கீதாபஜன் - Geethabajan
63 subscribers
223 photos
7 videos
17 files
808 links
நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...

கீதாபஜன், வெள்ளலூர், கோவை
Download Telegram
ஆசையை விட விட ஆனந்த மாகுமே...!

நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது.

அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.

இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது.

இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.
இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.

சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது.

இது அளவு மீறி தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர்.

பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.
தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது.

அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும்.

யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது.

ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.

இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.

'பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி'

பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது என்கிறார் குதம்பைச் சித்தர்.

தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர் .

'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.'

Yogic Science Astro healing therapy – health and spiritual doubts contact through What’s app - https://wa.me/919894012434

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்....

எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி வாழ்வோம்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
ஆத்ம சக்தி ஓங்க..!

இந்தப் பிறவி வாய்த்தது கர்மாவினால். கர்மப் பதிவுகள்தான் உள்ளமாக எனக்குள் அமைந்து சூட்சுமமாக என்னை இயக்குகின்றன. கர்மா இருக்கும்வரை அல்லது கர்மப் பதிவுகளைப்பற்றி நாம் ஞானத்தால் அறிந்துகொள்ளும்வரை உள்ளம் கர்மாவிற்கு ஏற்றபடிதான் இந்த உடலை இயக்கும். அதுவரை நமது செயல்களும், வாழ்க்கையும் கர்மப் பலன்களின்படிதான் இருக்கும்.

ஞானம் பெற்ற பிறகு, அறியாமை நீங்கிக் குருவின் உதவியால் அறிவு ஒளி பெறும்போது, நமது உள்ளம் செயல்படும் விதம் நமக்குப் புரியத் துவங்கும். எனக்குத் தரப்பட்டிருக்கும் உள்ளத்தை நான் சரியாகவும் பாவிக்கலாம்; பிழையாகப் பாவிக்கவும் முடியும்.

உள்ளத்தில் நிறைந்திருப்பவை ஆசைகளும், அதன் காரணமாக எழுகின்ற கணக்கற்ற எண்ணங்களும் என முன்னரே நாம் அறிந்திருக்கிறோம். இந்த ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர, நம் மனதில் குவிந்திருப்பவை நினைவுகள். இந்த நினைவுகள் என்பவை கடந்த காலத்தைச் சேர்ந்தவைகளாக, நிகழ்காலத்திற்குரியவையாக, எதிர்காலத் திட்டங்களாக நம் மனதில் குடிகொண்டு சதா நம்மை அலைக்கழிக்கின்றன. நினைவுகள் யாராலுமே மறக்கமுடியாத விஷயங்களாக அப்படியே மனதில் தங்கிவிடுகின்றன. அவற்றை நினைத்து நினைத்து மகிழ்வதிலோ அல்லது துக்கப்படுவதிலோ மூழ்கி, எதிர்கால நமது செயல்களை நாம் தவறவிடுகின்றோம். இந்த நினைவுகள் கவனச் சிதறல்களை, மனச் சிதறல்களை ஏற்படுத்துகின்றன. சில நினைவுகள் அறவே மனதைவிட்டு நீங்கினால்தான் நம் மனம் ஒன்றுபடும். தெளிந்த, தூய்மையான காலிப் பாத்திரமாக மனம் மாறும். அப்படிப்பட்ட மனதில்தான் ஆத்ம சக்தி வந்து நிறையும்.

நினைவுகள்தான் எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. எண்ணமென்பது சக்தி. நினைவில்லாவிட்டால் எண்ணமில்லை. நினைவில் இருந்துதான் நான் என்பது உதிக்கிறது. நினைவில்லையேல் நான் இல்லை. நினைவில்லாத இடத்தில் ஆத்மா செயல்படும். ஆத்மா என்னில் வெளிப்பட வேண்டுமெனில், மனதில் அதற்கு இடமிருக்க வேண்டும். மனதின் அடி ஆழத்தில் இருப்பது ஆத்மா. நான் என்னை ஆன்மாவாக எல்லா இடத்திலும் உணர ஆரம்பித்தால், ஆத்மா எல்லாவற்றையும் எனக்காக நடத்தித் தரும். ‘மன அடி ஆழத்திற்குப் போனால் பிரபஞ்சம் தெரிகிறது’! என கார்ல் யங் என்ற உளவியல் அறிஞன் கூறினான். இதன் பொருள், எல்லாமாக இருப்பது ஆத்மாவே; அது எனக்குள்ளும் இருக்கிறது என்பதுதான்.

மனதை நினைவுகளிலிருந்தும், அவற்றால் ஏற்படும் எண்ணங்களிலிருந்தும், பயனற்ற ஆசைகளிலிருந்தும் விடுவித்து எண்ணமில்லாத அமைதி நிலையில் நாம் போகின்றபோது மூளையிலுள்ள செல்கள் அமைதி அடைகின்றன. உடல் முழுவதும் கிளர்ச்சிகள் நீங்கி அமைதி அடைகின்றது. ஒரு சுகமான நிலை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் ஏற்படுகின்றது. உள்ளம் பெற்ற அமைதியால் உடல் நலம் பெறுகின்றது. மனக் கிளர்ச்சியால், மனச் சிதறலால் ஏற்பட்ட நோய்கள் குணமடைந்து இல்லாமல் மறைகின்றன. அறிவு தெளிவாகச் செயல்படுகின்றது. நமது செயல்களில் உயர்வுத் தன்மை ஏற்படுகின்றது.

இந்த அமைதி நிலையை அடையத் தியானம் உதவுகின்றது. காலமும், எண்ணங்களும் அசைவைத் தருகின்றன. எண்ணமில்லையேல் காலம் இல்லை; அசைவும் இல்லை. தியானத்தில் அசைவில்லை; காலம் இல்லை. அசைவற்ற நிலை வாய்க்கும்போது, சக்தி செலவழிவதில்லை. மாறாக, சக்தி சேமிக்கப்படுகிறது. எண்ணங்களாலும், செயல்களாலும் இடைவிடாமல் சக்தி வீணாகின்ற நிலை மாறி, உடலும் மனமும் அசைவின்றித் தியானத்தில் ஆழ்கின்றபோது, சக்தி சேமிப்பு நிகழ்கின்றது. மேலும், ஆத்ம சக்தி பெருகுகின்றது.

ஐம்புலன்களும் அதனதன் இடத்தில் அமைதிபெற்று அடங்கியிருக்க, மனம் சலனமற்று, புத்தி ஆத்மாவில் ஒடுங்குகின்றபொழுது, அங்கு ஆத்மா வெளிப்பட்டு நிறைகின்றது. ஆத்மாவாகத் தன்னை மாற்றுபவன் பிரபஞ்சப் பிரஜை ஆகின்றான். அவனால் உலகம் அமைதி அடைகின்றது. மௌனமும் நிசப்தமும் எனக்குள் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துகின்றன. இந்த அமைதி உடலை நோயற்றதாக்குகின்றது. காலமும், அசைவும் உணராத உடலில் நோய் வராது.

