BK ASTROLOGY
318 subscribers
6 photos
1 video
3 links
ஜோதிடம், ஆன்மீகம், சித்தர்கள் பற்றிய பதிவுகள். ஜாதகம் கணித்து பலன்கள் அறிய அணுகவும் முன்பதிவு அவசியம் தேவை.
Download Telegram
திரிகோணம் அமைப்பு என்பது ஜோதிடத்தில் ஒரு ராசிச் சக்கரத்தின் மூன்று முக்கிய வீடுகளைக் குறிக்கும் ஒரு நிலையாகும். லக்னம், 5ம் இடம் மற்றும் 9ம் இடம் ஆகியவை திரிகோண அமைப்பை உருவாக்குகின்றன. இந்த அமைப்பு, ஒருவரின் ஜாதகத்தில் நல்ல அதிர்ஷ்டங்களையும், நன்மைகளையும் குறிக்கும்.
லக்னம், 5ம் இடம் மற்றும் 9ம் இடம் ஆகியவை ஒருவருடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான பிறப்பு, வளர்ச்சி, அறிவு மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த வீடுகள் முக்கோண வடிவில் அமைந்திருப்பதால், "திரிகோணம்" என்று அழைக்கப்படுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் திரிகோண அமைப்பு பல நல்ல பலன்களையும், நன்மைகளையும் தரக்கூடியதாக அமைகிறது.
ஒருவர் ஜாதக அவருக்கு 1,5,9 ஸ்தானங்கள் உடன் கர்மா என்று கூறப்படும் 10 பாவமும் வலுவுடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த ஸ்தானத்தில் பகைவர்கள் மற்றும் பாதகாதிபதி / அஷ்டமாதிபதி சேர்க்கை பார்வை பெறாமல் இருந்தால் அவர்கள் ராஜயோகர்கள். அந்த ஜாதகர் வாழ்நாளில் நினைப்பதெல்லாம் செய்து முடித்து, புகழ் பெரும் அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வொருவர் ஜாதகத்திலும் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ ஸ்தானங்கள் கட்டாயம் கெட்டிருக்கும். ஒரு சிலர் வாழ்வின் அடிமட்டத்திலேயே வாழ்ந்து இறக்கும் வரை துன்பமே வரமாக பெறுவார்கள். இவர்களுக்கு இந்த திரிகோண ஸ்தானங்கள் மற்றும் முழு சுபர் குரு பெரும் பாதிப்புடன் இருக்கும்.
ராகு மற்றும் கேது நேற்று அதாவது மே 18 அன்று தங்கள் ராசியை மாற்றுகிறார்கள். எப்போதும் பின்னோக்கி நகரும் ராகு மற்றும் கேது, ஒவ்வொரு ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார்கள். அந்தவகையில் மே 18, 2025 அன்று மாலை 7:35 மணிக்கு, ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதற்கு முன், மாலை 4:30 மணிக்கு, கேது தனது ராசியை மாற்றி சிம்ம ராசிக்குள் நுழைக்கிறார்கள்.

நாளை முதல் முழு பலன்கள் வெளிவரும்...
👍3
ஜோதிடம் யார் கற்கலாம்..
புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.
புதன் வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

என்னிடம் அடிப்படை ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். குறைந்த கட்டணத்தில் அடிப்படை ஜோதிடம் 15 நாட்கள் பாடங்கள் மூலம் சொல்லி தர படும். Limited persons only


Contact id: @Bka280509
பஞ்ச மகாபுருஷ யோகம்

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.
பலன்
ஜாதகன் ராஜா வை போல வாழ்வாங்கு வாழ்வான்.
கல்வி யில் சிறந்து விளங்குவான்
அரசியல் தலைமை தாங்குவான்.
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
களத்திர தோஷம் என்பது லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தில் உள்ள கிரகத்தையோ ஏழாம் இடத்துக்கு உரிய கிரகத்தையோ குறிக்கும். ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் இடத்துக்கு உரிய கிரகம் சூரியன் என்றால் ஆடுதுறை சூரியனார் கோயில் சென்று களத்திர தோஷம் நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டும்.
சந்திரன் என்றால் திருப்பதி.
செவ்வாய் என்றால் வைத்தீஸ்வரன் கோயில். புதன் என்றால் திருவெங்காடு.
குரு என்றால் ஆலங்குடி அல்லது பாடி திருவலிதாயம்.
சுக்ரன் என்றால் ஸ்ரீ ரங்கம் அல்லது கஞ்சனூர்.
சனி பகவான் என்றால் திருநள்ளாறு அல்லது குச்சனூர்.
ராகு என்றால் திருநாகேஸ்வரம்.
கேது என்றால் கீழ் பெரும் பள்ளம்.ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து என்றால் ஸ்ரீ காலகஸ்தியில் ராகு கால மற்றும் எமகண்ட வேளையில் பரிகாரம் செய்ய வேண்டும். இவை யாவும் பொது பலன்கள்.

