கீதாபஜன் - Geethabajan
63 subscribers
223 photos
7 videos
17 files
808 links
நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...

கீதாபஜன், வெள்ளலூர், கோவை
Download Telegram
மந்திர தியானம்..!

மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சிலர் “சோ-ஹம்” என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தும் போது ”சோ ஹம்” என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.

மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.

மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான்.

இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்திற்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்திற்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.

ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத நவக்கிரக பிரபஞ்ச சக்தி தாயே போற்றி..

சர்வதேச யோக தினம்" (ஜூன்21)

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

ஆரோக்ய வாழ்வுக்கு தியானம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
அனுபவத்தால் உணர்ந்தவர்கள்.!

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும்,..

நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள்...

எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள்.

ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர்.

பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும்.

’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது.

உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது...!

ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத நவக்கிரக பிரபஞ்ச சக்தியே போற்றி...!

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
உடலின் ஏழு சக்ராக்கள்..!

"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)


நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள்.

அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள்.

ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.

1) மூலாதார சக்ரா –

இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.

2) ஸ்வாதிஷ்டானா சக்ரா

இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.

3) மணிபுரா சக்ரா

இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

4) அனாஹதா சக்ரா

இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா

இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

6) ஆஜனா சக்ரா (ஆக்னை)
இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

7) சஹஸ்ரரா சக்ரா

இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.

இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
"தன்னம்பிக்கை தரும் அர்த்த சக்ராசனம்"

*"அர்த்த சக்ராசனம்"*


மனதின் கவனம்:-

முதுகெலும்பு.

மூச்சின் கவனம்:-

உடலை வளைக்கும்போது உள் மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, தளரும்போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள்:-

உடம்பின் முன்புறத்தசைகள் , கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.

முதுகுத் தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கிறது.

இது பாத ஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அந்த ஆசனத்தின் பலன்களை இது கூட்டுகிறது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

குணமாகும் நோய்கள்:-

ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது..

ஆன்மீக பலன்கள்:-

உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கிறது.

எச்சரிக்கை:-

இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு செய்யலாம். முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

வரும் ஜுன் 21 சர்வதேச யோகா தினம்..!

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
சூரிய நமஸ்காரம்..!

வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...!

யோகாசனத்தின் ஒரு பகுதியாக அமைவது சூரிய நமஸ்காரம் ஆகும். இதனால் உடல் உள ஆரோக்கியம், சுறுசுறுப்பு மற்றும் யோகநிலையை அடைவதற்குரிய ஏணிப்படிகளில் இதுவுமொன்று.

இதன் விளக்கம்..

சூரிய நமஸ்காரம் :-

(சூரியனுக்குவணக்கம் செலுத்தல்) இது யோகாசனத்தையும் பிராணாயாமம் எனப்படும் மூச்சையும் ஒன்றிணைக்கிறது.

அதாவது உடலை நன்கு வளையக் கூடிய தன்மையடையச் செய்து அதை (சூரியநமஸ்காரத்தை) தொடர்ந்து செய்யப்போகும் ஆசனங்களுக்கும் (ஹடயோகம்) பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் (சுவாசப்பயிற்சி) தியானத்திற்கும் நம்மைத் தயார்ப்படுத்துகிறது.

இது பொதுவாக சூரிய உதயத்தின்போதே செய்யப்படல் வேண்டும். இதன் மூலம் அதிகநன்மைகளை பெற முடியும். என்றாலும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இதைச் செய்வதுடன் வயிறு பெறுமையாக இருக்கும் போதும் செய்யலாம்.

குறிப்பு :-

சாப்பிட்டவுடனும், தேநீர் போன்ற பானங்களை அருந்தியவுடனும் இதை செய்வது தவிர்க்கப்படல் வேண்டும்.

செய்முறை :-

சூரிய நமஸ்காரத்தில் பொதுவாக 12 படிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றை எவ்வாறு செய்வது மற்றும் அவற்றிற்குரிய பெயர்கள், விளக்கங்கள் என்பவற்றைப் பார்ப்போம்.

