Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...
யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்..
மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்..
இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது.
பெயர் விளக்கம்:
தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர்.
தத்துவம்:
தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
செய்முறை:
முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும்.
விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.
கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும்.
ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.
மூச்சின் கவனம்:
கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:
நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது.
குணமாகும் நோய்கள்:
ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க...
உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது.
‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
யாருக்கு இந்த ஆசனம்:
ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம்.
ஆன்மீக பலன்கள்:
மனஅமைதி
பயன்பெறும் உறுப்புகள் :
குதிக்கால்கள், கைகள்.
எச்சரிக்கை:
இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...
யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்..
மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்..
இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது.
பெயர் விளக்கம்:
தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர்.
தத்துவம்:
தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
செய்முறை:
முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும்.
விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.
கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும்.
ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.
மூச்சின் கவனம்:
கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:
நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது.
குணமாகும் நோய்கள்:
ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க...
உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது.
‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
யாருக்கு இந்த ஆசனம்:
ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம்.
ஆன்மீக பலன்கள்:
மனஅமைதி
பயன்பெறும் உறுப்புகள் :
குதிக்கால்கள், கைகள்.
எச்சரிக்கை:
இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
"கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்"
"பாத ஹஸ்தாசனம்"
மனதின் கவனம்:
வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்களை..
மூச்சின் கவனம்:
கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :-
உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.
குணமாகும் நோய்கள் :
ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
ஆன்மீக பலன்கள் :
உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
"பாத ஹஸ்தாசனம்"
மனதின் கவனம்:
வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்களை..
மூச்சின் கவனம்:
கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :-
உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.
குணமாகும் நோய்கள் :
ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
ஆன்மீக பலன்கள் :
உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
"வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்"
பரிவ்ருத்த திரிகோணாசனம்
மனம்:-
இடுப்புப் பகுதி மற்றும் கைகள்.
மூச்சின் கவனம்:-
குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:-
முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது .
வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன.
முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது.
சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன.
உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது.
இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.
குணமாகும் நோய்கள்:-
பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது.
உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.
எச்சரிக்கை :-
தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
பரிவ்ருத்த திரிகோணாசனம்
மனம்:-
இடுப்புப் பகுதி மற்றும் கைகள்.
மூச்சின் கவனம்:-
குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:-
முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது .
வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன.
முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது.
சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன.
உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது.
இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.
குணமாகும் நோய்கள்:-
பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது.
உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.
எச்சரிக்கை :-
தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
தைராய்டு பிரச்சினையை போக்கும் - சர்வாங்காசனம்..!
ஆசனங்களின் தாய் - சர்வாங்காசனம்...!
உடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.
உடலின் அனைத்து பாகங்களையும் செம்மைப்படுத்தும்
சர்வாங்காசனம் ஆசனங்களின் தாய் என்று அழைக்கப்படுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும்.
தாய் எவ்வாறு தன் சேயின் நலத்தில் அக்கறை கொள்வாரோ அதைப் போல உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த ஆசனம் என்று யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களால் போற்றப்படுகிறது இந்த ஆசனம்.
மனம் :
இருதோள்கள், கழுத்து.
மூச்சின் கவனம் :
இயல்பான மூச்சு..
சர்வாங்காசனம் செய்முறை :
தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.
கால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும்.
தலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.
பார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம்.
ஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து அமர வேண்டும். சர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை வழுங்கக் கூடாது.
உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.
சர்வாங்காசனம் பலன்கள் :
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இளமையை காக்கும்.
உடல் வளர்ச்சி காணும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.
சோம்பலை போக்கும்.
உடல் சதை போடாமல் தடுக்கும்.
தைராய்டு பாராதைராய்டு சிறப்பாக இயங்கும்.
ரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
மர்ம ஸ்தானம், குதம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
கிட்னி கோளாறுகள் சரியாகும்
ரத்தம் சுத்தமடைவதால் வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதி நீங்கும்.
முகத்தில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் வாழலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல், குழந்தையின்மை போன்றவை நீங்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதிகள் நீங்கும்.
முடி கொட்டுதல், இளநரையை கட்டுப்படுத்தும்.
உடல் ரீதியான பலன்கள் :
நூறுக்கும் மேற்பட்ட உடலியல் பலன்கள் இந்த ஆசனத்தை செய்வதால் கிடைக்கும்.
அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி.
தைராய்டு சுரப்பியை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைநல்லவிதமாக தூண்டி பலமடைய செய்கிறது.
மூளை நல்ல இரத்த ஓட்டம் பெறுகிறது.
கண் பார்வை கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் :
வெரிகோஸ்வைன் என்ற இரத்தக் குழாய் புடைத்துப் போகுதல் சரியாகும்.
தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும்.
மூல நோய், குடல் வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.
ஆன்மீக பலன்கள் :
நினைவாற்றல் வளர்கிறது மன ஒருமைப் பாட்டிற்கும் சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளேலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . ஆசனத்தில் இருக்கும் போது தலையை பக்கவாட்டில் திருப்பி பார்க்க கூடாது.
இந்த வாரம் சர்வதேச யோகா தினம்...!
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
ஆசனங்களின் தாய் - சர்வாங்காசனம்...!
உடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.
உடலின் அனைத்து பாகங்களையும் செம்மைப்படுத்தும்
சர்வாங்காசனம் ஆசனங்களின் தாய் என்று அழைக்கப்படுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும்.
தாய் எவ்வாறு தன் சேயின் நலத்தில் அக்கறை கொள்வாரோ அதைப் போல உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த ஆசனம் என்று யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களால் போற்றப்படுகிறது இந்த ஆசனம்.
மனம் :
இருதோள்கள், கழுத்து.
மூச்சின் கவனம் :
இயல்பான மூச்சு..
சர்வாங்காசனம் செய்முறை :
தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.
கால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும்.
தலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.
பார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம்.
ஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து அமர வேண்டும். சர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை வழுங்கக் கூடாது.
உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.
சர்வாங்காசனம் பலன்கள் :
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இளமையை காக்கும்.
உடல் வளர்ச்சி காணும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.
சோம்பலை போக்கும்.
உடல் சதை போடாமல் தடுக்கும்.
தைராய்டு பாராதைராய்டு சிறப்பாக இயங்கும்.
ரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
மர்ம ஸ்தானம், குதம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
கிட்னி கோளாறுகள் சரியாகும்
ரத்தம் சுத்தமடைவதால் வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதி நீங்கும்.
முகத்தில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் வாழலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல், குழந்தையின்மை போன்றவை நீங்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதிகள் நீங்கும்.
முடி கொட்டுதல், இளநரையை கட்டுப்படுத்தும்.
உடல் ரீதியான பலன்கள் :
நூறுக்கும் மேற்பட்ட உடலியல் பலன்கள் இந்த ஆசனத்தை செய்வதால் கிடைக்கும்.
அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி.
தைராய்டு சுரப்பியை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைநல்லவிதமாக தூண்டி பலமடைய செய்கிறது.
மூளை நல்ல இரத்த ஓட்டம் பெறுகிறது.
கண் பார்வை கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் :
வெரிகோஸ்வைன் என்ற இரத்தக் குழாய் புடைத்துப் போகுதல் சரியாகும்.
தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும்.
மூல நோய், குடல் வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.
ஆன்மீக பலன்கள் :
நினைவாற்றல் வளர்கிறது மன ஒருமைப் பாட்டிற்கும் சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை :
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளேலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . ஆசனத்தில் இருக்கும் போது தலையை பக்கவாட்டில் திருப்பி பார்க்க கூடாது.
இந்த வாரம் சர்வதேச யோகா தினம்...!
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
சுழுமுனை நாடி சக்தியை உயர்த்தும் பஸ்சி மோத்தாசனம்..!
பஸ்சி மோத்தாசனம்..
செய்முறை:
நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும்,பாதங்கள் இணைந்து இருக்கட்டும். முன்னாள் குனிந்து கைகளால் உள்ளங்கால்களை தொடவும். கழுத்துக்கு கீழ் உள்ள உள்ள பகுதிகளை மடக்கி, தலையால் முழங்கால்களை தொடவும்.கைகளை மெதுவாக எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி, உடம்பையும் நேராக வைக்கவும்.
மனம் :
முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்..
மூச்சின் கவனம் :
குனியும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு..
உடல் ரீதியான பலன்கள் :
உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன்பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன.
உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பை பெறுகிறது.
கல்லீரல் , கணையம் , குடல் இவற்றில் ஜீரண சக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது.
வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணை புரிகிறது.
குணமாகும் நோய்கள் :
அஜீரணம் , மலச்சிக்கல், இடுப்பு வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம் , மூல நோய் , ஜீரணக் கோளாறுகள் முதலியவற்றுக்கான சிகிச்சையில் பலனளிக்கிறது.
வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது
ஆன்மீக பலன்கள் :
மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியை உயர்த்துகிறது.