இந்த மனம் என்பது, சிதறாமல் இருப்பதற்குப் பொறுமை என்னும் குணம் மிகமிகத் தேவை. பொறுமை என்பது மனம் சிதறாமல் ஒருமித்து இருப்பது. மனம் சிதறுகின்றபோதுதான் நான் உயர் உணர்வு உள்ளவனா, கீழ் மன உணர்வு உள்ளவனா என்பதை அறிய முடியும். மனம் ஒருமித்து, எந்தச் செயலையும் செய்ய முற்படாமல், அமைதியாக இருந்தால் அந்தப் பொறுமையானது செயலைத் தானாக நடக்க வைக்கும்.

பொறுமையின்மை மன அமைதியைக் குலைத்து, மனச் சமநிலையையும் கெடுக்கும். நான் தொடர்பு கொள்கின்ற விதத்தில் வெளிச் சூழ்நிலை என்னைப் பாதிக்கும்; அல்லது அமைதி அடைய வைக்கும். பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் நம்மால் உலகச் சூழ்நிலையையே அமைதிப்படுத்த முடியும்.
பொதுவாகப் பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம் தேவை என்பதும், பெண்களே பொறுமையில் பூமாதேவி போன்றவர்கள் எனச் சொல்வதும் உலக வழக்கு. ஆனால், ஆன்மிக சாதனையில் ஆண், பெண் இருபாலாருக்குமே பொறுமை என்னும் குணம் மிக அவசியம். பொறுமைதான் பதட்டமில்லாமல் செயல்பட வைத்து, நிதானமான செயல்பாட்டைக் கொடுக்கும். மனச் சமநிலை பாதிப்பு அடையாது. பொறுமைக்காகப் பல பழமொழிகள் வழக்கத்தில் இருக்கின்றன. பொறுமையின்மை மனச் சிதறலுக்கு முதல் காரணமாகும்.

எனவே, நினைவில்லையேல், மனதில் அழுக்கில்லை; அழுக்கு நீங்கித் தூய்மையடைந்த மனதில் அன்பும் ஆனந்தமும் பெருகும். பொறுமையாகச் செயல்படுவதால் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு, அங்கு ஆத்மா நிறைந்து செயல்படும். அதனால் கர்மாவிலிருந்து விடுபட்டு ஆன்ம முன்னேற்றம் நிகழ்கின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும்.

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
மழை நீர் நல்லது..!

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.

நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.

நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.

மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம். வாழ்வோம் ஆரோக்கியமாக.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
"சூட்சம நாடி திறக்க உதவும் வக்ராசனம்"

"வக்ராசனம்"

மனம்:-

இடுப்பு, முதுகெலும்பு..

மூச்சின் கவனம்:-

இயல்பான மூச்சு..

உடல் ரீதியான பலன்கள்:-

உடலின் பக்கவாட்டை சுழற்றுவது சாத்தியமாகிறது
முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.

முதுகுத்தண்டு நரம்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது.

கல்லீரல் ,மண்ணீரல், கணையம், குடல்கள்,மூத்திரப்பை ஆகியவை நன்கு அழுத்தப் படுகின்றன.

பாலணுச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.

கணைய நீர் , அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன.

தொடைப் பகுதி வலிமை அடையும்.

குணமாகும் நோய்கள்:-

மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும்.
சிறுநீரகக் கோளாறுகள் நிவாரணம் பெரும்.
இடுப்பு,மூட்டுகளில் ஏற்படும் வலி, முதுகின் பின்புறம் ஏற்படும் வலி குணமாகும்.
உடல் பருமன். வயிற்றுப் பொருமல் போன்றவைக்கு நல்லது.
இடுப்பை சுற்றியுள்ள சதையை குறைக்கிறது.

உடல் மற்றும் மனம் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா ஹீலிங் தெரபி மூலம் நிரந்தரத்தீர்வு பெற..
https://wa.me/919894012434

ஆன்மீக பலன்கள்:-

சூட்சம நாடி திறக்கப் பட்டு குண்டலினி சக்தி மேல் எழுவதற்கு உதவும்.

எச்சரிக்கை :-

குடல் வாயு (ஹெர்னியா நோய் )உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
எண்ணிறந் தெல்லை யிலாதானே!

எண்ணிறந் தெல்லை யிலாதானே! என்று திருவாசகத்தில் இறைவனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.

இறைவனைப் பற்றி நினைப்பது எது?. நமது மனம். இது எப்படிப்பட்டது?. மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்.

"மனமென்னும் மாடடங்கில்" எனத் தொடங்குகிறது இடைக்காட்டுச் சித்தரின் ஒரு பாடல்.

ஆடு காட்டி வேங்கையை...
அகப் படுத்துமாறு போல
மாடுகாட்டி என்னை நீ
மதிமயக்கல் ஆகுமோ?

என்று சிவபெருமானைப் பார்த்து கேட்கிறார் சிவவாக்கியர்.

மாட்டின் இயல்பென்ன?. தனக்குத் தெரிந்த எல்லையை மட்டுமே சுற்றி வர விரும்புவது. அதைவிடுத்து புதிய இடத்திற்கு போக விரும்பாதது.

விவசாயிகள் மாட்டு வண்டிகளில் விளை பொருட்களை ஏற்றிவிட்டு வண்டியை பூட்டி வண்டியிலே படுத்து தூங்கி விடுவார்கள். மாடு வழக்கமான பாதையில் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை தானாக அடையும்.

தனக்கு தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல மனமும் தனக்குத் தெரிந்த எல்லையையே சுற்றி வருகிறது. நமக்கு தெரிந்த எல்லை நாம் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவு உணந்துள்ளோமோ அவ்வளவே.

மனிதன் இந்த அண்டத்தை ஐந்து வகையில் உணர்கிறான். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், ஸ்பரிசம் போன்ற ஐந்து வகையில் இந்த அண்டத்தை உணர்வதால் தான் இந்த அண்டத்திற்கு பிரபஞ்சம் என்று பெயர் வைத்தான்.

நமக்கே மற்றொரு புலன் இருந்திருந்தால் இந்த அண்டத்தை பற்றிய அறிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். பிற விலங்குகள், புழு, பூச்சிகள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறது என்பது நமக்கு தெரியாது. மரம், செடி, கொடி போன்றவற்றிற்கு இந்த உலகத்தை பற்றிய புரிதல் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது.

நாம் வசிக்கும் பூமி, சூரியன், மற்ற கோள்களை அடக்கியது ஒரு சூரியக் குடும்பம். இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பத்தைக் கொண்டது ஒரு galaxy எனும் அண்டம்.

