
தவித்துப் போவதற்கும்,
தவிர்த்துப் போவதற்கும்
இடைப்பட்ட தூரம்தான்..

காதலின் நீளம்...!