மனம் மற்றும் உடல் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா தெரபி மூலம் தீர்வு கிடைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்
Yogic Science Astro Healing Therapy. Coimbatore. https://wa.me/919894012434
எச்சரிக்கை :
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பிடிப்பு , நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரண கோளாறுகளுக்கு வழிவகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும் என்பது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் நிலைப்பாடு.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
பஸ்சி மோத்தாசனம்..
செய்முறை:
நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும்,பாதங்கள் இணைந்து இருக்கட்டும். முன்னாள் குனிந்து கைகளால் உள்ளங்கால்களை தொடவும். கழுத்துக்கு கீழ் உள்ள உள்ள பகுதிகளை மடக்கி, தலையால் முழங்கால்களை தொடவும்.கைகளை மெதுவாக எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி, உடம்பையும் நேராக வைக்கவும்.
மனம் :
முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்..
மூச்சின் கவனம் :
குனியும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு..
உடல் ரீதியான பலன்கள் :
உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன்பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன.
உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பை பெறுகிறது.
கல்லீரல் , கணையம் , குடல் இவற்றில் ஜீரண சக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது.
வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணை புரிகிறது.
குணமாகும் நோய்கள் :
அஜீரணம் , மலச்சிக்கல், இடுப்பு வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம் , மூல நோய் , ஜீரணக் கோளாறுகள் முதலியவற்றுக்கான சிகிச்சையில் பலனளிக்கிறது.
வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது
ஆன்மீக பலன்கள் :
மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியை உயர்த்துகிறது.
மனம் மற்றும் உடல் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா தெரபி மூலம் தீர்வு கிடைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்
Yogic Science Astro Healing Therapy. Coimbatore. https://wa.me/919894012434
எச்சரிக்கை :
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பிடிப்பு , நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரண கோளாறுகளுக்கு வழிவகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும் என்பது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் நிலைப்பாடு.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
ஆசையை விட விட ஆனந்த மாகுமே...!
நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது.
அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.
இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது.
இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.
இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.
சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது.
இது அளவு மீறி தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர்.
பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.
தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது.
அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும்.
யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது.
ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.
இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.
'பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி'
பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது என்கிறார் குதம்பைச் சித்தர்.
தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர் .
'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.'
Yogic Science Astro healing therapy – health and spiritual doubts contact through What’s app - https://wa.me/919894012434
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்....
எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி வாழ்வோம்.
நன்றி - சித்தர்கள் இராச்சியம்..
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது.
அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.
இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது.
இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.
இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.
சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது.
இது அளவு மீறி தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர்.
பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.
தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது.
அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும்.
யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது.
ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.
இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.
'பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி'
பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது என்கிறார் குதம்பைச் சித்தர்.
தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர் .
'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.'
Yogic Science Astro healing therapy – health and spiritual doubts contact through What’s app - https://wa.me/919894012434
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்....
எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி வாழ்வோம்.
நன்றி - சித்தர்கள் இராச்சியம்..
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
ஆத்ம சக்தி ஓங்க..!
இந்தப் பிறவி வாய்த்தது கர்மாவினால். கர்மப் பதிவுகள்தான் உள்ளமாக எனக்குள் அமைந்து சூட்சுமமாக என்னை இயக்குகின்றன. கர்மா இருக்கும்வரை அல்லது கர்மப் பதிவுகளைப்பற்றி நாம் ஞானத்தால் அறிந்துகொள்ளும்வரை உள்ளம் கர்மாவிற்கு ஏற்றபடிதான் இந்த உடலை இயக்கும். அதுவரை நமது செயல்களும், வாழ்க்கையும் கர்மப் பலன்களின்படிதான் இருக்கும்.
ஞானம் பெற்ற பிறகு, அறியாமை நீங்கிக் குருவின் உதவியால் அறிவு ஒளி பெறும்போது, நமது உள்ளம் செயல்படும் விதம் நமக்குப் புரியத் துவங்கும். எனக்குத் தரப்பட்டிருக்கும் உள்ளத்தை நான் சரியாகவும் பாவிக்கலாம்; பிழையாகப் பாவிக்கவும் முடியும்.
உள்ளத்தில் நிறைந்திருப்பவை ஆசைகளும், அதன் காரணமாக எழுகின்ற கணக்கற்ற எண்ணங்களும் என முன்னரே நாம் அறிந்திருக்கிறோம். இந்த ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர, நம் மனதில் குவிந்திருப்பவை நினைவுகள். இந்த நினைவுகள் என்பவை கடந்த காலத்தைச் சேர்ந்தவைகளாக, நிகழ்காலத்திற்குரியவையாக, எதிர்காலத் திட்டங்களாக நம் மனதில் குடிகொண்டு சதா நம்மை அலைக்கழிக்கின்றன. நினைவுகள் யாராலுமே மறக்கமுடியாத விஷயங்களாக அப்படியே மனதில் தங்கிவிடுகின்றன. அவற்றை நினைத்து நினைத்து மகிழ்வதிலோ அல்லது துக்கப்படுவதிலோ மூழ்கி, எதிர்கால நமது செயல்களை நாம் தவறவிடுகின்றோம். இந்த நினைவுகள் கவனச் சிதறல்களை, மனச் சிதறல்களை ஏற்படுத்துகின்றன. சில நினைவுகள் அறவே மனதைவிட்டு நீங்கினால்தான் நம் மனம் ஒன்றுபடும். தெளிந்த, தூய்மையான காலிப் பாத்திரமாக மனம் மாறும். அப்படிப்பட்ட மனதில்தான் ஆத்ம சக்தி வந்து நிறையும்.
நினைவுகள்தான் எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. எண்ணமென்பது சக்தி. நினைவில்லாவிட்டால் எண்ணமில்லை. நினைவில் இருந்துதான் நான் என்பது உதிக்கிறது. நினைவில்லையேல் நான் இல்லை. நினைவில்லாத இடத்தில் ஆத்மா செயல்படும். ஆத்மா என்னில் வெளிப்பட வேண்டுமெனில், மனதில் அதற்கு இடமிருக்க வேண்டும். மனதின் அடி ஆழத்தில் இருப்பது ஆத்மா. நான் என்னை ஆன்மாவாக எல்லா இடத்திலும் உணர ஆரம்பித்தால், ஆத்மா எல்லாவற்றையும் எனக்காக நடத்தித் தரும். ‘மன அடி ஆழத்திற்குப் போனால் பிரபஞ்சம் தெரிகிறது’! என கார்ல் யங் என்ற உளவியல் அறிஞன் கூறினான். இதன் பொருள், எல்லாமாக இருப்பது ஆத்மாவே; அது எனக்குள்ளும் இருக்கிறது என்பதுதான்.
மனதை நினைவுகளிலிருந்தும், அவற்றால் ஏற்படும் எண்ணங்களிலிருந்தும், பயனற்ற ஆசைகளிலிருந்தும் விடுவித்து எண்ணமில்லாத அமைதி நிலையில் நாம் போகின்றபோது மூளையிலுள்ள செல்கள் அமைதி அடைகின்றன. உடல் முழுவதும் கிளர்ச்சிகள் நீங்கி அமைதி அடைகின்றது. ஒரு சுகமான நிலை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் ஏற்படுகின்றது. உள்ளம் பெற்ற அமைதியால் உடல் நலம் பெறுகின்றது. மனக் கிளர்ச்சியால், மனச் சிதறலால் ஏற்பட்ட நோய்கள் குணமடைந்து இல்லாமல் மறைகின்றன. அறிவு தெளிவாகச் செயல்படுகின்றது. நமது செயல்களில் உயர்வுத் தன்மை ஏற்படுகின்றது.
இந்த அமைதி நிலையை அடையத் தியானம் உதவுகின்றது. காலமும், எண்ணங்களும் அசைவைத் தருகின்றன. எண்ணமில்லையேல் காலம் இல்லை; அசைவும் இல்லை. தியானத்தில் அசைவில்லை; காலம் இல்லை. அசைவற்ற நிலை வாய்க்கும்போது, சக்தி செலவழிவதில்லை. மாறாக, சக்தி சேமிக்கப்படுகிறது. எண்ணங்களாலும், செயல்களாலும் இடைவிடாமல் சக்தி வீணாகின்ற நிலை மாறி, உடலும் மனமும் அசைவின்றித் தியானத்தில் ஆழ்கின்றபோது, சக்தி சேமிப்பு நிகழ்கின்றது. மேலும், ஆத்ம சக்தி பெருகுகின்றது.
ஐம்புலன்களும் அதனதன் இடத்தில் அமைதிபெற்று அடங்கியிருக்க, மனம் சலனமற்று, புத்தி ஆத்மாவில் ஒடுங்குகின்றபொழுது, அங்கு ஆத்மா வெளிப்பட்டு நிறைகின்றது. ஆத்மாவாகத் தன்னை மாற்றுபவன் பிரபஞ்சப் பிரஜை ஆகின்றான். அவனால் உலகம் அமைதி அடைகின்றது. மௌனமும் நிசப்தமும் எனக்குள் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துகின்றன. இந்த அமைதி உடலை நோயற்றதாக்குகின்றது. காலமும், அசைவும் உணராத உடலில் நோய் வராது.