இப்படி கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது ஒரு பேரண்டம். பிறகு? பிறகு? அது நமது எண்ணங்களுக்கு எட்டாதது, நாம் கற்பனை செய்தே பார்க்க இயலாதது.

தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல நாம் உணர்ந்த எல்லையிலேயே எண்ணக்கூடிய மனதால் பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதும் சிந்திக்கவே இயலாத போது பிரபஞ்சத்தை படைத்த இறைவனை நாம் அறிந்து கொண்டோம் என்று சொல்வது கடலிலே உள்ள ஒரு துளி நீரைப் பருகிவிட்டு கடல் முழுவதும் குடித்ததாக சொல்வதற்குச் சமம் அல்லவா?

இதனால் தான் "எண்ணிறந் தெல்லை யிலாதானே!" எண்ணங்களால் சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டவனே என்று ஈசனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர் சுவாமிகள்.

நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்..!

ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்.!
ஆன்மீகமே அறிவியல் தான்..!

பூமி கோள வடிவானது என்று ஆதியில் உரைத்த இந்துதர்மம்..!


பூமி தட்டையானதா?

பூமி தட்டையானது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவந்தனர். இன்னமும் கூட, சிலர் பூமி தட்டையானது என்றும்; செவ்வக வடிவானது என்றும்; பூமிக்கு நான்கு மூலைகள் உள்ளன என்றும் நம்புகின்றனர்.

பூமி தட்டையானது தான் என்று மக்களை நம்பவைப்பதற்காகவே ‘ஃபிளாட் ஏர்த் சொஸைட்டி’ என்ற ஓர் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது இன்னும் வேடிக்கையான விஷயமாகும்.

எந்த அடிப்படையில் இவர்கள் பூமி தட்டையானது என்று நம்புகிறார்கள் எனக் கேட்டால், ‘எங்களின் மதநூலில் பூமி தட்டையானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள்.

அது எந்த மதநூல் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கக்
கூடும்.

ஒருமுறை ஐன்ஸ்டியன் “அறியாமை தான் பேரானந்தம் (ignorance is bliss) என்றுரைக்கும் மதங்களினால் தான் அறிவியலில் நாம் 2000 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்.” என மனவேதனையுடன் கூறினார்.

பூமி தட்டையானது என்று சொல்லிய அதே மதம் தான் அறியாமை தான் பேரானந்தம் என்றும் சொல்லியது.

வரஹமிஹரும் பிரம்மகுப்தரும்..!

ஆனால்.. வரஹமிஹிர் மற்றும் பிரம்மகுப்தா ஆகிய இரு முனிவர்களும் பூமி கோள வடிவானது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்களின் ஏடுகளில் குறித்துள்ளனர்.

கோளம் எனும் சொல் 'கோள்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. கோளம் என்பது முப்பரிமாண அளவு கொண்ட, ஓர் உருண்டையான வடிவம்.

பூமி கோள வடிவானது என்பதால் பூகோளம் என்றழைக்கப்படுகிறது. இதனாலே ஆங்கிலத்தில் 'குலோப்' என்றழைக்கின்றனர். (பூகோள் > கோள்பூ > கு'ஓல்ப் >குலோப்)

ஆர்யபத்தர் (ஆர்யபட்டர்)..!

ஆர்யபத்தர் என்ற முனிவர், ஒரு தலைச்சிறந்த கணித மேதையும் விண்ணியல் நிபுணரும் ஆவார்.

அவர் வாழ்ந்த காலக்கட்டம் 476-550 ஆகும்.

அவர் தன்னுடைய ஆர்யபத்தியா எனும் நூலில், பூமி கோள வடிவானது என்றும் பூமியின் சுற்றளவு 4967 யோஜனங்கள் (39,968 கி.மீ.) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நவீன விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. என கணித்துள்ளனர்.

தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வாழ்ந்த ஆர்யபத்தர் குறிப்பிட்ட பூமியின் சுற்றளவு ஏறக்குறைய நவீன காலத்தில் கணிக்கப்பட்டுள்ள சுற்றளவோடு நெருங்கியுள்ளது.

தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் அவ்வளவு துல்லியமாக அவர் பூமியை அளந்து கூறியது எப்படி?

அவர் துணைக்கோளத்தில் பயணித்து பூமியை அளந்தாரா?

அல்லது நிலாவிற்குப் பயணித்து அங்கிருந்து பூமியின் வடிவத்தை நோக்கினாரா?

உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம்..!

உலகிலேயே மிகப் பழைமையான நூல் நம்முடைய ரிக்வேதம்.
வேதம் என்றால் அறிவு. இறைவனிடமிருந்து பல ரிஷிகள் இசைவடிவாகப் பெற்ற ஞானமே வேதங்களாகத் திகழ்கின்றன.

இன்று பூமி கோளவடிவானது என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் முறையாக அதை வரைந்தால் அது வட்டம் போலத் தான் தோன்றும்.

ஆனால் இன்றைய நவீன முப்பரிமாண (3D) கலை மூலமாக, பூமியின் தோற்றத்தை மிகத் துல்லியமாக கண்முன் காட்ட முடியும்.

ஆனால் அன்றைய நாளில் இந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. ஆதலால், பூமி கோளவடிவானது என்ற தெளிவான ஞானம் பரவலாக மக்கள் மத்தியில் பரவவில்லை.

ரிக்வேதத்தில் பூமி கோளவடிவானது என்று குறிக்கும் ஸ்லோகங்களைக் காண்போம்..!

”சக்ரசஸஹ் பரிணாமம் ப்ரிதிவ்ய” (ரிக் 1.33.8)

-உருண்டையான சக்கரம் போன்று (எப்போதும் சுழல்வது) பூமியின் பரிணாமமாகும்.

”மத்யே சமந்ததஸ்ய பூகோளோ வ்யோம்னி திஸ்ததி” (ரிக் 12:32)

-பிரமாண்டமான பரந்தவெளியில் கோளவடிவிலான பூமி மிதந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.

திருமாலின் வராக அவதாரம்..!

மேலும், திருமால் தம் வராக அவதாரத்தில் இரண்யக்ஷனை அழித்து பூமியை மீட்டார்.

வராக புராணம் பூமியின் தோற்றத்தை கோள (உருண்டை) வடிவானது என விளக்குகின்றது.

அதைப் பொருத்தே வராக அவதாரத்தில் திருமால் பூகோளத்தை சுமந்திருப்பது போல வரையப்பட்டன.

டெக்டானிக் பிளேட்டுகள்..!

பூமி கோள வடிவானது என்றாலும், பூமியின் கண்டங்கள் டெக்டானிக் பிளேட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த டெக்டானிக் பிளேட்டுகள் திரவமான கனிமங்களின் மேல் மிதக்கின்றன. இதனால், அவை எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் நகர்ச்சியே பூகம்பம் நிகழ்வதற்கு காரணமாகின்றன.

