BK ASTROLOGY
318 subscribers
6 photos
1 video
3 links
ஜோதிடம், ஆன்மீகம், சித்தர்கள் பற்றிய பதிவுகள். ஜாதகம் கணித்து பலன்கள் அறிய அணுகவும் முன்பதிவு அவசியம் தேவை.
Download Telegram
Happy birthday Arjun. All time favorite pic.
9👍3
Dear All. Thanks for the wishes🙏 Tomorrow and Sunday appointment available. If any one need means ping here or my id
@Bka280509
சந்திரனின் ஆதிபத்யங்கள்

சொந்த வீடு: கடகம்
நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.
சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம்
உச்சவீடு: ரிஷபம்
நீசவீடு: விருச்சிகம்
பகைவீடு: எதுவுமில்லை
சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்
சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி.
வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால்
அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.
வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன்
நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில்
பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள்
கிடைக்காது. இது பொது விதி

அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்?

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள்
இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து
181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும்
சந்திரன் தேய்பிறைச் சந்திரன்

அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை
உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல்
அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை)
நாட்கள்.
DM For Appointments below ID

@Bka280509
2
அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜோதிட சேவையில். நாளை முதல்... பதிவுகள் மற்றும் ஜாதக ஆலோசனை ஆரம்பம். முன் பதிவு அவசியம். டெலெக்ராம் வாடிக்கையாளற்கு மட்டும் 🙏🙏🙏 நன்றி
👍4
புதாத்திய யோகம்: புதனும் சூரியனும் சேர்ந்து இருக்கும்போது இது உருவாகிறது, மேலும் இந்த யோகம் கல்வி மற்றும் அறிவில் சிறப்பைத் தருகிறது.
கேதார யோகம்: பல தொழில்களைச் செய்து வெற்றி மற்றும் செல்வத்தை ஈட்டக்கூடியவர்களுக்கு இந்த யோகம் உண்டு. இது சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துகிறது.
துருதுரா யோகம்: சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் இருக்கும்போது இது உண்டாகிறது, இது கடமை உணர்வு மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது.
கேம துர்ம யோகம்: சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.
பாரிஜாத யோகம்: தாமதமான பலன்கள் மற்றும் திருமண வாழ்க்கையில் சிரமங்கள் போன்ற சவால்களை இது குறிக்கலாம்.
கேதார யோகம் என்பது ஜோதிடத்தின்படி, ராகு, கேதுவைத் தவிர்த்து, மற்ற ஏழு கிரகங்களும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) ஜாதகத்தில் ஏதேனும் நான்கு ராசிகளில் அமைந்திருக்கும் ஒரு அபூர்வமான யோகமாகும், இது பிறப்பவர்களுக்கு நிலம், விவசாயம், பண்ணைகள் மூலம் செல்வம், மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையைத் தரும் .
கேதார யோகத்தின் முக்கிய அம்சங்கள்:
கிரக அமைப்பு: ராகு-கேதுக்கள் இல்லாமல், மீதமுள்ள 7 கிரகங்கள் 4 தனித்தனி ராசிகளில் அமைந்திருக்க வேண்டும்.
பலன்கள்:
செழிப்பான வாழ்க்கை: செல்வச் செழிப்புடன், மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
பூமி யோகம்: நிலம், விவசாயம், பண்ணைத் தொழில்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவார்கள், ஏனெனில் செவ்வாயின் அருள் இருக்கும்.
யோகத்தின் தன்மை: இது ஒரு அரிதான யோகமாகக் கருதப்படுகிறது, இது ஜாதகத்தில் சிறப்பு கிரக அமைப்பின் மூலம் உருவாகிறது.
4
ஜோதிடத்தில் அமலா யோகம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த, அதிர்ஷ்டம் தரும் யோகமாகும்; இது லக்னம் அல்லது சந்திரனில் இருந்து பத்தாம் இடத்தில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமர்வதால் உருவாகிறது, இது செல்வம், வெற்றி, புகழ், மற்றும் வாழ்க்கையில் உயர்வு போன்ற நன்மைகளைத் தரும்.
அமலா யோகத்தின் விளக்கம்
கிரக அமைப்பு: உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10-ஆம் வீட்டில் (பத்தாம் இடம்) குரு , சுக்கிரன் , புதன் போன்ற நல்ல கிரகங்கள் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உருவாகும்.
நன்மைகள்: அமலா யோகம் கொண்டவர்கள் வாழ்வில் செல்வ வளத்தையும், வெற்றியையும், நல்ல பெயரையும், அதிகாரத்தையும் பெறுவார்கள் என ஜோதிடம் கூறுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் யோகங்களில் ஒன்றாகும்.
if anyone need appointment means kindly contact DM me
கிரகங்களின் வக்ர நிலை பலன்கள் (தனித்தனியாக):
வக்ர செவ்வாய்: அதீத ஆற்றல், கோபம், அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் அதிரடி முடிவுகளைத் தரும்.
வக்ர புதன்: புத்திசாலித்தனத்தில் மாற்றுப் பார்வை, ஆழ்ந்த சிந்தனை, ஆனால் தகவல் தொடர்பில் குழப்பங்கள் ஏற்படலாம்.
வக்ர குரு: ஆழ்ந்த ஆன்மீகம், ஞானம் மற்றும் தத்துவ சிந்தனையைத் தரும். சில நேரங்களில் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
வக்ர சுக்கிரன்: உறவுகளில் தனித்துவமான அல்லது வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை, காதலில் கர்மா தொடர்புகளைக் குறிக்கும்.
வக்ர சனி: கடுமையான உழைப்பு, ஒழுக்கம் மற்றும் முன்ஜென்மக் கடன்களைத் தீர்க்க வைக்கும். பொறுமையாகப் பலன்களைத் தரும்.
பரிகாரம்:
வக்ர கிரகம் உள்ளவர்கள், அந்தந்த கிரகம் தொடர்பான அதிதேவதைகளை வழிபடுவது, தானம் செய்வது மற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
ஒரு கிரகம் வக்கிரமடைந்து, அஸ்தங்கம் அடையாவிட்டால் மிகவும் வலுவாகக் கருதப்படும். அதே போல் வக்கிரமடைந்த ஒரு கிரகம் உச்சமடைந்திருந்தாலோ அல்லது பகை வீட்டில் அமர்ந்தாலோ, அந்த கிரகம் வலுவாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் வக்கிர பலம் பெற்ற ஒரு கிரகம் அசாதாரண தன்மை அல்லது விபரீதமான நிலை பெற்று பலன்தர வல்லது.சூரியன் மற்றும் சந்திரன் இவைகள் வக்கிரம் பெறுவது கிடையாது.
Dear all,