இந்த மனம் என்பது, சிதறாமல் இருப்பதற்குப் பொறுமை என்னும் குணம் மிகமிகத் தேவை. பொறுமை என்பது மனம் சிதறாமல் ஒருமித்து இருப்பது. மனம் சிதறுகின்றபோதுதான் நான் உயர் உணர்வு உள்ளவனா, கீழ் மன உணர்வு உள்ளவனா என்பதை அறிய முடியும். மனம் ஒருமித்து, எந்தச் செயலையும் செய்ய முற்படாமல், அமைதியாக இருந்தால் அந்தப் பொறுமையானது செயலைத் தானாக நடக்க வைக்கும்.
பொறுமையின்மை மன அமைதியைக் குலைத்து, மனச் சமநிலையையும் கெடுக்கும். நான் தொடர்பு கொள்கின்ற விதத்தில் வெளிச் சூழ்நிலை என்னைப் பாதிக்கும்; அல்லது அமைதி அடைய வைக்கும். பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் நம்மால் உலகச் சூழ்நிலையையே அமைதிப்படுத்த முடியும்.
இந்தப் பிறவி வாய்த்தது கர்மாவினால். கர்மப் பதிவுகள்தான் உள்ளமாக எனக்குள் அமைந்து சூட்சுமமாக என்னை இயக்குகின்றன. கர்மா இருக்கும்வரை அல்லது கர்மப் பதிவுகளைப்பற்றி நாம் ஞானத்தால் அறிந்துகொள்ளும்வரை உள்ளம் கர்மாவிற்கு ஏற்றபடிதான் இந்த உடலை இயக்கும். அதுவரை நமது செயல்களும், வாழ்க்கையும் கர்மப் பலன்களின்படிதான் இருக்கும்.
ஞானம் பெற்ற பிறகு, அறியாமை நீங்கிக் குருவின் உதவியால் அறிவு ஒளி பெறும்போது, நமது உள்ளம் செயல்படும் விதம் நமக்குப் புரியத் துவங்கும். எனக்குத் தரப்பட்டிருக்கும் உள்ளத்தை நான் சரியாகவும் பாவிக்கலாம்; பிழையாகப் பாவிக்கவும் முடியும்.
உள்ளத்தில் நிறைந்திருப்பவை ஆசைகளும், அதன் காரணமாக எழுகின்ற கணக்கற்ற எண்ணங்களும் என முன்னரே நாம் அறிந்திருக்கிறோம். இந்த ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர, நம் மனதில் குவிந்திருப்பவை நினைவுகள். இந்த நினைவுகள் என்பவை கடந்த காலத்தைச் சேர்ந்தவைகளாக, நிகழ்காலத்திற்குரியவையாக, எதிர்காலத் திட்டங்களாக நம் மனதில் குடிகொண்டு சதா நம்மை அலைக்கழிக்கின்றன. நினைவுகள் யாராலுமே மறக்கமுடியாத விஷயங்களாக அப்படியே மனதில் தங்கிவிடுகின்றன. அவற்றை நினைத்து நினைத்து மகிழ்வதிலோ அல்லது துக்கப்படுவதிலோ மூழ்கி, எதிர்கால நமது செயல்களை நாம் தவறவிடுகின்றோம். இந்த நினைவுகள் கவனச் சிதறல்களை, மனச் சிதறல்களை ஏற்படுத்துகின்றன. சில நினைவுகள் அறவே மனதைவிட்டு நீங்கினால்தான் நம் மனம் ஒன்றுபடும். தெளிந்த, தூய்மையான காலிப் பாத்திரமாக மனம் மாறும். அப்படிப்பட்ட மனதில்தான் ஆத்ம சக்தி வந்து நிறையும்.
நினைவுகள்தான் எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. எண்ணமென்பது சக்தி. நினைவில்லாவிட்டால் எண்ணமில்லை. நினைவில் இருந்துதான் நான் என்பது உதிக்கிறது. நினைவில்லையேல் நான் இல்லை. நினைவில்லாத இடத்தில் ஆத்மா செயல்படும். ஆத்மா என்னில் வெளிப்பட வேண்டுமெனில், மனதில் அதற்கு இடமிருக்க வேண்டும். மனதின் அடி ஆழத்தில் இருப்பது ஆத்மா. நான் என்னை ஆன்மாவாக எல்லா இடத்திலும் உணர ஆரம்பித்தால், ஆத்மா எல்லாவற்றையும் எனக்காக நடத்தித் தரும். ‘மன அடி ஆழத்திற்குப் போனால் பிரபஞ்சம் தெரிகிறது’! என கார்ல் யங் என்ற உளவியல் அறிஞன் கூறினான். இதன் பொருள், எல்லாமாக இருப்பது ஆத்மாவே; அது எனக்குள்ளும் இருக்கிறது என்பதுதான்.
மனதை நினைவுகளிலிருந்தும், அவற்றால் ஏற்படும் எண்ணங்களிலிருந்தும், பயனற்ற ஆசைகளிலிருந்தும் விடுவித்து எண்ணமில்லாத அமைதி நிலையில் நாம் போகின்றபோது மூளையிலுள்ள செல்கள் அமைதி அடைகின்றன. உடல் முழுவதும் கிளர்ச்சிகள் நீங்கி அமைதி அடைகின்றது. ஒரு சுகமான நிலை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் ஏற்படுகின்றது. உள்ளம் பெற்ற அமைதியால் உடல் நலம் பெறுகின்றது. மனக் கிளர்ச்சியால், மனச் சிதறலால் ஏற்பட்ட நோய்கள் குணமடைந்து இல்லாமல் மறைகின்றன. அறிவு தெளிவாகச் செயல்படுகின்றது. நமது செயல்களில் உயர்வுத் தன்மை ஏற்படுகின்றது.
இந்த அமைதி நிலையை அடையத் தியானம் உதவுகின்றது. காலமும், எண்ணங்களும் அசைவைத் தருகின்றன. எண்ணமில்லையேல் காலம் இல்லை; அசைவும் இல்லை. தியானத்தில் அசைவில்லை; காலம் இல்லை. அசைவற்ற நிலை வாய்க்கும்போது, சக்தி செலவழிவதில்லை. மாறாக, சக்தி சேமிக்கப்படுகிறது. எண்ணங்களாலும், செயல்களாலும் இடைவிடாமல் சக்தி வீணாகின்ற நிலை மாறி, உடலும் மனமும் அசைவின்றித் தியானத்தில் ஆழ்கின்றபோது, சக்தி சேமிப்பு நிகழ்கின்றது. மேலும், ஆத்ம சக்தி பெருகுகின்றது.
ஐம்புலன்களும் அதனதன் இடத்தில் அமைதிபெற்று அடங்கியிருக்க, மனம் சலனமற்று, புத்தி ஆத்மாவில் ஒடுங்குகின்றபொழுது, அங்கு ஆத்மா வெளிப்பட்டு நிறைகின்றது. ஆத்மாவாகத் தன்னை மாற்றுபவன் பிரபஞ்சப் பிரஜை ஆகின்றான். அவனால் உலகம் அமைதி அடைகின்றது. மௌனமும் நிசப்தமும் எனக்குள் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துகின்றன. இந்த அமைதி உடலை நோயற்றதாக்குகின்றது. காலமும், அசைவும் உணராத உடலில் நோய் வராது.
இந்த மனம் என்பது, சிதறாமல் இருப்பதற்குப் பொறுமை என்னும் குணம் மிகமிகத் தேவை. பொறுமை என்பது மனம் சிதறாமல் ஒருமித்து இருப்பது. மனம் சிதறுகின்றபோதுதான் நான் உயர் உணர்வு உள்ளவனா, கீழ் மன உணர்வு உள்ளவனா என்பதை அறிய முடியும். மனம் ஒருமித்து, எந்தச் செயலையும் செய்ய முற்படாமல், அமைதியாக இருந்தால் அந்தப் பொறுமையானது செயலைத் தானாக நடக்க வைக்கும்.
பொறுமையின்மை மன அமைதியைக் குலைத்து, மனச் சமநிலையையும் கெடுக்கும். நான் தொடர்பு கொள்கின்ற விதத்தில் வெளிச் சூழ்நிலை என்னைப் பாதிக்கும்; அல்லது அமைதி அடைய வைக்கும். பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் நம்மால் உலகச் சூழ்நிலையையே அமைதிப்படுத்த முடியும்.
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
பொதுவாகப் பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம் தேவை என்பதும், பெண்களே பொறுமையில் பூமாதேவி போன்றவர்கள் எனச் சொல்வதும் உலக வழக்கு. ஆனால், ஆன்மிக சாதனையில் ஆண், பெண் இருபாலாருக்குமே பொறுமை என்னும் குணம் மிக அவசியம். பொறுமைதான் பதட்டமில்லாமல் செயல்பட வைத்து, நிதானமான செயல்பாட்டைக் கொடுக்கும். மனச் சமநிலை பாதிப்பு அடையாது. பொறுமைக்காகப் பல பழமொழிகள் வழக்கத்தில் இருக்கின்றன. பொறுமையின்மை மனச் சிதறலுக்கு முதல் காரணமாகும்.