‘பூ’ என்றால் பூமி, ‘கம்பம்’ என்றால் திடீரென்ற வெளிபடும் அதிர்ச்சி.

டெக்டானிக் பிளேட்டுகள் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கும் சக்தியை வெளிபடும் போது தான் பூகம்பம் நிகழ்கின்றது.

இந்திய நாடு ’இண்டியன் டெக்டானிக் பிளேட்டின்’ மேல் அமைந்துள்ளது. இண்டியன் டெக்டானிக் பிளேட்டும் இயுரேஸியன் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதால் தான் நேப்பாளத்தில் பூகம்பம் நிகழக் காரணமாகின்றது.
டெக்டானிக் பிளேட் மேல் எழும்புவதால் மலைகளும் மலைத்தொடர்களும் உண்டாகின்றன. இவ்வாறு உண்டானவையே இமயமலைத் தொடர்கள்..

நம் ஆன்மீகமே அறிவியல் தான்..!

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
தன்னை அறிவது என்றால் ஆன்மாவை அறிவது..!

"மனம்"


தன்னைத் தானே தற்சோதனை செய்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு மனம் இயல்பாகவே உள் முகமாக திரும்பும்.

தனது ஒவ்வொரு செயலையும், எண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்கும் மனிதனின் மனமானது புற உலக விவகாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி அக உலகிலேயே இயங்கிக் கொண்டு இருக்கும்.

இது பழக்கத்திற்கு வரும் போது அதுவே இயல்பாகிப் போகும்.

பொதுவாக நமக்கு ஆசைகளைத் தூண்டும் சம்ஸ்காரங்களை கிளப்பி விடுவதற்குக் காரணமாக இருப்பது நமது புறச் சூழல்களே.

அத்தகைய பொருத்தமான சூழல்கள் அமையும் போதுதான் அதற்கு ஒத்ததாக அமைந்த சம்ஸ்காரங்கள் கிளம்பி வந்து எண்ணங்களாக மலர்ந்து புலன் வழியாக செயல்படுகின்றன.

எனவே புற உலகை மறந்து தன் எண்ணங்களைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டே இருக்கும் மனதைப் புறச் சூழல் எந்த வகையிலும் பாதிக்க முடியாது.

இதுவே பழக்கத்திற்கு வரும் போது புலன் நுகர்ச்சி குறைந்து போகும்.

மேலும் நம் செயல்களும், எண்ணங்களும் நம் மனதால் தற்சோதனை செய்யப்படுவதால் ஆசைகளும், குற்றங்களும் அறவே தவிர்க்கப்படும்.

இந்த நிலையில் சாத்வீக குணம் மேலோங்கும்.

புலன் நுகர்ச்சியால் ஏற்படும் பிராண சக்தி இழப்பு வெகுவாகக் குறைந்து விடும்.

இதனால் உடலில் பிராண சக்தியின் திணிவு ஏற்படும்.

பிராணன் வலிமையடையும் போது மனமும் வலிமையும் உறுதியும் பெறும்.

உறுதியான திட மனதைக் குவித்து, ஒருநிலைப்படுத்துவது மிக எளிதாக இருக்கும்.

தன்னை அறிவது என்றால் ஆன்மாவை அறிவது என்பார்கள்.

எனினும் முதலில் தன்னை சோதனை செய்து பார்த்து தன் எண்ணங்களிலும், செயல்களிலும் உள்ள நல்லது, கெட்டதுகளை உணர்ந்து கொள்வதே தன்னையறிவதாகும்.

இப்படித் தன்னை அறிந்து, உணர்ந்து, தெளிந்த சாதகனுக்கு மன அமைதியும், பரநாட்டமும் மேலோங்கும்.

அந்நிலை வாய்த்த சாதகனுக்காக உயர்ந்த, புனிதமான ஞானத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது.

அது போலவே புற உலக வாழ்வில் நேர்த்தியும், ஒழுங்கும், நன்மையும் இல்லாதவர்களுக்கு அகவுலக வாழ்வில் பெருந் தடைகள் ஏற்படும்.

அப்படித் தடைகளை ஏற்படுத்தும் குற்றங்கள் பத்து என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது மூன்று மனம் சார்ந்த குற்றங்கள், நான்கு சொற் குற்றங்கள், மூன்று உடற் குற்றங்கள்.
பேராசை, பொறாமை, கடவுள் மறுத்தல் இவை மூன்றும் மனக் குற்றங்கள். பொய்யான எச்சரிக்கை, கொடுமையான பேச்சு, பொறாமையான வார்த்தை, பொய் இந்த நான்கும் சொற்குற்றங்கள்.

பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவித்தல், பிறன் மனை விழைதல், திருடுதல் இவை உடற்குற்றங்களாகும்.

தியானத்தில் மேன்மையடைய விரும்பும் சாதகர்கள் இந்தப் பத்து குற்றங்களும் தன்னை அணுகாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் இவைகள் நம் மன அமைதியை சீர் குலைத்து விடும்.

ஆனால், தன்னை ஆராய்ந்து கொள்ளும் பாங்குடையவர்கள் இவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.

ஒரு தீய எண்ணம் எழும் போதோ அல்லது ஒரு தீய செயலைச் செய்ய எண்ணம் எழும் போதோ அவற்றைக் குறித்து தனக்குள் கேள்வி எழுப்பி இதைச் செய்யலாமா ?

இப்படி எண்ணலாமா ?

நம் நிலைக்கு இது தகுமா ?

இதனால் நம் நல்வாழ்வுக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமா?

என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது அந்த எண்ணத்தின் வேகமானது குறைந்து விடும்.

எனவே அந்தக் குற்றத்திலிருந்து தப்பி விடலாம்.

அசுப எண்ணங்களை ஒழித்து சுபமாகப் பேசி, சுபமாக நடக்க வேண்டும்.

ஏனென்றால் சுபமே மங்களம்.

மங்களமே சிவம்.

எனவே சிவத்தோடு நம் உயிர் சக்தியை இணைக்க, சிவத்தோடு ஐக்கியமாக சுபமே கருவியாகும்.

எண்ணத்திலும், செயலிலும் சுபமில்லாதவர்கள் வெறும் சவமே.

"ஓம் சிவாயநம"

"ஆரோக்ய வாழ்வுக்கு மனோசக்தி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
சமயவகுப்பு..!

“ஆன்மீகத்தில் ஓர் பட்டப்படிப்பு”

தற்காலத்தில் பள்ளிப்படிப்பில் எந்த நீதி பாடத்தையோ, தெய்வீகம் சம்மந்தமான பாடத்தையோ, ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தையோ காண்பது மிகவும் அரிதாக உள்ளது.