Starting tomorrow, regular posts will be shared in our Telegram group. Your support and participation are highly appreciated.

Thank you!
👍9
லக்னாதிபதி
லக்னாதிபதி என்பது ஜாதக கட்டத்தில் முதலாம் வீடு அதிபதியை குறிக்கும் .ஒருவர் சமுகம் மற்றும் உறவினர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால், லக்னாதிபதி நல்ல இடங்களில் இருக்க வேண்டும். நல்ல இடங்கள் என்பது லக்னத்தில் இருப்பது , ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருபதாகவும். இரண்டு மற்றும் பத்தாம் வீடுகளில் கூட இருக்கலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நீச்ச வீடுகளில் அல்லது மறைவு ஸ்தனங்கள் ஆகிய மூன்றாம் வீடு, ஆறாம் வீடு , எட்டாம் வீடு, மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருக்க கூடாது. இவர்கள் சமுகத்தில் நல்ல மதிப்பை பெறுவது மிகவும் கடினம்.

லக்னாதிபதி ஒருவருடைய ஜாதகத்தில் பனிரெண்டாம் வீட்டில் அமைய பெற்றால் அவர் வாழ்கையில் அலைச்சல்கள் நிறைய இருக்கும் .வீண் விரயங்கள் அடிக்கடி அவர் வாழ்கையில் ஏற்படும். பனிரெண்டாம் வீட்டில் அமையபெற்ற லஞதிபதியுடன் சுக்கிரன் அல்லது ராகு இணைந்தால் பெண் வழி தொடர்புகள் ஏற்பட்டு பல இன்னல்களை அனுபவிப்பர். தீய கிரகங்களின் பார்வை ஏற்பட்டால் சிலருக்கு சிறை தண்டனை ஏற்பட வாய்புகள் உண்டு.

லக்னாதிபதி நான்காம் வீட்டில் அமையபெற்றால் நல்ல கல்வி, அன்பு செலுத்தும் தாயார், நல்ல வாகனங்கள் மற்றும் குடியிருக்க நல்ல வீடு அமையும். சுக ஸ்தானமாகிய நான்காம் வீடு லஞதிபதியால் வலுவடைவதால் சுகமான வாழ்கை அமைய தடை இருக்காது. லக்னாதிபதி சுக்கிரனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி அனுபவிபவராக இருப்பார். லக்னாதிபதி குருவாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல கல்விமானாகவும் ஒழுக்க சீலராகவும் இருப்பார். லக்னாதிபதி செவ்வாய் அக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல விளையாட்டு வீரராக திகழ்வார். லக்னாதிபதி புதனாக இருந்து நான்காம் வீட்டில் இருந்தால் புத்திசாலிதனத்தால் எதையும் சாதிபவராக திகழ்வார்.
1
பாபகர்த்தாரி யோகம் என்பது ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் அல்லது வீடு (பாவம்), இருபுறமும் பாப கிரகங்களால் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) சூழப்பட்டிருக்கும் நிலையாகும். இது 12-ஆம் மற்றும் 2-ஆம் வீடுகளில் பாப கிரகங்கள் அமரும்போது உருவாகிறது, இதனால் அந்த பாவம் அல்லது கிரகம் பலவீனமடைந்து, தொடர்புடைய விஷயங்களில் தடைகள், போராட்டங்கள் மற்றும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தக்கூடும்.