படி 1 :- பிறையாசனம்.

கால்களைச் சேர்த்து நேராக நின்று இரு கைகளையும் கூப்பி நெஞ்சுடன் சேர்த்து வைக்கவும். பின் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி காதுடன் அணைத்தபடி உடம்பை பின் வளைக்கவும்.

இப்படிச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.

படி 2 :- பாதகஸ்தாசனம்...

உடம்பை முன்னுக்கு வளைத்து (கைகளை காதுடன் அணைத்த படி) நெற்றியால் முழங்கைத் தொடவும், கைகள்தரையைத் தொட்டபடி இருக்க வேண்டும்.

இப்படிச் செய்யும்போது மூச்சை வெளி விட்டபடி செய்ய வேண்டும்.

படி 3 :- ஏகபாதாசனம் (வலக்கால் பின்புறம்)

இந்நிலையில் வலக்கால் பின்புறமும் இடக்காலை படத்தினுள்ளவாறு மடித்து முன்புறமும் வைத்து இடது முழங்கால் இடகையில் அக்குருன் கீழ் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது மூச்சை உள்ளிளுத்த வண்ணம் செய்யவும் முதுகை வளைத்து தலையை உயர்த்த வேண்டும்.

படி 4 :- அர்த்த கம்சாசனம்..

படத்தில் உள்ளவாறு இருகால்களையும் நீட்டி கால் நுனி விரல்களாலும் உள்ளங்கைகளாலும் தரையைத் தொட்டவாறு நிற்கவும்.

உடம்மை வைக்காமல் நேராக வைத்து தரையிலிருந்து 30 பாகை வரை உடலை சரிவாக வைத்தல் வேண்டும்.

இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை முழுவதுமாக வெளியேற்றவும்.

படி 5 :- (சசாங்காசனம்)..

படத்திலுள்ளவாறு முழங்காலுக்குக் கீழ்ப்பகுதி தரையில் பதித்தவாறு குதிக்கால்கள் புட்டத்தில் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் அணைத்த வண்ணம் நெற்றியால் நிலத்தைத் தொடல் வேண்டும்.

இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை உள்ளிளுக்கவும்.

பின்னர் இந்ந நிலையில் நின்று கொண்டு சுவாசித்தல் வேண்டும்.

படி 6 :- (சாஷ்டாங்காசனம்)

கைகால்களை அசைக்காமல் அப்படியே மார்பை மன் தள்ளிக் கொண்டு இடுப்பை உயர்த்திய வண்ணம் (நிலத்தில் முட்டலாகாது) நாடியால் நிலத்தை தொடல் வேண்டும். மூச்சை வெளியே
விட்டபடி செய்யவும்.

படி 7 :- (புயங்காசனம்)

மூச்சை உள்ளிலுத் தலையை உயர்த்தி முதுகை வளைத்து குழவாக வைத்துத் தலையை உயர்த்தி மேலே பார்க்கவும்.

கைகால்கள் நகரக்கூடாது.

படி 8 :- (அர்தத சிரசாசனம்)

மூச்சை வெளி விட்ட வண்ணம் படத்திலுள்ளவாறு உள்ளங்கைகளும் பாதங்களும் முழவதும் நிலத்தில் முட்டியவாறு. தலையை இரகைகளுக்கிடையில் இருக்கக் கூடியவாறு கீழே தொங்க விடவும்.

இந்நிலையில் உடம்பு நன்றாக வளைக்க வேண்டும்.

படி 9 :- (சசாங்காசனம்)

5வது நிலையில் செய்தது போல செய்யவும்.

படி 10 :- (ஏக பாதாசனம்)

இடக்காலை பின்புறமாக வைத்து 3வது நிலையில்ச் செய்தது போல செய்யவும் அதாவது காலை மாற்றிச் செய்யவும் இதைச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.