எனவே, நினைவில்லையேல், மனதில் அழுக்கில்லை; அழுக்கு நீங்கித் தூய்மையடைந்த மனதில் அன்பும் ஆனந்தமும் பெருகும். பொறுமையாகச் செயல்படுவதால் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு, அங்கு ஆத்மா நிறைந்து செயல்படும். அதனால் கர்மாவிலிருந்து விடுபட்டு ஆன்ம முன்னேற்றம் நிகழ்கின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும்.
"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
எனவே, நினைவில்லையேல், மனதில் அழுக்கில்லை; அழுக்கு நீங்கித் தூய்மையடைந்த மனதில் அன்பும் ஆனந்தமும் பெருகும். பொறுமையாகச் செயல்படுவதால் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு, அங்கு ஆத்மா நிறைந்து செயல்படும். அதனால் கர்மாவிலிருந்து விடுபட்டு ஆன்ம முன்னேற்றம் நிகழ்கின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும்.
"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
மழை நீர் நல்லது..!
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.
உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.
முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.
இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.
நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.
மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம். வாழ்வோம் ஆரோக்கியமாக.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.
உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.
முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.
இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.
நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.
மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம். வாழ்வோம் ஆரோக்கியமாக.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
"சூட்சம நாடி திறக்க உதவும் வக்ராசனம்"
"வக்ராசனம்"
மனம்:-
இடுப்பு, முதுகெலும்பு..
மூச்சின் கவனம்:-
இயல்பான மூச்சு..
உடல் ரீதியான பலன்கள்:-
உடலின் பக்கவாட்டை சுழற்றுவது சாத்தியமாகிறது
முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
முதுகுத்தண்டு நரம்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது.
கல்லீரல் ,மண்ணீரல், கணையம், குடல்கள்,மூத்திரப்பை ஆகியவை நன்கு அழுத்தப் படுகின்றன.
பாலணுச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.
கணைய நீர் , அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன.
தொடைப் பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள்:-
மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும்.
சிறுநீரகக் கோளாறுகள் நிவாரணம் பெரும்.
இடுப்பு,மூட்டுகளில் ஏற்படும் வலி, முதுகின் பின்புறம் ஏற்படும் வலி குணமாகும்.
உடல் பருமன். வயிற்றுப் பொருமல் போன்றவைக்கு நல்லது.
இடுப்பை சுற்றியுள்ள சதையை குறைக்கிறது.
உடல் மற்றும் மனம் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா ஹீலிங் தெரபி மூலம் நிரந்தரத்தீர்வு பெற..
https://wa.me/919894012434
ஆன்மீக பலன்கள்:-
சூட்சம நாடி திறக்கப் பட்டு குண்டலினி சக்தி மேல் எழுவதற்கு உதவும்.
எச்சரிக்கை :-
குடல் வாயு (ஹெர்னியா நோய் )உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
"வக்ராசனம்"
மனம்:-
இடுப்பு, முதுகெலும்பு..
மூச்சின் கவனம்:-
இயல்பான மூச்சு..
உடல் ரீதியான பலன்கள்:-
உடலின் பக்கவாட்டை சுழற்றுவது சாத்தியமாகிறது
முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது
கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
முதுகுத்தண்டு நரம்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது.
கல்லீரல் ,மண்ணீரல், கணையம், குடல்கள்,மூத்திரப்பை ஆகியவை நன்கு அழுத்தப் படுகின்றன.
பாலணுச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன.
கணைய நீர் , அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன.
தொடைப் பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள்:-
மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும்.
சிறுநீரகக் கோளாறுகள் நிவாரணம் பெரும்.
இடுப்பு,மூட்டுகளில் ஏற்படும் வலி, முதுகின் பின்புறம் ஏற்படும் வலி குணமாகும்.
உடல் பருமன். வயிற்றுப் பொருமல் போன்றவைக்கு நல்லது.
இடுப்பை சுற்றியுள்ள சதையை குறைக்கிறது.
உடல் மற்றும் மனம் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா ஹீலிங் தெரபி மூலம் நிரந்தரத்தீர்வு பெற..
https://wa.me/919894012434
ஆன்மீக பலன்கள்:-
சூட்சம நாடி திறக்கப் பட்டு குண்டலினி சக்தி மேல் எழுவதற்கு உதவும்.
எச்சரிக்கை :-
குடல் வாயு (ஹெர்னியா நோய் )உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
WhatsApp.com
Share on WhatsApp
WhatsApp Messenger: More than 2 billion people
in over 180 countries use WhatsApp to stay in touch with friends and
family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure,
reliable messaging and calling, available…
in over 180 countries use WhatsApp to stay in touch with friends and
family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure,
reliable messaging and calling, available…
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
எண்ணிறந் தெல்லை யிலாதானே!
எண்ணிறந் தெல்லை யிலாதானே! என்று திருவாசகத்தில் இறைவனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.
இறைவனைப் பற்றி நினைப்பது எது?. நமது மனம். இது எப்படிப்பட்டது?. மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்.
"மனமென்னும் மாடடங்கில்" எனத் தொடங்குகிறது இடைக்காட்டுச் சித்தரின் ஒரு பாடல்.
ஆடு காட்டி வேங்கையை...
அகப் படுத்துமாறு போல
மாடுகாட்டி என்னை நீ
மதிமயக்கல் ஆகுமோ?
என்று சிவபெருமானைப் பார்த்து கேட்கிறார் சிவவாக்கியர்.
மாட்டின் இயல்பென்ன?. தனக்குத் தெரிந்த எல்லையை மட்டுமே சுற்றி வர விரும்புவது. அதைவிடுத்து புதிய இடத்திற்கு போக விரும்பாதது.
விவசாயிகள் மாட்டு வண்டிகளில் விளை பொருட்களை ஏற்றிவிட்டு வண்டியை பூட்டி வண்டியிலே படுத்து தூங்கி விடுவார்கள். மாடு வழக்கமான பாதையில் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை தானாக அடையும்.
தனக்கு தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல மனமும் தனக்குத் தெரிந்த எல்லையையே சுற்றி வருகிறது. நமக்கு தெரிந்த எல்லை நாம் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவு உணந்துள்ளோமோ அவ்வளவே.
மனிதன் இந்த அண்டத்தை ஐந்து வகையில் உணர்கிறான். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், ஸ்பரிசம் போன்ற ஐந்து வகையில் இந்த அண்டத்தை உணர்வதால் தான் இந்த அண்டத்திற்கு பிரபஞ்சம் என்று பெயர் வைத்தான்.
நமக்கே மற்றொரு புலன் இருந்திருந்தால் இந்த அண்டத்தை பற்றிய அறிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். பிற விலங்குகள், புழு, பூச்சிகள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறது என்பது நமக்கு தெரியாது. மரம், செடி, கொடி போன்றவற்றிற்கு இந்த உலகத்தை பற்றிய புரிதல் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நாம் வசிக்கும் பூமி, சூரியன், மற்ற கோள்களை அடக்கியது ஒரு சூரியக் குடும்பம். இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பத்தைக் கொண்டது ஒரு galaxy எனும் அண்டம்.
இப்படி கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது ஒரு பேரண்டம். பிறகு? பிறகு? அது நமது எண்ணங்களுக்கு எட்டாதது, நாம் கற்பனை செய்தே பார்க்க இயலாதது.
தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல நாம் உணர்ந்த எல்லையிலேயே எண்ணக்கூடிய மனதால் பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதும் சிந்திக்கவே இயலாத போது பிரபஞ்சத்தை படைத்த இறைவனை நாம் அறிந்து கொண்டோம் என்று சொல்வது கடலிலே உள்ள ஒரு துளி நீரைப் பருகிவிட்டு கடல் முழுவதும் குடித்ததாக சொல்வதற்குச் சமம் அல்லவா?
இதனால் தான் "எண்ணிறந் தெல்லை யிலாதானே!" எண்ணங்களால் சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டவனே என்று ஈசனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர் சுவாமிகள்.
நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்..!
ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்.!
எண்ணிறந் தெல்லை யிலாதானே! என்று திருவாசகத்தில் இறைவனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர். இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.
இறைவனைப் பற்றி நினைப்பது எது?. நமது மனம். இது எப்படிப்பட்டது?. மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்.
"மனமென்னும் மாடடங்கில்" எனத் தொடங்குகிறது இடைக்காட்டுச் சித்தரின் ஒரு பாடல்.
ஆடு காட்டி வேங்கையை...
அகப் படுத்துமாறு போல
மாடுகாட்டி என்னை நீ
மதிமயக்கல் ஆகுமோ?
என்று சிவபெருமானைப் பார்த்து கேட்கிறார் சிவவாக்கியர்.
மாட்டின் இயல்பென்ன?. தனக்குத் தெரிந்த எல்லையை மட்டுமே சுற்றி வர விரும்புவது. அதைவிடுத்து புதிய இடத்திற்கு போக விரும்பாதது.
விவசாயிகள் மாட்டு வண்டிகளில் விளை பொருட்களை ஏற்றிவிட்டு வண்டியை பூட்டி வண்டியிலே படுத்து தூங்கி விடுவார்கள். மாடு வழக்கமான பாதையில் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை தானாக அடையும்.