பாபகர்த்தாரி யோகத்தின் முக்கிய அம்சங்கள்:

அமைப்பு: ஒரு ராசிக்கு முன் ராசியிலும் (12-ல்) பின் ராசியிலும் (2-ல்) தீய கிரகங்கள் இருப்பது.
பாதிப்பு: அந்த வீட்டில் உள்ள கிரகம் நன்மைகளை வழங்க முடியாமல், அதன் காரகத்துவங்கள் (உதாரணமாக, 4-ம் வீடு பாதிக்கப்பட்டால் சுகம், வீடு, வாகனம்) பாதிக்கப்படும்.

தீர்வு: சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இந்த யோகத்தின் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்
3
விபரீத ராஜ யோகம்

எந்த ஒரு லக்னத்திற்கும் 6, 8 மற்றும் 12 ஆம் வீட்டு அதிபதிகள் என்னும் மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றாலோ அதாவது

6 ஆம் அதிபதி 8 அல்லது 12 இல் இருந்தாலோ

8 ஆம் அதிபதி 6 அல்லது 12 இல் இருந்தாலோ

12 ஆம் வீட்டு அதிபதி 6 அல்லது 8 இல் இருந்தாலோ

இந்த மூன்று வீட்டு கிரகங்களும் 6 அல்லது 8 அல்லது 12 இல் இணைந்து இருப்பது

விபரீத ராஜ யோகம் எனப்படும்.

இந்த யோகம் உள்ளவர்களுக்கு இந்த தசை நடக்கும் பொழுது எதிர்பாராமல் ஒரு சில நன்மைகள் உண்டாகும், அதிர்ஷ்டம் மூலம் பொருளாதார மேம்பாடு கிடைக்க பெறுவார்கள்.
DM me for appointments....
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு வாசி யோகம், வேசி யோகம் மற்றும் உபயாச்சாரி யோகம் என்ற மூன்று யோகங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் சந்திரனை வைத்து மட்டுமே 3000 - த்துக்கும் மேற்பட்ட யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மிகவும் முக்கியமாக குரு சந்திர யோகமும், கஜ கேசரி யோகமும் கருத்தப்படுகிறது.

குரு சந்திர யோகம் :

சந்திரனுக்கு குரு 1,5,9 இல் (திரிகோணத்தில்) இருந்தால் இது குருச்சந்திர யோகம் என்று அழைக்கப்படும்.

கஜ கேசரி யோகம் :

சந்திரனுக்கு குரு 4,7,10 இல் (கேந்திரத்தில்) இருந்தால் இது கஜ கேசரி யோகம் என்று அழைக்கப்படும்.

லக்கினத்திற்கு திரிகோண ஸ்தானத்தில் குரு இருப்பின் லக்கினத்தை குரு 5 அல்லது 9 ஆம் பார்வையால் நிச்சயம் பார்வை செய்வார். மேலும் சந்திரனுக்கு திரிகோணத்தில் குரு இருப்பின் மனோகாரகன் ஆன சந்திரனை 5 அல்லது 9 ஆம் பார்வையால் பார்த்து சந்திரனை சுப வலு படுத்துவார்.இதனால் ஜாதகர் வீடு, மனை, வண்டி வாகனம், நிலம், வயல், பெயர் மற்றும் புகழோடு சுக போக வாழ்வை அனுபவிப்பார்.

# இதனால் ஜாதகர் மிகவும் நல்ல மன நிலையில் எப்போதும் இருப்பார்.

# ஜாதகர் குறைந்த பட்சம் ஊரில் உள்ள பெரும்பாலான மக்களால் அறியப்பட்டவராக இருப்பார்.

# ஜாதகர் தனித்தன்மை வாய்ந்த நபராக இருப்பார்.

# எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் ஜாதகருக்கு அதிகம் இருக்கும்.

# உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து முன்னேற்றம் காணும் எண்ணம் ஜாதகருக்கு அதிகம் இருக்கும்.

# இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சந்திரனோ அல்லது குருவோ ஆட்சி உச்சம் பெற்று லக்கினத்திற்கு மறைவு ஸ்தானம் பெறாமல் இருப்பது அவசியம்.

# சந்திரனுடன் குரு ஒரே வீட்டில் இருக்கும் பட்சத்தில் சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருப்பது நல்லது.