சமயவகுப்பு என்றால் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், ஆனால் சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம்.

சுவாமி விவேகாநந்தர் கனவை நினைவாக்கும் வகையில் எஃகுப் போன்ற உடலும், உருக்குப் போன்ற நரம்புகளும் உடைய தியாகிகளான தொண்டர்களாலே வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் சமயவகுப்புகளில் மாணவர்களுக்கு நமது பண்பாடு, மதம், நாடு இவற்றின் வரலாற்றையும், பெருமையையும் புரியவைக்கிறார்கள்
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

அவசியம் ஊர்கள் தோறும் இந்துசமய வகுப்புகள் தேவைப்படுகிறது..

ஏனென்றால் நம் பாரத தேசத்தின் இன்றைய நிலை நல்லோர்களுக்கும் கவலைக்கிடமாக அமைந்துள்ளது, அற்ப ஆசைகள் நிறைவேறும் என்ற மோகத்தில் மதமாற்றங்கள் அதிகம் காணப்படுகிறது. மக்கள் புராதன பெருமை மிக்க பாரத கலாச்சாரத்தை விடுத்து, வெளிநாட்டு நாகரிக மோகத்தால் பித்தேறி ஒழுக்கம் கெட்டு வருகின்றனர்.

இந்த இழிநிலை ஏற்பட காரணம் என்ன?

நாம் நமது சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்க தவறி விட்டோம். கோவில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் சமய அறிவை பெற இந்துவுக்கு வழியில்லாத நிலை.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

நாம் நமது நாட்டின் உயிர்நாடியாகிய இந்து சமயத்தை மறந்தோம் எனவே நாடு சீரழிகிறது, மக்களின் ஒழுக்கம் கெடுகிறது.

இந்த நிலை மாற நாம் செய்ய வேண்டிய பணியை "சுவாமி விவேகானந்தர்" நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.

பாரதநாட்டில் சோஷலிஸ அரசியல் கருத்துக்களை பரப்புமுன் ஆன்மீக கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்து ஓட செய்யுங்கள். நம் உபநிடதங்களிலும், மதநூல்களிலும், புராணங்களிலும் பொதிந்து கிடக்கின்ற அற்புதமான கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும். என்கிறார்..
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

இந்த சூழ்நிலையில் வருங்கால பாரத தேசத்தின் தூண்களான குழந்தைகளின் வாழ்க்கையின் மீது அக்கறை கொண்ட நம் இந்துதர்ம வித்யா பீடம்..

மாணவர்களுக்கு மழலைநிலை, தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என்ற வரிசையில் தனித்தனி பாடப்புத்தகங்கள் அமைத்து வருடந்தோறும் தேர்வுகள் நடத்தி சான்றிதழ்களும் ஊக்கப்பரிசுகளும் கொடுப்பதும், முதல்நிலை வெற்றி பெற்றோருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி, பஜனை பயிற்சி, திருவிளக்கு பூஜை பயிற்சி, யோகாசன பயிற்சி, சமயசடங்குகள் பற்றிய பயிற்சி, முதலிய பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.

மற்றும் சமயவகுப்புகளில் குழந்தைகளுக்கு தேவையான.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

விளையாட்டுகள்,
கதைகள், வரலாற்று சம்பவங்கள்,
பஜனை பயிற்சி,
இசை பயிற்சி,
நினைவாற்றல் விளையாட்டு,
தலைமைப் பண்பு பயிற்சி,
நேரம் தவறாமை பயிற்சி,
பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி,
தன்னம்பிக்கைக்கான பயிற்சி,
நினைவுத்திறன் பயிற்சி,
அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள்,
பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி,
பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி, மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது...

தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களும், மகளிரும், மாணவர்களும், பெரியோர்களும் ஊர்கள் தோரும் சமயவகுப்பு நடத்தவும், கற்கவும், கற்பிக்கவும் முன்வருமாறு அழைக்கிறோம்.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரம்தோறும் 1000 க்கும் மேற்பட்ட சமயவகுப்புகளில் சுமார் 50000 மாணவர்கள் பயில்கின்றனர், சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சில வகுப்புகளும், கேரளாவில் சில வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன.
ஆண்டு தோறும் 300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 15000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தோறும் சுமார் 50 பேர் வித்யாஜோதி பட்டம் பெறுகிறார்கள்..

ராமாயணமும், மகாபாரதமும், நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும், நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது. இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

அங்கு விழிப்புணர்வு வந்து மதமாற்றம் தடுக்கபடுகிறது, நம்மை கிண்டல் செய்யும் மாற்று மதத்தவர்களுக்கும், போலி முற்போக்கு, பகுத்தறிவு வாதிகளுக்கும் நம் மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கிறார்கள்.

ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன. மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிராமணன் என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்னும் அடிப்படை இந்துத்துவம் கற்பிக்கபடுகிறது.

எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த சீர்மிகு ஆன்மீக பணியை சிறப்புடன் செய்யும் சமயவகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்..
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

என்னுடைய எழுத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், தேசப்பற்றுக்கும், சமூக அக்கறைக்கும் காரணம் இந்த சமயவகுப்பு தான்.

நானும் ஒரு சமயவகுப்பு மாணவன் என்று சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..

"ஆன்மீகத்தில் "வித்யாஜோதி" பட்டம் பெறலாம் வாருங்கள்.. (சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம், தேர்வு எழுதலாம்)

உங்கள் பகுதியிலும் சமயவகுப்பு தொடங்குவதற்கு முயற்சி எடுங்கள்..
சுவாமி விவேகானந்தரின் ஆசியுடன் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்..
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்..

மேலும் சமயவகுப்பு பற்றிய விபரங்களுக்கு :-

Contact :- +919442329468, +918300112434,
Email: hdvpcbe@gmail.com, website: srivivekanandaashrama.com

மீண்டும் ஒரு முறை அழைக்கிறோம் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களும், மகளிரும், மாணவர்களும், பெரியோர்களும் ஊர்கள் தோரும் சமயவகுப்பு நடத்தவும், கற்கவும், கற்பிக்கவும் முன்வருமாறு வேண்டுகிறோம்..

நாமும் நம் குழந்தைகளுக்கு இந்து சமய விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்..!

https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
சித்தர்களின் வானியல், அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்பு..!

(பண்டைக்காலத்தில் ஆன்மீக வழி வாழ்ந்த அதிசய மனிதர்கள்)

மனிதர் யாவரும் ஆறறிவு உடையோர் என்பது யாவரும் அறிந்ததே. எமது புலன்களால் உணரப்பட முடியாத பல பொருட்கள், காட்சிகள், நிகழ்வுகள் என்பன எம்மைச் சூழ இருக்கின்றன. இவை யாவும் எமக்குப் புலப்படாமல் விட்டாலும், இவற்றை எல்லாம் நம் முனிவர்கள் முழுவதும் அறியக் கூடிய ஆற்றல் கொண்டு இருந்தார்கள் என்று நம்புவதற்கு, அவர்கள் விட்டுச் சென்ற, மதிநுட்பம் மிக்க ஆக்கங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.