தனக்கு தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல மனமும் தனக்குத் தெரிந்த எல்லையையே சுற்றி வருகிறது. நமக்கு தெரிந்த எல்லை நாம் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவு உணந்துள்ளோமோ அவ்வளவே.
மனிதன் இந்த அண்டத்தை ஐந்து வகையில் உணர்கிறான். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், ஸ்பரிசம் போன்ற ஐந்து வகையில் இந்த அண்டத்தை உணர்வதால் தான் இந்த அண்டத்திற்கு பிரபஞ்சம் என்று பெயர் வைத்தான்.
நமக்கே மற்றொரு புலன் இருந்திருந்தால் இந்த அண்டத்தை பற்றிய அறிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். பிற விலங்குகள், புழு, பூச்சிகள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறது என்பது நமக்கு தெரியாது. மரம், செடி, கொடி போன்றவற்றிற்கு இந்த உலகத்தை பற்றிய புரிதல் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நாம் வசிக்கும் பூமி, சூரியன், மற்ற கோள்களை அடக்கியது ஒரு சூரியக் குடும்பம். இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பத்தைக் கொண்டது ஒரு galaxy எனும் அண்டம்.
இப்படி கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது ஒரு பேரண்டம். பிறகு? பிறகு? அது நமது எண்ணங்களுக்கு எட்டாதது, நாம் கற்பனை செய்தே பார்க்க இயலாதது.
தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல நாம் உணர்ந்த எல்லையிலேயே எண்ணக்கூடிய மனதால் பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதும் சிந்திக்கவே இயலாத போது பிரபஞ்சத்தை படைத்த இறைவனை நாம் அறிந்து கொண்டோம் என்று சொல்வது கடலிலே உள்ள ஒரு துளி நீரைப் பருகிவிட்டு கடல் முழுவதும் குடித்ததாக சொல்வதற்குச் சமம் அல்லவா?
இதனால் தான் "எண்ணிறந் தெல்லை யிலாதானே!" எண்ணங்களால் சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டவனே என்று ஈசனைத் துதிக்கிறார் மாணிக்கவாசகர் சுவாமிகள்.
நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்..!
ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்.!
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
ஆன்மீகமே அறிவியல் தான்..!
பூமி கோள வடிவானது என்று ஆதியில் உரைத்த இந்துதர்மம்..!
பூமி தட்டையானதா?
பூமி தட்டையானது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவந்தனர். இன்னமும் கூட, சிலர் பூமி தட்டையானது என்றும்; செவ்வக வடிவானது என்றும்; பூமிக்கு நான்கு மூலைகள் உள்ளன என்றும் நம்புகின்றனர்.
பூமி தட்டையானது தான் என்று மக்களை நம்பவைப்பதற்காகவே ‘ஃபிளாட் ஏர்த் சொஸைட்டி’ என்ற ஓர் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது இன்னும் வேடிக்கையான விஷயமாகும்.
எந்த அடிப்படையில் இவர்கள் பூமி தட்டையானது என்று நம்புகிறார்கள் எனக் கேட்டால், ‘எங்களின் மதநூலில் பூமி தட்டையானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள்.
அது எந்த மதநூல் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கக்
கூடும்.
ஒருமுறை ஐன்ஸ்டியன் “அறியாமை தான் பேரானந்தம் (ignorance is bliss) என்றுரைக்கும் மதங்களினால் தான் அறிவியலில் நாம் 2000 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்.” என மனவேதனையுடன் கூறினார்.
பூமி தட்டையானது என்று சொல்லிய அதே மதம் தான் அறியாமை தான் பேரானந்தம் என்றும் சொல்லியது.
வரஹமிஹரும் பிரம்மகுப்தரும்..!
ஆனால்.. வரஹமிஹிர் மற்றும் பிரம்மகுப்தா ஆகிய இரு முனிவர்களும் பூமி கோள வடிவானது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்களின் ஏடுகளில் குறித்துள்ளனர்.
கோளம் எனும் சொல் 'கோள்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. கோளம் என்பது முப்பரிமாண அளவு கொண்ட, ஓர் உருண்டையான வடிவம்.
பூமி கோள வடிவானது என்பதால் பூகோளம் என்றழைக்கப்படுகிறது. இதனாலே ஆங்கிலத்தில் 'குலோப்' என்றழைக்கின்றனர். (பூகோள் > கோள்பூ > கு'ஓல்ப் >குலோப்)
ஆர்யபத்தர் (ஆர்யபட்டர்)..!
ஆர்யபத்தர் என்ற முனிவர், ஒரு தலைச்சிறந்த கணித மேதையும் விண்ணியல் நிபுணரும் ஆவார்.
அவர் வாழ்ந்த காலக்கட்டம் 476-550 ஆகும்.
அவர் தன்னுடைய ஆர்யபத்தியா எனும் நூலில், பூமி கோள வடிவானது என்றும் பூமியின் சுற்றளவு 4967 யோஜனங்கள் (39,968 கி.மீ.) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நவீன விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. என கணித்துள்ளனர்.
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வாழ்ந்த ஆர்யபத்தர் குறிப்பிட்ட பூமியின் சுற்றளவு ஏறக்குறைய நவீன காலத்தில் கணிக்கப்பட்டுள்ள சுற்றளவோடு நெருங்கியுள்ளது.
தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் அவ்வளவு துல்லியமாக அவர் பூமியை அளந்து கூறியது எப்படி?
அவர் துணைக்கோளத்தில் பயணித்து பூமியை அளந்தாரா?
அல்லது நிலாவிற்குப் பயணித்து அங்கிருந்து பூமியின் வடிவத்தை நோக்கினாரா?
உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம்..!
உலகிலேயே மிகப் பழைமையான நூல் நம்முடைய ரிக்வேதம்.
வேதம் என்றால் அறிவு. இறைவனிடமிருந்து பல ரிஷிகள் இசைவடிவாகப் பெற்ற ஞானமே வேதங்களாகத் திகழ்கின்றன.
இன்று பூமி கோளவடிவானது என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் முறையாக அதை வரைந்தால் அது வட்டம் போலத் தான் தோன்றும்.
ஆனால் இன்றைய நவீன முப்பரிமாண (3D) கலை மூலமாக, பூமியின் தோற்றத்தை மிகத் துல்லியமாக கண்முன் காட்ட முடியும்.
ஆனால் அன்றைய நாளில் இந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. ஆதலால், பூமி கோளவடிவானது என்ற தெளிவான ஞானம் பரவலாக மக்கள் மத்தியில் பரவவில்லை.
ரிக்வேதத்தில் பூமி கோளவடிவானது என்று குறிக்கும் ஸ்லோகங்களைக் காண்போம்..!
”சக்ரசஸஹ் பரிணாமம் ப்ரிதிவ்ய” (ரிக் 1.33.8)
-உருண்டையான சக்கரம் போன்று (எப்போதும் சுழல்வது) பூமியின் பரிணாமமாகும்.
”மத்யே சமந்ததஸ்ய பூகோளோ வ்யோம்னி திஸ்ததி” (ரிக் 12:32)
-பிரமாண்டமான பரந்தவெளியில் கோளவடிவிலான பூமி மிதந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.
திருமாலின் வராக அவதாரம்..!
மேலும், திருமால் தம் வராக அவதாரத்தில் இரண்யக்ஷனை அழித்து பூமியை மீட்டார்.
வராக புராணம் பூமியின் தோற்றத்தை கோள (உருண்டை) வடிவானது என விளக்குகின்றது.
அதைப் பொருத்தே வராக அவதாரத்தில் திருமால் பூகோளத்தை சுமந்திருப்பது போல வரையப்பட்டன.
டெக்டானிக் பிளேட்டுகள்..!
பூமி கோள வடிவானது என்றாலும், பூமியின் கண்டங்கள் டெக்டானிக் பிளேட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த டெக்டானிக் பிளேட்டுகள் திரவமான கனிமங்களின் மேல் மிதக்கின்றன. இதனால், அவை எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் நகர்ச்சியே பூகம்பம் நிகழ்வதற்கு காரணமாகின்றன.
‘பூ’ என்றால் பூமி, ‘கம்பம்’ என்றால் திடீரென்ற வெளிபடும் அதிர்ச்சி.
டெக்டானிக் பிளேட்டுகள் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கும் சக்தியை வெளிபடும் போது தான் பூகம்பம் நிகழ்கின்றது.
இந்திய நாடு ’இண்டியன் டெக்டானிக் பிளேட்டின்’ மேல் அமைந்துள்ளது. இண்டியன் டெக்டானிக் பிளேட்டும் இயுரேஸியன் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதால் தான் நேப்பாளத்தில் பூகம்பம் நிகழக் காரணமாகின்றது.
பூமி கோள வடிவானது என்று ஆதியில் உரைத்த இந்துதர்மம்..!
பூமி தட்டையானதா?
பூமி தட்டையானது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவந்தனர். இன்னமும் கூட, சிலர் பூமி தட்டையானது என்றும்; செவ்வக வடிவானது என்றும்; பூமிக்கு நான்கு மூலைகள் உள்ளன என்றும் நம்புகின்றனர்.