படி 11 :- (பாதகஸ்தாசனம்)

மூச்சை வெளி விட்டது வண்ணம் 2வது நிலையில் செய்தது போல செய்யவும்.

படி 12 :- மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து இருகைகளையும் கூப்பி நெஞ்சின் மீது வைத்து சுவாசிக்கவும்.

சூரிய நமஸ்காரம் செய்வதனால் ஏற்படும் பொதுப்பலன்கள்..

1. சுவாசம், இரத்த ஓட்டம் என்பன சீராக நடைபெறுகிறது.

2. உடலை சுறுசுறுப்பாகவும், நரம்பு மண்டலங்களை விழிப்படைய வைத்து வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகின்றது.

3. வயிற்றுப் பகுதியில் காணப்படும் ஊழைச்சதைகள் மற்றும் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடற் பருமனைக்
குறைக்கச் செய்கின்றது.

4. இப்பயிற்சி மூலம் பெறும் பலன்கள் கூட யோகம் செய்வதனால் ஏற்படும் பலன்களுக்குச் சமனானதாகும்.

5. இப்பயிற்சியை 1 நிமிடத்திற்கு 4 தடவைகள் செய்யப்படல் வேண்டும்.

குறிப்பு :-

சூரிய நமஸ்க்காரத்தின் ஒவ்வொரு நிலையும் சரியான சுவாசத்தோடு முறைப்படி செய்தல் வேண்டும்.

ஓம் சூர்ய தேவாய நமக..!

வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...!
யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...!

வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...

யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்..

மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்..

இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது.

பெயர் விளக்கம்:

தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர்.

தத்துவம்:

தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது.

செய்முறை:

முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும்.

விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.

கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும்.

ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.

மூச்சின் கவனம்:

கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள்:

நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது.

குணமாகும் நோய்கள்:

ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க...
உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது.

‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

யாருக்கு இந்த ஆசனம்:

ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம்.

ஆன்மீக பலன்கள்:

மனஅமைதி

பயன்பெறும் உறுப்புகள் :

குதிக்கால்கள், கைகள்.

எச்சரிக்கை:

இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
"கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்"

"பாத ஹஸ்தாசனம்"

மனதின் கவனம்:

வயிற்றுப்பகுதி , முதுகு, எலும்பு, கால்களை..

மூச்சின் கவனம்:

கீழே குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு , நிமிரும்போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள் :-

உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன.முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.

குணமாகும் நோய்கள் :

ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.

ஆன்மீக பலன்கள் :

உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது.

எச்சரிக்கை :

அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்..!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
"வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்"

பரிவ்ருத்த திரிகோணாசனம்

மனம்:-

இடுப்புப் பகுதி மற்றும் கைகள்.

மூச்சின் கவனம்:-

குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள்:-

முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது .

வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன.

முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.

வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது.

சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன.

உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது.
இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.

குணமாகும் நோய்கள்:-

பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது.

உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.

எச்சரிக்கை :-

தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.

"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
தைராய்டு பிரச்சினையை போக்கும் - சர்வாங்காசனம்..!

ஆசனங்களின் தாய் - சர்வாங்காசனம்...!

உடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.

உடலின் அனைத்து பாகங்களையும் செம்மைப்படுத்தும்
சர்வாங்காசனம் ஆசனங்களின் தாய் என்று அழைக்கப்படுவது மிகவும் சாலச்சிறந்தது ஆகும்.

தாய் எவ்வாறு தன் சேயின் நலத்தில் அக்கறை கொள்வாரோ அதைப் போல உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த ஆசனம் என்று யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களால் போற்றப்படுகிறது இந்த ஆசனம்.

மனம் :

இருதோள்கள், கழுத்து.

மூச்சின் கவனம் :

இயல்பான மூச்சு..

சர்வாங்காசனம் செய்முறை :

தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.

கால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும்.

தலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.
பார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம்.

ஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து அமர வேண்டும். சர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை வழுங்கக் கூடாது.

உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.