அவற்றில் தற்போதைய விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்கள்:

*தியானம்:*

தியானமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாய் விளங்குகிறது. மனிதனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சக்தியினை கூரிய, ஆழ்ந்த தியானம் மூலம் வெளிக்கொணர்ந்து, அதன் பயனால் பேரானந்தமான வாழ்க்கை வாழலாம். மனம் குவிந்த தியானம் மூலம், பிணி, திரை, மூப்பு, மன அழுத்தம், ஏக்கம், கவலை, இரத்த அழுத்தம், கொழுப்பு, உஷ்ணம், சோர்வு முதலியவை நீங்கி, புத்துணர்ச்சி, அமைதி, சந்தோசம் அதிகரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் மூளைக் கலங்கள் விழித்தெழுந்து , புதிய கலங்கள் உருவாகி, அக, புற அறிவுஞானம் பெருகி, நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். என்று எழுதி வைத்தார்கள்.

*யோகக்கலை:*

உடலில் உள், வெளி உறுப்புகள் யாவற்றினதும் நுண்ணிய அமைப்புகள், நுணுக்கமான செயற்பாடுகள், சிக்கலான வலைத்தொடர்புகள் பற்றி மிகவும் ஆழமாகவும், துல்லியமாகவும் சரியாகக் கண்டறிந்து, ஒவ்வொரு உறுப்பிற்கும் வந்திருக்கும், வரவிருக்கும் வியாதி எதுவானாலும் தீர்க்கவும், தடுக்கவும் ஆயிரக்கணக்கான, இலகுவான யோகாசனம், பிரணாயாமம், முத்திரைகள், அப்பியாசங்களைக் கண்டுபிடித்தார்கள். இதை முறைப்படி செய்தால், உடலின் மூட்டுகள். நரம்புகள், சுரப்பிகள், இரத்தம் செப்பனிடப்பட்டு, ஆரோகியமான உறுப்புகளோடு, வலிமை, வீரியம், அழகு பெருகி நீண்ட ஆயுள் பெறலாம்.

*வான சாஸ்திரம்:*

சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிவற்றின் நிலைகள், சஞ்சாரங்கள், வேகங்கள் ஆகியவற்றை மிகவும் சரியாகக் கணித்தார்கள்.

*அண்டவெளி ரகசியம்:*

மேல்நாட்டவர் சோதிட முறையில் சூரிய குடும்பம் நிலையாய் உள்ளது என்று வைத்து நேரம் கணக்கிட, அவர்கள் முழு அண்டமுமே தொடர்ந்து அசைந்து கொண்டிருப்பதை அறிந்து, இன்னும் ஒரு படி மேலே சென்று நட்சத்திர மண்டலத்தை அடிப்படையாய் வைத்து நேரம் கணக்கிட்டார்கள்.

*கிரகம் வக்கிரகித்தல்:*

நீள் வட்டப் பாதியில் செல்லும் கிரகங்கள், ஒரே திசையில் செல்லும்போது, சில சமயம், விரைவாகச் செல்லும் வெளிக்கிரகம் உட்கிரகத்திலும் பார்க்கக் குறைந்த வேகத்தில் நகருவது போலத் தோன்றி, அது பின் பக்கமாய்ப் பயணிப்பதாக எமது கண்ணுக்குப் புலப்படும். இதைக்கூடி அவர்கள் கண்டு பிடித்தார்கள்.

*பூமி தளம்புதல்:*

பூமியின் அச்சு ஒரே கோணத்தை நோக்காது, அது படிப்படியாகத் தளம்பி, 13245 வருடத்தில் ஒரு வட்ட ஒழுக்கினை முடிக்கின்றதாம்.

*மருத்துவம்:*

சித்த, ஆயுவேத முறைகளினால் இயற்கைமுறையில் எந்த நோய்க்கும் மருத்துவம் கண்டார்கள்.

*விமானம்:*

பண்டைக் காலத்தில் விமானம் இருந்ததோ, கற்பனையோ; ஆனால், விமானம் ஒன்றைச் செய்வது எப்படி என்று வரிபட, செய்முறை, ஓட்டுமுறை விளக்கங்கள் சம்ஸ்கிருத நூல்களில் இருக்கின்றன.

*சங்கீத ஞானம்:*

எழு சுரங்களின் ரீங்கார ஒலிகள், சங்கதிகள் என்பன பற்றி, சாமவேதம் முதலிய நூல்களில் ஏராளமாக எழுதப்பட்டு இருக்கின்றன.

*மாய மெய்மை:*

நாம் தற்போது வென்றுவரும் இந்த நுட்பம் அவர்கள் அன்றே கண்டு விட்டனர்.
மேலும் தற்போதைய விஞ்ஞானிகளால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டும், இன்னமும் நடைமுறைக்கு கொண்டுவர இயலாத தத்துவங்கள்:

*திரிகால ஞானம் :*

அக்கால முனிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காலத்தை வென்றார்கள்.

*உருவாக்குதல்:*

தமது சக்தியினால் நினைத்த எந்தப் பொருளையும் உருவாக்கினார்கள் - சிந்தனா சக்தி

*பிறர் மனதறிதல்:*

அவர்கள் முன் எவரும் பொய் சொல்ல முடியவில்லை.

*கூடு விட்டுக் கூடு பாய்தல்:*

விரும்பிய போது விரும்பிய உடலை எடுத்தார்கள்.

*நீர் மேல் மிதத்தல்:*

குறிப்பிட்ட சில மூச்சு யோகப்பயிற்சி அவர்களுக்கு நீரில் மிதக்கும் ஆற்றலைத் தந்தது.

*ஆயுள் விருத்தி:*

அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்களாம்.
இவர்கள், 5000 வருடங்களுக்கு முன்பே, யவன, பபிலோனிய, பாரசீக, சீன நாகரீகங்களின் தொடர்பு எதுவும் இன்றி, ஒதுக்குப்புற ஆச்சிரமங்களில் இருந்தபடி, ஆன்மிக நாட்டம் மட்டுமே உடையவர்களாய், இக்கால மனிதரே தமது மண்டைகளை உடைத்துக் கொண்டு இருக்கும் சிக்கலான பல விடயங்களை, மிகவும் துல்லியமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் கண்டுபிடித்து எழுதி வைத்தார்கள்.
இவர்களுக்கு இந்த அதிசயமான அபார சக்தி எப்படி வந்தது என்று உற்று நோக்கின், அவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட தூய்மையான தியானப் பயிற்சியினால் உள்ளே எடுக்கப் படாமல் செறிந்திருந்த சக்தியாற்றல் அலைகள் வெடித்தெழுந்து, ஒளியிலும் பல மடங்கு வேகத்தில் பயணம் செய்து, நம்மால் காண முடியாத பல விடயங்களை நேரில் கண்டு எழுதினார்கள் என்றுதான் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*
மன அமைதியின்மைக்கும் வாழ்க்கைச் சிக்கலக்களுக்குமான காரணங்கள்..!