பூமி தட்டையானது தான் என்று மக்களை நம்பவைப்பதற்காகவே ‘ஃபிளாட் ஏர்த் சொஸைட்டி’ என்ற ஓர் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது இன்னும் வேடிக்கையான விஷயமாகும்.
எந்த அடிப்படையில் இவர்கள் பூமி தட்டையானது என்று நம்புகிறார்கள் எனக் கேட்டால், ‘எங்களின் மதநூலில் பூமி தட்டையானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனச் சொல்கிறார்கள்.
அது எந்த மதநூல் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கக்
கூடும்.
ஒருமுறை ஐன்ஸ்டியன் “அறியாமை தான் பேரானந்தம் (ignorance is bliss) என்றுரைக்கும் மதங்களினால் தான் அறிவியலில் நாம் 2000 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்.” என மனவேதனையுடன் கூறினார்.
பூமி தட்டையானது என்று சொல்லிய அதே மதம் தான் அறியாமை தான் பேரானந்தம் என்றும் சொல்லியது.
வரஹமிஹரும் பிரம்மகுப்தரும்..!
ஆனால்.. வரஹமிஹிர் மற்றும் பிரம்மகுப்தா ஆகிய இரு முனிவர்களும் பூமி கோள வடிவானது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்களின் ஏடுகளில் குறித்துள்ளனர்.
கோளம் எனும் சொல் 'கோள்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. கோளம் என்பது முப்பரிமாண அளவு கொண்ட, ஓர் உருண்டையான வடிவம்.
பூமி கோள வடிவானது என்பதால் பூகோளம் என்றழைக்கப்படுகிறது. இதனாலே ஆங்கிலத்தில் 'குலோப்' என்றழைக்கின்றனர். (பூகோள் > கோள்பூ > கு'ஓல்ப் >குலோப்)
ஆர்யபத்தர் (ஆர்யபட்டர்)..!
ஆர்யபத்தர் என்ற முனிவர், ஒரு தலைச்சிறந்த கணித மேதையும் விண்ணியல் நிபுணரும் ஆவார்.
அவர் வாழ்ந்த காலக்கட்டம் 476-550 ஆகும்.
அவர் தன்னுடைய ஆர்யபத்தியா எனும் நூலில், பூமி கோள வடிவானது என்றும் பூமியின் சுற்றளவு 4967 யோஜனங்கள் (39,968 கி.மீ.) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நவீன விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. என கணித்துள்ளனர்.
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வாழ்ந்த ஆர்யபத்தர் குறிப்பிட்ட பூமியின் சுற்றளவு ஏறக்குறைய நவீன காலத்தில் கணிக்கப்பட்டுள்ள சுற்றளவோடு நெருங்கியுள்ளது.
தொழில்நுட்பமே இல்லாத காலத்தில் அவ்வளவு துல்லியமாக அவர் பூமியை அளந்து கூறியது எப்படி?
அவர் துணைக்கோளத்தில் பயணித்து பூமியை அளந்தாரா?
அல்லது நிலாவிற்குப் பயணித்து அங்கிருந்து பூமியின் வடிவத்தை நோக்கினாரா?
உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம்..!
உலகிலேயே மிகப் பழைமையான நூல் நம்முடைய ரிக்வேதம்.
வேதம் என்றால் அறிவு. இறைவனிடமிருந்து பல ரிஷிகள் இசைவடிவாகப் பெற்ற ஞானமே வேதங்களாகத் திகழ்கின்றன.
இன்று பூமி கோளவடிவானது என்று நமக்கு நன்றாக தெரியும், ஆனால் முறையாக அதை வரைந்தால் அது வட்டம் போலத் தான் தோன்றும்.
ஆனால் இன்றைய நவீன முப்பரிமாண (3D) கலை மூலமாக, பூமியின் தோற்றத்தை மிகத் துல்லியமாக கண்முன் காட்ட முடியும்.
ஆனால் அன்றைய நாளில் இந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. ஆதலால், பூமி கோளவடிவானது என்ற தெளிவான ஞானம் பரவலாக மக்கள் மத்தியில் பரவவில்லை.
ரிக்வேதத்தில் பூமி கோளவடிவானது என்று குறிக்கும் ஸ்லோகங்களைக் காண்போம்..!
”சக்ரசஸஹ் பரிணாமம் ப்ரிதிவ்ய” (ரிக் 1.33.8)
-உருண்டையான சக்கரம் போன்று (எப்போதும் சுழல்வது) பூமியின் பரிணாமமாகும்.
”மத்யே சமந்ததஸ்ய பூகோளோ வ்யோம்னி திஸ்ததி” (ரிக் 12:32)
-பிரமாண்டமான பரந்தவெளியில் கோளவடிவிலான பூமி மிதந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.
திருமாலின் வராக அவதாரம்..!
மேலும், திருமால் தம் வராக அவதாரத்தில் இரண்யக்ஷனை அழித்து பூமியை மீட்டார்.
வராக புராணம் பூமியின் தோற்றத்தை கோள (உருண்டை) வடிவானது என விளக்குகின்றது.
அதைப் பொருத்தே வராக அவதாரத்தில் திருமால் பூகோளத்தை சுமந்திருப்பது போல வரையப்பட்டன.
டெக்டானிக் பிளேட்டுகள்..!
பூமி கோள வடிவானது என்றாலும், பூமியின் கண்டங்கள் டெக்டானிக் பிளேட்டுகளால் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த டெக்டானிக் பிளேட்டுகள் திரவமான கனிமங்களின் மேல் மிதக்கின்றன. இதனால், அவை எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் நகர்ச்சியே பூகம்பம் நிகழ்வதற்கு காரணமாகின்றன.
‘பூ’ என்றால் பூமி, ‘கம்பம்’ என்றால் திடீரென்ற வெளிபடும் அதிர்ச்சி.
டெக்டானிக் பிளேட்டுகள் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருக்கும் சக்தியை வெளிபடும் போது தான் பூகம்பம் நிகழ்கின்றது.
இந்திய நாடு ’இண்டியன் டெக்டானிக் பிளேட்டின்’ மேல் அமைந்துள்ளது. இண்டியன் டெக்டானிக் பிளேட்டும் இயுரேஸியன் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதால் தான் நேப்பாளத்தில் பூகம்பம் நிகழக் காரணமாகின்றது.
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
டெக்டானிக் பிளேட் மேல் எழும்புவதால் மலைகளும் மலைத்தொடர்களும் உண்டாகின்றன. இவ்வாறு உண்டானவையே இமயமலைத் தொடர்கள்..
நம் ஆன்மீகமே அறிவியல் தான்..!
நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”
ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
நம் ஆன்மீகமே அறிவியல் தான்..!
நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”
ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
தன்னை அறிவது என்றால் ஆன்மாவை அறிவது..!
"மனம்"
தன்னைத் தானே தற்சோதனை செய்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு மனம் இயல்பாகவே உள் முகமாக திரும்பும்.
தனது ஒவ்வொரு செயலையும், எண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்கும் மனிதனின் மனமானது புற உலக விவகாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி அக உலகிலேயே இயங்கிக் கொண்டு இருக்கும்.
இது பழக்கத்திற்கு வரும் போது அதுவே இயல்பாகிப் போகும்.
பொதுவாக நமக்கு ஆசைகளைத் தூண்டும் சம்ஸ்காரங்களை கிளப்பி விடுவதற்குக் காரணமாக இருப்பது நமது புறச் சூழல்களே.
அத்தகைய பொருத்தமான சூழல்கள் அமையும் போதுதான் அதற்கு ஒத்ததாக அமைந்த சம்ஸ்காரங்கள் கிளம்பி வந்து எண்ணங்களாக மலர்ந்து புலன் வழியாக செயல்படுகின்றன.
எனவே புற உலகை மறந்து தன் எண்ணங்களைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டே இருக்கும் மனதைப் புறச் சூழல் எந்த வகையிலும் பாதிக்க முடியாது.
இதுவே பழக்கத்திற்கு வரும் போது புலன் நுகர்ச்சி குறைந்து போகும்.
மேலும் நம் செயல்களும், எண்ணங்களும் நம் மனதால் தற்சோதனை செய்யப்படுவதால் ஆசைகளும், குற்றங்களும் அறவே தவிர்க்கப்படும்.
இந்த நிலையில் சாத்வீக குணம் மேலோங்கும்.
புலன் நுகர்ச்சியால் ஏற்படும் பிராண சக்தி இழப்பு வெகுவாகக் குறைந்து விடும்.
இதனால் உடலில் பிராண சக்தியின் திணிவு ஏற்படும்.
பிராணன் வலிமையடையும் போது மனமும் வலிமையும் உறுதியும் பெறும்.
உறுதியான திட மனதைக் குவித்து, ஒருநிலைப்படுத்துவது மிக எளிதாக இருக்கும்.
தன்னை அறிவது என்றால் ஆன்மாவை அறிவது என்பார்கள்.
எனினும் முதலில் தன்னை சோதனை செய்து பார்த்து தன் எண்ணங்களிலும், செயல்களிலும் உள்ள நல்லது, கெட்டதுகளை உணர்ந்து கொள்வதே தன்னையறிவதாகும்.
இப்படித் தன்னை அறிந்து, உணர்ந்து, தெளிந்த சாதகனுக்கு மன அமைதியும், பரநாட்டமும் மேலோங்கும்.