சர்வாங்காசனம் பலன்கள் :

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இளமையை காக்கும்.
உடல் வளர்ச்சி காணும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.
சோம்பலை போக்கும்.
உடல் சதை போடாமல் தடுக்கும்.
தைராய்டு பாராதைராய்டு சிறப்பாக இயங்கும்.
ரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.
மர்ம ஸ்தானம், குதம் ஆகிய இடங்களில் தோன்றும் வியாதிகள் குணமாகும்.
கிட்னி கோளாறுகள் சரியாகும்
ரத்தம் சுத்தமடைவதால் வெண்குஷ்டம் போன்ற தோல் வியாதி நீங்கும்.
முகத்தில் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் வாழலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல், குழந்தையின்மை போன்றவை நீங்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதிகள் நீங்கும்.
முடி கொட்டுதல், இளநரையை கட்டுப்படுத்தும்.

உடல் ரீதியான பலன்கள் :

நூறுக்கும் மேற்பட்ட உடலியல் பலன்கள் இந்த ஆசனத்தை செய்வதால் கிடைக்கும்.
அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி.
தைராய்டு சுரப்பியை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளைநல்லவிதமாக தூண்டி பலமடைய செய்கிறது.
மூளை நல்ல இரத்த ஓட்டம் பெறுகிறது.
கண் பார்வை கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

குணமாகும் நோய்கள் :

வெரிகோஸ்வைன் என்ற இரத்தக் குழாய் புடைத்துப் போகுதல் சரியாகும்.
தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும்.
மூல நோய், குடல் வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம் போன்றவற்றை சரிசெய்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.

ஆன்மீக பலன்கள் :

நினைவாற்றல் வளர்கிறது மன ஒருமைப் பாட்டிற்கும் சமநிலையான மனதிற்கும் நல்லது.

எச்சரிக்கை :

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளேலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . ஆசனத்தில் இருக்கும் போது தலையை பக்கவாட்டில் திருப்பி பார்க்க கூடாது.

இந்த வாரம் சர்வதேச யோகா தினம்...!

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
சுழுமுனை நாடி சக்தியை உயர்த்தும் பஸ்சி மோத்தாசனம்..!

பஸ்சி மோத்தாசனம்..

செய்முறை:

நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும்,பாதங்கள் இணைந்து இருக்கட்டும். முன்னாள் குனிந்து கைகளால் உள்ளங்கால்களை தொடவும். கழுத்துக்கு கீழ் உள்ள உள்ள பகுதிகளை மடக்கி, தலையால் முழங்கால்களை தொடவும்.கைகளை மெதுவாக எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி, உடம்பையும் நேராக வைக்கவும்.

மனம் :

முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்..

மூச்சின் கவனம் :

குனியும்போது வெளி மூச்சு , ஆசனத்தின் போது இயல்பான மூச்சு ,நிமிரும் போது உள்மூச்சு..

உடல் ரீதியான பலன்கள் :

உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன்பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன.
உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பை பெறுகிறது.

கல்லீரல் , கணையம் , குடல் இவற்றில் ஜீரண சக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது.

வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணை புரிகிறது.

குணமாகும் நோய்கள் :

அஜீரணம் , மலச்சிக்கல், இடுப்பு வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம் , மூல நோய் , ஜீரணக் கோளாறுகள் முதலியவற்றுக்கான சிகிச்சையில் பலனளிக்கிறது.

வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது

ஆன்மீக பலன்கள் :

மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியை உயர்த்துகிறது.

மனம் மற்றும் உடல் சார்ந்த தொந்தரவுகளில் இருந்து யோகா தெரபி மூலம் தீர்வு கிடைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்

Yogic Science Astro Healing Therapy. Coimbatore. https://wa.me/919894012434

எச்சரிக்கை :

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பிடிப்பு , நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரண கோளாறுகளுக்கு வழிவகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும் என்பது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் நிலைப்பாடு.

யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!
ஆசையை விட விட ஆனந்த மாகுமே...!

நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது.

அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.

இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது.

இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.
இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.

சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது.

இது அளவு மீறி தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர்.

பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.
தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது.

அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும்.

யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது.

ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.

இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.

'பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி'

பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது என்கிறார் குதம்பைச் சித்தர்.

தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர் .

'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.'

Yogic Science Astro healing therapy – health and spiritual doubts contact through What’s app - https://wa.me/919894012434

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்....

எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி வாழ்வோம்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
ஆத்ம சக்தி ஓங்க..!

இந்தப் பிறவி வாய்த்தது கர்மாவினால். கர்மப் பதிவுகள்தான் உள்ளமாக எனக்குள் அமைந்து சூட்சுமமாக என்னை இயக்குகின்றன. கர்மா இருக்கும்வரை அல்லது கர்மப் பதிவுகளைப்பற்றி நாம் ஞானத்தால் அறிந்துகொள்ளும்வரை உள்ளம் கர்மாவிற்கு ஏற்றபடிதான் இந்த உடலை இயக்கும். அதுவரை நமது செயல்களும், வாழ்க்கையும் கர்மப் பலன்களின்படிதான் இருக்கும்.

ஞானம் பெற்ற பிறகு, அறியாமை நீங்கிக் குருவின் உதவியால் அறிவு ஒளி பெறும்போது, நமது உள்ளம் செயல்படும் விதம் நமக்குப் புரியத் துவங்கும். எனக்குத் தரப்பட்டிருக்கும் உள்ளத்தை நான் சரியாகவும் பாவிக்கலாம்; பிழையாகப் பாவிக்கவும் முடியும்.

உள்ளத்தில் நிறைந்திருப்பவை ஆசைகளும், அதன் காரணமாக எழுகின்ற கணக்கற்ற எண்ணங்களும் என முன்னரே நாம் அறிந்திருக்கிறோம். இந்த ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர, நம் மனதில் குவிந்திருப்பவை நினைவுகள். இந்த நினைவுகள் என்பவை கடந்த காலத்தைச் சேர்ந்தவைகளாக, நிகழ்காலத்திற்குரியவையாக, எதிர்காலத் திட்டங்களாக நம் மனதில் குடிகொண்டு சதா நம்மை அலைக்கழிக்கின்றன. நினைவுகள் யாராலுமே மறக்கமுடியாத விஷயங்களாக அப்படியே மனதில் தங்கிவிடுகின்றன. அவற்றை நினைத்து நினைத்து மகிழ்வதிலோ அல்லது துக்கப்படுவதிலோ மூழ்கி, எதிர்கால நமது செயல்களை நாம் தவறவிடுகின்றோம். இந்த நினைவுகள் கவனச் சிதறல்களை, மனச் சிதறல்களை ஏற்படுத்துகின்றன. சில நினைவுகள் அறவே மனதைவிட்டு நீங்கினால்தான் நம் மனம் ஒன்றுபடும். தெளிந்த, தூய்மையான காலிப் பாத்திரமாக மனம் மாறும். அப்படிப்பட்ட மனதில்தான் ஆத்ம சக்தி வந்து நிறையும்.

நினைவுகள்தான் எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. எண்ணமென்பது சக்தி. நினைவில்லாவிட்டால் எண்ணமில்லை. நினைவில் இருந்துதான் நான் என்பது உதிக்கிறது. நினைவில்லையேல் நான் இல்லை. நினைவில்லாத இடத்தில் ஆத்மா செயல்படும். ஆத்மா என்னில் வெளிப்பட வேண்டுமெனில், மனதில் அதற்கு இடமிருக்க வேண்டும். மனதின் அடி ஆழத்தில் இருப்பது ஆத்மா. நான் என்னை ஆன்மாவாக எல்லா இடத்திலும் உணர ஆரம்பித்தால், ஆத்மா எல்லாவற்றையும் எனக்காக நடத்தித் தரும். ‘மன அடி ஆழத்திற்குப் போனால் பிரபஞ்சம் தெரிகிறது’! என கார்ல் யங் என்ற உளவியல் அறிஞன் கூறினான். இதன் பொருள், எல்லாமாக இருப்பது ஆத்மாவே; அது எனக்குள்ளும் இருக்கிறது என்பதுதான்.