அப்பொய்ன்மெண்ட் தேவை என்றால் கீழ உள்ள id இல் தொடர்பு கொள்ளவும்...


@Bka280509

🙏🙏🙏🙏🙏🙏
👍1
Anybody need appointment today and tomorrow means png me in below id

@Bka280509
குரு பார்வை
குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும் நிலை. இது திருமண யோகம், நல்ல பலன்கள் தருவதாக நம்பப்படுகிறது. குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களில் உங்கள் ராசியை பார்த்தால், அதை வியாழ நோக்கம் or குரு பார்வை என்கிறோம்.
கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அலல்து பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான திசை நடந்தாலே திருமணம் நடந்து விடும். கோச்சாரத்தை பார்ப்பதை விட்டு விட்டு அனைவரும் திசாபுக்தி பலன்களை பாருங்கள்.
அன்பர் ஒருவரின் சந்தேகத்திற்கான பதில் இது
👍3
செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன்
ஆங்கிலத்தில் மார்ஸ். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு!
கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன்
நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம்.
இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9
செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர்,காளி

1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில்
அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால்
ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல்
ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.

2. தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று
லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல்
களும் 4ற்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான்
அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான்.



3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை உடையவர்கள், தாங்கள் பங்கு
பெற்றுள்ள துறையில் உச்சமான பதவியை அடைவார்கள்.

என் மகன் பிறந்த நாளை முன்னிட்டு பாதி கட்டணத்தில் 28 ஆம் தேதி ஜாதகம் பார்க்க படும்

ஒரு ஜாதகம் Rs. 301 மட்டும். முதல் 10 பேர்கு மட்டும்
என் மகன் பிறந்த நாளை முன்னிட்டு பாதி கட்டணத்தில் 28 ஆம் தேதி ஜாதகம் பார்க்க படும்

ஒரு ஜாதகம் Rs. 301 மட்டும். முதல் 10 பேர்கு மட்டும்

முன் பதிவிற்கு கீழ் உள்ள id இல் அணுகவும்

@Bka280509
Happy birthday Arjun. All time favorite pic.
9👍3
Dear All. Thanks for the wishes🙏 Tomorrow and Sunday appointment available. If any one need means ping here or my id
@Bka280509
சந்திரனின் ஆதிபத்யங்கள்

சொந்த வீடு: கடகம்
நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.
சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம்
உச்சவீடு: ரிஷபம்
நீசவீடு: விருச்சிகம்
பகைவீடு: எதுவுமில்லை
சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்
சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி.
வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால்
அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.
வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன்
நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில்
பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள்
கிடைக்காது. இது பொது விதி

அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்?

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள்
இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து
181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும்
சந்திரன் தேய்பிறைச் சந்திரன்

அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை
உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல்
அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை)
நாட்கள்.
DM For Appointments below ID