அந்நிலை வாய்த்த சாதகனுக்காக உயர்ந்த, புனிதமான ஞானத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது.
அது போலவே புற உலக வாழ்வில் நேர்த்தியும், ஒழுங்கும், நன்மையும் இல்லாதவர்களுக்கு அகவுலக வாழ்வில் பெருந் தடைகள் ஏற்படும்.
அப்படித் தடைகளை ஏற்படுத்தும் குற்றங்கள் பத்து என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது மூன்று மனம் சார்ந்த குற்றங்கள், நான்கு சொற் குற்றங்கள், மூன்று உடற் குற்றங்கள்.
பேராசை, பொறாமை, கடவுள் மறுத்தல் இவை மூன்றும் மனக் குற்றங்கள். பொய்யான எச்சரிக்கை, கொடுமையான பேச்சு, பொறாமையான வார்த்தை, பொய் இந்த நான்கும் சொற்குற்றங்கள்.
பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவித்தல், பிறன் மனை விழைதல், திருடுதல் இவை உடற்குற்றங்களாகும்.
தியானத்தில் மேன்மையடைய விரும்பும் சாதகர்கள் இந்தப் பத்து குற்றங்களும் தன்னை அணுகாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவைகள் நம் மன அமைதியை சீர் குலைத்து விடும்.
ஆனால், தன்னை ஆராய்ந்து கொள்ளும் பாங்குடையவர்கள் இவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
ஒரு தீய எண்ணம் எழும் போதோ அல்லது ஒரு தீய செயலைச் செய்ய எண்ணம் எழும் போதோ அவற்றைக் குறித்து தனக்குள் கேள்வி எழுப்பி இதைச் செய்யலாமா ?
இப்படி எண்ணலாமா ?
நம் நிலைக்கு இது தகுமா ?
இதனால் நம் நல்வாழ்வுக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமா?
என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது அந்த எண்ணத்தின் வேகமானது குறைந்து விடும்.
எனவே அந்தக் குற்றத்திலிருந்து தப்பி விடலாம்.
அசுப எண்ணங்களை ஒழித்து சுபமாகப் பேசி, சுபமாக நடக்க வேண்டும்.
ஏனென்றால் சுபமே மங்களம்.
மங்களமே சிவம்.
எனவே சிவத்தோடு நம் உயிர் சக்தியை இணைக்க, சிவத்தோடு ஐக்கியமாக சுபமே கருவியாகும்.
எண்ணத்திலும், செயலிலும் சுபமில்லாதவர்கள் வெறும் சவமே.
"ஓம் சிவாயநம"
"ஆரோக்ய வாழ்வுக்கு மனோசக்தி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
"மனம்"
தன்னைத் தானே தற்சோதனை செய்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு மனம் இயல்பாகவே உள் முகமாக திரும்பும்.
தனது ஒவ்வொரு செயலையும், எண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்கும் மனிதனின் மனமானது புற உலக விவகாரங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி அக உலகிலேயே இயங்கிக் கொண்டு இருக்கும்.
இது பழக்கத்திற்கு வரும் போது அதுவே இயல்பாகிப் போகும்.
பொதுவாக நமக்கு ஆசைகளைத் தூண்டும் சம்ஸ்காரங்களை கிளப்பி விடுவதற்குக் காரணமாக இருப்பது நமது புறச் சூழல்களே.
அத்தகைய பொருத்தமான சூழல்கள் அமையும் போதுதான் அதற்கு ஒத்ததாக அமைந்த சம்ஸ்காரங்கள் கிளம்பி வந்து எண்ணங்களாக மலர்ந்து புலன் வழியாக செயல்படுகின்றன.
எனவே புற உலகை மறந்து தன் எண்ணங்களைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டே இருக்கும் மனதைப் புறச் சூழல் எந்த வகையிலும் பாதிக்க முடியாது.
இதுவே பழக்கத்திற்கு வரும் போது புலன் நுகர்ச்சி குறைந்து போகும்.
மேலும் நம் செயல்களும், எண்ணங்களும் நம் மனதால் தற்சோதனை செய்யப்படுவதால் ஆசைகளும், குற்றங்களும் அறவே தவிர்க்கப்படும்.
இந்த நிலையில் சாத்வீக குணம் மேலோங்கும்.
புலன் நுகர்ச்சியால் ஏற்படும் பிராண சக்தி இழப்பு வெகுவாகக் குறைந்து விடும்.
இதனால் உடலில் பிராண சக்தியின் திணிவு ஏற்படும்.
பிராணன் வலிமையடையும் போது மனமும் வலிமையும் உறுதியும் பெறும்.
உறுதியான திட மனதைக் குவித்து, ஒருநிலைப்படுத்துவது மிக எளிதாக இருக்கும்.
தன்னை அறிவது என்றால் ஆன்மாவை அறிவது என்பார்கள்.
எனினும் முதலில் தன்னை சோதனை செய்து பார்த்து தன் எண்ணங்களிலும், செயல்களிலும் உள்ள நல்லது, கெட்டதுகளை உணர்ந்து கொள்வதே தன்னையறிவதாகும்.
இப்படித் தன்னை அறிந்து, உணர்ந்து, தெளிந்த சாதகனுக்கு மன அமைதியும், பரநாட்டமும் மேலோங்கும்.
அந்நிலை வாய்த்த சாதகனுக்காக உயர்ந்த, புனிதமான ஞானத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது.
அது போலவே புற உலக வாழ்வில் நேர்த்தியும், ஒழுங்கும், நன்மையும் இல்லாதவர்களுக்கு அகவுலக வாழ்வில் பெருந் தடைகள் ஏற்படும்.
அப்படித் தடைகளை ஏற்படுத்தும் குற்றங்கள் பத்து என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது மூன்று மனம் சார்ந்த குற்றங்கள், நான்கு சொற் குற்றங்கள், மூன்று உடற் குற்றங்கள்.
பேராசை, பொறாமை, கடவுள் மறுத்தல் இவை மூன்றும் மனக் குற்றங்கள். பொய்யான எச்சரிக்கை, கொடுமையான பேச்சு, பொறாமையான வார்த்தை, பொய் இந்த நான்கும் சொற்குற்றங்கள்.
பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவித்தல், பிறன் மனை விழைதல், திருடுதல் இவை உடற்குற்றங்களாகும்.
தியானத்தில் மேன்மையடைய விரும்பும் சாதகர்கள் இந்தப் பத்து குற்றங்களும் தன்னை அணுகாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவைகள் நம் மன அமைதியை சீர் குலைத்து விடும்.
ஆனால், தன்னை ஆராய்ந்து கொள்ளும் பாங்குடையவர்கள் இவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
ஒரு தீய எண்ணம் எழும் போதோ அல்லது ஒரு தீய செயலைச் செய்ய எண்ணம் எழும் போதோ அவற்றைக் குறித்து தனக்குள் கேள்வி எழுப்பி இதைச் செய்யலாமா ?
இப்படி எண்ணலாமா ?
நம் நிலைக்கு இது தகுமா ?
இதனால் நம் நல்வாழ்வுக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமா?
என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது அந்த எண்ணத்தின் வேகமானது குறைந்து விடும்.
எனவே அந்தக் குற்றத்திலிருந்து தப்பி விடலாம்.
அசுப எண்ணங்களை ஒழித்து சுபமாகப் பேசி, சுபமாக நடக்க வேண்டும்.
ஏனென்றால் சுபமே மங்களம்.
மங்களமே சிவம்.
எனவே சிவத்தோடு நம் உயிர் சக்தியை இணைக்க, சிவத்தோடு ஐக்கியமாக சுபமே கருவியாகும்.
எண்ணத்திலும், செயலிலும் சுபமில்லாதவர்கள் வெறும் சவமே.
"ஓம் சிவாயநம"
"ஆரோக்ய வாழ்வுக்கு மனோசக்தி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
Forwarded from ஆரோக்யமும் ஆன்மீகமும்
சமயவகுப்பு..!
“ஆன்மீகத்தில் ஓர் பட்டப்படிப்பு”
தற்காலத்தில் பள்ளிப்படிப்பில் எந்த நீதி பாடத்தையோ, தெய்வீகம் சம்மந்தமான பாடத்தையோ, ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தையோ காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
சமயவகுப்பு என்றால் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், ஆனால் சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம்.
சுவாமி விவேகாநந்தர் கனவை நினைவாக்கும் வகையில் எஃகுப் போன்ற உடலும், உருக்குப் போன்ற நரம்புகளும் உடைய தியாகிகளான தொண்டர்களாலே வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் சமயவகுப்புகளில் மாணவர்களுக்கு நமது பண்பாடு, மதம், நாடு இவற்றின் வரலாற்றையும், பெருமையையும் புரியவைக்கிறார்கள்
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
அவசியம் ஊர்கள் தோறும் இந்துசமய வகுப்புகள் தேவைப்படுகிறது..
ஏனென்றால் நம் பாரத தேசத்தின் இன்றைய நிலை நல்லோர்களுக்கும் கவலைக்கிடமாக அமைந்துள்ளது, அற்ப ஆசைகள் நிறைவேறும் என்ற மோகத்தில் மதமாற்றங்கள் அதிகம் காணப்படுகிறது. மக்கள் புராதன பெருமை மிக்க பாரத கலாச்சாரத்தை விடுத்து, வெளிநாட்டு நாகரிக மோகத்தால் பித்தேறி ஒழுக்கம் கெட்டு வருகின்றனர்.