மனதை நினைவுகளிலிருந்தும், அவற்றால் ஏற்படும் எண்ணங்களிலிருந்தும், பயனற்ற ஆசைகளிலிருந்தும் விடுவித்து எண்ணமில்லாத அமைதி நிலையில் நாம் போகின்றபோது மூளையிலுள்ள செல்கள் அமைதி அடைகின்றன. உடல் முழுவதும் கிளர்ச்சிகள் நீங்கி அமைதி அடைகின்றது. ஒரு சுகமான நிலை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் ஏற்படுகின்றது. உள்ளம் பெற்ற அமைதியால் உடல் நலம் பெறுகின்றது. மனக் கிளர்ச்சியால், மனச் சிதறலால் ஏற்பட்ட நோய்கள் குணமடைந்து இல்லாமல் மறைகின்றன. அறிவு தெளிவாகச் செயல்படுகின்றது. நமது செயல்களில் உயர்வுத் தன்மை ஏற்படுகின்றது.

இந்த அமைதி நிலையை அடையத் தியானம் உதவுகின்றது. காலமும், எண்ணங்களும் அசைவைத் தருகின்றன. எண்ணமில்லையேல் காலம் இல்லை; அசைவும் இல்லை. தியானத்தில் அசைவில்லை; காலம் இல்லை. அசைவற்ற நிலை வாய்க்கும்போது, சக்தி செலவழிவதில்லை. மாறாக, சக்தி சேமிக்கப்படுகிறது. எண்ணங்களாலும், செயல்களாலும் இடைவிடாமல் சக்தி வீணாகின்ற நிலை மாறி, உடலும் மனமும் அசைவின்றித் தியானத்தில் ஆழ்கின்றபோது, சக்தி சேமிப்பு நிகழ்கின்றது. மேலும், ஆத்ம சக்தி பெருகுகின்றது.

ஐம்புலன்களும் அதனதன் இடத்தில் அமைதிபெற்று அடங்கியிருக்க, மனம் சலனமற்று, புத்தி ஆத்மாவில் ஒடுங்குகின்றபொழுது, அங்கு ஆத்மா வெளிப்பட்டு நிறைகின்றது. ஆத்மாவாகத் தன்னை மாற்றுபவன் பிரபஞ்சப் பிரஜை ஆகின்றான். அவனால் உலகம் அமைதி அடைகின்றது. மௌனமும் நிசப்தமும் எனக்குள் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துகின்றன. இந்த அமைதி உடலை நோயற்றதாக்குகின்றது. காலமும், அசைவும் உணராத உடலில் நோய் வராது.

இந்த மனம் என்பது, சிதறாமல் இருப்பதற்குப் பொறுமை என்னும் குணம் மிகமிகத் தேவை. பொறுமை என்பது மனம் சிதறாமல் ஒருமித்து இருப்பது. மனம் சிதறுகின்றபோதுதான் நான் உயர் உணர்வு உள்ளவனா, கீழ் மன உணர்வு உள்ளவனா என்பதை அறிய முடியும். மனம் ஒருமித்து, எந்தச் செயலையும் செய்ய முற்படாமல், அமைதியாக இருந்தால் அந்தப் பொறுமையானது செயலைத் தானாக நடக்க வைக்கும்.

பொறுமையின்மை மன அமைதியைக் குலைத்து, மனச் சமநிலையையும் கெடுக்கும். நான் தொடர்பு கொள்கின்ற விதத்தில் வெளிச் சூழ்நிலை என்னைப் பாதிக்கும்; அல்லது அமைதி அடைய வைக்கும். பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் நம்மால் உலகச் சூழ்நிலையையே அமைதிப்படுத்த முடியும்.