# சந்திரனும் குருவும் லக்கினத்திற்கு 7 ஆம் வீட்டில் சேர்க்கை பெறாமல் இருந்தால் இன்னமும் நல்லது.

# குரு சந்திர யோகம் முழுமையாக செயல்படும் காலம் என்பது சந்திர திசை குரு புத்தியில் மற்றும் குரு திசை சந்திர புத்தியில் நிச்சயம் உண்டாகும்.
சிவராஜ யோகம் என்பது சூரியன் (ஆத்ம காரகன்/அரசு) மற்றும் குரு (ஞானம்/செல்வம்) ஆகிய இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகத்தில் உருவாகும் ஒரு அபூர்வ மற்றும் சக்திவாய்ந்த ராஜயோகமாகும். இது ஒருவரை அதிகாரமிக்க பதவி, செல்வம் மற்றும் புகழ் பெறச் செய்யும்.
சிவராஜ யோகம் உருவாகும் முக்கிய விதிகள்:

கிரக சேர்க்கை: சூரியனும் குருவும் ஒரே ராசியில் இணைந்திருப்பது.

பார்வை: சூரியனை குரு பகவான் பார்வையிடுவது (5, 7, 9-ம் பார்வைகள்).
சம சப்தமம்: சூரியனும் குருவும் ஒன்றைக்கொன்று நேர் எதிரே (7-ம் வீடு) பார்த்துக் கொள்வது.

ராசி அமைப்புகள்: 9-ம் அதிபதி 10-லும், 10-ம் அதிபதி 5-லும் இருப்பது.
சிறப்பு நிலை: இந்த இரு கிரகங்களும் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு வீடுகளில் இருப்பது அதிக நன்மைகளைத் தரும்.

பயன்கள்:
அரசு வேலை, உயர் பதவிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை வழங்கும்.
அதிக செல்வம் மற்றும் கௌரவமான சமூக நிலை.
சிவ வழிபாடு இந்த யோகத்தின் பலனை அதிகரிக்கும்.

இந்த யோகம் ஜாதகத்தில் அசுப கிரகங்களின் (ராகு-கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருப்பது சிறப்பு.
அனைவருக்கும் வணக்கம். முன்பதிவு தேவை படுவோர் inbox இல் தொடர்பு கொள்ளவும் அல்லது கமெண்ட் செய்யவும்

@Bka280509
நவாம்சம்
1
நவாம்சத்தில் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். வயிற்றில் உபாதைகள் ஏற்படும்.
2.
நவாம்சத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகன் தன் இனத்தைவிட்டு, வேறு இனப்பெண்ணை மணந்து கொள்வான். சொந்த உறவுகளோடு அவனுக்குப் பிரச்சினைகள் உண்டாகும்
3.
நவாம்சத்தில் சனியுடன், சந்திரன் சேர்ந்திருந்தால், ஜாதகன் பணத்தின்மேல் மிகுந்த பற்று வைத்திருப்பான்.யாருக்காகவும் ஒரு பைசா செலவழிக்க மாட்டான்.
4.
நவாம்சத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தால், பெண்களுக்கு மாதவிடாய்,, மற்றும் கர்ப்பப்பைப் பிரச்சினைகள் உண்டாகும். ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான பபிரச்சினைகள், கோளாறுகள் வரும். கடகத்தில் அல்லது விருச்சிகத்தில் இந்த அமைப்பு இருந்தால், இந்தப் பிரச்சினை நிச்சயம் உண்டாகும்.
5.
நவாம்சத்தில் சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்கும் குரு, ஜாதகனுக்கு நல்ல, ஸ்திரமான செல்வத்தைக் கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கொடுக்கும். வயதாக வயதாகப் பண இருப்பு அதிகமாகிக் கொண்டே போகும்.
6.
நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.
1
அனைவருக்கும் வணக்கம். முன்பதிவு தேவை படுவோர் inbox இல் தொடர்பு கொள்ளவும் அல்லது கமெண்ட் செய்யவும்
Saturday and Sunday appointment available.

@Bka280509
குரு பகவான்
முதல்நிலை சுபக்கிரகமான குரு ஜாதகத்தில் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும்!

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம்.

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில் நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்?

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்.

அது முக்கியம்.

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர் லக்கினத்தைத் தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான். 5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர் தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம் பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான்.

கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அதுபோல 4, 7, 10ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நல்லதே! நன்மையான பலன்கள் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக 2,11 ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நன்மையே!

குரு உச்சம் பெற்று இருந்தால் அதிக நன்மைகளைச் செய்வார். அவருடைய தசா, புத்திகளில் அந்த நன்மை களைக் கொடுப்பார்.

சரி, குரு எங்கே இருக்கக் கூடாது?

3,6,8,12 ஆம் வீடுகளில் குரு இருக்ககூடாது. அதோடு அவர் ஜாதகத்தில் நீசமாகி அடிபட்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால், ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.