இந்த இழிநிலை ஏற்பட காரணம் என்ன?
நாம் நமது சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்க தவறி விட்டோம். கோவில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் சமய அறிவை பெற இந்துவுக்கு வழியில்லாத நிலை.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
நாம் நமது நாட்டின் உயிர்நாடியாகிய இந்து சமயத்தை மறந்தோம் எனவே நாடு சீரழிகிறது, மக்களின் ஒழுக்கம் கெடுகிறது.
இந்த நிலை மாற நாம் செய்ய வேண்டிய பணியை "சுவாமி விவேகானந்தர்" நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.
பாரதநாட்டில் சோஷலிஸ அரசியல் கருத்துக்களை பரப்புமுன் ஆன்மீக கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்து ஓட செய்யுங்கள். நம் உபநிடதங்களிலும், மதநூல்களிலும், புராணங்களிலும் பொதிந்து கிடக்கின்ற அற்புதமான கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும். என்கிறார்..
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
இந்த சூழ்நிலையில் வருங்கால பாரத தேசத்தின் தூண்களான குழந்தைகளின் வாழ்க்கையின் மீது அக்கறை கொண்ட நம் இந்துதர்ம வித்யா பீடம்..
மாணவர்களுக்கு மழலைநிலை, தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என்ற வரிசையில் தனித்தனி பாடப்புத்தகங்கள் அமைத்து வருடந்தோறும் தேர்வுகள் நடத்தி சான்றிதழ்களும் ஊக்கப்பரிசுகளும் கொடுப்பதும், முதல்நிலை வெற்றி பெற்றோருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி, பஜனை பயிற்சி, திருவிளக்கு பூஜை பயிற்சி, யோகாசன பயிற்சி, சமயசடங்குகள் பற்றிய பயிற்சி, முதலிய பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.
மற்றும் சமயவகுப்புகளில் குழந்தைகளுக்கு தேவையான.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
விளையாட்டுகள்,
கதைகள், வரலாற்று சம்பவங்கள்,
பஜனை பயிற்சி,
இசை பயிற்சி,
நினைவாற்றல் விளையாட்டு,
தலைமைப் பண்பு பயிற்சி,
நேரம் தவறாமை பயிற்சி,
பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி,
தன்னம்பிக்கைக்கான பயிற்சி,
நினைவுத்திறன் பயிற்சி,
அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள்,
பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி,
பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி, மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது...
தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களும், மகளிரும், மாணவர்களும், பெரியோர்களும் ஊர்கள் தோரும் சமயவகுப்பு நடத்தவும், கற்கவும், கற்பிக்கவும் முன்வருமாறு அழைக்கிறோம்.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரம்தோறும் 1000 க்கும் மேற்பட்ட சமயவகுப்புகளில் சுமார் 50000 மாணவர்கள் பயில்கின்றனர், சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சில வகுப்புகளும், கேரளாவில் சில வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன.
ஆண்டு தோறும் 300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 15000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தோறும் சுமார் 50 பேர் வித்யாஜோதி பட்டம் பெறுகிறார்கள்..
ராமாயணமும், மகாபாரதமும், நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும், நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது. இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .
“ஆன்மீகத்தில் ஓர் பட்டப்படிப்பு”
தற்காலத்தில் பள்ளிப்படிப்பில் எந்த நீதி பாடத்தையோ, தெய்வீகம் சம்மந்தமான பாடத்தையோ, ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தையோ காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
சமயவகுப்பு என்றால் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், ஆனால் சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம்.
சுவாமி விவேகாநந்தர் கனவை நினைவாக்கும் வகையில் எஃகுப் போன்ற உடலும், உருக்குப் போன்ற நரம்புகளும் உடைய தியாகிகளான தொண்டர்களாலே வாரம் ஒருமுறை இரண்டு மணிநேரம் சமயவகுப்புகளில் மாணவர்களுக்கு நமது பண்பாடு, மதம், நாடு இவற்றின் வரலாற்றையும், பெருமையையும் புரியவைக்கிறார்கள்
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
அவசியம் ஊர்கள் தோறும் இந்துசமய வகுப்புகள் தேவைப்படுகிறது..
ஏனென்றால் நம் பாரத தேசத்தின் இன்றைய நிலை நல்லோர்களுக்கும் கவலைக்கிடமாக அமைந்துள்ளது, அற்ப ஆசைகள் நிறைவேறும் என்ற மோகத்தில் மதமாற்றங்கள் அதிகம் காணப்படுகிறது. மக்கள் புராதன பெருமை மிக்க பாரத கலாச்சாரத்தை விடுத்து, வெளிநாட்டு நாகரிக மோகத்தால் பித்தேறி ஒழுக்கம் கெட்டு வருகின்றனர்.
இந்த இழிநிலை ஏற்பட காரணம் என்ன?
நாம் நமது சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்க தவறி விட்டோம். கோவில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் சமய அறிவை பெற இந்துவுக்கு வழியில்லாத நிலை.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
நாம் நமது நாட்டின் உயிர்நாடியாகிய இந்து சமயத்தை மறந்தோம் எனவே நாடு சீரழிகிறது, மக்களின் ஒழுக்கம் கெடுகிறது.
இந்த நிலை மாற நாம் செய்ய வேண்டிய பணியை "சுவாமி விவேகானந்தர்" நமக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.
பாரதநாட்டில் சோஷலிஸ அரசியல் கருத்துக்களை பரப்புமுன் ஆன்மீக கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்து ஓட செய்யுங்கள். நம் உபநிடதங்களிலும், மதநூல்களிலும், புராணங்களிலும் பொதிந்து கிடக்கின்ற அற்புதமான கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும். என்கிறார்..
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
இந்த சூழ்நிலையில் வருங்கால பாரத தேசத்தின் தூண்களான குழந்தைகளின் வாழ்க்கையின் மீது அக்கறை கொண்ட நம் இந்துதர்ம வித்யா பீடம்..
மாணவர்களுக்கு மழலைநிலை, தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என்ற வரிசையில் தனித்தனி பாடப்புத்தகங்கள் அமைத்து வருடந்தோறும் தேர்வுகள் நடத்தி சான்றிதழ்களும் ஊக்கப்பரிசுகளும் கொடுப்பதும், முதல்நிலை வெற்றி பெற்றோருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி, பஜனை பயிற்சி, திருவிளக்கு பூஜை பயிற்சி, யோகாசன பயிற்சி, சமயசடங்குகள் பற்றிய பயிற்சி, முதலிய பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.
மற்றும் சமயவகுப்புகளில் குழந்தைகளுக்கு தேவையான.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
விளையாட்டுகள்,
கதைகள், வரலாற்று சம்பவங்கள்,
பஜனை பயிற்சி,
இசை பயிற்சி,
நினைவாற்றல் விளையாட்டு,
தலைமைப் பண்பு பயிற்சி,
நேரம் தவறாமை பயிற்சி,
பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி,
தன்னம்பிக்கைக்கான பயிற்சி,
நினைவுத்திறன் பயிற்சி,
அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள்,
பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி,
பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி, மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது...
தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களும், மகளிரும், மாணவர்களும், பெரியோர்களும் ஊர்கள் தோரும் சமயவகுப்பு நடத்தவும், கற்கவும், கற்பிக்கவும் முன்வருமாறு அழைக்கிறோம்.
https://youtu.be/TRD2qsvtiZc?sub_confirmation=1
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரம்தோறும் 1000 க்கும் மேற்பட்ட சமயவகுப்புகளில் சுமார் 50000 மாணவர்கள் பயில்கின்றனர், சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சில வகுப்புகளும், கேரளாவில் சில வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன.
ஆண்டு தோறும் 300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 15000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தோறும் சுமார் 50 பேர் வித்யாஜோதி பட்டம் பெறுகிறார்கள்..
ராமாயணமும், மகாபாரதமும், நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும், நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது. இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .
YouTube
சமயவகுப்பு | #samayavaguppu | ஹிந்துதர்ம வித்யாபீடம் | #சமயவகுப்பு | #வித்யாஜோதி
ச.பாலகிருஷ்ணன்
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம் கோவை.
(ஆன்மீக கல்வி ஆரோக்கிய உணவு பாரம்பரிய மருத்துவம்.) @Sevashram
மேலும் சமயவகுப்பு பற்றிய விபரங்களுக்கு :-
Contact :- +919442329468 +918300112434
Email: hdvpcbe@gmail.com, website: srivivekanandaashrama.com
"ஆரோக்யமும்…
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம் கோவை.
(ஆன்மீக கல்வி ஆரோக்கிய உணவு பாரம்பரிய மருத்துவம்.) @Sevashram
மேலும் சமயவகுப்பு பற்றிய விபரங்களுக்கு :-
Contact :- +919442329468 +918300112434
Email: hdvpcbe@gmail.com, website: srivivekanandaashrama.com
"ஆரோக்யமும்…