மோகம், கோபம், காமம் போன்ற தீய குணங்கள் ஒரு புறம், சமுதாய, குடும்பச் சிக்கல்கள் ஒரு புறம் என்று வாழ்க்கையே ரணகளமாக இருக்கிறது. இருப்பினும் தியான நாட்டம் அதிகரத்துக் கொண்டே போகிறது. நான் என்னதான் செய்வது?

இராம் மனோகர் - மன அமைதியின்மைக்கும் வாழ்க்கைச் சிக்கலக்களுக்குமான காரணங்களை நீங்களே புரிந்து கொண்டிருக்கிறீர்களே !!! இதை விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள் !!? எப்பொழுது எவனொருவன் தன்னிலையைத் தான் அறிகிறானோ, அவன் அப்பொழுதே தியானத்திற்கு முழுத் தகுதியுடைவனாகி விடுகிறான்.

அதனால்தான் தியான நாட்டம் மேலோங்கிக் கொண்டேயிருக்கின்றது. தன் தவறுகளுக்காகவும், தன்னைத் தளைக்கின்ற தீய குணங்களுக்காகவும், பந்தப்படுத்துகின்ற பற்றுகளுக்காவும் வருத்தப்படுவதுதான் ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு முதல் முயற்சியாக இருக்கின்றது.

இத்தகைய வருத்தங்கள் மனதில் எழ வேண்டும். எழுந்தால்தான் அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற முனைப்பு உருவாகும். பெரிய பெரிய மகான்களையெல்லாம் இந்தக் கேள்விதான் உருவாக்கி இருக்கிறது. தாயுமானவர் எவ்வளவு பெரிய ஞானி !! அவர் கூட ஓரிடத்தில் ''காமாதி ராக்ஷசப் பேய்க்கு என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே?!?!'' என்று கேட்கிறார்.
https://youtu.be/f-XnIk-yEMY?sub_confirmation=1

பிரபஞ்ச அமைப்பில் இத்தகைய குணங்கள்தான் இயக்க நிலைக்கு அடித்தளமாக இருக்கின்றன. எல்லோரும் இத்தகைய குணங்களே இல்லாத நல்லவர்களாக இருந்து விட்டால் பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்து விடும். சிருஷ்டியும், இயக்கமும் நடைபெற இத்தகைய குணங்கள் உயிர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.

ஆனால் இப்பொழுது நமது நாட்டமே வேறு. நாம் சிருஷ்டி, இயக்கம் இவற்றைக் கடந்து ஒடுக்கத்தை விரும்புகிறோம். எனவே நாம் இத்தகைய தீய குணங்களைக் கடந்துதான் ஆக வேண்டும். அதற்கான வழியும் இந்த பிரபஞ்ச அமைப்பிலேயே இருக்கிறது. அதாவது இந்த பிரபஞ்ச அமைப்பு என்பதே மூன்று குணங்களாலானதுதான். அவை சத்துவம், ராஜஸம், தாமஸம் என்பனவாகும். ஞானமயமானது சத்துவம். இயக்கமயமானது ராஜஸம். அஞ்ஞான மயமானது தாமஸம். குணக் கேடுகள் அனைத்திற்கும் அஞ்ஞானமே காரணமாக இருக்கின்றது.

அத்தகைய குணக்கேடுகளை ஆறு வகையாகப் பிரித்து விளக்கியிருக்கிறார்கள். தனதல்லாத இன்பம் தரக் கூடிய ஒரு பொருளை முறை தவறி தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள எண்ணுவது காமம். பாலுணர்ச்சியும் காமம் என்றே சொல்லப் படுகிறது.
https://youtu.be/f-XnIk-yEMY?sub_confirmation=1

அடுத்தது கோபம் எனப்படும் குரோதம். தேவைக்கு அதிகமான அளவு பொருள் தன்னிடத்தில் இருந்தாலும் அதை எதற்காகவும், யாருக்காகவும் செல்வழிக்காமல் ஒழித்து வைப்பது லோபம். நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதாகவும் தெரிவதற்குக் காரணம் மோகம். மோகம் என்றால் திரிவுபட்ட ஞானமாகும். தற்பெருமை, செருக்கு போன்ற குணங்கள் மதம் எனப்படும். அடுத்தது பொறாமை எனப்படும் மாச்சரியம்.

இந்த ஆறு குணங்களையும் பேய்கள் என்று தாயுமானவர் சொல்வார். இராஜஸம், தாமஸம் எனப்படும் இரண்டு குணங்களையும் வென்று சத்துவ குணத்தை மேலோங்கச் செய்தால் இந்த ஆறு குணக்கேடுகளையும் கடந்து விடலாம்.

ஆனால், பிரகிருத்தின் இந்த குணங்களைக் கடந்து செல்ல மனித சக்தியால் முடிவதில்லை. இறையாற்றலின் துணை கொண்டுதான் அவற்றைக் கடக்க முடியும். இறையாற்றலின் அந்தத் துணையைத்தான் அருள் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறையருளைப் பெறுவதற்குத்தான் ஜெபங்களும், தியானங்களும் தேவைப்படுகின்றன.

இதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரகிருதி என்பது கடலைப் போன்றது. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அது லேசாக அசைந்தால் போதும் கோடிக் கணக்கான உயிர்கள் அழியும். அப்படிப்பட்ட இந்தக் கடலைக் கடக்க நம் சொந்த முயற்சி மட்டும் போதாது. அது இயலாது. அதற்கு பரம்பொருளின் அருளும் தேவையாகும்.
https://youtu.be/f-XnIk-yEMY?sub_confirmation=1

பரம்பொருளின் அருள் எனும் தோணி இருந்தால் போதும், இந்தப் பொல்லாத ப்ரகிருதியை எளிதில் கடந்து விடலாம். அதற்காகத்தான் தியானம் செய்கிறோம். சத்துவ குணம்தான் தியான அனுபூதியை பெற்றுத் தரும். தியான அனுபூதியை அடைந்தால்தான் பரமனருள் சித்திக்கும், எளிதில் கரை சேர முடியும்.