@Bka280509
2
அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜோதிட சேவையில். நாளை முதல்... பதிவுகள் மற்றும் ஜாதக ஆலோசனை ஆரம்பம். முன் பதிவு அவசியம். டெலெக்ராம் வாடிக்கையாளற்கு மட்டும் 🙏🙏🙏 நன்றி
👍4
புதாத்திய யோகம்: புதனும் சூரியனும் சேர்ந்து இருக்கும்போது இது உருவாகிறது, மேலும் இந்த யோகம் கல்வி மற்றும் அறிவில் சிறப்பைத் தருகிறது.
கேதார யோகம்: பல தொழில்களைச் செய்து வெற்றி மற்றும் செல்வத்தை ஈட்டக்கூடியவர்களுக்கு இந்த யோகம் உண்டு. இது சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துகிறது.
துருதுரா யோகம்: சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் இருக்கும்போது இது உண்டாகிறது, இது கடமை உணர்வு மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது.
கேம துர்ம யோகம்: சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.
பாரிஜாத யோகம்: தாமதமான பலன்கள் மற்றும் திருமண வாழ்க்கையில் சிரமங்கள் போன்ற சவால்களை இது குறிக்கலாம்.
கேதார யோகம் என்பது ஜோதிடத்தின்படி, ராகு, கேதுவைத் தவிர்த்து, மற்ற ஏழு கிரகங்களும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) ஜாதகத்தில் ஏதேனும் நான்கு ராசிகளில் அமைந்திருக்கும் ஒரு அபூர்வமான யோகமாகும், இது பிறப்பவர்களுக்கு நிலம், விவசாயம், பண்ணைகள் மூலம் செல்வம், மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையைத் தரும் .
கேதார யோகத்தின் முக்கிய அம்சங்கள்:
கிரக அமைப்பு: ராகு-கேதுக்கள் இல்லாமல், மீதமுள்ள 7 கிரகங்கள் 4 தனித்தனி ராசிகளில் அமைந்திருக்க வேண்டும்.
பலன்கள்:
செழிப்பான வாழ்க்கை: செல்வச் செழிப்புடன், மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
பூமி யோகம்: நிலம், விவசாயம், பண்ணைத் தொழில்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவார்கள், ஏனெனில் செவ்வாயின் அருள் இருக்கும்.
யோகத்தின் தன்மை: இது ஒரு அரிதான யோகமாகக் கருதப்படுகிறது, இது ஜாதகத்தில் சிறப்பு கிரக அமைப்பின் மூலம் உருவாகிறது.
4
ஜோதிடத்தில் அமலா யோகம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த, அதிர்ஷ்டம் தரும் யோகமாகும்; இது லக்னம் அல்லது சந்திரனில் இருந்து பத்தாம் இடத்தில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமர்வதால் உருவாகிறது, இது செல்வம், வெற்றி, புகழ், மற்றும் வாழ்க்கையில் உயர்வு போன்ற நன்மைகளைத் தரும்.
அமலா யோகத்தின் விளக்கம்
கிரக அமைப்பு: உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10-ஆம் வீட்டில் (பத்தாம் இடம்) குரு , சுக்கிரன் , புதன் போன்ற நல்ல கிரகங்கள் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உருவாகும்.
நன்மைகள்: அமலா யோகம் கொண்டவர்கள் வாழ்வில் செல்வ வளத்தையும், வெற்றியையும், நல்ல பெயரையும், அதிகாரத்தையும் பெறுவார்கள் என ஜோதிடம் கூறுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் யோகங்களில் ஒன்றாகும்.
if anyone need appointment means kindly contact DM me
கிரகங்களின் வக்ர நிலை பலன்கள் (தனித்தனியாக):
வக்ர செவ்வாய்: அதீத ஆற்றல், கோபம், அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் அதிரடி முடிவுகளைத் தரும்.
வக்ர புதன்: புத்திசாலித்தனத்தில் மாற்றுப் பார்வை, ஆழ்ந்த சிந்தனை, ஆனால் தகவல் தொடர்பில் குழப்பங்கள் ஏற்படலாம்.
வக்ர குரு: ஆழ்ந்த ஆன்மீகம், ஞானம் மற்றும் தத்துவ சிந்தனையைத் தரும். சில நேரங்களில் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
வக்ர சுக்கிரன்: உறவுகளில் தனித்துவமான அல்லது வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை, காதலில் கர்மா தொடர்புகளைக் குறிக்கும்.
வக்ர சனி: கடுமையான உழைப்பு, ஒழுக்கம் மற்றும் முன்ஜென்மக் கடன்களைத் தீர்க்க வைக்கும். பொறுமையாகப் பலன்களைத் தரும்.
பரிகாரம்:
வக்ர கிரகம் உள்ளவர்கள், அந்தந்த கிரகம் தொடர்பான அதிதேவதைகளை வழிபடுவது, தானம் செய்வது மற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
ஒரு கிரகம் வக்கிரமடைந்து, அஸ்தங்கம் அடையாவிட்டால் மிகவும் வலுவாகக் கருதப்படும். அதே போல் வக்கிரமடைந்த ஒரு கிரகம் உச்சமடைந்திருந்தாலோ அல்லது பகை வீட்டில் அமர்ந்தாலோ, அந்த கிரகம் வலுவாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் வக்கிர பலம் பெற்ற ஒரு கிரகம் அசாதாரண தன்மை அல்லது விபரீதமான நிலை பெற்று பலன்தர வல்லது.சூரியன் மற்றும் சந்திரன் இவைகள் வக்கிரம் பெறுவது கிடையாது.
Dear all,

Starting tomorrow, regular posts will be shared in our Telegram group. Your support and participation are highly appreciated.

Thank you!
👍9