எனவே சத்துவ குணத்தை வளர்த்திடுங்கள். தியானத்தில் உறுதியாக நில்லுங்கள். எதற்காகவும் தியானத்தை விட்டு விடாதிருங்கள். நம்பிக்கையும், வைராக்கியமும், விடாமுயற்சியும் எப்பொழும் உள்ளத்தில் நிலைத்திருக்கட்டும். உயர்ந்த நோக்கமும், இலட்சியத்தில் உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம். அடியேனும் உங்கள் மன உறுதிக்காக வேண்டிக் கொள்கிறேன். குருவருளும், திருவருளும் எந்தேரமும் உங்களை வழிநடத்துவதாக அமையட்டும்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

ஆனந்தமான ஆன்மீக வாழ்வுக்கு இந்து தர்ம வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....!
புலன்கள் ஏன் வஞ்சனையைச் செய்கிறது?

மாணிக்கவாசகர சிவபுராணத்தில்..


"மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்றும்

"கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே"

என்றும் சிவனைப் பாடுகிறார். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.

வஞ்சகத்தையுடைய ஐம்புலனைக் கொண்ட உடம்பாகிய கட்டினை அழித்து முக்தியை நல்கக்கூடியவனே என்பது இதன் பொருள். இது மாணிக்கவாசகர் மட்டும் கூறிய கருத்தல்ல. இதே கருத்தைப் பலர் கூறியுள்ளனர். உதாரணமாக

திருமூலர் :-

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே..

என்று கூறுகிறார்.

இதே போல குகை நமச்சிவாயர்

குகை நமச்சிவாயர்கள்ளப் புல வேடர் கைப்பட்ட நாயேன் தன்
உள்ளக் கவலை ஒழியாதோ - வெள்ளிப்
பொருப்பாய் இனிது உகந்து போற்றுவார்
நெஞ்சில் இருப்பாய் அண்ணாமலையானே.

என்கிறார்.

புலன்கள் ஏன் வஞ்சனையைச் செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஏகமாய் இருக்கக் கூடிய பிரபஞ்ச சக்தியானது தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாகிறது.

இந்த பஞ்ச பூதங்கள் அழுத்தம், சுவை, ஒளி , மணம் மற்றும் ஒலி ஆகிய பஞ்சதன் மாத்திரைகளாக உருமாறி அனைத்துப் பொருளிலும் நிரம்பி உள்ளது.

இவற்றை உணர மனிதனுக்கு மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திரியத்திலும் அதற்குரிய பஞ்ச பூதத்தின் சக்தி சூட்சும வடிவில் விளங்குகிறது.

பஞ்சேந்தியத்திற்கு மேலே மனம் அதற்கு மேலே புத்தி அதற்கு மேலே உயிர் சக்தியான ஆத்மா அமைந்துள்ளது. பஞ்சதன் மாத்திரைகள் புலன்களின் ஏற்படும் உணர்ச்சிகளை உயிருக்கு எடுத்துச் செல்லும் கடத்தியாக செயலாற்றுகிறது.

இதனால் மனிதன் ஸ்பரிசித்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல் மற்றும் கேட்டல் போற்ற உணர்ச்சிகளை அனுபவிக்கிறான்.

சூட்சுமமான மனமானது புத்தியின் வழியே வெளிப்படும் போது, மனதில் உயர்வான சிந்தனைகள் தோன்றுகின்றன. மனதில் அமைதி நிலவுகிறது. பஞ்சதன் மாத்திரைகள் அகத்திலே செயல்பட்டு பஞ்சபூதங்கள் மூலம் பிரபஞ்ச சக்தியை உயிருக்கு அளிக்கிறது.

உயிர் சக்தி என்பது பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியே. அண்ட வெளியின் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு மேம்பட உயிர் ஆற்றல் மேலோங்குகிறது. தவம் சித்திக்கிறது.

ஆனால் மனமானது புத்தியின் வழியே செயல்படுவதை விட புலன்களின் வழியே செயல்படுவதையே விரும்புகிறது. காரணம் புலன்கள் மனதிற்கு அருகாமையில் இருக்கிறது.

மேலும் மனம் இயங்க ஒரு ஸ்தூல வடிவத்தின் ஆதாரம் தேவைப்படுகிறது. சூட்சும வடிவில் இருக்கக் கூடிய உயிர் சக்தியை ஆதாரமாகக் கொண்ட புத்தியை விட ஸ்தூல வடிவங்களை ஆதாரமாகக் கொண்ட புலன்களின் வழியே செயல்படுவது மனதிற்கு சுலபமாக இருக்கிறது.

புலன்களின் வழியே மனம் செயல்படும்போது பஞ்சதன் மாத்திரைகள் புலன்களின் வழியே புறத்தே வெளிப்படுகிறது. இதனால் உயிர் சக்திக்கு பிரபஞ்ச சக்தியானது கிடைக்காமல் போய் உயிர் ஆற்றல் குன்றுகிறது.

புத்தியின் செயல்திறன் குறைகிறது. இதனால் பிபரபஞ்ச சக்தியான உயிர் சக்தியின் இருப்பை மனம் மறக்கிறது. இந்த நிலையையே மாயை என்று கூறப்படுகிறது.

உலகப் பொருட்கள் எல்லாம் மாயை என்று பலர் கூறுவர். ஆனால் அது தவறு. இறை சக்தி தனக்குள் இருப்பதை மறந்த நிலையே மாயையாகும். தனக்குள் இருக்கும் இறை சக்தி உணர்ந்தவர் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் இறை வடிவடிவாகவே காண்பர்.

உயிர் சக்தியின் இருப்பை மறந்த மாயையில் சிக்கிய மனதில் அறு குணங்கள் தோன்றுகின்றன. ஆறுவிதமான குணங்கள் எனப்படுபவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாச்சரியம் எனப்படும். இதையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை மற்றும் வஞ்சம் என்கின்றனர்.

இந்த ஆறு வகை குணங்கள் ஒரு மனிதனுக்கு உருவாகி விட்டால் மனிதன் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான். பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய், சூது, கொலை, கொள்ளை, கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்.

இதனால் மனிதனை தீவினைகள் பற்றிக் கொள்கின்றன. இம்மையிலும், மறுமையிலும் துயரங்களையே அனுபவிக்க நேர்கிறது..

ஆரோக்கியம், ஆன்மீகம் பற்றிய சந்தேகங்களை கேட்க..
உங்கள் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு யோகா ஹீலிங் தெரபி மூலம் இலவச ஆன்லைன் ஆலோசனை பெற..
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம்.. https://wa.me/919894012434

மனிதனை தீவினைகளில் சிக்கிக்கொள்ள வைக்கும் வஞ்சகத்தையுடைய ஐம்புலனைக் கொண்ட உடம்பாகிய கட்டினை அழித்து முக்தியை அளிக்கக் கூடியவர் ஈசன்..

ஓம் நமச்சிவாய..

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும பாரதத்தை உருவாக்குவோம்..!